Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா யோசிக்கிற இந்த வெயிலுக்க நிண்டு கொண்டு ஒன்றும் இல்லடா எல்லா வீட்டிலையும் கணக்கெடுத்தாச்சு இந்த வீடு மட்டும் தான் கடைசி அதுகென்ன  வா உள்ள போவோம் .போவோம் சரி ஆனால் நீ கனக்க கதைக்கப்படாது ஏண்டா  அந்த Ms; என்ன மோசமான ஆளடா பெயர் கந்தசாமி ஊர் கூப்பிடுவது வெடியன் கந்தசாமி மோசம்மான ஆள்  வாயை துறந்தால் வஞ்சகம் இல்லாமல் பொய் சொல்லுவார்டா மனுசன் அப்படியா வா உள்ள போவோம் ஐயா ஐயா  ... என்டா சத்தத்தை காணல பொறுடா அந்தாள் தூங்கிட்டு இருப்பாரு சரி சரி செருப்பைகழட்டி விடு ஏண்டா அதால அடிப்பாரோ நண்பன் முறைக்கிறான் சரி சரி யாருப்பா அது நான் தான் ஐயா ஜி.எஸ் வந்திருக்கிறன் வணக்கம் வணக்கம் ஜி. எஸ்சா வா தம்பி என்ன ஏதாவது நிவாரணம் கொடுக்க போறியளா அல்லது நிவாரணம் தந்து விட்டோம் என்று சொல்லிகையெழுத்து வேண்டி சுருட்ட போறியளா ( மனதுகுள்ள ம்கும்) ஆரம்பமே நல்லா தொடங்கிட்டுது சரி சரி உள்ள வாங்க வெயில் வேற மண்டைய புளக்குது ஓம் ஐயா சரியான வெயில் இருங்கள் நன்றி ஐயா இது யாரு புது பொடியன் இவரோ இப்ப ஐயா யுத்தம்முடிஞ்ச கையோட அரசாங்கம் ஆட்களைகணக்கெடுக்குது எனக்கு உதவியாளாக இவரை போட்டு இருக்கிறது அரசாங்கம் என்னை மேலையும் கீழேயும் பார்க்கிறார் மனுசன் ஏதோ பிகரைப்பார்ப்பது போல கணக்கெடுத்து என்ன செய்ய போறாங்களாம் அது தெரியாது ஐயா கிராமங்களை அபிவிருத்தி செய்வாங்க மொத்த சனத்தொகையும் அறிந்து கொள்ளவதற்க்காகவும் அப்படியா இவர்ட பெயர் என்ன தீரன் என்று ஜி.எஸ் அறிமுகப்படுத்தினான்  என்னை.

இந்தாங்கோ ஐயா போம் இதை நிரப்பி நாளைக்கு தாங்கோ நீங்கள் நிரப்புவீங்கள்தானே நான் நிரப்புவன் இல்லாட்டா மகளை நிரப்ப சொல்லுங்கோ என்று அந்த படிவங்களை அவரிடம் கொடுத்தேன்.

 

சரி சரி ஊர் சுற்றி களைச்சு போனியள் தேத்தண்ணி ஏதாவது குடிங்களன் ம் புள்ள மது  ... மது ஓம் அப்பா இஞ்சி போட்டு மூன்று  பிளேன்டீ ஊத்து மகள் இஞ்சியில்லப்பா சும்மா ஊத்தவா என்று  ஒரு மதுக்குரல் கேட்டது உள்ளே ஒரு மயில் இருப்பது உள்மனது சொல்லியது ஆனாலும் என்ன ஒளிந்து இருப்பதை பார்க்க துடிக்கும் அடிமனது சரி என்ன நம் கண்கள் காணாமலா போய்விடும் என்ற எண்ணத்துடன் திரும்பி பார்க்கையில் நண்பன் போவோம் என்றான் பொறுங்க தம்பி பிளேன்டி இல்லையென்றால் என்ன தோட்டத்தில் இளநீர் குடிப்போம் என்றார் பக்கத்தில் இருந்த நானோ ஓம் இந்த வெக்கைக்கு இளநீர்தான் சரி அப்ப சரி வாங்கோ என்றார் கொக்குதுரட்டியுடன் தோட்டத்திற்கு நுழைகிறோம்  அப்போது பிள்ள மது கொஞ்சம் சீனியும் தேசிக்காயும் தா பிள்ள என்றார் என் மனதில் உள்ளே இருக்கும் மது வர போகிறாள் அவளைப்பார்க்கலாம் என்று தோன்றினாலும் தேசிக்காயும் சீனியும்  எதற்கு என்ற யோசனை ஓடியது வந்தாள் மது ம் (சொல்ல வேலையில்லை கந்தசாமி பெத்துத்தான் வச்சியிருக்கான் என்ற உள் மனதுகுள்ள ஒரு படம் ஓடியது) . இந்தாங்கோ அப்பா பிடியுங்க நான் பள்ளிக்கு போய் பிள்ளையை கூட்டிக்கொண்டு வருகிறேன் என்றாள் ஓடிய படம் எல்லாம் திரை கிழிஞ்சு போனதுபோல நின்றது .

