Jump to content

தமிழ் சினிமா: 2016 நாயகன் யார்?


Recommended Posts

தமிழ் சினிமா: 2016 நாயகன் யார்?

 
 
Desktop_3097854f.jpg
 
 
 

நாயகர்களுக்குள் யார் முதன்மையானவர் என்ற போட்டி எப்போதும் இருக்கும். இந்த ஆண்டு வெற்றிக்கொடி கட்டியவர் யார்?

கமல் ஹாசன், அஜித்குமார் தவிரப் பிற முன்னணி நாயகர்கள் அனைவரின் படங்களும் இந்த ஆண்டு வந்தன. ஏற்கெனவே பலமுறை வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டவர் என்ற வகையில் ரஜினியை விட்டுவிட்டுப் பிற நாயகர்களில் இந்த ஆண்டை வசமாக்கியவர் யார் என்று பார்ப்போம்.

விஜய்

ஆண்டுக்கு ஓரிரு படங்களில் தலையைக் காட்டும் கொள்கையைப் பின்பற்றும் விஜய், இந்த ஆண்டு நடித்து வெளியான படம் ‘தெறி’. பாசமுள்ள சாதுவான அப்பா, ஆக்ரோஷமான காவல் அதிகாரி, அன்பைக் கொட்டும் காதலன் என வெவ்வேறு வண்ணங்களைக் காட்டித் தனது ரசிகர்களைத் தெறிக்கவிட்டார் விஜய். படம் பாக்ஸ் ஆபீஸை நிரப்பியது. ஏற்ற இறக்கங்களாக விஜய்க்கு இருந்துவரும் வெற்றி - தோல்வி படங்களின் வரிசையில் ‘தெறி’ ஓரளவு வெற்றிப் படம்தான்.

விக்ரம்

விக்ரம், இரட்டை வேடங்களில் நடித்த படம் ‘இருமுகன்’. நாயகனாக ‘அகிலன்’, வில்லனாக ‘லவ்’ என இரண்டு கதாபாத்திரங்களுக்கான வேறுபாட்டை அனாயாசமாகக் காட்டி நடித்த படம். வில்லனைப் பிடிக்க அகிலன் காட்டும் தீவிரம், கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத ‘லவ்’வின் வில்லத்தனம் இரண்டும் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தன. வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் காட்சிகளில் இல்லாத நம்பகத்தன்மை போன்ற காரணங்களால் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன.

சூர்யா

முன்னணி நாயகர்கள் ஆண்டுக்கு ஒரு படத்தில் தலைகாட்டினால் போதும் என்ற இலக்கணத்துக்கு இந்த ஆண்டு சூர்யாவும் தப்பவில்லை. ‘24’ என்ற த்ரில்லர் பாணி படத்தில் மட்டுமே நடித்தார். மூன்று பாத்திரங்களில் நடித்திருந்தாலும் மூன்றுக்கும் நன்கு வித்தியாசம் காட்டி நடித்ததில் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைத்தார். ஆனால், அவரது வழக்கமான முக பாவனைகளும், காட்சி அமைப்பு களும் ஏற்படுத்தும் சலிப்பு படத்தின் மீதான ஈடுபாட்டைக் குறைக்கவும் செய்தன.

சிம்பு

கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு படம் வெளியாவதற்கே நீண்ட காத்திருப்பில் இருந்த சிம்புவுக்கு, இந்த ஆண்டு இரண்டு படங்கள். ‘இது நம்ம ஆளு’ படத்தில் சாக்லெட் பையனாகவும், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் தாடி வைத்து நடித்ததும்தான் வித்தியாசம். சிம்புவுக்கு நயன்தாரா ஜோடி என்பது ‘இது நம்ம ஆளு’ படம் வெளியாவதற்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் வெளியான பிறகு எந்தப் பரபரப்பும் எழவில்லை. ‘அச்சம் என்பது மடமையடா’வின் முதல் பாதி அழகிய இசைக் கோலமாகவும் இரண்டாம் பாதி தாறுமாறான ஆக்‌ஷன் படமாகவும் அமைந்தது. ஆனால், சிம்புக்குச் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக எதுவும் இல்லை.

தனுஷ்

கடந்த ஆண்டு நான்கு படங் களில் நடித்த தனுஷ், இந்த ஆண்டு ‘தொடரி’, ‘கொடி’ என இரண்டோடு திருப்தியாகிவிட்டார். கட்டுப்பாட்டை இழந்து ஓடும் ரயிலில் அரங்கேறும் காதல் என எதிர்பார்ப்பை ஏற்படுத் திய ‘தொடரி’, அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் அளவுக்குச் சறுக்கியது. அதிகமான சவால் இல்லாத வேடத்திலும் தனுஷ் பக்குவமான நடிப்பைத் தந்தது ஆறு தலான விஷயம். தீபாவளி அன்று வெளிவந்த ‘கொடி’ ஓரளவு உயரப் பறந்தது. இரட்டை வேடத்துக்கு தனுஷ் முழு நியாயம் செய்திருந்தார். வழக்கமான திரைக்கதை பாணி, பலவீனமான அரசியல் சித்தரிப்பு போன்றவை ‘கொடி’யின் பட்டொளியை மங்கவைத்தன. இருந்தாலும் இரண்டில் ஒன்று சோடைபோகாமல் தப்பித்த வகையில் தனுஷுக்கு ஆறுதல்தான்.

