Jump to content

இலங்கை அரசாங்கத்துக்கு கைகொடுப்பாரா ட்ரம்ப்?


Recommended Posts

இலங்கை அர­சாங்­கத்­துக்கு கைகொ­டுப்­பாரா ட்ரம்ப்?

Donal-d019c40986fe953a1532e0f37725e37505fd6308.jpg

 

அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் பெரும்­பான்­மை­யின வாதத்தை முன்­னி­றுத்தி, டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வெற்­றியை முன்­னு­தா­ர­ண­மாகக் கொண்டு, அடுத்­த­டுத்த தேர்­தல்­களை எதிர்­கொள்ள மஹிந்த ராஜபக் ஷ தரப்பு தயா­ராகி வரு­கின்ற நிலையில், அர­சாங்­கமோ நேர­டி­யாக டொனால்ட் ட்ரம்­புடன் கைகோர்ப்­ப­தற்­கான தயார்­ப­டுத்­தல்­களில் இறங்­கி­யுள்­ளது.

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்­களை சேர்த்துக் கொள்ளும் கூட்டம் ஒன்று அண்­மையில் காலியில் நடை­பெற்ற போது, உரை­யாற்­றி­யி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பொறுப்­புக்­கூறல் மற்றும் மனித உரிமைக் குற்­றச்­சாட்­டு­களில் இருந்து இலங்­கையை விடு­விக்­கு­மாறும், இவற்றை வைத்து அழுத்­தங்­களைக் கொடுக்க வேண்டாம் என்றும், டொனால்ட் ட்ரம்­பிடம் கோரிக்கை விடுக்கப் போவ­தாக கூறி­யி­ருக்­கிறார்.

கூட்டு எதி­ர­ணியோ, ட்ரம்பின் வெற்­றியை பாட­மாக எடுத்துக் கொண்டு, அடுத்த தேர்­தலின் வெற்­றிக்­காகத் தம்மைத் தயார்­ப­டுத்தத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

தற்­போ­தைய அர­சாங்­கமோ, ட்ரம்ப் அமைக்­க­வுள்ள அர­சாங்­கத்­துடன், இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான தயார்­ப­டுத்­தல்­களில் இறங்­கி­யி­ருக்­கி­றது.

இந்த இரண்டு விட­யங்­க­ளுமே தமிழர் தரப்­புக்கு சாத­க­மான விட­யங்கள் அல்ல.

ட்ரம்பின் பெரும்­பான்­மை­யி­ன­வா­தத்தை முன்­னி­றுத்தி, கூட்டு எதி­ரணி மீண்டும் ஆட்­சியைப் பிடிக்க முனைந்தால் அல்­லது ஆட்­சியைப் பிடித்தால், தமி­ழர்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யினர் மீது கடு­மை­யான அழுத்­தங்­களும் அடக்­கு­மு­றை­களும் பிர­யோ­கிக்­கப்­படும் வாய்ப்­புகள் உள்­ளன.

அது நாடெங்கும் இன­வாத அலை பெரு­கு­வ­தற்கும், தமி­ழர்­களும், ஏனைய சிறு­பான்­மை­யி­னரும், அச்­சு­றுத்­தப்­ப­டு­வ­தற்கும், அடக்கி ஒடுக்­கப்­ப­டு­வ­தற்கும் வழி­வ­குக்கும்.

அதே­வேளை, தற்­போ­தைய அர­சாங்கம் ட்ரம்பின் புதிய அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட்டு, பொறுப்­புக்­கூறல் மற்றும் மனித உரிமைக் குற்­றச்­சாட்­டு­களில் இருந்து விடு­விக்­கப்­பட்­டாலோ, அது­தொ­டர்­பான அழுத்­தங்­களில் இருந்து அமெ­ரிக்கா பின்­வாங்கச் செய்­யப்­பட்­டாலோ அது, தமி­ழர்­த­ரப்பை ஏமாற்­ற­ம­டையச் செய்யும்.

போர்க்­கால அநீ­தி­க­ளுக்கு சர்­வ­தேச சமூ­கத்தின் மூலம் நீதி வழங்­கப்­பட வேண்டும் என்­பதே பாதிக்­கப்­பட்ட தமிழ்­மக்­களின் கோரிக்­கை­யாக இருந்து வரு­கி­றது.

