Jump to content

ஜெயலக்ஷ்மியை கண்டுபிடித்தாரா விஜய் ஆண்டனி? #சைத்தான் விமர்சனம்


Recommended Posts

ஜெயலக்‌ஷ்மியை கண்டுபிடித்தாரா விஜய் ஆண்டனி? #சைத்தான் விமர்சனம்

 

சைத்தான்

"பிச்சைக்காரன்" வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி எடுத்திருக்கும் அவதாரம்தான் சைத்தான். முந்தைய வெற்றிகளால் கொஞ்சம் எதிர்பார்ப்பு கூடியிருக்க, எப்படி வந்திருக்கிறான் சைத்தான்?

திறமை வாய்ந்த மென்பொறியாளரான விஜய் ஆண்டனிக்கு, திருமணமான ஓரிருநாட்களில் திடீரென சில சம்பவங்கள் நடக்கத் தொடங்குகிறது. கணினியிலிருந்து நீளும் கை தாக்குகிறது.  மண்டைக்குள் ஒரு குரல் துரத்துகிறது. அதன் தொடர்ச்சியாக சில விபரீதங்கள் நிகழ, குடும்பமும், அவரது பாஸும் கோயில், சைக்யாட்ரிஸ்ட் என்று விடைதேடிப் பயணிக்கிறார்கள். இதன் நடுவில் துரத்தும் குரலின் வழிகாட்டுதல் படி, விஜய் ஆண்டனியும் ஜெயலட்சுமியைத் தேடுகிறார். யார் அந்த ஜெயலட்சுமி... எதற்காகத் தேடச் சொல்கிறது அந்தக் குரல் என்பதை பிற்பாதியில் காட்டி முடித்திருக்கிறார்கள்.

டைட்டிலுக்கு முன்னரே சுஜாதா படத்தைப் போட்டு, அவரது நாவலிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது என்று காட்டிவிடுகிறார்கள். அவரது ‘ஆ’ நாவலின் பெரும்பாலான பகுதிகள்தான் சைத்தான். இடைவேளையில் ஒரு ஃபோட்டோவைப் பார்த்ததும் விஜய் ஆண்டனி ஷாக் ஆகும் தருணத்தில் தியேட்டரும் சேர்ந்து ஷாக் ஆகிறது. நெத்தியடி இண்டர்வெல் ப்ளாக். ஆனால், அதற்குபிறகுதான் கதை எங்கே செல்வது எனப்புரியாமல் திக்கற்று திரிகிறது. இரண்டாம் பாதியில் சுஜாதாவின் கதையை அப்படியே எடுக்க முடியாது என்று மாற்றியதில்தான் சறுக்கியிருக்கிறார்கள். 

நாயகியின் பாத்திரப்படைப்பில் ஏகப்பட்ட குளறுபடிகள். இடைவேளைக்குப் பிறகு, வில்லன் எண்ட்ரி ஆகும் இடம் வரைக்குமான இடைவெளியை நிரப்பும் சங்கிலி தொடர்பற்றுப்போன உணர்வு. அந்த வில்லன் செய்யும் வேலையெல்லாம் பத்துக்கு ஏழு படங்களில் காட்டி கொட்டாவி விட வைக்கிற டெம்ப்ளேட் க்ரைம். விஜய் ஆண்டனியின் ஆக்‌ஷன் அவதாரம் க்ளாப்ஸ் அள்ளினாலும், அது முடிந்தபிறகு மீண்டும் ஒரு தொய்வு. க்ளைமாக்ஸிலும் எப்படி முடிப்பது என்று படத்தின் கேரக்டர்கள் நம்மிடம் கேட்டே விடுவார்கள் போல.  

கதைத் தேர்வில் வழக்கம்போலவே சபாஷ் பெறுகிறார் விஜய் ஆண்டனி. அவருக்கு ஏற்ற கதாபாத்திரம். உடல்மொழியெல்லாம் ஓகே. ஸ்கோர் பண்ண வாய்ப்பிருக்கிற காட்சிகள் நிறைய இருந்தும், தவறவிட்டிருக்கிறார். கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். 

