Jump to content

25,000  பதிவுகளை எழுதிய... விசுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

av-2820.jpg  25000-doors-and-counting_small.jpg  av-2820.jpg

25,000  பதிவுகளை எழுதிய... விசுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள். 10.gif
தாய் நாட்டுப் பற்றும், தமிழ்ப் பற்றும் நிரம்பிய விசுகு... 
பல உதவிகளை தாயக மக்களுக்கும், புலம் பெயர் தேசத்திலும்.... ஒரு ஒன்றியமாக இயங்கி,
அனைவரையும் ஒன்றிணைத்து... செயல் பட்டு வருபவர் என்ற வகையில்,
இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

இவர் தொடர்ந்தும்... யாழ் களத்தில்,  பல பதிவுகளை பதிய வாழ்த்துகின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு ....வெறும் 25000 மட்டும்தானா, விரைவில் பின்னால் இன்னொரு பூஜ்ஜியமும் வரட்டும் .....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உளமார்ந்த வாழ்த்துக்கள் விசுகர்!

உங்கள் பதிவுகள் நதியாகக் கரையுடைத்த காலம்....வெகு தூரம் சென்று விட்டது!

கடலை நோக்கி நகரும் நதியாக.....மிகவும் அமைதியாகத் தான் அதன் பயணம் இப்போது தொடர்கின்றது!

அது காலம் உங்களையையும் தின்று கொண்டிருக்கின்றது என்பதைக் காட்டுகின்றதா அல்லது புயலுக்கு முன்பான ஒரு அமைதி என்பதைக் கட்டியம் கூறுகின்றதா என்பதற்கும்...அதே காலம் தான் பதில் கூற வேண்டும்!

இருப்பினும்...யாழின் இருப்புக்காகவேனும்..நீங்கள் தொடர்ந்தும் அதனுடன் பயணிப்பீர்கள் எனும் நம்பிக்கை நிறையவே என்னிடம் உண்டு!

தொடர்ந்தும் நாம் யாழுடன் பயணிப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகருக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பச்சியின் சேவைக்கும் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2016 at 6:12 PM, தமிழ் சிறி said:

av-2820.jpg  25000-doors-and-counting_small.jpg  av-2820.jpg

25,000  பதிவுகளை எழுதிய... விசுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள். 10.gif
தாய் நாட்டுப் பற்றும், தமிழ்ப் பற்றும் நிரம்பிய விசுகு... 
பல உதவிகளை தாயக மக்களுக்கும், புலம் பெயர் தேசத்திலும்.... ஒரு ஒன்றியமாக இயங்கி,
அனைவரையும் ஒன்றிணைத்து... செயல் பட்டு வருபவர் என்ற வகையில்,
இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

இவர் தொடர்ந்தும்... யாழ் களத்தில்,  பல பதிவுகளை பதிய வாழ்த்துகின்றேன். :)

நன்றி  சிறி

சில மாதங்களாக கொஞ்சம் ஒதுங்கியிருந்தேன்

பலர் கேட்டபோதும் 

முக்கிய பதவியிலிருந்தும் வெளியில் வந்திருந்தேன்

சில கைதுகள்

அதனால் தடைகள்

நாம் இங்கிருந்து எதையும்  எழுதலாம்

அறிக்கை விடலாம்

ஆனால் அங்குள்ளோர்??

அதிலும் உதவிகள் செய்வதற்கும் வேலைகளை பொறுப்பெடுப்பதற்கும் ஆட்கள் வராத பற்றாக்குறையான இடத்தில்

இருப்பவர்களையும் மேலும் சிக்கல்களுக்குள் மாட்டாத 

 எவரும்  பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்கின்ற பொறுப்பு...

அத்துடன் துரோகங்கள்....?

ஆனாலும் நாம் இயங்கணும்

எமக்கென்று சில பணிகளை நாம் செய்தே ஆகணும்.

எம் மக்களுக்கான எமது பணிகள் தொடரும்...

விரைவில் அவை இங்கும் பதியப்படும்.

அவர் இவர் அல்ல

நாமே முதலடி  எடுத்து வைப்போம்

புங்கை அண்ணாவுக்கு சில விடயங்கள் தெரியும்

அதனால் தான் அவரது வேண்டுதல் கீழே இப்படி இருக்கு

நன்றி சிறி

இது   போன்ற பதிவுகள் மூலம் எம்மையும் நினைவு கூருவதற்கும் வாழ்த்துதற்கும்.