இத்­த­கை­ய­தொரு நிலையில், பொறுப்­புக்­கூறல் சார்ந்த முன்­னெ­டுப்­பு­க­ளுக்குத் தலைமை தாங்­கிய, அமெ­ரிக்கா அந்தப் பங்­க­ளிப்பில் இருந்து பின்­வாங்­கு­கின்ற நிலை ஏற்­பட்டால், சர்­வ­தேச அரங்கில் தமிழர் விவ­காரம் கைவி­டப்­பட்ட நிலைக்குள் தள்­ளப்­படும்..

எனவே தான், அமெ­ரிக்க ஆட்சி மாற்­றத்தை முன்­னி­றுத்தி இலங்­கையின் இரு­பெரும் அர­சியல் சக்­தி­களும் முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கைகள் தமிழர் தரப்­புக்கு ஏமாற்­றத்­தையும், நெருக்­க­டி­க­ளையும் கொடுக்கும் என்ற கருத்து காணப்­ப­டு­கி­றது.

அமெ­ரிக்­காவில் வரும் ஜன­வ­ரியில், நிக­ழப்­போகும் ஆட்சி மாற்றம், சர்­வ­தேச அரங்கில் பெரி­ய­ள­வி­லான மாற்­றங்­க­ளுக்கு கார­ண­மாகும் என்ற எதிர்­பார்ப்பு இருக்கும் நிலையில், அதனைச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு இலங்கை அர­சாங்­கமும் தயா­ராகி வரு­கி­றது.

அமெ­ரிக்­காவில் குடி­ய­ரசுக் கட்சி ஆட்­சியில் இருந்த காலங்­களில் ஒப்­பீட்­ட­ளவில் இலங்­கைக்குச் சாத­க­மான முடி­வுகள் எடுக்­கப்­பட்­டதும், அமெ­ரிக்­கா­வுடன் நெருக்­க­மான உற­வுகள் ஏற்­பட்­டதும் தான் வர­லாறு.

எனவே தான், ஹிலாரி கிளின்டன் தோல்­வி­ய­டைந்த போது, அதிகம் நிம்­ம­தி­ய­டைந்த நாடு­களில் இலங்­கையும் ஒன்­றாகத் தான் இருந்­தி­ருக்கும்.

பொறுப்­புக்­கூறல் மற்றும் மனித உரி­மைகள் ஆகிய விட­யங்­களை முன்­னி­றுத்தி, ஒபாமா அர­சாங்­கத்­தினால் கடந்த அரை தசாப்­தங்­க­ளுக்கு மேலாக கொழும்பு மீது கொடுக்­கப்­பட்டு வந்த அழுத்­தங்­களை இந்த ஆட்சி மாற்றம் குறைக்கும் என்றே கரு­தப்­பட்­டது.

இந்த நிலையில் தான், அமெ­ரிக்­கா­வுக்குத் தாம் விசேட தூதுவர் ஒரு­வரை அனுப்­ப­வி­ருப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தகவல் வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

பொறுப்­புக்­கூறல், மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்து இலங்­கையை விடு­விக்­கு­மாறு கோரு­வ­தற்கும், இவற்றை வைத்து மேற்­கொள்ளும் அழுத்­தங்­களைக் கைவி­டு­மாறும் ட்ரம்­பிடம் கோரு­வ­தற்­குமே தாம் விசேட தூது­வரை அமெ­ரிக்­கா­வுக்கு அனுப்­ப­வி­ருப்­ப­தாக ஜனா­தி­பதி கூறி­யி­ருக்­கிறார்.

இலங்கை மீது எந்த சர்­வ­தேச அழுத்­தங்­களும் கிடை­யாது, பொறுப்­புக்­கூ­ற­லுக்கு எந்தக் காலக்­கெ­டுவும் விதிக்­கப்­ப­ட­வில்லை என்று சில நாட்­க­ளுக்கு முன்­ன­தாக நாடா­ளு­மன்­றத்தில் அமைச்சர் லக்ஸ்மன் கிரி­யெல்ல அறி­வித்து சில நாட்­களின் பின்­னரே ஜனா­தி­பதி இந்தக் கருத்தை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான அழுத்­தங்கள், அர­சாங்­கத்தைக் கடு­மை­யான நெருக்­க­டிக்குள் சிக்க வைத்­தி­ருக்­கி­றது என்­ப­தையே, ஜனா­தி­ப­தியின் இந்தக் கருத்து எடுத்துக் காட்­டி­யி­ருக்­கி­றது. அதே­வேளை, ஒரு நாட்டின் ஆட்சி மாற்­றத்தைச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்டு, இலங்கை அர­சாங்கம் தனக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­களில் இருந்து தப்­பித்துக் கொள்­ளவும், பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான பொறுப்பில் இருந்து நழுவிக் கொள்­ளவும் எடுக்கும் அப்­பட்­ட­மான முயற்­சி­க­ளையும் இந்தக் கருத்து அம்­ப­லப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

