Jump to content

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பு


Recommended Posts

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பு- குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

jeyalalitha2

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் இழப்பு தமிழக மக்களை மாத்திரமின்றி ஈழ மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் டிசம்பர் 5ஆம் திகதி காலமானார் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மீண்டு வரவேண்டும் என்று கோடிக் கணக்கான தமிழக மக்களுடன் ஈழ மக்களும் வேண்டியிருந்தபோதும் அவரது மரணச் செய்தி எம்மை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
 
தன்னுடைய தீர்மானங்களில், தன்னுடைய நடவடிக்கைகளில் மிக கடுமையாக பேசும் செயல்படும் முதல்வர் ஜெயலலிதாவின் முகத்தில் ஒரு மெல்லிய சோகக் கோடு இருக்கும். தன் சிறு வயதில் ஒரு நடிகையின் மகளாக அவர் சந்தித்த துயரம் மிகுந்த வாழ்க்கையின் பாதிப்பு அவரை விட்டு விலகவில்லை என்பதன் வெளிப்பாடே அக்கோடு என்றும் சிலர் சொல்வதுண்டு. தன் வாழ்வில் துரோகம், அவமானம், மகிழச்சி என்று எல்லாவற்றையும் ஜெயலலிதா அம்மையார் நினைவுபடுத்துவது தன் பால்ய கால வாழ்வையே.
 
 
தமிழகத்தைப் பொறுத்தவரையில் சினிமாத் துறையிலும் சரி, அரசியல் துறையிலும் சரி ஆணாதிக்க சூழலில்  அவர் அடைந்த இடம் என்பது அவருக்கு எதிரானவர்களையும் மலைக்க வைக்கும் சாதனையாகவே கருதப்படுகின்றது. சிறுமியாக தன் நடிப்பு பயணத்தை தொடங்கி தென்னிந்திய சினிமாத்துறையில் முன்னணி நாயகி நட்சத்திரமாக திகழ்ந்தார். அன்றைய முதன்மை நடிகராக இருந்த எம்.ஜி.ஆருக்கு ஈடாக நடித்தார். பின்னர் அரசியலில் நுழைந்தார்.
 jeya1
 
சிறு வயதிலிருந்தே ஆளுமை கொண்டவராகவும் ஓர்மம் மிக்க பெண்ணாகவும் சாதனைகளைப் புரிபவராகவும் முதல்வர் ஜெயலலிதா விளங்கினார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அனைந்திந்திய திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு பட்ட காலத்தில் அக் கட்சியையும் சின்னத்தையும் மீட்டு 1989இல் தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித் தலைவராக ஜெயலலிதா சென்றார். அங்கு அவர் முகம் கொண்ட சொற்களும் அவரைக் கடுமையாக தாக்கின. இனி சட்ட மன்றத்திற்குள் வந்தால் முதலமைச்சராகவே வருவேன் என்று சபதம் செய்து சென்ற ஜெயலலிதா 1991இல் தமிழகத்தின் முதல் இளம்பெண் முதல்வராக சட்டசபைக்குள் நுழைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
 
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் ஈழ மக்களின் தனி ஈழ கோரிக்கைக்கு எதிராகவும் ஒரு காலத்தில் பேசியிருந்தார். இன்று அவர் அமரத்துவமடைந்த நிலையில் சிலர் இதனை சுட்டிக் காட்டுகின்றனர். ஆரம்ப காலத்தில் ஜெயலலிதா இத்தகைய நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் பிற்காலத்தில் தமிழக மக்களின் மனநிலை உணர்ந்தும் தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்றும் தன்னை மாற்றிக் கொண்டார். அவர் அவ்வாறு பேசியிருந்தாலும் தமிழகத்தின் ஆதரவையும்  அனைத்துலக ஆதரவையும் புலிகள் அமைப்பு தொடர்ந்து கோரியது.
 
 
ஈழத்தில் போர் நடைபெற்ற சமயத்தில் தமிழகத்தில் நடந்த போலிப் போராட்டங்களைக் கண்டித்த ஜெயலலிதா “இந்திரா காந்தி எந்த சர்வதேச சட்டத்தைப் பின்பற்றி வங்கதேசத்திற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, அதே சட்டத்தை பின்பற்றி, அதே தர்ம நியாயங்களை பின்பற்றி, நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே ‘தனி ஈழம்’ அமைக்க நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறினார். ஈழத் தமிழர் போராட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த ஜெயலலிதாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது ஈழத்தில் இனப்படுகொலை நடந்த காலத்தில்தான்.
 
