Jump to content

'இப் புவியில் எனக்கு இலங்கைதான் சொர்க்கம்' - வசிம் அக்ரம்


Recommended Posts

'இப் புவியில் எனக்கு இலங்கைதான் சொர்க்கம்' - வசிம் அக்ரம்
 

(நெவில் அன்தனி)

 

இப் புவியில் தனது சொர்க்­க­புரி இலங்கை என பாகிஸ்தான் கிரிக்கெட் மேதையும் தொலைக்­காட்சி வர்­ண­ணனை­யா­ள­ரு­மான வசிம் அக்ரம் தெரி­வித்தார்.

 

21032M1A0673.jpg

 

 

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழாவில் விசேட அதி­தி­யாக கலந்­து­ கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

 

இவ் விருது விழாவில் பேசிய வசிம் அக்ரம்,  ‘‘விளை­யாட்­ட­ரங்­கிலும் அரங்­கிற்கு வெளி­யேயும் எங்­க­ளுக்கு இடையில் (பாகிஸ்தான், இலங்கை) பல்­வேறு போட்­டிகள் இடம்­பெற்­றன. பெரும்­பா­லா­னவை அரங்­கிற்கு வெளியே இடம்­பெற்­றன. என்னைப் பொறுத்­த­மட்டில் எல்­லா­வற்­றுக்கும் மேலாக நினைவில் நீங்­காத ஓர் இட­மாக இலங்கை திகழ்­கின்­றது.

 

இப் புவியில் இலங்கை எனக்கு ஒரு சொர்க்­க­பு­ரி­யாகும். இந்த நாட்டை நாங்கள் முத்துத் தீவு என அழைக்­கின்றோம்’’ என்றார்.

 

இம்ரான் கானின் தலை­மையில் 1985 இலங்­கைக்கு முதல் தட­வை­யாக வருகை தந்­த­போது றக்­பியும் கால்­பந்­தாட்­டமும் தான் இலங்கை விளை­யாட்­டுத்­து­றையில் முன்­னி­லையில் இருந்­த­தாக அவர் குறிப்­பிட்டார். ஆனால், இரண்டு வரு­டங்­களின் பின்னர் இலங்­கையின் மூலை­மு­டுக்­கெல்லாம் கிரிக்கெட் வியா­பித்­தி­ருந்­ததை காணக் கிடைத்­தா­கவும் அக்ரம் கூறினார்.

 

1996 உலகக் கிண்ண கிரிக்கெட், உலக இரு­ப­துக்கு 20 கிரிக்கெட், சம்­பி­யன்கள் கிண்ண கிரிக்கெட் ஆகி­ய­வற்­றிலும் சம்­பி­ய­னா­னதன் மூலம் சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் இல­ங்­கையின் வளர்ச்சி எத்­த­கை­யது என்­பது புலப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

‘‘இலங்கைத் தீவு தொடர்பில் நான் விரும்­பு­வது என்­ன­வென்றால், மக்கள் மத்­தியில் நிலவும் தெளி­வுதான். இலங்­கை­யி­லுள்ள ஒவ்­வொ­ரு­வரும் புன்­மு­றுவல் பூக்கும் முகங்­க­ளுடன் மகிழ்ச்­சி­யாக காணப்­ப­டு­கின்­றனர்.

 

இங்கு வீதி­களில் நட­மா­டு­வது அபா­ய­மற்­றது என்­பதை நான் உணர்­வ­துடன் எனது இரண்­டா­வது சொந்த நாடாக நான் பார்க்­கின்றேன்’’ என வசிம் அக்ரம் மேலும் தெரி­வித்தார்.

 

இந்த நாட்டை நேசித்­ததன் மூலம் இலங்­கையின் உத்­தி­யோ­கப்­பற்­றற்ற தூத­ராக தன்னை உயர்த்­தி­ விட்­டுள்­ள­தாகக் குறிப்­பிட்ட அவர், இலங்­கைக்கு விஜயம் செய்­வதை தவிர்க்­கக்­கூ­டாது என தான் செல்லும் நாடு­க­ளி­லெல்லாம் மக்­க­ளிடம் கூறி­வ­ரு­வ­தா­கவும் தெரி­வித்தார்.

 

முழு­மை­யான ஆர்­வ­மு­டனும் அர்ப்­ப­ணிப்­புத் ­தன்­மை­யு­ட னும் கிரிக்கெட் விளை­யாட்டில் இலங்­கை­யர்கள் ஈடு­பட்டு வரு­கி­றார்கள் எனவும் இலங்கை வீரர்கள் சாது­வா­ன­வர்கள் ஆனால் கிரிக்கெட் அரங்கில் ஆக்­ரோ­ஷ­மா­ன­வர்கள் எனவும் அக்ரம் குறிப்­பிட்டார்.

 

இலங்கை பாட­சாலை கிரிக்கெட் கட்­ட­மைப்பு ஒப்­பிட முடி­யாத அள­வுக்கு உய­ரிய நிலையில் இருப்­ப­தா­கவும் தனது நாட்டில் அவ்­வாறு இல்லை எனவும் தெரி­வித்த அக்ரம், சிறந்த பாட­சாலை கிரிக்கெட் கட்­ட­மைப்பின் மூலம் அர்­ஜுன ரண­துங்க, அர­விந்த டி சில்வா, சனத் ஜய­சூ­ரிய, சமிந்த வாஸ், முத்­தையா முர­ளி­தரன் போன்ற திற­மை­சா­லிகள் உரு­வா­ன­தா­கவும் கூறினார்.

 

இந்த விரு­து ­வி­ழா­வுக்கு வருகை தரு­மாறு தனக்கு அழைப்பு விடுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சுமதிபாலவுக்கு விசேட நன்றிகளைத் தெரிவித்த வசிம் அக்ரம், ‘‘இலங்கை கிரிக்கெட்டிற்கு எந்த நிலையிலும் உதவத் தயாராக இருக்கின்றேன். 

 

பாகிஸ்தானும் இலங்கையும் சகோதர நாடுகள். எனவே ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்க வேண்டும்’’ என்றார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21032#sthash.CcauC1P0.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.