Jump to content

செல்ஃபி ஸ்டிக் எல்லாம் பழசாம் பாஸ். AirSelfie தெரியுமா?


Recommended Posts

செல்ஃபி ஸ்டிக் எல்லாம் பழசாம் பாஸ். AirSelfie தெரியுமா?

 

phone26_13152.jpg

ஸ்மார்ட் போன்களில் எவ்வளவோ அம்சங்கள் இருந்தாலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தெரிந்த அம்சமும், மிகவும் விரும்பும் அம்சமும் Selfie தான். தன்னை தானே படம் எடுத்து கொள்வது என்று ஆரம்பித்து, நண்பர்களை தன்னுடன் இணைத்து எடுத்துக்கொள்ளும் க்ரூப் செல்ஃபி என்று வளர்ந்து... Selfie நம் சமூக வலைதளங்களில் காட்டிய வீச்சு மிகவும் வேகமானது.


ஆரம்ப காலங்களில் Selfie எடுப்பதற்கு கையை ஒட்டடை அடிக்கும் கம்பு போல் தூக்கிக் கொண்டு திரிந்தோம், பின்பு Selfie Stick வந்து நம் கை வலியை சற்று குறைத்தது. ஆனால் அதிலும் ஒரே மாதிரியான ஆங்கிளில் படம் எடுக்க முடியும். அதுவும் க்ரூப் செல்ஃபி எடுக்க வேண்டும் என்றால் அனைவரையும் பிரேமுக்குள் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக வரவுள்ளது AirSelfie Camera.

உள்ளங்கை அளவே உள்ள இந்த சாதனம் ஒரு பறக்கும் கேமரா(Drone). நம் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் இதனை கட்டுப்படுத்தி படங்களை நல்ல வைட் ஆங்கிளில் எடுக்கலாம்.

கட்டுமானம் மற்றும் சார்ஜ்:

உறுதியான anodized aluminum case மூலம் உருவாக்கப்பட்ட இந்த பறக்கும் கேமரா 94.5மிமீ நீளமும், 67.4மிமீ அகலமும், 10.6மிமீ தடிமனும் அளவை கொண்டது. இதன் மொத்த எடையும் 52 கிராம் மட்டுமே.

இதனை மொபைலுடன் பொருத்தும் வகையில் கேஸுடன் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த கேஸ் ஐபோன் 6 மற்றும் 6s, ஐபோன் 7 மற்றும் 7s, ஹுவாவே P9 மொபைல் மற்றும் கூகுள் பிக்சல் மொபைல் போன்களுக்கு பொருத்தும். AirSelfie கேமராவை இந்த கேஸில் மொபைலுடன் வைத்தால் போதும் 30 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும். ஒருமுறை சார்ஜ் செய்துவிட்டால் AirSelfie கேமரா 3 நிமிடங்கள் பறக்க இயலும். முழு சார்ஜ் உள்ள மொபைல் மூலம் 20 முறை இந்த AirSelfie கேமராவை சார்ஜ் செய்துக் கொள்ளலாம். இது போக USB மூலம் நேரடியாக சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதியும் உண்டு.

phone27_13297.jpg

 

இதனை எந்த ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோனிலும் இயக்கலாம்.

எப்படி பறக்க வைப்பது, படம் எடுப்பது? :

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைலில் AirSelfieக்கான பிரத்யேக இலவச Appஐ தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும், அந்த app மூலம் மிக சுலபமாக AirSelfie கேமராவை கட்டுப்படுத்தலாம். 20 மீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் இதனை இயக்க முடியும். பறக்க விட்டு சரியான ஆங்கிளைத் தேர்ந்தெடுத்ததும் 10 செகன்ட் வரை உள்ள டைமரை செட் செய்து விட்டு உங்கள் மொபைலை ஓரமாக வைத்துவிட்டு போட்டாக்கு போஸ் கொடுத்தால் போதுமானது.

இதில் உள்ள 5MP கேமரா வண்ணமயமான HD படங்கள், வீடியோ மற்றும் பனோரமா ஷாட்கள் எடுக்க சிறந்தது. வெளிச்சம் குறைவான இடங்களில் கூட நல்ல தரமான படங்களை இதனை கொண்டு எடுக்க முடியும்.

மெமரி மற்றும் பேட்டரி:

AirSelfie கேமராவில் 4GB பில்ட் இதன் மைக்ரோ SD கார்டுடன் வரவுள்ளது.

260mAh 7.4 லிப்போ பேட்டரி தொடர்ந்து 3 நிமிடம் பறக்க போதுமானது.

சிறப்பம்சங்கள்:

பறக்கும் பொழுது நிலை தடுமாறாமல் சீராக இயங்க கேமராவின் அடிப்பகுதியில் altitude சென்சார் மற்றும் stability கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த வசதியால் வீடியோக்களை சீராக பதிவு செய்ய முடியும்.

இதனை வானில் வேகமாக செலுத்த 4 சுழலும் Brushless மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது, கேமரா நம் கைகளில் பத்திரமாக தரையிறங்கவும், கேமரா பறந்து கொண்டிருக்கும் போது அதனை சுலபமாக கைகளில் பிடிக்கும் விதமாகவும் இந்த இறக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விலை!


2017 மார்ச்சில் வெளியாக உள்ள இந்த AirSelfie கேமரா 300$ வரை விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது  தோராயமாக இந்திய மதிப்பில் 20,000 ரூபாய்.

AirSelfie கேமராவின் அம்சங்களை காண:

 

http://www.vikatan.com/news/information-technology/73531-air-selfie-camera-drone-to-be-launched-soon.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.