Jump to content

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமைப்படுவது காலத்தின் தேவை


Recommended Posts

தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒற்­று­மைப்­ப­டு­வது காலத்தின் தேவை

233-04f4f680f5d29d66f479cdf56229a62e99473be9.jpg

 

நாட்டில் நாள்­தோறும் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் இன­வாத நட­வ­டிக்­கை­களை பார்க்­கின்ற போது தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒரு பொதுக் கொள்­கையின் அடிப்­ப­டையில் உரி­மை­களை பெற்றுக் கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும் . கடந்த அர­சாங்­கத்தில் பௌத்த இன­வாத அமைப்­புக்­களின் தேரர்கள் தமிழ், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல அதர்ம செயற்­பா­டு­களை மேற்­கொண்­டார்கள். அமைச்சர் ஒரு­வரின் அலு­வ­ல­கத்­திற்குள் அத்­து­மீறி உட்­பு­குந்து இன்­னு­மொரு தேரரை தேடி­னார்கள். இந்த இன­வாத்தின் உச்­சக்­கட்­ட­மாக தர்கா நகர், பேரு­வளை ஆகிய இடங்­களில் வன்­முறை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் அள­விற்கு அவர்­களின் கைகள் ஓங்­கி­யி­ருந்­தன.

இதே நிலை இந்த அர­சாங்­கத்­திலும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. பௌத்த சிலை­களை சிறு­பான்­மை­யினர் வாழும் பகு­தி­களில் தாங்கள் நினைக்கும் இடங்­களில் எல்லாம் வைத்து சிலையைச் சூழ­வுள்ள இடங்­களை அப­க­ரித்துக் கொள்­வ­தற்கும், சிங்­க­ள­வர்­களை குடி­யேற்­று­வ­தற்கும் திட்­ட­மிட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இந்த அர­சாங்­கத்தின் காலத்­திலும் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­ப­டு­கின்­றன. அம்­பாறை மாவட்­டத்தில் மாணிக்­க­ம­டுவில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­டமை. திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் கிண்­ணியாத் துறையில் புத்தர் சிலை வைப்­ப­தற்­கு­ரிய ஆரம்ப கட்­டு­மாண வேலைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கச்­சக்­கொ­டியில் எனும் எல்லைக் கிரா­மத்தில் கால்­ந­டை­களை மேய்ப்­ப­தற்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள காணியை மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சுமன ரத்­தின தேரர் தனக்கு வழங்­கு­மாறு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டமை, அத்­தோடு அவர் தமிழர் ஒரு­வ­ருக்­கு­ரிய காணியில் விகாரை அமைப்­ப­தற்கு போராட்டம் நடத்­தி­யமை. கொழும்பில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்கும் சம்­ப­வங்­க­ளையும் பார்க்கும் போது தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் ஒற்­று­மைப்­ப­டு­வது காலத்தின் கட்­டாயத் தேவை­யாக உண­ரப்­பட்­டுள்­ளது.

தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் ஒற்­று­மைப்­பட வேண்­டு­மென்று அடிக்­கடி கூறப்­பட்­டாலும் அதற்­கான ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைளை தமிழ், முஸ்லிம் தரப்­புக்கள் முன்­னெ­டுக்­க­வில்லை. வெறும் வாய்ப்­பேச்சு ஒற்­று­மையைக் கொண்டு வராது.

இதேவேளை, தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் தமது உரி­மை­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு வடக்கும், கிழக்கும் இணைக்­கப்­பட வேண்­டு­மென்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. முஸ்­லிம்­களின் உரி­மைகள் பாது­கா­க்கப்­பட வேண்­டு­மாயின், கிழக்கு மாகாணம் தனி­யாக இருக்க வேண்­டு­மென்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. வடக்கும், கிழக்கும் இணைந்­தி­ருப்­பது சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பல­மா­கவே இருக்கும். அதேவேளை, கிழக்கு தனி­யாக இருக்க வேண்­டு­மென்று முஸ்­லிம்­களில் பெரும்­பான்­மை­யினர் சொல்லிக் கொண்­டி­ருப்­ப­திலும் நியாயம் உள்­ளது. ஆதலால், முஸ்­லிம்­க­ளிடம் காணப்­படும் அச்சம் போக்­கப்­பட வேண்டும்.