 

எனக்கோ மனக்குழப்பம் வாக்கு பதிவு (வோட்லிஸ்டில்) திருமணமாகவில்லை என்று எழுதியிருக்கிறது ஆனால் பிள்ளையை கூட்டிக்கொண்டு  tu இவள் பள்ளிக்கு போகிறாள் சரி ஐயாட்ட கேட்டு தெரிந்து கொள்வோம் ஐயா என்ன ஐயா நிலத்துல இந்தம் பெரிய குழி அதுவா தம்பி ஆமிக்காரன் இந்த இடங்களை பிடிக்க வரக்குள்ள செல் அடிச்சவன் அந்த செல்களை பிடிச்சு இந்த குழிக்குள்ளதான் போட்ட நான் அது எல்லாம் சேர்ந்து  வெடிச்சதுதான் இந்த குழி என்றார் அந்த குழியோ பயிருக்கு நீர் எடுக்க தோண்டப்பட்டது என நினைக்கிறேன் ஜி எஸ் நண்பன் இதை கேட்டும் கேட்காததுமாக நின்றான் எப்படி பிடிச்ச நீங்கள் அதுவா வீட்ட கிடந்த நெல்லுச்சாக்கை தண்ணில நனைத்து அடிச்ச செல்லை ஒவ்வொன்றாக பிடிச்ச நான் ஆனாலும் ஒவ்வொரு ஷெல்லாக அடிச்சதால பிடிச்சன். ஆனால் பிறகு மல்டி என்ற ஒரு சாமான் இருக்கிரது அதை அடிச்சான் பாரு அது சும்மா மழை பொழியுறாப்போல பொழிஞ்சுது அதை கூரைக்கு மேல ஏறி தாவித்தாவி பிடிக்கைகுள்ள ஓட்டுல  கால் பாடு ஓடு முழுவதும் உடைஞ்சு போச்சுதென்றால் பாருங்கோவன் என்றார் அப்போதுதான் இந்த ஆள்ட பெயர் எனக்கு ஞாபகம் வந்தது அடப்பாவி பொய் கேள்விப்பட்டிருக்கிறேன் அஹா இது அல்லவா உலகமகா பொய் அப்போ நீங்கள் பயங்கரமான ஆள்தான் 

 

ம் அந்த காலத்தில் வேட்டைக்கு ஊர்ல் நான் தான் பேமஸ் ஒரு தோட்டாவுல ரெண்டு மான்களை வேட்டையாடிது நான் தான் அப்படியே இந்த கருமாந்திர பொய்களை கேட்க வேண்டிய நிலையில் நான் எப்படி ஐயா ஒரு தோட்டாவுல அதுவா தம்பி ஒரு நாள் நான் வேட்டைக்கு போனநான் கனநேரம் பத்தைக்குள்ள ஒளிஞ்சு இருந்த நான் ஒரு மானோ மரையோ வரல்ல சரி வீட்ட போவோம் என்று வெளிக்கிடக்குள்ள மலையோரத்துலரெண்டு மானை கண்ட நான் என்னடா ஒன்றை சுடுவமா என்று பார்த்தேன் பிறகு ரெண்டையும் சுடுவோம் என்று சரியாக மலையில் இருந்த விளிம்பை பார்த்து சுட்டநான் தோட்டா போய் விளிம்புல பட்டு இரண்டா பிரிஞ்சு ரெண்டு மானும் சுடு பட்டு கிடந்தது அதை எடுத்து ஊருக்கு கொன்டு வரகுள்ள சனம் எல்லாம் பார்த்திட்டுது அதற்கு பிறகு நான் தான் ஊர் வேட்டைக்காரன் என்றார் . சரி ஐயா போதும் போதும் நம்புறன் ஐயா நம்புறன் ஐயா சரி இந்த சீனியையும் தேசிக்காயயையும் பிடி  என்று சொல்லி விட்டு இளநீர் பருவத்தை விட முத்தின பருவத்தை உடைய இளநீரை பறித்து தந்தார் பின்னர் அதை வெட்டி அதனுள் தேசிப்புளியை புளிந்து விட்டும் சீனியும் விட்டு கலந்து தந்தார் புதுவகையான  இளநீர் அஹா என்ன ருசி  எத்தனை பேர் இப்படி குடித்து இருப்பார்களோ  தாகம் தணிந்தது .