கடந்த ஆண்டு ஜெனிவா தீர்­மா­னத்தில், பொறுப்­புக்­கூ­ற­லுக்கு இணக்கம் வெளி­யிட்ட அர­சாங்கம், இந்த ஆண்டு அமெ­ரிக்­காவில் ஏற்­படும் ஆட்­சி­மாற்­றத்தை தமக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்டு, அதி­லி­ருந்து தப்­பிக்க முனை­கி­றது.

அவ்­வா­றாயின் சர்­வ­தேச மன்­றத்தில் அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­றுதி என்­ன­வாகப் போகி­றது என்ற கேள்வி எழு­கி­றது.

இலங்­கையை குற்­றச்­சாட்­டு­களில் இருந்து விடு­விக்­கு­மாறு ட்ரம்­பிடம் கோரு­வ­தற்கு ஜனா­தி­பதி எடுத்­துள்ள முடிவு, பொறுப்­புக்­கூறல் பற்­றிய வாக்­கு­று­தி­களில் இருந்து அர­சாங்கம் பின்­வாங்கத் தயா­ரா­கி­றதா என்ற சந்­தே­கத்தை தான் எழுப்­பி­யி­ருக்­கி­றது.

ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் அமெ­ரிக்கா கொடுத்து வந்த அழுத்­தங்­களே, இலங்கை அர­சாங்கம் அரை­குறை பொறுப்­புக்­கூறல் வாக்­கு­று­தி­க­ளுக்­கேனும் இணங்­கு­கின்ற நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

திடீ­ரென அமெ­ரிக்கா தனது அழுத்­தங்­களை விலக்கிக் கொண்­டாலோ, குற்­றச்­சாட்­டு­களில் இருந்து பின்­வாங்கிக் கொண்­டாலோ, அது பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்குப் பேரி­டி­யா­கவே அமையும்.

பொறுப்­புக்­கூறல் மற்றும் மனித உரிமை விவ­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி ,இலங்கை மீது கொடுத்து வந்த அழுத்­தங்­களை அமெ­ரிக்கா ஏற்­க­னவே குறைத்து விட்­டது.

இரா­ணுவ ஒத்­து­ழைப்பு, பொரு­ளா­தார ரீதி­யான கட்­டுப்­பா­டுகள் போன்­ற­வற்றில் இருந்து இலங்­கையை அமெ­ரிக்கா ஏற்­க­னவே விடுத்து விட்­டது.

இரா­ணுவ தள­பாட ஏற்­று­ம­திகள் போன்ற சில கட்­டுப்­பா­டுகள் தான் இன்­னமும் தொடர்­கின்­றன. அவற்­றினால் இலங்கை ஒன்றும் பெரி­ய­ள­வி­லான பாதிப்­புக்­களைச் சந்­திக்­க­வில்லை.

ஆனாலும், அமெ­ரிக்­காவில் ஏற்­பட்­டுள்ள ஆட்­சி­மாற்­றத்தைச் சாத­க­மாக்கிக் கொண்டு. இத்­த­கைய கட்­டுப்­பா­டுகள் அனைத்­தையும், களை­வ­தற்கும், இலங்கை மீதான குற்­றச்­சாட்­டு­களை குப்­பைக்குள் வீசு­வ­தற்கும் அர­சாங்கம் திட்­ட­மிட்­டி­ருக்­கி­றது.

இது­பற்றி ட்ரம்­புடன் பேச்சு நடத்­து­வ­தற்கு விசேட பிர­தி­நி­தியை அனுப்பப் போவ­தாக ஜனா­தி­பதி கூறி­யி­ருக்­கிறார் என்றால், அதி­க­ளவு நம்­பிக்­கையும் காய்கள் நகர்த்­தப்­ப­டு­கின்­றன என்றே அர்த்தம்.

