Jump to content

இந்தியாவின் முகவரி குத்தம்பாக்கம்...


Recommended Posts

இந்தியாவின் முகவரி குத்தம்பாக்கம்... மக்கள் அதிகாரம் மலர்ந்தது எப்படி?

குத்தம்பாக்கம் கிராமத்தை பார்வையிடும் வெளிநாட்டினருடன் இளங்கோ.

 

குத்தம்பாக்கம் கிராமத்தை பார்வையிடும் வெளிநாட்டினருடன் இளங்கோ.
 
 

கடந்த 2014-ம் ஆண்டு அது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களைத் தத்தெடுக்க வேண்டும் என்றார் மோடி. இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நேரம் இந்திய கிராமங்களில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா என்ன? வழக் கம்போன்ற கவர்ச்சிகரமான, உணர்ச்சி மயமான மோடியிஸ அறிவிப்பு அது.

அடிப்படையில் கிராமங் களைத் தத்து எடுப்பது என்கிற சித்தாந்தமே தவறானது; கோளாறானது; இளக்காரம் மிகுந்தது; நயவஞ்சகம் கலந்தது. ஆதரவற்றோர்களைதான் தத்து எடுப்பார்கள். இந்திய கிராமங்கள் ஒன்றும் அநாதைகள் அல்ல. நாம் உண்ணும் உணவு கிராமம் கொடுத்தது. நாம் குடிக்கும் தண்ணீர் கிராமம் கொடுத்தது. நாம் உடுத்தும் உடுப்பு கிராமம் கொடுத்தது. நாம் வசிக்கும் வீடு கிராமத்தான் கட்டிக்கொடுத்தது.

உங்கள் கருணை தேவையில்லை

எங்கள் கிராமங்கள் மீது யாரும் பரிதாபம் கொள்ளத் தேவையில்லை. உங்கள் கருணை எங்களுக்கு வேண்டாம். உங்கள் சலுகைகள் வேண்டாம். உங்கள் சன்மானங்கள் வேண்டாம். அன்பான வார்த்தை பேசி அதிகாரத்தை திணிக்காதீர். பலத்தைக் காட்டிக் காட்டி நிலத்தை பிடுங்காதீர். வளர்ச் சியைக் காட்டி வனத்தை அழிக்காதீர். கவர்ச்சியைக் காட்டி கனிமங்களை சுரண்டாதீர். கதையைக் கட்டி விதையைப் பிடுங்காதீர். விதையைப் பிடுங்கி விஷத்தைத் தெளிக்காதீர். அந்நியனுக்காக தண்ணீரை உறிஞ் சாதீர். ஆலைகளைக் காட்டி பாலை களை உருவாக்காதீர். மதுவை ஊற்றி தாலியை அறுக்காதீர். ஓட்டை காட்டி நோட்டை நீட்டாதீர். எங்களுக்கு உங்கள் இலவசங்கள் எதுவும் வேண்டாம். எங்களுக்கான அதிகாரத்தையும் உரிமைகளை மட்டும் கொடுங்கள். குரல் களை நசுக்காதிருங்கள். கடமையை நாங்கள் செய்கிறோம்.

எங்கள் கிராமங்கள் இயல்பாக கட்டமைக்கப்பட்டவை. இயற்கை வளங்கள் நிறைந்தவை. அவற்றின் உயரமான மலைச் சிகரங்களில் இருந்து தாய்ப்பால் என தண்ணீர் சுரப்பதைப் பாருங்கள். திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்கள் அல்ல எங்கள் கிராமங்கள்; அவை காலச் சக்கரத்தின் கரடுமுரடான பயணங்களில் தங்களைத் தாங்களே தகவமைத்துக்கொண்டவை.