இளநீரில் புது வகையான ஒரு ருசியைக்கண்டேன்

சரி ஐயா உங்கள்ட ஒன்று கேட்கவா என்ன தம்பி கேழு ஐயா உங்கட கள் கல்யாணம் கட்டிட்டாவோ . இல்லை பிறகு எந்தகுழந்தையை கூட்டி வர போகிறா பள்ளிக்கு அதுவா தம்பி அவளுக்கு சாதகம் சரியில்லை கல்யாணம்கட்டுறவன் இருக்க மாட்டானாம் அல்லது இறந்து போய்விடுவானாம் அப்படியா ஓம் இங்க சண்டை நடக்ககுள்ள   வவுனியால இருந்த அவள் வரக்குள்ள அந்த பிள்ளைய கூட்டிக்கொண்டு வந்தா நானும் என்ன சொல்லுற ஒன்றும் சொல்லல யாரோ அநாதை பிள்ளையாம் என்று சொன்னா கேட்டதற்கு . வரும் கல்யாணம் எல்லாம் அந்த சாதகத்தால நின்று போகுது என்றார் மனவருத்தமாக ஐயோ பாவமே என்றேன் நானும் மனுசியும் இவளை நினைச்சு நினைச்சு ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள்ள அழுறம் தம்பி கவலைப்படாதீங்கோ ஐயா அவக்கு கல்யாணம் நடக்கும் என்று சொல்லி விட்டு சரி ஐயா நாங்கள் வருகிறோம் நாளை உங்கள் மகளிடம் சொல்லி வையுங்கள் அந்த போமை நிரப்பி வைக்க சொல்லி என்று சொல்லி விட்டு  அவர் வீட்டை விட்டு வெளியில் வருகிறோம்

வரும் வழியில் அவளும் அந்த குழந்தையும் வருகிறார்கள் நானும் நண்பனும் இறங்கி கொஞ்சம் கதைக்க வேண்டும் என்றேன் அவளும் மனப்பதட்டத்துடன் என்ன சொல்லுங்க என்றாள் இந்தகுழந்தை பற்றிய விபரங்கள் இவளை எந்த ஆஸ்பத்திரியில் அநாதையாக‌ பெற்ற நீங்கள்  அதற்க்கான சான்று அல்லது எந்த காப்பகத்தில் இருந்து எடுத்த நீங்கள் என்ற எல்லா சான்றுகளும் வேண்டும் அப்பதான் உங்களை இங்கே உள்ள வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும் என்றேன் . அவளோ எதுவும் பேசாமல் மொனமாக நின்றாள் நானோ இப்படி பேசாமல் இருப்பதால் பல்ன் இல்லை நாளைக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போகும் போது  உன்மையில் உங்களுக்கு ஜாதக பிரச்சினையா என்று நான் கேட்க அவள்  பதிலோ அப்படியானால் இவள் அப்பன் இந்நேரம் இறந்து இருக்கணுமே என்றாள்.

 

அந்த வார்த்தைக்குள் இருந்த  அர்த்தம் கண்டு கொண்டேன்

 

யாரோ ஒருவன் இவளை ஏமாற்றி சென்று இருக்கிறான் அவன் நினைவாக இவள் அவன் குழந்தையை வளர்க்கிறாள் இன்னொரு கல்யாணம் தேவையில்லாமல் அவள் குடும்பத்தையும் ஏமாற்றியும் ஜாதகத்தை மாற்றி எழுதியும் அந்த குழந்தைக்காக வாழ்கிறாள் என்பதை நான் புரிந்து கொண்டேன் இது தெரியாமல் கந்தசாமி தன் சொந்த பேரக்குழந்தையை யாரோ பெற்ற அநாதை போலவே பார்க்கிறார் எப்போ தெரியபோகிறது அவருக்கு இந்த உன்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை

தொடருங்கோ..

 

இப்படியே சில கள விடயங்களும் வெளியில் வரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2016 at 0:31 AM, விசுகு said:

நல்ல கதை

தொடருங்கோ..

 

இப்படியே சில கள விடயங்களும் வெளியில் வரட்டும்.

ஊரில பெரியவன் என் கிற கன பேர் உள்ளுக்க  ........................................... அதில் ஒரு பெண் பாதிக்கப்படவள் அவளுக்காக அதை எழுதியது அவ்வளவுதான்  

கருத்துக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதகத்துக்கு நன்றி முனிவர்

tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2016 at 5:40 AM, குமாரசாமி said:

சாதகத்துக்கு நன்றி முனிவர்

tw_thumbsup:

நன்றிங்கண்ணே 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.