 

 

Link to comment
Share on other sites

பச்சைப் புள்ளிகள் கிடைக்க வேண்டும் என்று கருத்துக்கள் எழுதாமல், மிகவும் நல்ல பதிவுகளை சொந்தமாக எழுதி 25000 பதிவுகளைக் கடந்த விசுகு அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா தொடர்ந்தும் யாழோடு இணைந்திருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25,000  பதிவுகளை எழுதிய விசுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள் ....! மேலும் யாழ் களத்தில் சிறப்பிக்கும் ஒருவராக தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு ஐயா! 

அர்ஜுன் அண்ணா யாழில் தொடர்ந்திருந்தால் 50, 000 ஆக உயர்ந்திருக்கும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2016 at 6:17 PM, ஜீவன் சிவா said:

வாழ்த்துக்கள் விசுகு - உங்கள் 25  000 மேன்மேலும் வளரட்டும். 

நன்றி சகோதரா

அன்புக்கும்  வாழ்த்துக்கும் நேரத்துக்கும்..

On 24/11/2016 at 6:23 PM, suvy said:

வாழ்த்துக்கள் விசுகு ....வெறும் 25000 மட்டும்தானா, விரைவில் பின்னால் இன்னொரு பூஜ்ஜியமும் வரட்டும் .....! tw_blush:

இனி  கடினம்

பார்க்கலாம்..

நன்றி அண்ணா

அன்புக்கும்  வாழ்த்துக்கும் நேரத்துக்கும்..

On 24/11/2016 at 8:14 PM, ராசவன்னியன் said:

 

72P9.gif

 

நன்றி மதுரையார்

உங்கள் போன்றோரின் உறவைத்தந்த யாழை என்றும் மறக்கமாட்டேன்

அன்புக்கும்  வாழ்த்துக்கும் நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2016 at 8:43 PM, கறுப்பி said:

வாழ்த்துகள் விசுகு.  மேலும் தொடருங்கள்....

நன்றி  கறுப்பி...

அன்புக்கும்  வாழ்த்துக்கும் நேரத்துக்கும்..

On 24/11/2016 at 10:17 PM, புங்கையூரன் said:

உளமார்ந்த வாழ்த்துக்கள் விசுகர்!

உங்கள் பதிவுகள் நதியாகக் கரையுடைத்த காலம்....வெகு தூரம் சென்று விட்டது!

கடலை நோக்கி நகரும் நதியாக.....மிகவும் அமைதியாகத் தான் அதன் பயணம் இப்போது தொடர்கின்றது!

அது காலம் உங்களையையும் தின்று கொண்டிருக்கின்றது என்பதைக் காட்டுகின்றதா அல்லது புயலுக்கு முன்பான ஒரு அமைதி என்பதைக் கட்டியம் கூறுகின்றதா என்பதற்கும்...அதே காலம் தான் பதில் கூற வேண்டும்!

இருப்பினும்...யாழின் இருப்புக்காகவேனும்..நீங்கள் தொடர்ந்தும் அதனுடன் பயணிப்பீர்கள் எனும் நம்பிக்கை நிறையவே என்னிடம் உண்டு!

தொடர்ந்தும் நாம் யாழுடன் பயணிப்போம்!

உண்மை  தான் அண்ணா...

எனது கணணியில் எப்பொழுதும் யாழ்  திறந்தே இருக்கும்...

ஆனால் எழுதுவது குறைவு

எழுதுவதற்கான தேவையும் குறைந்துள்ளது   போலிருக்கு.

ஆனால் ஏதாவது செய்தபடி தான் இருப்பேன் அண்ணா

அது உங்களை வந்தடையும்...

உங்களது வாழ்த்தும் அன்பும் ஆலோசனைகளும் என் தந்தை தந்ததைப்போலிருக்கும்.

 

நன்றியண்ணா

அன்புக்கும்  வாழ்த்துக்கும் நேரத்துக்கும்..

 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா. எழுதுவதை நிறுத்தாமல் தொடர்ந்து யாழில் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.