Jump to content

'தங்கல்' படத்துக்காக எடையை 95 கிலோ வரை அதிகரித்து பின்னர் 70 கிலோவாக குறைத்த அமீர் கான் - வியக்க வைக்கும் உருமாற்றம் தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டது


Recommended Posts

'தங்கல்' படத்துக்காக எடையை 95 கிலோ வரை அதிகரித்து பின்னர் 70 கிலோவாக குறைத்த அமீர் கான் - வியக்க வைக்கும் உருமாற்றம் தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டது
 

‘தங்கல்’ திரைப்­ப­டத்­துக்­காக தனது எடையை 30 கிலோ­வினால் அதி­க­ரித்து, பின்னர் அதே படத்­துக்­காக மீண்டும் எடையைக் குறைந்துக் கொண்­டுள்ளார் நடிகர் அமீர் கான்.

 

21059Aamir-Khan.jpg

 

2010 ஆம் ஆண்டு பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் மகளிர் மல்­யுத்தப் போட்­டியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற இந்­திய வீராங்­கனை கீதா போகட், 2014 ஆம் ஆண்டு பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் மல்­யுத்­தத்தில் தங்கம் வென்ற வீராங்­கனை பபிதா குமாரி ஆகி­யோரின் தந்­தை­யான முன்னாள் மல்­யுத்த வீரர் மஹாவீர் சிங் போகட்டின் வேடத்தில் அமீர் கான் நடித்து வரு­கிறார்.

 

51  வய­தான அமீர்கான் கட்­டு­மஸ்­தான தோற்­றத்தில் இருந்த நிலையில், 60 வய­தான மஹாவீர் சிங்கின் வேடத்தில் நடிப்­ப­தற்­காக தனது எடையை 28 கிலோ­கி­ரா­மினால் அதி­க­ரித்­துக்­கொண்டு, 96 கிலோ­கிராம் எடை­யு­டை­ய­வ­ராக அமீர் காணப்­பட்டார். 

 

21059thequint_2016-06_7c104205-c58d-4fb1பின்னர், மஹாவீர் சிங்கின் இள­மைக்­கா­லத்தை சித்­த­ரிக்கும் காட்­சி­க­ளுக்­காக தனது உடலை  இளமைத் தோற்­றத்­துக்கு மாற்­றினார். 

 

இதற்­காக  உணவுக் கட்­டுப்­பாடு மற்றும் கடும் உடற்­ப­யிற்­சி­களை செய்து, தனது உடல் எடையை 70 கிலோ­கி­ரா­மாக அவர் குறைத்­துக்­கொண்டார்.

 

அமீர் கானின் இந்த உரு­மாற்­றங்கள் தொடர்­பான விசேட வீடி­யோ­வொன்­றையும் தங்கல் படக்­கு­ழு­வினர் வெளி­யிட்­டுள்­ளனர்.

 

அமீர் கான் கடு­மை­ய­மான உடற்­ப­யிற்­சி­களை செய்­யும்­போது பதி­வு­செய்­யப்­பட்ட காட்­சிகள், உடற்­ப­ருமன் கார­ண­மாக தனது காலு­றை­களை அணி­வ­தற்கு அமீர் கான் சிர­மப்­ப­டு­வது முத­லான காட்­சிகள் வீடி­யோவில் அடங்­கி­யுள்­ளன. 

 

இது தொடர்­பாக அமீர் கான் கூறு­கையில், “முதிய மஹா­வீரின் காட்­சி­களை முதலில் பட­மாக்­கு­வ­தற்கும் இளை­மை­யான மஹா­வீரின் காட்­சி­களை இறு­தி­யாக படம்­ பி­டிக்­கவும் இயக்­குநர் நிதீஷ் திவாரி தீர்மா­னித்தார்.

 

21059aamir.jpgமுதிய மஹா­வீரின் காட்­சி­களை இறு­தி­யாக படம்­பி­டித்­தி­ருந்தால் இப்­ படம் தயா­ரித்து முடிக்­கப்­ப­டும்­போது நான் அதிக உடற்­ப­ரு­ம­னுடன் இருந்­தி­ருப்பேன்.

 

அப்­போது உடல் எடையைக் குறைப்­ப­தற்­கான ஊக்கம் எதுவும் என்­னிடம் இருந்­தி­ருக்­காது” என்றார்.

 

உடல் எடையை அதி­க­ரித்­துக்­கொள்­வ­தற்குப் பதி­லாக பரு­ம­னாக தோற்­ற­ம­ளிக்கும் “பொடிசூட்” ஒன்றை அணிந்­து­கொள்­ளலாம் என இயக்­குநர் நிதீஷ் திவாரி ஆலோ­சனை கூறி­னாராம்.

 

ஆனால், பொடி சூட் அணிந்த நிலையில் நான் சிறப்­பாக தோன்ற மாட்டேன். அந்த உடையில் நான் பரு­ம­னாகத் தெரிவேன். ஆனால், சரி­யான உணர்வு எனக்கு ஏற்­ப­டாது என அமீர் கான் கூறினார்.

 

இப்­ ப­டத்தின் முதற்­கட்ட படப்­பி­டிப்பு முடிந்த பின்னர் இனிமேல் என்னை இந்த தோற்­றத்தில் பார்க்க மாட்­டீர்கள் என படக்­ கு­ழு­வி­ன­ரிடம் அமீர் கான் தெரி­வித்­தாராம். 

 

38 சத­வீத கொழுப்பு சகிதம் 96 கிலோ­கிராம் எடை­யுடன் நான் காணப்­பட்டேன். 5 மாதங்­க­ளுக்குள் 9 சத­வீத உடற்­கொ­ழுப்பை குறைக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டது. இது பெரிய இலக்கு.

 

இவ்­வ­ளவு விரை­வாக உடல் எடையைக் குறைப்­பது சாத்­தி­ய­மில்லை என முதலில் எண்­ணினேன். ஆனால், பின்னர் எதிர்­ம­றை­யான எண்­ணங்­களை விட்­டு­விட்டு முயற்­சி­களை மேற்­கொண்டேன்” எனவும் அமீர் கான் தெரி­வித்தார்.

 

இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த உணவுக்கட்டுப்பாட்டு நிபுணரான டாக்டர் நிகில் துரந்தரிடம் அமீர் கான் கலந்தாலோசித்தாராம். 

 

நிதிஷ் திவாரி இயக்கும் தங்கல் திரைப்படத்தை அமீர் கானே தயாரிக்கிறார். எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 
 
- See more at: http://www.metronews.lk/article.php?category=entertainment&news=21059#sthash.qXyy3P4N.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.