Jump to content

நவம்பர் மாத கணையாழி இதழில் வெளியாகியுள்ள எனது கவிதை "ஒரு வழிப் போக்குவரத்து"


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நவம்பர் மாத கணையாழி இதழில் வெளியாகியுள்ள எனது "ஒருவழிப் போக்குவரத்து" கவிதையை  யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!

 

ஒரு வழிப் போக்குவரத்து

-----------------------------------------------

நடுத்தெருவில் நிற்கும் பிழைப்பு அவருக்கு.

உச்சி வெய்யிலில் புகை தூசுக்கள் இடையில்

ஆயிரம் கவலைகளை மனதின் மூலையில் தள்ளி

நம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார்.

சிவப்பு விளக்கு கண்டல்ல,

சீருடைக் காவலர் சீறுவாரென்றே

விதிகளை மதிக்கப் பழகியிருக்கிறோம் நாம்.

அவருக்குள்ளும் கவிதை இருந்திருக்கும்,

கோடையின் வெப்பத்தில் உருகி ஓடியிருக்கும்.

அவரின் மழைக்கவிதைகள்

பாதாளச் சாக்கடையில் ஓடிக் கலந்திருக்கும்.

கோடையில் ஓர் இளநீரோ தர்பூசணிக்கீற்றோ

இடி மின்னலுக்கு இடையில் நிற்கையில் இதமாக ஒரு தேநீரோ

ஒருநாளும் நாம் அவருக்கு வாங்கிக்கொடுத்ததில்லை.

பரிவும் நேசமும்

ஒருவழிப் போக்குவரத்தாகவே இருக்கும் வாழ்வுக்குத்தான்

நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.

 

(கள நிர்வாகிகள் இணைக்கப்பட்டுள்ள படத்தை upload செய்து உதவவும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கவிதைக்கு கணையாழியே போட்டு விட்டது.... ! இதைவிட வேறென்ன சொல்வது....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/17/2016 at 3:26 PM, suvy said:

உங்களின் கவிதைக்கு கணையாழியே போட்டு விட்டது.... ! இதைவிட வேறென்ன சொல்வது....! tw_blush:

நன்றி தோழர்!   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.