Jump to content

திரை விமர்சனம்: கவலை வேண்டாம்


Recommended Posts

திரை விமர்சனம்: கவலை வேண்டாம்

 

 
 
 
 
kv_3095998f.jpg
 
 

காதல் திருமணம் செய்து கொள்ளும் ஜீவா - காஜல் அகர்வால் ஜோடி, திருமணத்தன்றே பிரிந்து விடுகிறார்கள். சில வருடங்கள் கழித்து பாபி சிம்ஹாவைத் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிடுகிறார் காஜல். இதற் கிடையில் சுனைனா, ஜீவா வைக் காதலிக்கிறார். இவர்களது வாழ்க்கை என்ன ஆயிற்று என்பதே ‘கவலை வேண்டாம்'.

திரைக்கதையைப் பற்றிக் கவலையே வேண்டாம் என்று இயக்குநர் டீகே முடிவுசெய்து விட்டார். மலினமான காமெ டியை அடுத்தடுத்து அரங்கேற்றி னால் போதும் என்ற முடி வுக்கு வந்துவிட்டார். திரைக் கதை, ரசிக்கும்படியான காட்சி கள், கொஞ்சமாவது ஏற்றுக் கொள்ளக்கூடிய திருப்பங்கள், பாத்திர வார்ப்பு என எதைப் பற்றியுமே கவலைப்பட வில்லை. ஜீவா, காஜல் பாபி சிம்ஹா, சுனைனா, பாலாஜி, மயில்சாமி, பால சரவணன், மனோபாலா எனப் பல நடிகர்கள் வருகிறார்கள். சகட்டுமேனிக்கு இரட்டை அர்த்த வசனங்கள் பேசு கிறார்கள், போகிறார்கள். இப்படியே படம் நகர் கிறது. எந்த இடத்திலும் அழுத்தமே இல்லாமல் காட்சி கள் நகர்கின்றன.

காதலி ஒரு கட்டத்திலும் தன் முடிவை மறுபரிசீலனை செய்வதே இல்லை. அவளை மறுபரிசீலனை செய்யவைக்க விரும்பும் நாயகனிடம் அதற் கான உருப்படியான திட்டம் எதுவும் இல்லை. புதிதாக வரும் இன்னொருவனுக்கோ படத்தில் எந்த வேலையும் இல்லை. இதற்கு நடுவில் நாயகனைக் காதலிக்கும் இன்னொரு பெண் பரிதாபமாக வந்துபோகிறாள்.

ஜீவா தனக்குக் கொடுக்கப் பட்டுள்ள வேலையை(?) ஒழுங்காகச் செய்திருக்கிறார். ஆனால், இந்தப் படம் எந்த வகையிலும் அவருக்குப் பெருமை சேர்க்காது. காஜல் அகர்வாலின் அழகும் சுறுசுறு வென்ற அவர் நடிப்பும் படத்தை ஓரளவு காப்பாற்றுகின்றன. நடிப்பிலும் நடனத்திலும் அவர் தன் திறமையை நிரூபித்திருக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜியின் காமெடி அவ்வப்போது சிரிப்பை வர வைத்தாலும், தொடர்ச்சி யாக ஒரேமாதிரியான பாத்திரம் தானா என்ற சலிப்பு ஏற்படு கிறது. பாலசரவணன், மயில்சாமி, மனோபாலா ஆகியோரின் பாத்திரங்களும் நடிப்பும் கவரும் வகையில் அமையவில்லை. மலின வச னத்தில் புதிய சாதனை படைக் கிறார் மனோபாலா. ரசத் தில் கறிவேப்பிலைக்கு இணை யான கதாபாத்திரம் பாபி சிம்ஹாவுக்கு.

குன்னூரின் அழகை அற்புத மாகப் படம் பிடித்திருக்கும் அபிநந்தனின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரிய பலம். லியோன் ஜேம்ஸின் பாடல் கள், சுரேஷின் எடிட்டிங் ஆகியவையும் படத்தின் சாதக மான அம்சங்கள்.

காதல், கல்யாணம், பிரிவு, மறுமணம் என எதையுமே கொஞ்சமாவது உருப்படியாகச் சொல்ல வேண்டும் என்று இயக்குநர் நினைக்கவில்லை. காதலன், காதலி, காதலியின் வருங்காலக் கணவன், காத லனை விரும்பும் இன்னொரு பெண் ஆகியோரை வைத்து வலுவான திரைக்கதையை உருவாக்கியிருக்கலாம். ஆனால், இயக்குநரின் கவனமெல்லாம் இரட்டை அர்த்த வசனங்களிலும் ஆபாச நகைச்சுவையிலும் குவிந் திருக்கிறது.

‘கவலை வேண்டாம்’ என் கிறது படத்தின் தலைப்பு. படத்தின் உள்ளடக்கம் தமிழ் சினிமாவின் நிலை பற்றிய ஆழமான கவலையை ஏற் படுத்துகிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-கவலை-வேண்டாம்/article9397755.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.