அதேபோல, விஜய் ஆண்டனியின் ஐடி நண்பனாக முருகதாஸைக் காண்பித்ததும், "இனிமே இந்த மாதிரி குரல் கேட்டா, சார் வீட்ல இல்ல வெளியூர் போயிருக்கார், நாளைக்கு வாங்கனு சொல்லிடு" என சின்ன காமெடி சொல்லி சிரிக்க வைத்ததும் சூப்பர். ஆனால், அந்த மொட்டை மாடி சீரியஸ் காட்சியில் அவரை ‘வாட் த ஹெல்’ என்று ஆங்கிலம் பேசவைத்தது நெருடல். ஐடிக்காரர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்று வலிந்து திணிக்கப்பட்ட அந்த வசனத்துக்கு தியேட்டரில் சிரிப்புதான் கேட்கிறது. அங்கே  ஆங்கில வசனத்தைப் பேசவிட்டுவிட்டு, வில்லன் ஆங்கிலம் பேசும்போது திட்டுவதெல்லாம்.. ஹி.. ஹி...  அந்த டெர்ரர் வில்லனை, கடைசியில் காமெடியாக காண்பித்திருப்பதும் சிரிப்பதா, சீரியஸாய் இருப்பதா என்று ரசிகனைக் குழப்புகிறது. 

அருந்ததி நாயர்

விஜய் ஆண்டனியின் படங்கள் என்றாலே நாயகிக்கு நடிக்கும் வாய்ப்பு நிறையவே இருக்கும். இதிலும் அப்படியே. அதை அருந்ததி நாயர் தெளிவாகச் செய்திருக்கிறார். மனைவியாகவும், பிற்பகுதிக் காட்சிகளிலும் நன்றாகவே நடித்திருக்கிறார். அவருடைய கண்கள் கதைக்கு பலம் கூட்டுகின்றன.  

நான் பெத்த மக்கா, யானை பலம் என்று இரண்டு Bit Songs நன்றாக இருக்கிறது. ஹீரோயினை விஜய் ஆண்டனி தேடும் போது வரும் பாடல் மட்டும், "கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்கோங்கப்பா, பாட்டு முடிஞ்சதும் படம் ஸ்பீடாகும்" என்பது போல இருக்கிறது.  ஆனால், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் விஜய் ஆண்டனி. அந்த ‘ஜெயலக்‌ஷ்மீஈஈஈஈஈஈ’ காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது.  பிரதீப் கலிபுரயத்தின்  கேமராவுக்கு ஸ்பெஷல் பாராட்டு. வீட்டில் குரல் கேட்கும் காட்சியில் கன்னாபின்னா ஆங்கிள்கள் வைத்து மிரட்டியிருக்கிறார். கிளைமாக்ஸ் ஃபைட் சீனிலும் சுற்றிச் சுழல்கிறது கேமரா. குட்டிக் குட்டி வசனங்களிலும், சுஜாதாவின் கதைப் போர்ஷன்களை தெளிவாக படமாக்கியவிதத்திலும் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கவனம் பெறுகிறார். 

மேட்ரிமோனியல் பார்த்து திருமணம் செய்து கொண்டவர், மனைவியின் வயது தெரியாமலா இருப்பார்; கதையை இப்படி மாற்றும்போது, அந்தத் திருமணம் விசாரிக்காமல் எப்படி நடந்தது என்று ரசிகன் கேட்பதற்கு ஒரு குட்டி வசனத்திலா பதில் சொல்வது போன்ற சின்னச் சின்ன விஷயங்களையும் கவனித்திருக்கலாம். இரண்டாம்பாதியில் சொல்கிற கதைப்படி, முதல் பாதியில் நினைவுகள் மட்டும்தான் வரவேண்டும். ஆனால் குரல்கள் ஏன் கேட்கிறது?

சுஜாதா, நாவலையே திரைக்கதை பாணியில் எழுதுபவர். அவருடைய கதையை மாற்றுவதெல்லாம், அதைவிட இரண்டு மடங்கு உழைப்பு தேவைப்படுகிற சமாச்சாரம்.  ஆனால், அங்குதான் இந்தப்படம் தடுமாறுகிறது. 

விஜய் ஆண்டனிக்கு, இது இன்னும் ஒரு ஹிட்டாக அமையலாம். ‘ஒகேதான் இல்ல?’ என்றபடியேதான் தியேட்டரில் இருந்து வருகிறார்கள் ரசிகர்கள். 

ஆனால் சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்தை ஜஸ்ட் லைக் தட் தட்டிவிட்டு சிங்கிள் எடுத்த ஃபீல். 

http://www.vikatan.com/cinema/movie-review/73934-saithan-movie-review.art

Link to comment
Share on other sites

திரை விமர்சனம்: சைத்தான்

 

 
saithaan_3098349f.jpg
 
 
 

தினேஷ் (விஜய் ஆண்டனி) ஐ.டி. நிறுவனத்தில் பணி யாற்றுகிறார். அவருக்கு ஐஸ் வர்யாவுடன் (அருந்ததி நாயர்) திருமணம் ஆன சில நாட்களில், மண்டைக்குள் விநோதமான குரல்கள் கேட்கின்றன. அந்தக் குரல்களின் சொல்படி நடக்க ஆரம்பிக்கிறார் விஜய் ஆண்டனி. இது விபரீத விளைவுகளை ஏற்படுத்துகிறது.

