Jump to content

மாவீரர் தினம் 2016 சிறப்பு பதிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாம் அணிவகுத்துள்ளோம்...

 

நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க

எதிரி நமது நாட்டை
வஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை!

புயலெனச் சீறி
இழந்த நாட்டை மீட்க
நாம் அணிவகுத்துள்ளோம்
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!

எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்
ஆனால்...
அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்
கவசம் எம்மிடம் உண்டு!

எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!
எமது
ஆத்ம பலமோ அதைவிட
வலிமை வாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்...
ஆனால்
எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்!

நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்பு
எமது தமிழ்ஈழ மக்களிடையே
அணிவகுத்துச் செல்கிறது!

நாம் செல்லும் இடமெல்லாம்...
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடத்தில் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன...

எமது படையணி விரைகிறது...
எம தேசத்தை மீட்க!

நாம் செல்லும் இடமெல்லாம்...
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்
மிரண்டோடுகின்றனர்...!

உழைப்போர் முகங்களில்
உவகை தெரிகிறது
ஏழைகள் முகங்களில்
புன்னகை உதயமாகிறது.

 

 

(1981-ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

தலைவன் பாய்ச்சல்கள் தொடரட்டும், அலைகள் ஆர்ப்பரிக்கட்டும்

Sunday 27th Nov 2016 05:49 AM

Image

கல்லூரியில் முதல் முதலாக தம்பியைப் பார்க்கிறேன்.

1970ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி யாழ்ப்பாணத்தில் `தமிழ் மாணவர் பேரவை’ தனது ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியது. திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசு தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதை தரப்படுத்தியதே அப்பேரணி நடத்துவதற்குக் காரணாகும்.

அதனை அடுத்து பாடசாலைகளுக்குச் சென்று விளக்கவுரை அளித்து வந்தேன். வல்வை-சிதம்பராக் கல்லூரியில் முதல் முதலாக தம்பியைப் பார்க்கிறேன். அடுத்து, வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் அவர் சார்ந்த இளைஞர்களுக்கு தமிழர் எதற்காக ஆயுதப்போராட்டத்தைத் தொடங்கவேண்டும் என்பதையும், சிங்களவர்களுக்கு முன்பே தமிழர்கள் இந்நாட்டின் பூர்வீக குடிகள் என்பதனையும், அவர்கள் தமது சுயநிர்ணய உரிமையை தாமாகவே நிலைநாட்டிக் கொள்ளவேண்டும் என்பதனையும் விளக்கினேன். இன்றைய தமிழ்த் தலைர்கள் மாவட்டசபை என்றும் மாகாண சபை என்றும் பேசுகிறார்கள். அதுவல்ல எமக்குத்தேவையானது.

நாம் எமது சுயநிர்ணய உரிமையை ஈழத்தில் நிலைநாட்ட வேண்டும். அதற்குரிய ஒரே வழி சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக நாம் ஆயுதம் தூக்க வேண்டும் என்று விளக்கம் கொடுத்தேன். அதற்காக நாம் எம்மைத் தயார்ப்படுத்த வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டேன். 1971 ஏப்பிரல் இரண்டாம் வாரம், `சேகுவேரா கிளர்ச்சி’ என்று எம்மவரால் அழைக்கப்பட்ட ஜேவிபி கிளர்ச்சியின் உச்சக்கட்டம். யாழ்-கல்வியங்காட்டுக்கு என்னைத் தேடிவந்த தம்பி மிகவும் துடிதுடிப்புடன் அதேவேளை நாம் உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்றார். அத்துடன் யாழ்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களை எடுக்க வேண்டும் என்று தனது யோசனையையும் முன்வைத்தார்.

ஏப்பிரல் 4ம் திகதி மாலை இலங்கை முழுவதுக்குமான அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டது. அன்று கண்டியில் இருந்த நான் குருணாகல் வழியூடாக கொழும்பு சென்று 10ம் திகதி இரவு விமானமூலம் யாழ்ப்பாணம் வந்தடைந்தேன். அதற்கடுத்த நாள் தான் தம்பி என்னைச் சந்தித்த நாள். குருநாகல் பொலீஸ் நிலையத்தாக்குதலில் சிங்கள இளைஞர்களின் உடல்கள் அங்கும் இங்கும் சிதறிக் கிடப்பதைக் கண்டதையும், கொழும்பில்-பம்பலப்பிட்டியாவில் உபதீச றோட்டில் கடைசியாக உள்ள மாடி வீட்டில் தங்கி இருக்கையில், இரவு வந்த இராணுவத்தினரும் பொலிசாரும் அங்கிருந்த சிங்கள இளைஞர்களைப் பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலையத்துக்குக் கூட்டிச்சென்று தம்மைத் தாக்க வந்த `கிளர்ச்சிக்காரர்’ எனக்கூறி வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொன்றதையும் தம்பிக்கு எடுத்துக் கூறினேன்.