 
jeya2செப்டம்பர் 16 2015 கடந்த வருடம் ஜெயலலிதா அம்மையார் தமிழக சட்டசபையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து “இலங்கை தமிழர்களின் நீண்ட நெடிய உரிமை போராட்டத்தை உருக்குலைக்கும் வண்ணம், இலங்கை தமிழினத்தையே ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கில் பல்லாண்டுகளாக திட்டம் தீட்டி, அதனை வெற்றிகரமாக 2009-ம் ஆண்டு நிறைவேற்றியது இலங்கை அரசு. 2009-ம் ஆண்டு, இலங்கை உள்நாட்டு போர் உச்சகட்டத்தில் இருந்த நிலையில் சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி, லட்சக்கணக்கான அப்பாவி இலங்கை தமிழர்களைக் கொன்று குவித்து, ஓர் இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் நடத்தியது.” என சட்டசபையில் உரையாற்றினார்.
 
 
10 மார்ச் 2015ஆம் நாள் வடக்கு மாகாண சபை இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனை அடிப்படையாக கொண்டு தமிழக முதல்வர் தன்னுடைய தீர்மானத்தை முன்மொழிந்தார். வடக்கு மாகாண சபை என்பது வடக்கு கிழக்கு மக்களின் மிக முக்கியமான கோரிக்கையை, உணர்வை, போராட்டத்தை வெளிப்படுத்தும் மக்களின் ஜனநாயக சபை. அந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்தார்.
 
 
இதேவேளை இந்த  ஆண்டு  ஜூன் மாதம் 14ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஐ.நா போன்ற அனைத்துலக அரங்கில் இலங்கையின் இனப்படுகொலை குற்றத்திற்கு தண்டனை வழங்கும் வகையில் இந்தியா செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
 
 
jeya3இலங்கையில் 2013இல் நடைபெற்ற  கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று அன்றைய பிரதமர் மன்மோசிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.  கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே தமிழ் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். இம்மாநாட்டை புறக்கணிப்பதன் மூலம் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் தரலாம். ஏற்கனவே மார்ச் மாதம் அனுப்பிய கடிதத்தில், இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.  இலங்கை அரசு ஈழத் தமிழகளுக்கு எதிராக இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்குற்றங்களை செய்துள்ளது. காமன்வெல்த் மாநாட்டு அமைப்புக்கான கொள்கைகளை இலங்கை நசுக்கியுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், அதன் அனைத்துக் குற்றங்களையும் இந்தியா ஏற்றுக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயலாகவும் ஆகிவிடும் என்றும் தன் கடித்தில் எழுதியிருந்தார்.
 
 
இதேவேளை 2013 மார்சட 27ஆம் திகதி ஈழப் பிரச்சினைக்கு தனித் தமிழீழமே தீர்வு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை கொண்டு சட்ட சபையில் உரையாற்றினார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. அதில்  “இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்; இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்; தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்; ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்றும் முழங்கினார்.
 
 

jeya4போர்க்குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று 2011இல் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பின்னர் குறிப்பிட்டார். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை உலுப்பிய இந்தி அரசியல் தலைவராகவும் சிங்களப் பேரினவாதிகளுக்கு பெரும் அச்சத்தை உருவாக்குபவராகவும் ஜெயலலிதா காணப்பட்டார். ஜெயலலிதாவின் நிலைப்பாடுகளைக் கண்டு  சில சமயங்களில் சிங்களப் பேரினவாதிகளும் சில சிங்கள ஊடகங்களும் அவரை தரம் தாழ்ந்து சென்று கொச்சைப்படுத்திய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

 

 
ஈழத் தமிழர்கள்சர்வதேச மட்டத்தில் நீதியை வலியுறுத்தும் அதேவேளை இலங்கையில்  சுயமரியாதையுடன் வாழ சுயாட்சியை கோரும் ஒரு அரசியல் போராட்டத்தில் வாழும் இன்றைய சூழலில் தமிழக முதல்வரின் இழப்பு ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். சிங்கள அரசு இழைத்த அநீதிகளுக்கு நீதி வேண்டும், இலங்கை இனப்பிரச்சினைக்கு தனி ஈழமே தீர்வு முதலிய ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகளை தமிழகத்தின் பெருங்குரலாக வலியுறுத்தியவர் என்ற வகையில் ஈழச் சரித்திரத்திலும் தமிழக முதல்வரின் பங்களிப்பு எக்காலத்திலும் மறக்க இயலாதது ஆகும்.
 
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
jeya5

 

http://globaltamilnews.net/archives/9441

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.