Jump to content

மீண்டும் உயிர் பெறும் மாவீரம்


Recommended Posts

மீண்டும் உயிர் பெறும் மாவீரம்

n263-696x505.png

மீண்டும்
உயிர் பெறும் மாவீரம்
“”””””””””””””””,,,””””””””””””””””

உறங்கிக் கிடந்த
உறவுகளே உங்கள் வீரம்
ஓய்ந்து போகவில்லை
உயிர்பெறத் துடிக்கின்றது “””

எங்கள்
கண்மணிகள்
கல்லறை எங்கும்
பகைவன் பாதங்களின்
சிதைவு கண்டு
முட்புதர்கள் கூட
மூடிக்கொண்டது ”

கல்லறை எங்கோ
ஓரமாய் விழியிளந்து
விசும்பும் சத்தங்கள்
உறவுகளின் உள்மனதை
உரமூட்டியதோ,,

வீரம் மெருகேறிய
கைகளில் வீச்சருவாள்,
புனிதம் கொள்கின்றது
மாவீரர் துயிலும் இல்லம் ”

இன்று மிளிரும்
மாவீரர் நாள்
மிடுக்குடன் எழுந்து
கொள்ளட்டும் ”

கார்த்திகை 27
கண்மணிகளின்
புனித நாள் ”

மாற்றம் வேண்டும்
நாளை ஈழம் மலரவேண்டும் ”

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஈழவன் தாசன்

http://www.velichaveedu.com/n263-png/

 

உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

n245-696x357.png

சாவினை தோள் மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ !

தாலாட்டுப் பாடியே தன் முலையூட்டிய
தாயை நினைத்தீரோ!
உங்கள் காலாற தோள் மீது தாங்கிய
தந்தையின் கையை நினைத்தீரோ!
நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும்
நாயகனை நினைத்தீரோ!
உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன்
சோகம்தனை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்

Thurairatnam Thayalan

http://www.velichaveedu.com/n245-png/

 

இது மாவீரர் காலம்! – செந்தமிழினி பிரபாகரன்

 

np-201115-03-696x339.png

எழுத முடியாத வார்த்தைகளுக்குள்
அழுகை பொங்கும்
உணர்வுகளுள்
ஈரம் காயாத வீர ஈகங்களின்
தீரம் போற்றும் உயிர்ப்போடு..
மாவீரம்..
தீ மூட்டும் கார்த்திகை காலமிது!

நெஞ்சுக்குள் நேர்கொண்டு
அஞ்சுதல் மிரண்டோட
எஞ்சிய காலமெல்லாம்
தொழுது போற்றி
எழுகை பாடி
மொழி வணங்கும்
தெய்வங்களாக
வழி காட்டும்
வரலாறாக
நித்தமும் நெருப்பேற்றி
பொறுப்பேற்க
நீங்களே
உயிரோரம் தீ மூட்டி
தமிழர்
எம்முள் உருவேற்றுகிறீர்கள்..

காலத்தை வடமிழுக்கும்..
கால சூரியர் தம்மை
கல்லறை வாசலில்
கண்ணீரில் கரைந்து
தொழுதெழும் காலம்…
ஆம்.. இது
கார்த்திகை காலம் 1

நெக்குருகி எழும்
உணர்வுகள்
விழியோரம்
நீரில்
தீபம்
ஏற்றும்
நிமிர்வுக்
காலம்!

இவர்கள் காலமானவர்கள் அல்ல!
காலமாய் …ஆனவர்கள்!

இனி வரும்
சந்ததியும்
மாவீரம்
போற்றும்
மா வீரம்
படைக்கும்!

இது மாவீரர்
காலம்!

 

http://www.velichaveedu.com/இது-மா/

Link to comment
Share on other sites

எம் மண்ணிலும் மனதிலும் விதைத்திருக்கிறோம்…!!

n184-696x373.png

தியாக சரித்திரங்களின் நாயகர்கள்
தாயக மண்ணின் காவலர்கள்
தீயாலே தீர்த்தமாடிய தீரர்கள் – தமிழீழத்
தாய்க்காக களமாடிய…. மாவீரர்கள்!

கந்தகக் காற்றைச் சுவாசித்து…
விடுதலை ஒன்றையே யாசித்து…
அவர்கள் புரிந்தது பெருந்தவம்
தம்மையே உருக்கி…. எம்மைக் காத்த
காவல் தெய்வங்கள் !
மண்ணின் நிரந்தர விடியலுக்காய்,
நிரந்தரமாய் மண்ணுள் உறங்கும்
வீரத் தமிழ்ச் செல்வங்கள் !

எதிரியின் தோட்டாக்கள் கூட
இவர்களைப் பார்த்து அஞ்சும்!
மரணம் கூட இவர்களிடம் கெஞ்சும்!
இவர்களின் தியாகம் மரணத்தையும் விஞ்சும்!!
புன்னகைத்தபடியே போர்க்களம் புக
இவர்களால் மட்டுமே முடிந்தது!
எம் தேசமே இவர்களால்தான் விடிந்தது!!

தாயக மண்ணைத்தான் நேசித்தார்கள்- அதன்
விடுதலை ஒன்றைத்தான் சுவாசித்தார்கள்
இவர்களின் கல்லறைத் தீபங்களின் ஒளியில்தான்
எம் தேசம் ஒளி கொண்டது…!
இவர்களின் பாதத் தடங்களில்தான்
எம் இனம் வழி கண்டது…!

மாவீரர்களே…!
உங்களை விதைத்த இடத்தையெல்லாம்
எதிரி சிதைக்கிறான்!
நீங்கள் இல்லாத எங்களையெல்லாம்
தினமும் வதைக்கிறான்!!
எங்கே போனீர்கள் எங்கள் செல்வங்களே ?
மீண்டும் வாருங்கள் காவல் தெய்வங்களே !

“உண்மையான தியாகங்கள் என்றைக்கும் வீண்போவதில்லை”
அதுவே நீதியும் நியதியுமாகும்…!!!
பட்டமரங்களெல்லாம் ஒருநாள் துளிர்விடும்… !
கார்த்திகைப் பூக்கள் ஊரெல்லாம் மலரும்…!
ஈழ தேசமெங்கும் உங்களுக்காய் …அகல் விளக்கெரியும்…!
தோட்டாக்கள் துளைத்த சுவர்களிலெல்லாம்
உங்கள் திருமுகம் ஒளிரும்…!

உங்கள் கல்லறைகள் வெறும் கல் _ அறைகளல்ல ,
ஈழத் தாயின் கருவறைகள் !
இலட்சியத்தீ கருக்கொள்ளும் நெருப்பறைகள்!
நாம் உங்களை புதைக்கவில்லை…
எம் மண்ணிலும் மனதிலும் விதைத்திருக்கிறோம்!

விழ விழ எழுவோம்!
வெட்ட வெட்டத் தழைப்போம்!
உங்கள் தியாகங்களை இலட்சியமாய்ச் சுமப்போம்…!
எம் தேசத்தின் விடியலுக்காய்… இறுதிவரை உழைப்போம்…!!

மாவீரர்களே…
நாம் உங்களைப் புதைக்கவில்லை…!
எம் மண்ணிலும் மனதிலும் விதைத்திருக்கிறோம்…!!

Tamil women – தமிழ் மகளிர் நோர்வே

http://www.velichaveedu.com/n184-png/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.