விஷால்

விஷாலுக்கு இந்த ஆண்டு ‘கதகளி’, ‘மருது’ என இரண்டு படங்கள். ‘கதகளி’ ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படம். ‘மருது’ கிராமத்துக் காதலும் பழிவாங்கலும். இரண்டுமே புதுமை இல்லாத கதைகள். பாத்திரப் படைப்பும் ஈர்க்கவில்லை. உடற்கட்டும் உயரமும் கைகொடுக்கும் அளவுக்கு அவருக்கு நடிப்பு கைகொடுக்கவில்லை. அதற்கு விஷாலைக் குறை கூற முடியாது. பலவீனமான பாத்திர வார்ப்பே காரணம்.

ஏறுமுகத்தில் மூன்று முகம்

முன்னணி வரிசையில் உள்ள நாயகர்கள் பிரம்மாண்ட வெற்றிக்காகக் காத்திருக்கும் வேளையில் மூன்று நடிகர்களின் திரைப் பயணம் மேல் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. அவர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்தி.

கார்த்தி

நடித்த ‘தோழா’, ‘காஷ்மோரா’ இரண்டும் வசூலிலும், உள்ளடக்கத்திலும் குறைவைக்கவில்லை. ‘தோழா’வில், கழுத்துக்குக் கீழே செயலிழந்துபோன உடலுடன் வலம்வரும் நாகர்ஜுனாவின் வாழ்வில் வண்ணம் சேர்க்கும் இயல்பான துணைவனாக நடித்துக் கவர்ந்தார் கார்த்தி. ‘காஷ்மோரா’வில் இரண்டு வேடங்கள்; மூன்று பரிமாணங்களில் வந்து ஈர்த்தார். இரண்டு படங்களுமே வெவ்வேறான கதையமைப்புகள், பாத்திரங்கள், என அமைந்ததில் கார்த்திக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டுதான்.

சிவகார்த்திகேயன்:

ஒரே பாணியிலான நடிப்பு, நகைச்சுவை, காதல், நடனம் எனக் கலந்து கொடுத்து வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய நாயகராக இந்த ஆண்டு மாறியிருக்கிறார். ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’ என வெளியான இரண்டுமே இந்த ஆண்டு வெற்றிப் படங்கள். நடனம், நக்கலான முக பாவனை மூலம் ‘ரஜினி முருகன்’ படத்தை ஹிட் அடிக்க வைத்தவர், ‘ரெமோ’வில் காதலர், நர்ஸ் என இருவிதத் தோற்றங்களில் வித்தியாசம் காட்டி அசத்தினார்.

விஜய் சேதுபதி:

மசாலா படமா, முறுக்கு மீசை போலீஸ் படமா, கிராமத்துப் படமா, பெண்களைப் பற்றிய புரிந்துணர்வு இல்லாத ஆணின் படமா, குடும்பச் சூழ்நிலையில் தடுமாறும் இளைஞனின் படமா, சிரிப்பு ரவுடி பாத்திரமா… எல்லாவற்றுக்கும் ஒரே தேர்வு விஜய் சேதுபதி என்ற நிலையை இந்த ஆண்டு தமிழ்த் திரையுலகம் பார்த்தது. ‘சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘இறைவி’, ‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘றெக்க’ என 6 படங்களில் நடித்து இந்த ஆண்டு அதிகப் படங்களில் நடித்த நாயகன் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

எல்லாப் படங்களும் வெவ்வேறு கதைகளையும் மாறுபட்ட பாத்திரப் படைப்புகளையும் கொண்டவை. இவை எல்லாவற்றிலும் பொருத்திக்கொண்டது விஜய் சேதுபதிக்கே உரிய தனிச் சிறப்பு. ஆரவாரம் இல்லாத இயல்பான நடிப்பு, பாத்திரத்துக்கு ஏற்றப் பேச்சு, உடல்மொழி ஆகியவை விஜய் சேதுபதிக்குக் கைகொடுக்கின்றன. தொடர்ந்து மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்துவரும் விஜய் சேதுபதி படங்களின் எண்ணிக்கையிலும், நடிப்பின் தரத்திலும், வெற்றிகளின் எண்ணிக்கையிலும் இந்த ஆண்டு முதலிடம் பெற்றிருக்கிறார்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/தமிழ்-சினிமா-2016-நாயகன்-யார்/article9406196.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.