Jump to content

கன்னியாகுமரியில் கால்நடை பசுந்தீவனப் புரட்சி: நீலப்பச்சை பாசி தயாரிக்க 2 லட்சம் பேருக்கு பயிற்சி


Recommended Posts

கன்னியாகுமரியில் கால்நடை பசுந்தீவனப் புரட்சி: நீலப்பச்சை பாசி தயாரிக்க 2 லட்சம் பேருக்கு பயிற்சி

கன்னியாகுமரியில் இயற்கைவள அபிவிருத்தி திட்ட மையத்தில், அசோலா நீலப்பச்சை பாசி தயார் செய்வது குறித்து பயிற்சியளிக்கும் எஸ்.பிரேமலதா (இடது ஓரம்).
கன்னியாகுமரியில் இயற்கைவள அபிவிருத்தி திட்ட மையத்தில், அசோலா நீலப்பச்சை பாசி தயார் செய்வது குறித்து பயிற்சியளிக்கும் எஸ்.பிரேமலதா (இடது ஓரம்).
 
 

கால்நடைகளுக்கு பசுந்தீவனமாக பயன்படும் அசோலா நீலப்பச்சை பாசியை உற்பத்தி செய்வது குறித்து, 2 லட்சத்துக்கும் மேற்பட் டோருக்குப் பயிற்சி அளித்து, ஓசையின்றி தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது கன்னியாகுமரியைச் சேர்ந்த இயற்கை வள அபிவிருத்தி மையம்.

கால்நடைகளுக்கான பசுந் தீவனங்களுக்குப் பெரும் தட்டுப் பாடு நிலவுவதால், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர் களும், அவற்றை வளர்க்க முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை பங் களிப்புடன், இயற்கைவள அபிவிருத்தித் திட்டத்தில், கன்னி யாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில், பசுந்தீவன உற்பத்தி பயிற்சி இலவசமாக அளிக்கப் படுகிறது. உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்லாது, நாடு முழுவதும் இருந்து கால்நடை வளர்ப்போரை வரவழைத்தும், கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருபவர்களுக்கும் இப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கால்நடைகளுக்குப் பசுந்தீவன மாக பயன்படுவது அசோலா எனப்படும் நீலப்பச்சை பாசி. வீட்டில் உள்ள சிறிதளவு இடம் அல்லது மாடியில் எளிய முறையில் அசோலாவை வளர்க்கலாம். இதை உற்பத்தி செய்ய கிலோவுக்கு ரூ.1 மட்டுமே செலவாகிறது என்பது ஆச் சரியம். இந்த பசுந்தீவனம் குறித்து, ‘தி இந்து’விடம், இயற்கை வள அபிவிருத்தித் திட்ட பயிற்சியாளர் எஸ்.பிரேமலதா கூறியதாவது:

உலக அளவில் அசோலா நீலப் பச்சை பாசியை பயிர்களுக்கு உர மாக உற்பத்தி செய்வதற்கான முயற்சி கடந்த 2000-ல், கன்னியா குமரி விவேகானந்தா கேந்திராவில் தொடங்கப்பட்டது. இதன் பிறகே கால்நடைத் தீவனமாகவும் இதை அங்கீகரித்தனர். தொடக்கத் தில் கேலியாக பார்த்த நிலையில், 2004-ம் ஆண்டில் இருந்துதான் முறையாக பயிற்சி பெறுவதற்கு கால்நடை வளர்ப்போர் முன்வந் தனர். குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த பெண்கள் அடங்கிய தொண்டு நிறுவனத்தினர் கன்னி யாகுமரிக்கு சுற்றுலா வந்தபோது, விவேகானந்தா கேந்திரா வளாகத் தில் உள்ள இயற்கை வள அபிவிருத்தி பயிற்சி மையத்தைப் பார்வையிட்டு, அசோலா தயாரிப்பில் ஆர்வம் காட்டினர். இதன் விளைவாக 10 பேர் அடங்கிய குழு முதலில் பயிற்சி பெற்றனர்.

இதைக் கற்ற ஒவ்வொரு குழுவினரும் 1,000 பேருக்கு மேல் பயிற்சி வழங்கினர். இதனால், கேரள மாநிலத்தில் மட்டும் 1 லட்சம் பேருக்கு மேல் அசோலா தயார் செய்யும் பயிற்சியை முடித்து, சான்றிதழ் பெற்றுள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளிக் கப்பட்டுள்ளது.

பசு மாடுகளுக்கு 1 கிலோ பிண்ணாக்கு தரும் சக்தியை, 2 கிலோ அசோலா வழங்குகிறது. ஆனால், இதன் உற்பத்தி செலவு வெறும் 2 ரூபாய் மட்டுமே. கோழிகளுக்கு அசோலாவை அப் படியே போட்டால் தின்றுவிடும். இதனால் கோழிகள் கனத்த தோடுடன் கூடிய முட்டைகளை அதிக நாட்கள் இடும். ஆடு, மாடுகளுக்கு தவிடு அல்லது பிண்ணாக்கில் கலந்து இடவேண்டும். 2 கிலோ அசோலா அரை லிட்டர் பாலை சுரக்கச் செய்கிறது. அதிக புரோட் டீன், ஹார்போஹைட்ரேட், மினரல், வைட்டமின் என பல சத்துகள் இதில் நிறைந்துள்ளன.

வெறும் 4 சதுர மீட்டர் கொண்ட குறைந்த பரப்பளவு இருந்தாலே அசோலாவை உற் பத்தி செய்யலாம். சிறிதளவு பசுஞ்சாணம் மட்டுமே முதலீடு. அசோலா பயிற்சியால் கால்நடை வளர்ப்பு அதிகரித்ததை ஆய்வு செய்த இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம், கன்னியாகுமரி இயற்கைவள அபிவிருத்தி மையத் துக்கு விருது வழங்கியதுடன், கால்நடைத் துறைக்கான அசோலா தயாரிப்பு பயிற்சிக்கும் தேர்வு செய்துள்ளனர்.

மேலும், தேசிய ஆராய்ச்சி அபிவிருத்தி கழகம் 2006, 2010-ம் ஆண்டுகளில் சிறந்த அசோலா தயாரிப்பு பயிற்சி மையத்துக்கான விருதை வழங்கியுள்ளது. இப் பயிற்சி வளர்ச்சியடைந்ததற்கு கேரள வேளாண் விஞ்ஞானி கம லாசனனின் முயற்சி முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

 

http://tamil.thehindu.com/tamilnadu/கன்னியாகுமரியில்-கால்நடை-பசுந்தீவனப்-புரட்சி-நீலப்பச்சை-பாசி-தயாரிக்க-2-லட்சம்-பேருக்கு-பயிற்சி/article9406081.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.