சிங்களவர்களைச் சிங்களவர்களே கொலை செய்வது எமக்கு பெரிதல்ல. பொலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களை எங்கே கொண்டு வைப்பது? அதைவிட நாம் எங்கே மறைந்திருப்பது? அவ்வளவு தூரம் நாங்கள் வளர்ந்திருக்கவில்லை என்பதை விளக்கினேன். அவ்வேளையில், `ஜேவிபியினர்’ தென்பகுதியைக் கைப்பற்றி விட்டார்கள், அதனால் தமிழர்களுக்கு ஆபத்து என்று யாழ்ப்பாணத்தில் ஒரு கதை பரவி இருந்தது. அதனை மறுத்த நான், நிலைமைகளை நேரில் பார்த்து வந்துள்ளேன், நாம் அமைதியைக் கடைப்பிடித்தாலே போதுமென்று விளக்கினேன். எனது பதில்கள் அவரைச் சமாதானப்படுத்தியது என்றே இன்றும் நம்புகின்றேன். ஏனெனில், விடுதலைப்புலிகள் கடந்துவந்த கரடுமுரடான பாதையும் – கடக்க இருக்கும் பாதையையும் நன்கு திட்டமிட்டு, தூரப் பார்வையுடன் செயல்படுவதொன்றே அதனை நிரூபிக்கின்றது.

தமிழை மீட்டுவதுபோல் தம்பியையும் மீண்டும் மீண்டும் மீட்டலாம். இப்போது இது போதும். ஈழத் தமிழர் வரலாற்றில் சங்கிலிய மன்னனும், பின்பு பண்டார வன்னியனும் வாளெடுத்த கதைகள் எமக்குத் தெரியும். ஆனால் பிரபாவின் பரிணாமத்தின் பின்புதான் நவீன ஆயுதங்களும், புதிய யுத்த முறைகளையும் தமிழினம் முதல் முதல் காண்கிறது. ஆயுதம் எடுத்தவன் எல்லாம் தமிழ் ஈழ விடுதலைக்காகத்தான் என்று இளைஞர்களையும், மக்களையும் ஏமாற்றி மண்ணோடு மண்ணாய் போன வரலாறு எங்களுக்குத் தெரியும். ஆனால் பிரபாகரன் எடுத்த ஆயுதம் தமிழ் ஈழத்தை அடைவதற்குத்தான் என்று தமிழ் மக்களும், தமிழ் இளைஞர்களும் அணிவகுத்து நிற்கின்றனர். உலக வரலாற்றில் விடுதலை இயக்கங்கள் பலதோன்றி இனவிடுதலைப் போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றன. அவற்றை எல்லாம் காலம் பதிந்து வைத்திருக்கிறது.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. சமகால அரசியல் கோட்பாடுகளுக்கு ஏற்ப, தமிழர் மத்தியிலும் பல இயக்கங்கள் தோன்றி மறைந்தன. சனநாயக நீரோட்டத்தில் கலந்தவை – கலைந்தவை இரண்டையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் தமிழினம் வாழும் மட்டும் துரோகிகள் வாழத்தான் வேண்டுமா? தமிழீழம் என்ற புனிதப் பயணத்தில் தளம்பாத தம்பிகளுடனும், தோள்கொடுக்கும் தளபதிகளுடனும் பயணித்துக்கொண்டிருக்கும் தலைவன் நீ பாய்ச்சல்கள் தொடரட்டும், அலைகள் ஆர்ப்பரிக்கட்டும்.

தமிழீழம் இப்படித்தான் அமையவேண்டும் என்ற திட்டமிட்ட கட்டமைப்பு, நிர்வாகப்புதுமை, நீதித்துறையின் நேர்மை, கல்வியில் பல்துறை வளர்ச்சி, தொழில் பயிற்சிப் பட்டறைகள் என்பன ஒரு புதிய ஆட்சிமுறைக்கு வழி வகுக்கின்றது என்பதை அறியுமா இவ்வுலகம். முடியாட்சி தொடக்கம் சனநாயகம் வரையிலான நெறிமுறைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தமிழன் வழி தனிவழிதான் என்பதை உலகம் உனது காலத்தில் கண்டு களிக்கத்தான் போகிறது. தம்பி! தலைவா!! தமிழினம் உன்னை நம்பி இருக்கின்றது. நீ காட்டும் வழியில் வெற்றி நடைபோடுகிறது. ஐம்பதிலும் நேர்நின்று நடக்க ஆயிரமாயிரம் மாவீரர்கள் வழி சமைப்பார்கள். வாழ்க வளமுடன் என வாழ்த்தி முடிக்கிறேன்.

http://tamilsguide.com/blog/articles/3339                                                                                    பொ.சத்தியசீலன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.