ஆகவே, தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் தங்­க­ளி­டையே காணப்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை காண வேண்டும். அவ்­வாறு தீர்வு காணப்­ப­டு­மாயின் வடக்கும், கிழக்கும் இணை­வ­தற்கு முஸ்­லிம்­களும் எதிர்ப்புக் காட்­ட­மாட்­டார்கள். வடக்கும், கிழக்கும் இணைய வேண்டும், இவை இரண்டும் தனித்­த­னியே இருக்க வேண்டும். தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் ஒற்­று­மை­யாக செயற்­ப­டுதல் வேண்­டு­மென்று தெரி­வித்துக் கொண்­டி­ருப்­ப­வர்கள் மக்­களை உணர்வு பூர்­வ­மாக ஒற்­று­மைப்­ப­டுத்­த­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்.

தமிழ், முஸ்லிம் மக்­களை உணர்வு பூர்­வ­மாக ஒற்­று­மைப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­துடன் தமிழ், முஸ்­லிம்­க­ளி­டையே காணப்­படும் பிரச்­சி­னை­க­ளையும் சுமு­க­மாக தீர்ப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். இவ் விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், முஸ்லிம் காங்­கி­ரஸூம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த இரு கட்­சி­களும் சிறந்த உற­வு­களைப் பேணிக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆயினும், தமிழ், முஸ்லிம் பிர­தே­சங்­களில் காணப்­படும் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கு­ரிய ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­கா­துள்­ளன.

புதிய அர­சியல் யாப்பில் தமி­ழர்­களும், முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளக் கூடி­ய­தொரு திட்­டத்­தினைக் கூட இவ்­விரு கட்­சி­களும் முன் வைக்­கா­துள்­ளமை ஏற்­பு­டை­ய­தாகத் தெரி­ய­வில்லை. நல்ல உற­வுகள் ஆக்­கத்தை நோக்கிச் செல்ல வேண்டும். ஆனால், இவ்­விரு கட்­சி­களும் தமிழ், முஸ்லிம் மக்­களை ஒற்­று­மைப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­காது கற்­ப­னையில் ஒற்­று­மை­யைப்­பற்றி பேசிக் கொண்­டி­ருக்­கின்­றன.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் பல இடங்­களில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே பிரச்­சி­னைகள் உள்­ளன. அம்­பாறை மாவட்­டத்தில் கல்­முனை அபி­வி­ருத்­தியில் தமிழ், முஸ்லிம் தரப்­பி­ன­ரி­டையே சந்­தே­கங்கள் உள்­ளன. கல்­முனை உப பிர­தேச செய­ல­கத்­தினை தரம் உயர்த்த வேண்­டு­மென்­பதில் இழு­ப­றிகள் காணப்­ப­டு­கின்­றன. இங்­குள்ள சில வீதி­களின் பெயர்­க­ளிலும் கருத்து முரண்­பா­டு­களும், ஏற்றுக் கொள்ளாத் தன்­மையும் காணப்­ப­டு­கின்­றன. தமி­ழர்­க­ளுக்கு தனி­யான பிர­தேச சபை, அபி­வி­ருத்­தி­க­ளுக்கு தரிசுக் காணி­களை விட்டுக் கொடுப்­பதில் பிரச்­சி­னைகள். கல்­மு­னையில் ஏற்­படும் அபி­வி­ருத்­தி­களை தனியே முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­திரம் உரித்­தா­னது என்ற எண்ணப் பதிவு, வட்­டார எல்­லை­களை முடிவு செய்­வதில் பிரச்­சி­னைகள் உள்­ளன. இவ்­வாறு கல்­முனைத் தொகு­தியில் பல பிரச்­சி­னைகள் உள்­ளன. இப்­பி­ரச்­சி­னைகள் நீண்ட காலப் பிரச்­சி­னை­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றன.