எங்கள் கிராம மக்கள் இயல் பானவர்கள். எளிமையானவர்கள். அன் பானவர்கள். கள்ளங்கபடமற்றவர்கள். வறுமையிலும் செம்மையாக வசிப்ப வர்கள். எங்களுக்கு உருக்காலைகள் வேண்டாம். எருக்குழிகள் இருக்கின்றன. அணு உலைகள் வேண்டாம். பச்சைப் பிள்ளைகள் தவழ்கின்றன. எரிகுழாய்கள் பதிக்க வேண்டாம். மண்புழுக்கள் உறங்குகின்றன. அடுக்கு மாடிகள் வேண்டாம். அடுக்குப் பானைகளே போதும்.

அழகிய கிராமம் அது!

எழுத்துக்கு எல்லாம் சரி. நிஜத்தில் அப்படி இருக்கிறதா?

இருக்கிறது நண்பர்களே! வாருங் கள் திருவள்ளூர் மாவட்டம், குத்தம் பாக்கம் கிராமத்துக்குச் செல்வோம். எப்படி செல்ல வேண்டும் என்கிறீகளா? குத்தம்பாக்கத்துக்கு முகவரி தேவை இல்லை. இந்தியாவின் முகவரியே குத்தம்பாக்கத்தின் முகவரி. இந்தியரின் இதயமே குத்தம்பாக்கத்தின் இதயம். காரணம், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ‘குத்தம்பாக்கம்’ இளங்கோ. இவர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். படிப்பின் வாசனை அறியாத ஊரின் முதல் பட்டதாரி.

வேதியியல் பொறியியலில் உயர்க் கல்வி பட்டம் பெற்றார். காரைக்குடியில் மத்திய அரசுப் பணி கிடைத்தது. சேர்ந்த போதே ஓரளவு நல்ல பதவி அது. இருந்திருந்தால் இந்நேரம் இயக்குநர் அல்லது செயலர் ஆகியிருக்கலாம். ஆனால், அதைவிட இன்னும் உயரமான இடத்துக்கு ஆசைப்பட்டார் இளங்கோ. அது தனது கிராம மக்களின் இதயம். வேலையை உதறியவர், ஊருக்கே வந்துச் சேர்ந்தார்.

இந்தத் தொடரைத் தொடங்கியபோது நண்பர் நந்தகுமாருடன் நான் சந்தித்த முதல் நபர் ‘குத்தம்பாக்கம்’ இளங்கோ. இதேபோன்ற ஒரு மழை நாளின் பாதியை எங்களுக்கு பகிர்ந்தளித்தார் அவர். அன்றைக்கு அவரிடம் அன்புடன் திருடிக் கொண்ட வார்த்தைகளை அத்தி யாயத்தின் வழியெங்கும் சிதறவிட்டி ருக்கிறேன். நாம் சென்றபோது பச்சைப் பசேல் வயலில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. ஆண்டு முழுவதும் ஏதேனும் ஒரு படப்பிடிப்பு நடக்கும் அழகிய கிராமம் அது!

ஆனால், ஒருகாலத்தில் குத்தம் பாக்கம் எப்படி இருந்தது தெரியுமா? ஊரெங்கும் சாக்கடை. சாக்கடை நாற்றத்துக்குப் போட்டியாக சாராய நாற்றம். திரும்பிய பக்கமெல்லாம் குடிசைகள். பட்டியல் இனத்தவர் பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள். அனைவரும் விவசாயக் கூலிகள். நில உடமை சமூகத்தால் சுரண்டப்பட்டார்கள் அவர்கள். அன்றாடம் கஞ்சிக்கே அல்லாடினார்கள். தட்டிக் கேட்டனர். பொருளாதாரப் பிரச்சினை சமூகப் பிரச்சினையாக்கப்பட்டது. சாதிகளின் உரசலில் குடிசைகள் எரிந்தன. வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. கொலை, கொள்ளைகள் அதிகரித்தன. சமூகப் பிரச்சினை சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஆனது. ரத்த பூமியானது குத்தம்பாக்கம்.

