Jump to content

கோவா IFFI 2016- மெல்லோ மட்: சிறுமியின் அசாத்திய பயணம்


Recommended Posts

கோவா IFFI 2016- மெல்லோ மட்: சிறுமியின் அசாத்திய பயணம்

 

 
mud_3095326f.jpg
 
 

கோவா - சர்வதேச பட விழாவில் கவனம் ஈர்த்த படங்கள் குறித்த சிறப்புப் பார்வை

Mellow Mud | 2016 | Renars Vimba | Latvia

பெற்றோர்களால் தனித்து விடப்படும் குழந்தைகள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் நிலை வரும்போது என்ன செய்வார்கள்? இந்த உலகத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்?

விவாகரத்து வாங்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைகொள்ளாமல் தங்களுக்கென தனி வாழ்க்கையை நாடுகிறார்கள். அவர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளை காப்பகங்கள் கவனித்துக் கொள்கின்றன. இதுதான் ஐரோப்பாவின் நிலை.

லடிவாவில் தனது பாட்டி, தம்பியுடன் வாழ்ந்து வருகிறாள் ரயா. அவளது பெற்றோர் எப்போதோ விவாகரத்து வாங்கிவிட்டனர். ரயாவின் அம்மா இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்ள, ரயாவின் அப்பாவோ மரணம் அடைந்துவிடுகிறார். அதன்பிறகு குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார் ரயாவின் தந்தை வழி பாட்டி.

ஒருநாள் எதிர்பாராதவிதமாக ரயாவின் பாட்டியும் இறந்துவிட, அதன்பின் ரயா என்ன முடிவெடுக்கிறாள்? வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே மெல்லோ மட்.

ஆப்பிள் மரங்களின் மீதான பாசத்தினாலேயே தனது பாட்டியுடன் தங்கியிருக்கிறாள் ரயா. அந்த ஆப்பிள் மரங்களையும் அவர்களது வீட்டையும் விற்று விட பாட்டி முடிவெடுக்கும்போது, அதனை எதிர்த்து ரயாவால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. பாட்டி இறந்தபின் அவர் இறந்த செய்தியை வெளியே சொல்லாமல் தனது வாழ்வைத் தானே பார்த்துக்கொள்ளும் முடிவை எடுக்கிறாள்.

பாட்டி இறந்ததை வெளியே சொன்னால் ரயாவும் அவளது தம்பியும் குழந்தைகள் காப்பகத்தில் வாழ வேண்டிய நிலை ஏற்படும். ஐரோப்பாவின் பல நாடுகளில் இதுதான் சட்டம். ஆனால் ரயாவிற்கு ஒருபோதும் குழந்தைகள் காப்பகம் மீது விருப்பம் இல்லை. தன்னுடைய வாழ்வை சுதந்திரமாக வாழ ஆசைப்படும் ரயா, தனக்கான முடிவை எடுக்கிறாள். சில சமயங்களில் அது சட்டங்களுக்கு புறம்பாகவும் இருக்கிறது.

அப்பா, அம்மா இருவராலும் கைவிடப்பட்டபின் ஒரு பெண் தனது வாழ்வை கடத்த எடுக்கும் முடிவுகள், அதுவும் பதின்பருவத்து பெண் எடுக்கும் முடிவுகள் எப்படியெல்லாம் இருக்கும் என்பதை லடிவா நம்மிடையே சொல்கிறது.

படம் முழுக்க வசனங்களை விட காட்சிகளே அதிகம் பேசுகின்றன. ரயா தன்னை ஒரு பெரிய பெண்ணாக நினைத்து கொள்கிறாள். பல நேரங்களில் அவள் எடுக்கும் பதின்பருவத்து பிள்ளைகளை தாண்டியதாகவே இருக்கிறது. சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணமே அவளை அப்படியான முடிவுகளை எடுக்க வைக்கிறது.

படம் முடிந்தபின் ரயா உங்களை கண்டிப்பாக தொந்தரவு செய்வாள். அவளது நினைவுகள் கொஞ்ச நேரமேனும் உங்களுடன் இருக்கும். அதுதான் மெல்லோ மட் திரைப்படத்தின் முக்கியமான அம்சம். படம் நெடுக பிண்ணனி இசை என்பது இல்லை என்றே சொல்லலாம். அவ்வளவு அருமையான பயணம் ரயாவுடன் நாம் செல்லலாம்.

காசில்லாமல் திருட முயலும்போதும் சரி, பாட்டி இறந்த பின் என்ன செய்வெதென்று தெரியாமல் ஒரு செயலைச் செய்யும்போதும் சரி, ரயாவின் மீது வெறுப்பு ஏற்படுவதே இல்லை. உண்மையில் ரயாவிற்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது என எண்ணிக் கொண்டே இருக்கிறோம்.

படத்தின் இறுதியில் ரயா தன் தம்பிக்கு செருப்பு வாங்கித் தரும் காட்சி, ரயாவினை இன்னும் நேசிக்க வைக்கிறது. ரயாவின் பயணம் எவ்வளவு கடினமானது என்பதை அவளது அந்த மென்சிரிப்பு சொல்கிறது. படம் நெடுக எதோ உணர்வுகளுடன் பயணிக்கும் சக பயணிபோல நாம் மாறி விடுகிறோம். பெற்றோர் இல்லாமல் தனித்து வாழ நேரும் பதின்பருவத்து குழந்தைகள் பலரது கதைகளாகவே இருக்கிறது மெல்லோ மட்.

http://tamil.thehindu.com/cinema/world-cinema/கோவா-iffi-2016-மெல்லோ-மட்-சிறுமியின்-அசாத்திய-பயணம்/article9395018.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.