மேலும், அம்­பாறை மாவட்­டத்தில் வட்­ட­ம­டுவில் மேய்ச்சல் தரை தொடர்பில் தமிழ், முஸ்­லிம்­க­ளி­டையே பிரச்­சி­னைகள் உள்­ளன. பொத்­து­வி­லுக்கு தனி­யான கல்வி வல­ய­மொன்­றினை அமைப்­ப­திலும் இரு சமூ­கங்­க­ளி­டையே பிரச்­சி­னைகள் உள்­ளன. இது போன்று பல இடங்­களில் இவ்­விரு சமூ­கங்­க­ளி­டையே காணிப் பிரச்­சி­னைகள் உள்­ளன.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலும் தமிழ், முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டையே பல பிரச்­சி­னைகள் உள்­ளன. மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் 26 வீத­மா­க­வுள்­ளார்கள். இவர்கள் சுமார் 22 சதுர கிலோ மீற்றர் நிலப்­ப­ரப்பில் வாழ்ந்து வரு­கின்­றார்கள். இம்­மா­வட்­டத்தில் காத்­தான்­குடி, ஏறாவூர், ஓட்­ட­மா­வடி மற்றும் வாழைச்­சேனை (மத்தி) ஆகிய முக்­கிய பிர­தே­சங்­களில் எல்லைப் பிரச்­சி­னைகள் உள்­ளன. வாகரைப் பிர­தே­சத்தில் வாழ்ந்த முஸ்­லிம்கள் 1985ஆம், 1990ஆம் ஆண்­டு­களில் ஏற்­பட்ட இனப் பிரச்­சி­னைகள் கார­ண­மாக வெளி­யே­றி­னார்கள்.

இவ்­வாறு வெளி­யே­றிய பலரின் காணி­களை வேறு நபர்கள் கப­ளீ­கரம் செய்து வைத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. கள்­ளிச்சை, புனானை மேற்கு, வாக­னேரி, கார­முனை பிர­தே­சங்­களில் வாழ்ந்து வந்த முஸ்­லிம்கள் யுத்த காலத்தில் வெளி­யே­றி­னார்கள். இவர்­களில் பலரும் காணிப் பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டுள்­ளார்கள்.

இது போன்று திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திலும் தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே பிரச்­சி­னைகள் உள்­ளன. தோப்பூர், புல்­மோட்டை, மூதூர் என பல இடங்­களில் காணிப் பிரச்­சி­னை­களும், எல்லைப் பிரச்­சி­னை­களும் உள்­ளன.

வட மாகா­ணத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் தமிழ், முஸ்­லிம்­க­ளி­டையே காணிப் பிரச்­சி­னைகள் உள்­ளன. முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி, மன்னார், யாழ்ப்­பாணம் மாவட்­டங்­க­ளிலும் இவ்­விரு சமூ­கங்­க­ளி­டையே பல பிரச்­சி­னைகள் உள்­ளன.

தமி­ழர்­களும்...

(03ஆம் பக்கத் தொடர்ச்சி)

வட­மா­காண முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் என்­பது பாரிய பிரச்­சி­னை­களைக்; கொண்­ட­தாக காணப்­ப­டு­கின்­றன.

இவ்­வாறு இவ்­விரு சமூ­கங்­களும் பல பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டுள்­ளன. இப்­பி­ரச்­சி­னை­களை தீர்க்க வேண்­டு­மென்று தமிழ், முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் பல தட­வைகள் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யுள்­ளார்கள். ஆனால், தீர்­வுகள் அடை­யப்­ப­ட­வில்லை. தமிழ், முஸ்­லிம்­க­ளி­டையே காணப்­படும் பிரச்­சி­னை­களை பெரும்­பான்­மை­யின அர­சி­யல்­வா­திகள் தங்­க­ளுக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­களின் கபடத் தனத்­திற்கு தமிழ், முஸ்லிம் மக்கள் பலி­யாகிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்கள் ஏன் தங்­க­ளுக்கு சாத­க­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்று தமிழ், முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும், சாதா­ரண மக்­களும், அமைப்­புக்­களும் சிந்­திப்­ப­தில்லை. பெரும் பேரி­ன­வா­திகள் இரண்டு சமூ­கங்­க­ளையும் மோத­விட்டு குளிர் காய்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இதே வேளை, தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் தாங்கள் எதிர்­கொண்டு வரும் பிரச்­சி­னை­களைப் பற்றி நல்­லி­ணக்க ஆணைக் குழு­விடம் முறை­யீடு செய்­துள்­ளார்கள். அதே வேளை, அந்த ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே காணப்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வுகள் காணப்­பட வேண்­டு­மென்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வாறு, பல பிரச்­சி­னை­களை தங்­க­ளுக்­குள்­ளேயே வைத்துக் கொண்­டி­ருக்கும் தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் தங்­க­ளி­டையே கலந்து பேசி தீர்­வு­களை காண வேண்டும். விட்டுக் கொடுப்பு இல்­லாமல் தீர்­வு­களை காண முடி­யாது. தமிழ், முஸ்லிம் சமூ­கங்கள் பிரச்­சி­னை­களை விட்டுக் கொடுப்­புக்­க­ளுக்கு மத்­தியில் தீர்­வு­களை காண்­ப­தற்கு முயற்சி செய்­யா­மையே இன்று வரைக்கும் பிரச்­சி­னைகள் நீடித்துக் கொண்­டி­ருப்­ப­தற்கும், சந்­தே­கங்­களும், அச்­சங்­களும் இருப்­ப­தற்கு கார­ண­மாகும்.