தானாக வந்தது சமூக சமத்துவம்!

அப்போதுதான் இங்கே வந்துச் சேர்ந்தார் இளங்கோ. பிறந்த மண்ணின் நிலை கண்டு மனம் வருந்தினார். என்ன ஆனாலும் சரி தனது கிராமத்தை மாற் றாமல் விடக் கூடாது என்கிற வைராக்கி யம் அவருக்குள் பிறந்தது. முழு நேர சமூகச் சேவகராக மாறினார். கணவர் மனமறிந்து குடும்பத்தை சுமக்க பணிக்குச் சென்றார் மனைவி. பணி நிமித்தம் மனைவி, குழந்தைகள் சென் னைக்கு இடம் பெயர்ந்தனர். மக்களுடன் தங்கிக்கொண்டார் இளங்கோ. முதல் வேலையாக கள்ளச் சாராயத்தை ஒழிக்க நினைத்தார்.

மக்களின் மனதோடு பேசினார். சாத்தியமானது. அடுத்த வேலையாக சமூக சமத்துவத்தைக் கொண்டுவர வேண்டும். பேச்சாற்றல் மிகுந்தவர் இளங்கோ. பேச்சில் சொக்கி வைத்துவிடுவார். வெறும் இனிப்பு தடவியப் பேச்சல்ல அது. எவரிடத்தும் பேச அவரிடத்தில் விஷயங்கள் இருந் தன. தினமும் தெருத் தெருவாகச் சென்றுப் பேசினார். வீடு வீடாகப் போய் பேசினார். ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்துப் பேசினார். கூட்டம் சேர்த்துப் பேசினார். குடும்பத்துடன் சென்று பேசினார். குழந்தைகளிடத்தும் பேசினார். ஒவ்வொருவரின் பிரச்சினை களையும் கேட்டறிந்தார்.

ul1_3097802a.jpg

சொன்னால் நம்ப சிரமமாகத்தான் இருக்கும். அத்தனை பேரின் விவரங் களையும் பதிவேட்டில் ஏற்றினார். ஒவ்வொரு நபருக்கு ஒரு முழு நீளப் பக்கம். அதில் அவருடைய சமயம், சாதி, வருமானம், சொத்துகள் விவரம், கணவன்/மனைவி/குழந்தைகள்/உடன்பிறந்தோர் விவரம், உடல் ஆரோக்கியம், உள்ள ஆரோக்கியம், குணாதிசயம், குற்ற வழக்குகள் என ஒன்றுவிடாமல் இடம்பெற்றன. திட்டம் போட்டு வேலை பார்த்தார். இன்றைக்கு இந்தத் தெரு, இந்தக் குடும்பம், இந்த நபர், இந்தப் பிரச்சினை, இந்த வேலை என்று சின்னச் சின்னதாகப் புள்ளி வைத்து காரியங்களை அணுகினார். புள்ளிகள் வட்டங்களாகின. வட்டங்கள் பெரியதாகின. ஒருகட்டத்தில் குத்தம் பாக்கத்தைச் சுற்றி வளைத்தது அந்த வட்டம். பாதுகாப்பு வட்டம் அது. குற்றங்கள், சமூக மோதல்கள் படிப் படியாகக் குறைந்து ஒருகட்டத்தில் இல்லாமலே போனது. இன்றும், அவருடைய கணினியில் மேற்கண்ட விவரங்கள் இருப்பதைப் பார்க்கலாம்!

முதல் தேர்தல்... முற்றிலும் மாறுதல்!