மனநல மருத்துவரின் சிகிச்சை வேறு சில ‘உண்மை’களைப் புலப் படுத்துகிறது. விடாமல் துரத்தும் அந்தக் குரலின் பேச்சைக் கேட்டு, ‘ஜெயலட்சுமி’யைத் தேடி அலைகிறார் விஜய் ஆண்டனி. யார் அந்த ஜெயலட்சுமி? விஜய் ஆண்டனிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? இதில் அவர் மனைவிக்கு என்ன தொடர்பு ஆகியவைதான் ‘சைத்தான்’ சொல்லும் கதை.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ஆ’ என்ற நாவலின் சில பகுதிகளைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. அறிமுகப் படத்தையே சைக்கலாஜிக்கல் திகில் படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. திகிலும் சுவா ரஸ்யமுமான சம்பவங்களால் இடைவேளை வரை படம் விறு விறுப்பாக நகர்கிறது. ஆனால், முதல் பாதி எழுப்பும் எதிர்பார்ப்பு களை இரண்டாம் பாதி புஸ்வாண மாக்கிவிடுகிறது.

கோவையற்ற காட்சிகள், நாயகியின் பாத்திரப் படைப்பில் இருக்கும் தெளிவின்மை, முன் ஜென்ம ஞாபகத்துக்குச் சொல்லப் படும் காரணம் போன்ற பலவீன மான காட்சிகள் படத்தின் மீதான ஈர்ப்பைக் கரையச்செய்கின்றன. கடைசிக் கட்டத்தில் வில்லனை அறிமுகப்படுத்துவது செயற்கை யாக இருக்கிறது.

பரிசோதனைக்காக மனித உடலில் செலுத்தப்படும் மருந்து ஏற்படுத்தும் விளைவுகள் திரைக் கதைக்குத் தேவையான விதத்தில் வசதியாக மாறுகின்றன. ஜெய லட்சுமியைத் தேடித் தஞ்சாவூர் செல்லும் விஜய் ஆண்டனி, அடுத்த காட்சியில் மருத்துவமனையில் இருக்கிறார். மருந்து மாஃபியா கும்பலால் அனுப்பி வைக்கப்படும் நாயகியின் பின்னணி என்ன வென்று தெரியவில்லை. இப்படிப் பல காட்சிகளுக்குத் தெளிவான காரணம் இல்லை. விஜய் ஆண்டனியை, மனநல மருத் துவரே ‘முன் ஜென்ம’த்துக்கு அழைத்துச் செல்வது ஏற்கும்படி இல்லை. கொடூர வில்லனைக் கடைசியில் காமெடியன் போலக் காட்டுவது அபத்தம்.

சாஃப்ட்வேர் பொறியாளராக வும் தமிழாசிரியராகவும் வரும் விஜய் ஆண்டனி, ஆக்‌ஷன் அவதாரமும் எடுக்கிறார். நடிப்பில் குறைவைக்கவில்லை. ஆனால், கிட்டத்தட்ட எல்லாப் படங்களிலும் அவரது முகபாவனைகள், பேச்சு, உடல்மொழி எல்லாமே ஒரே மாதிரி இருப்பது சலிப்பூட்டுகிறது. நாயகியாக வரும் அருந்ததி நாயருக்குப் பொருத்தமான வேடம். குழப்பத்தையும் கோபத் தையும் நன்றாக வெளிப் படுத்துகிறார்.

விஜய் ஆண்டனியின் இசை யில் இரண்டு பாடல்களும் கேட்க வைக்கின்றன. ‘ஜெயலட்சுமீஈஈ...’ என படம் முழுவதும் பின்தொட ரும் விசித்திரமான ஒலி செவிகளை ஈர்க்கிறது. பிரதீப் காளிபுரயாத்தின் ஒளிப்பதிவு படத்தின் தொனிக்கு ஏற்ப அமைந்துள்ளது. வீரா செந்தில்ராஜின் எடிட்டிங்கில் த்ரில்லர் படங்களுக்கே உரிய எடிட்டிங் காணப்படவில்லை.

சவாலான கதைக்கு இழுவை யான திரைக்கதை சைத்தானைத் தடுமாற வைக்கிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-சைத்தான்/article9408183.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.