அமெ­ரிக்­காவின் புதிய துணை ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள, மைக் பென்ஸ், கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, தொலை­பே­சியில் அழைத்து, இரு­த­ரப்பு உற­வு­களைப் பலப்­ப­டுத்­து­வது தொடர்­பாக நடத்­திய பேச்­சுக்கள் அர­சாங்­கத்­துக்கு இன்னும் அதிக நம்­பிக்­கையைக் கொடுத்­தி­ருக்கும்.

அதே­வேளை, போரில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் நலன்கள், அவர்­க­ளுக்­கான நீதியைப் புறக்­க­ணித்து, பொறுப்­புக்­கூறல் குற்­றச்­சாட்டில் இருந்து இலங்கை அர­சாங்­கத்தை அமெ­ரிக்கா விடு­விக்கும் நிலை ஏற்­ப­டு­மே­யானால், தமிழ் மக்­க­ளுக்கு இலங்கை அர­சாங்­கத்தின் மீது இன்னும் ஆழ­மான நம்­பிக்­கை­யீ­னமும், சீற்­ற­முமே ஏற்­படும்.

அத்­த­கை­ய­தொரு நிலை உரு­வாக்­கப்­பட்டால், அது நிலை­யான அமைதி, நல்­லி­ணக்கம் என்­ப­ன­வற்­றுக்கு சவா­லான விட­ய­மா­கவும் இருக்கும்.

ஏனென்றால், பொறுப்­புக்­கூறல் அழுத்­தங்கள் இருக்கும் போது, தமது வாக்­கு­று­தியை நிறை­வேற்­றாத அர­சாங்கம், அத்­த­கைய அழுத்­தங்கள் விலக்­கப்­பட்ட ஒரு சூழலில் வாக்­கு­று­தி­களை காற்றில் பறக்க விட்டு விடும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

அமெ­ரிக்க ஆட்­சி­மாற்­றத்தை இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச அரங்கில் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு எடுக்கும் முயற்­சிகள் பல­ன­ளிப்­ப­தற்கு அதிகம் வாய்ப்­புகள் இருக்­கின்­றன.

இதன் மூலம், தற்­போ­தைய அர­சாங்கம் சிங்­கள மக்கள் மத்­தியில் தமது ஆத­ரவை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள முனை­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷவையும் படை­யி­ன­ரையும் ஐ.நா மனித உரி­மைகள் பேர­வை­யிடம் இருந்து தாம் காப்­பாற்­றி­யதை, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால நினை­வு­ப­டுத்­தி­யி­ருப்­பது, அவ­ரது இந்த நோக்­கத்தைப் புலப்­ப­டுத்­து­கி­றது.

கடந்த தேர்­தல்­களில், தன்னை மின்­சாரக் கதி­ரைக்கு அனுப்ப சர்­வ­தேச சமூகம் முயற்­சிப்­ப­தாக மஹிந்த ராஜபக் ஷ பிர­சா­ரங்­களை முன்னெடுத்து வந்தார்.

அதற்கு ஈடாக இப்போது, மைத்திரிபால சிறிசேன, தாம் மகிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரையில் இருந்து காப்பாற்றி விட்டதாக பிரசாரம் செய்து வருகிறார்.

டொனால்ட் ட்ரம்பைக் கொண்டு, பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கையை விடுவிப்பேன் என்ற வாக்குறுதியை ஜனாதிபதி இப்போது கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

சிங்கள மக்களுக்கு அவர் கொடுக்கும் இந்த வாக்குறுதி தமிழ் மக்களுக்கு எதிர்மறையான கருத்துக்களையே கொடுக்கும் என்பதை அவர் கவனத்தில் கொள்ளவில்லை.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால், அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்கப்படும் பொறுப்புக்கூறல் முயற்சிகள் பாதிக்கப்படாது என்று போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ராப் கருத்து வெளியிட்டிருந்த போதிலும், ட்ரம்பை வைத்து எப்படியாவது பொறுப்புக்கூறல் அழுத்தங்களை உடைத்தெறிவதில் அரசாங்கம் குறியாக இருக்கிறது.

அரசாங்கத்தின் இந்த முயற்சி எந்தளவுக்கு வெற்றி கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.   

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-04#page-2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ அமெரிக்காவை இயக்கப்போவது  ஜனாதிபதி (ட்ரம்ப்) என்பது போல் கதைக்கிறார்கள். ண்மையில், கொள்கை வகுப்பாளர்களின் நிகழ்ச்சி நிரல் என்னும் அம்சத்தை வெளிப்படுத்தும், உத்தியோக பூர்வ குரல் அல்லது பதவி தான் அது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.