சரியாக வந்துச் சேர்ந்தது தமிழ கத்தின் முதல் பஞ்சாயத்துத் தேர்தல். 1996-ல் பஞ்சாயத்து தேர்தலில், சுயேச்சையாக வென்றார். நாடெங்கும் உள்ள முன்னுதாரண கிராமங்களைத் தேடிச் சென்றார். ஒவ்வொரு திட்டமாக தனது கிராமத்துக்குக் கொண்டு வந்தார். மத்திய, மாநில அரசுகளின் அத்தனை திட்டங்களையும் தேடித் தேடி கொண்டுவந்துச் சேர்த்தார். சுயமாக திட்டங்களை உருவாக்கினார். கிராமத் தொழில் பரிசோதனை கூடத்தை அமைத்தார். மக்களை ஒருங்கிணைத்து ஏராளமான ஆராய்ச்சிகளை மேற் கொண்டார். சிறுதொழில்களைப் பெருக் கினார்.

தமிழகத்தின் முதல் புகை யில்லாத அடுப்பு உருவானது. சாண எரிவாயு தயாரிக்கப்பட்டது. சிமெண்ட் கதவுகள், ஜன்னல்கள், ஓடுகள், சிறு பாலங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. சணல் கயிற்றில் ஊஞ்சல் உற்பத்தி செய்தார்கள். சோப்பு, சமையல் எண்ணெய் உற்பத்தி செய்தார்கள். சிறு அரிசி, மாவு மில்களை உரு வாக்கினார்கள். சூரியசக்தி மின் விளக்குகள் தயாரித்தார்கள். மிகக் குறைந்த மின் சக்தியில் இயங்கும் வகையில் ‘டிசி'-யில் ஓடும் மலிவு விலை மின்விசிறி, விளக்குகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒரு லட்சம் ரூபாய் செலவில் 1.5 ஹெச்.பி. மோட்டார் சூரிய சக்தியில் இயங்கியது. அடுப்பு ‘பர்னர்’ சிறு தொழிற்சாலைத் தொடங்கப்பட்டது. முதலுதவி உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழிலகம் தொடங்கப்பட்டது.

உடனடி ஆயத்த கழிப்பறை!

ஒரு மணி நேரத்தில் கட்டும் வகையில் ‘உடனடி ஆயத்த கழிப்பறை கள்’ உருவாக்கப்பட்டன. அவை நாடெங்கிலும் பரவின. அத்தனை பேரும் வேலைவாய்ப்பு பெற்றார்கள். ஒருகட்டத்தில் குத்தம்பாக்கம் கிராமத் தின் குடும்ப வருவாய் ரூ.40 ஆயிரமாக உயர்ந்தது. விவசாயத்தில் தனிக் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, விவசாயக் கூலி வேலைகள் செய்வோர் விளைநிலம் வாங்க ஊக்கு விக்கப்பட்டனர். விவசாய நிலம் வைத்தி ருப்போரின் எண்ணிக்கை பெருகியது. சிறுவிவசாயிகள் அதிகரித்தார்கள். நில உடைமை அருகியது.

ul11_3097803a.jpg

‘சமத்துவபுரம்’ பிறந்த கதை!

உள்ளாட்சி தத்துவத்தின் இரு நோக்கங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதி. பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்தாயிற்று. அடுத்த தேவை சமூக நீதி, சமூக சமத்துவம். அதற்காக அவர் உருவாக்க நினைத்தது தான் சமத்துவபுரம். கிராமத்தில் இருக்கும் வீடு இல்லாத அனைத்து சாதி களைச் சேர்ந்த ஏழைகளும் ஒரே இடத்தில் ஒற்றுமையாக வசிக்க வேண்டும் என்று விரும்பினார் இளங்கோ. அதன்படி மக்களை ஒருங்கி ணைத்தார்.

ஒரே குடியிருப்பில் தலா ஒரு ஜோடி மாற்று சாதியினர் வசிக்கும் வகையிலான இரட்டை வீடுகள், பொதுவான சமுதாயக்கூடம், குடிநீர் தொட்டி, அங்கன்வாடி, விளை யாட்டு திடல் ஆகியவை திட்டமிடப் பட்டன. திட்ட வரைவு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டது. அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி திட்டத் தைப் பார்த்து வியந்தார். இதனை அனைத்து கிராமங்களுக்கும் விரிவாக் கினார். தமிழகம் முழுவதும் ‘பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்’ பிறந்த கதை இதுதான்.