ஆதலால், தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே காணப்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு அவ­ச­ர­மாக தீர்­வுகள் காணப்­பட வேண்டும். இதனைச் செய்­யாது வடக்கும், கிழக்கும் இணைந்­தாலும், பிரிந்­தி­ருந்­தாலும் இவ்­விரு சமூ­கங்­க­ளி­டையே நல்­லு­றவை இன்­றுள்­ள­தனை விடவும் அடுத்த படிக்கு நகர்த்த முடி­யாது. கடந்த காலத்தில் ஏற்­பட்ட இன­வன்­மு­றை­க­ளினால் இரண்டு சமூ­கங்­களும் தங்­க­ளுக்குள் மோதி பல கசப்­பாண அனு­ப­வங்­களைப் பெற்­றுள்­ளன.;. இந்த கசப்­பான அனு­ப­வங்­களில் இருந்து ஓர­ள­விற்கு விடு­பட்டுக் கொண்­டி­ருந்­தாலும் நம்­பிக்­கைகள் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வில்லை. இரண்டு சமூ­கங்­களும் என்­னதான் நடந்­தாலும் கடந்த காலங்­களைப் போன்று வன்­மு­றையில் ஈடு­படக் கூடா­தென்­பதில் உறு­தி­யுடன் இருப்­பது மகிழ்ச்­சிக்­கு­ரி­ய­தாகும். இதற்கு மேல் இரண்டு சமூ­கங்­களும் தமது உறவைப் பலப்­ப­டுத்திக் கொள்ள வேண்­டி­யுள்­ளது. இதற்­காக தமிழ், முஸ்லிம் சமூ­கங்­களின் தலை­வர்கள் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு தீர்­வு­களை காண வேண்டும்.

தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் இவ்­வாறு நடந்து கொள்­ளாது தங்­க­ளுக்குள் கருத்து மோதல்­களில் தொடர்ந்தும் ஈடு­பட்டுக் கொண்­டி­ருப்­பார்­க­ளாயின் பௌத்த இன­வா­திகள் தமது நெருக்­கு­வா­ரங்­க­ளையும், அடாத்­தான நட­வ­டிக்­கை­க­ளையும், காணி­களை கப­ளீ­கரம் செய்­வ­த­னையும் விடவே மாட்­டார்கள்.

தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் தங்­க­ளி­டையே காணப்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தரத் தீர்­வு­களைப் பெற்றுக் கொண்­டால்தான், பௌத்த இன­வா­தி­க­ளி­னாலும், அதி­கா­ரி­க­ளி­னாலும் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு தனித்­த­னியே மேற்­கொண்டு வரும் அநீ­யாங்­களை தடுத்து நிறுத்­தலாம். சிங்­கள பேரி­ன­வாதம் சிறு­பான்மை மக்­களை பிரித்­தாண்டு வரு­கின்­றார்கள். இதனை முறியடிப்பது தமிழ், முஸ்லிம்களின் கைககளில்தான் உள்ளன.

பௌத்தர்கள் வாழாத இடங்களில் புத்தர் சிலையை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். புத்தர் சிலை சிறுபான்மையினரை ஆக்கிரமிக்கும் நவீன ஆயுதமாகவே பார்க்கப்படுகின்றது. பௌத்த இனவாதிகள் புத்தர் சிலை வைப்பின் மூலமாகவே தமது ஆக்கிரமிப்பையும், சிங்கள குடியேற்றத்தையும் மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு காலத்திற்கு காலம் ஆட்சியில் உள்ள ஒரு சில அமைச்சர்கள் உதவியாக இருக்கின்றார்கள். இதனால்தான், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பௌத்த இனவாதிகளை கைது செய்வதற்கும், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் முடியாதுள்ளன.

தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்டால் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென்பதற்காக ஆதரவை வேண்டி நிற்பார்கள். தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் முடிவுகளை எடுத்துச் செயற்பட்டால் ஆட்சியாளர்களை தீர்மானிக்க முடியும். நாங்கள் தீர்மானித்த ஆட்சியாளர்கள் நமக்கு கேட்டதெல்லாம் தர வேண்டுமென்பதல்ல. நீதியை நிலை நாட்டினாலே போதுமானதாகும். ஆகவே, காலத்தின் அவசியம் வேண்டி தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட வேண்டும். முதலில் தங்களுக்குள் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணும் போது இரண்டு சமூங்களும் ஒற்றுமைப்படுவது இலகுவாகிவிடும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-20#page-3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் தமிழர்களுடன் ஒற்றுமைப்படாது தமிழ் தேசியத்துக்கு விரோதமாகச் செயற்பட்டு சிங்கள அரசுகளின் செல்லப் பிள்ளைகளாக வாழ்ந்து பல நன்மைகளையும் பெற்றிருக்கிறார்கள்.   பற்றைக்குள்ளிருக்கும் இரண்டு பறவைகவைிட  கையிலிருக்கும் ஒரு பறவை சிறப்பானதென்பார்கள்.  ஆகவே முஸ்லீம்களுக்கு தமிழர் விரோத> தமிழ்த்தேசிய விரோதப் போக்கே அரசியல் ரீதியில் பயனளிக்கக்கூடியது.  ஏற்கனவே அவர்கள் பொதுபலசேனா போன்ற சிங்களத் தீவிரவாத அமைப்புகளால் மிரட்டலுக்குள்ளாகியிருக்கிறார்கள்.   அப்படியிருக்கையில் அவர்களுக்கேன் வீண்வம்பு.   அவர்களைவிட்டுவிட்டு தமிழர்கள் தமது வழியைப் பார்ப்பதுதான் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, karu said:

முஸ்லீம்கள் தமிழர்களுடன் ஒற்றுமைப்படாது தமிழ் தேசியத்துக்கு விரோதமாகச் செயற்பட்டு சிங்கள அரசுகளின் செல்லப் பிள்ளைகளாக வாழ்ந்து பல நன்மைகளையும் பெற்றிருக்கிறார்கள்.   பற்றைக்குள்ளிருக்கும் இரண்டு பறவைகவைிட  கையிலிருக்கும் ஒரு பறவை சிறப்பானதென்பார்கள்.  ஆகவே முஸ்லீம்களுக்கு தமிழர் விரோத> தமிழ்த்தேசிய விரோதப் போக்கே அரசியல் ரீதியில் பயனளிக்கக்கூடியது.  ஏற்கனவே அவர்கள் பொதுபலசேனா போன்ற சிங்களத் தீவிரவாத அமைப்புகளால் மிரட்டலுக்குள்ளாகியிருக்கிறார்கள்.   அப்படியிருக்கையில் அவர்களுக்கேன் வீண்வம்பு.   அவர்களைவிட்டுவிட்டு தமிழர்கள் தமது வழியைப் பார்ப்பதுதான் நல்லது.

அப்படிப்போடுங்க ஜீ 
தற்போதிருக்கும் சூழ்நிலையில் தமிழர்கள் சும்மாயிருக்காமல் முஸ்லிம்களுடன் ஒற்றுமைப்படப்போகிறோம் ,ஒன்றுகூடப்போகிறோம் என்று பேரினவாதிகளை சொறிந்து விட்டு வாங்கிக்கட்ட முடியாது. பட்டும் திருந்தவில்லை என்றால் அல்லாவால் கூட எம்மை காப்பாற்ற முடியாது
அப்படி ஒன்றுபட்டுத்தான் ஆகவேண்டுமென்றால் முதலில் முஸ்லிம்கள் தமிழர்கள் சந்த்தித்ததுபோல் ஒரு இனவழிப்பையோ, கலவரத்தையோ முதலில் சந்திக்கட்டும் அதன்பிறகும் இதே போன்று ஒற்றுமையே பலம் என்று ஈஸாப்பின் நீதிக்கதைகள் சொல்வார்களாயின் அப்போது யோசிக்கலாம் இணைவதா இல்லையா என்று   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.