அனைத்துக்கும் அரசின் உதவிகளை எதிர்பார்க்கவில்லை குத்தம்பாக்கம். மக்கள் நிதிப் பங்களிப்புடன் குத்தம் பாக்கத்தில் சாலைகள் போடப்பட்டன. இதனைக் கண்ட அரசு, மாநிலம் முழுவதும் ‘நமக்கு நாமே’ திட்டத்தை அறிவித்தது. பஞ்சாயத்துப் பணிகளுக்கு உதவியாக இருக்கிற கிராம தன்னாட்சி அறக்கட்டளைத் தொடங்கப்பட்டது.

மகளிர் சுய உதவி குழுக்களை உரு வாக்குதல், பெண்களுக்கு வேலை வாய்ப்புப் பயிற்சிகள் அளித்தல் கிராம வளர்ச்சிக்கு உதவ முன்வரும் அமைப்புகளுடன் இணைந்து பணி யாற்றுதல் போன்ற பயிற்சிகள் அளிக் கப்பட்டன. குத்தம்பாக்கம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வந்து பயிற்சி பெற்றார்கள்.

உலகம் முழுவதிலும் இருந்து அறிஞர்கள், ஆய்வாளர்கள் குத்தம்பாக் கத்துக்கு வந்து குவிந்தனர். அன்றைய மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் வெங்கைய்யா நாயுடு, முன்னாள் டெல்லி முதல்வர் சாஹிப் சிங் வர்மா, இன்றைய டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள். அதிகாரிகள் வந்து பார்த்து வியந்தார்கள். ஐ.நா-வின் ‘வசிப்பிட விருது’ பட்டியலில் எட்டாம் இடத்தை பெற்றிருக்கிறது குத்தம்பாக்கம்!

முதல் ஆராய்ச்சி இருக்கை

குத்தம்பாக்கம் கிராம தன்னாட்சி அறக்கட்டளைக்கு ஒருவகையில் உந்துதலாக இருந்தது ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கை. இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ்ஜியத்துக்காக உருவாக்கப்பட்ட முதல் ஆராய்ச்சி இருக்கையும் இதுவே. கிராமப் பஞ்சாயத்து திட்டங்கள் மற்றும் கிராம சிறு தொழில்கள் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் பழனிதுரை, ரகுபதி ஆகியோர் முயற்சியால் தொடங்கப்பட்டது இந்த இருக்கை.

தமிழகத்தில் சட்டப் பாதுகாப்புடன் கூடிய முதல் தலைமுறை பஞ்சாயத்துகள் உருவான காலகட்டமான 1996 தொடங்கி 2001 வரை 74 கிராமப் பஞ்சாயத்துகளில் கிராம வளர்ச்சிக்கான திட்டமிடுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சுனாமியின்போது பாதிக்கப்பட்ட 17 கிராமப் பஞ்சாயத்துகளில் பேரிடர் மேலாண்மை மீட்புப் பணிகளை செய்ததுடன், சுமார் ஓர் ஆண்டுக்கும் மேலாக அங்கேயே தங்கி, பேரிடர் மேலாண்மை பயிற்சியை மக்களுக்கு அளித்தது இந்த அமைப்பு. தற்போது நாட்டில் 11 இடங்களில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கைகள் இருந்தாலும் சொந்த நிதியில் செயல்படுவது இது மட்டுமே!

ul111_3097804a.jpg

உங்களிடமிருந்தே தொடங்குங்கள்..

கடந்த 55 அத்தியாயங்களில் கிராமப் பஞ்சாயத்து தொடர்பான அத்தனை கோணங்களையும் அலசினோம். களத்துக்கே சென்று கிராமங்களைக் கண்முன் நிறுத்தினோம். ஆனாலும், இத்தனை நாட்களாக நாம் ‘அரசியல் சாசனச் சட்டத் திருத்தம்-73’ வலியுறுத்தும் ஊரக உள்ளாட்சிகளை மட்டுமே பார்த்தோம். 74-வது சட்ட திருத்தம் வலியுறுத்தும் பஞ்சாயத்து ஒன்றியங்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகிய மூன்று நகர்ப்புற உள்ளாட்சிகளை நாம் தொட வில்லை. அதற்குள் நாம் சென்றால் அவை இதேபோன்ற அத்தியாயங்களாக விரியும். அதேசமயம் நகர்ப்புற உள்ளாட்சி களுக்காக 74-வது சட்டத் திருத்தம் சொல்லும் வகையிலான சட்டம் தமிழகத்தில் இதுவரை இயற்றப்படவும் இல்லை. அதனை இயற்றும் கடமையும் பொறுப்பும் மாநில அரசுக்கு இருக்கிறது. ‘நீங்கள் விரும்பும் மாற்றத்தை உங்களிடம் இருந்தே தொடங்குங்கள்’ என்பார் காந்தி. நாம் ஒவ்வொருவருமே அதற்காக குரலை முன்னெடுப்போம். விரைவில் சட்டம் இயற்றப்படும் என்று நம்புவோம்.

தமிழகத்தில் இன்னும் முன்னுதாரண கிராமங்கள் பல சிறப்பாகச் செயல்பட்டிருக் கின்றன. சேலம் ஆத்தூர் சாத்தப் பாடி கிராமத்தில் சிறப்பாகச் செயல்பட்ட மறைந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சின்னத்தம்பிக்கு மக்கள் சிலை வைத்துள்ளனர். புதுகை மாவட்டத்தில் ராஜேந்திரபுரத்தில் சிறப்பாகச் செயல்பட்ட முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சண்முகநாதனுக்கும் மக்கள் சிலை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் சத்தியமங்கலம் அருகே பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது கோணமூலை கிராமப் பஞ்சாயத்து. விழுப் புரம் அருகே பூத்துறை மற்றும் இருந்தை கிராமங்கள் சமூக நீதியை காப்பதில் சிறப்பாகச் செயல்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் சாணார்பட்டி, வட்ட முத்தம்பட்டி ஆகிய பஞ்சாயத்து கள் கல்வி அறிவை புகட்டியதில் முன்னோடிகளாக திகழ்கின்றன. அவற்றையும் பெருமை பொங்க நினைவுகொள்வோம்!

மோடியில் தொடங்கினோம் அல்லவா. மோடியிலேயே முடிப்போம். இதுநாள் வரை பஞ்சாயத்து ராஜ்ஜி யத்துக்கு என்று தனி அமைச்சகம் இருந்தது. ஆனால், மோடியின் மத்திய அரசு அதனை மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்துடன் இணைத்து, பஞ் சாயத்து ராஜ்ஜியத்தை ஒரு துறையாக மட்டும் சுருக்கிவிட்டது. பஞ்சாயத்து களை வலுப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இடையூறு இது. மேலும், மைய அரசை பலப்படுத்தும் விதமாக பஞ்சாயத்து களைப் பலவீனமாக்க புதிய விதிமுறை களைப் புகுத்த மத்திய அரசு திட்டமிடுவ தாகவும் தகவல்கள் கசிகின்றன.

இறுதியாக ஒன்று, சத்தியத்தின் முன்பாக... சாமானிய மக்களின் உழைப்புக்கு முன்பாக அதிகாரத்தின் கரங்கள் ஒருபோதும் வென்றதில்லை.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/உள்ளாட்சி-55-இந்தியாவின்-முகவரி-குத்தம்பாக்கம்-மக்கள்-அதிகாரம்-மலர்ந்தது-எப்படி/article9405986.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.