Jump to content

சிறுவர், சிறுமிகளை வெவ்வேறு விதங்களில் பாதிக்கும் மன அழுத்தம் - ஆய்வு


Recommended Posts

சிறுவர், சிறுமிகளை வெவ்வேறு விதங்களில் பாதிக்கும் மன அழுத்தம் - ஆய்வு

 

மிகுந்த மன அழுத்தம் ஏற்படுத்தும் நிகழ்வுகள்,சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் மூளைகளை வெவ்வேறு வழிகளில் பாதிக்கும் என ஸ்டான்பஃர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளை வெவ்வேறு வழிகளில் சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும்

குறிப்பாக, அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் மூளையில், இன்சுலா ( insula) என்று அழைக்கப்படும், உணர்ச்சிகள் மற்றும் பிறர் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பகிர்ந்து கொள்ளும் தன்மை ஆகியவைகளுடன் தொடர்புள்ள ஒரு பகுதி அளவில் சிறியதாக இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மூளையில், இன்சுலாவின் அளவு வழக்கத்தை விடப் பெரிய அளவில் இருந்தது.

இந்தத் தகவல், சிறுவர்களை விட, அதிர்ச்சிக்கு பிறகான மன அழுத்தம் ஏற்படுத்தும் சீர்கேடுகளால் (post-traumatic stress disorder) ஏன் சிறுமிகள் கூடுதலாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்குவதாக அமைந்திருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு வேதனைமிக்க அல்லது அச்சுறுத்தலான நிகழ்வு ஏற்பட்ட பிறகு, சிறுவர்கள், சிறுமிகளுக்கு இடையில், காணப்படும் அறிகுறிகள் வேறுபட்டதாக இருக்கும் என்றும் இதன் விளைவாக அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை வெவ்வேறு வழிகளில் இருக்க வேண்டும் என்று இந்த கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

ஸ்டான்பஃர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவ துறையைச் சேர்ந்த இந்த ஆராய்ச்சிக் குழு, அதிர்ச்சிக்கு பிறகான மன அழுத்தம் ஏற்படுத்தும் சீர்கேடுகளால் (PTSD) அவதிப்படும் சிறுமிகளுக்கு, வழக்கத்தை விட மிக விரைவாக அவர்களின் மூளையில் உள்ள இன்சுலா என்ற பகுதி முதுமை அடையும் பாதிப்பால் அவதிப்படலாம் என்று கூறியுள்ளது. இன்சுலா என்ற பகுதி தான் உணர்வுகள் மற்றும் வலிகளைப் புரிந்து உணர்த்தும் பகுதியாகும்.

இன்சுலா அல்லது இன்சுலார் கோர்டக்ஸ் ( insular cortex) என்று அறியப்படும் பகுதி மூளையில் அமைந்துள்ள மிக பல்வேறு வகைப்பட்ட மற்றும் சிக்கலான ஒரு பகுதியாகும். இது மூளையின் உள்ளே ஆழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. அது பல இணைப்புப் பகுதிகளை கொண்டது.

மூளையில் இன்சுலா பகுதி பல இணைப்புப் பகுதிகளை கொணடது. 

உணர்வுகளைப் புரிய வைப்பது மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் இருந்து வரும் சமிக்ஞைகளைக் கண்டறிவதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யவதற்காக, ஒன்பது முதல் 17 வயதுள்ள 59 குழந்தைகளின் மூளைகளை ஸ்கேன் செய்தனர். இந்த ஆய்வறிக்கை மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறித்த ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்கு, 14 சிறுமிகள் மற்றும் 16 சிறுவர்கள் அடங்கிய குழுவில் குறைந்தது ஒரு முறை மிகுந்த மன உளச்சல் அல்லது அதிர்ச்சி ஆகியவற்றை அனுபவித்தவர்கள் மற்றும் இரண்டாவது குழுவில் இது போன்ற பிரச்சனைகளைச் சந்திக்காத 15 சிறுமிகளும், 14 சிறுவர்களும் இருந்தனர்.

இரண்டாவது குழுவோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், முதல் குழுவைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட குழுவில் இருந்தவர்களின் மூளைகளில் இன்சுலா பகுதியின் முகப்புப் பகுதியின் அளவு மற்றும் கொள்ளளவு மாறி இருந்ததற்கான ஆதாரங்கள் இருந்தன. இரண்டாவது குழுவில் இருந்த பாதிக்கப்படாதவர்களின் இன்சுலா பகுதியின் அளவு வழக்கம் போலவே இருந்தது.

தீவிரமான அல்லது நீண்ட கால மன அழுத்தத்திற்கு ஆளானது காரணமாக அவர்களின் இன்சுலா பகுதி மாறியுள்ளது என்றும் இந்த மாற்றம் அதிர்ச்சிக்கு பிறகான மன அழுத்தம் ஏற்படுத்தும் சீர்கேடுகள் வளர்வதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைக் காண்பிக்கிறது என ஆராச்சியாளர்கள் தெரிவித்தனர்.

வெவ்வேறு எதிர்வினைகள்:

மன உளச்சல் ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு, சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மத்தியில் , உடல் ரீதியாகவும், உணர்வுகள் ரீதியாகவும் ஏற்படும் வித்தியாசமான வெளிப்பாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது முக்கியம் என முன்னணி ஆய்வு ஆசிரியர் மேகன் க்ளாபுண்டி கூறியுள்ளார்.

''அதிர்ச்சிக்குள்ளான இள வயதினருக்குச் சிகிச்சை அளிப்போர் பாலின வேறுபாடுகளைக் கணக்கில் கொள்ளவது முக்கியம்,'' என்றார்.

சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் வெவ்வேறு விதத்தில் அதிர்ச்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. அவர்களுக்கு வெவ்வேறு சிகிச்சைகள் அளிக்கபட்டால், அவர்கள் பயன்பெற வாய்ப்புள்ளது என எங்களது கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன,,'' எனஅவர் கூறினார்.

அவர் மேலும், "சிறுமிகள் வழக்கத்தைவிட மிக முன்னதாகவே பருவமடைவதில், இந்த அதிக மன அழுத்தம் பங்காற்றக் கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன,'' என்றார்.

மூளையில் உள்ள இன்சுலா பகுதியோடு தொடர்புடைய மற்ற பகுதிகளை ஆய்வு செய்து வருவதாகவும், அவற்றில் இதை ஒத்த மாற்றங்களைக் கண்டுபிடிக்க முடியுமா என்று முயன்று வருவதாகவும் மருத்துவர் களாபுண்டி தெரிவித்தார்.

அதிர்ச்சிக்கு பிறகான மனஉளச்சல் சீர்கேடு என்றால் என்ன ?

அதிர்ச்சிக்கு பிறகான மனஉளச்சல் சீர்கேடு என்பது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில் ஈடுபட்டதால் ஏற்படும் உளவியல் விளைவுகளை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பெரிய கார் விபத்தாக இருக்கலாம், ஒரு இயற்கை பேரழிவு, துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அல்லது கொடூரமான குற்றம் போன்ற நிகழ்வுகளாக இருக்கலாம்.

பல இளவயதினர் மிகவும் கவலையேற்படுத்தக்கூடிய நிகழ்வுகளில் இருந்து அதிர்ச்சிக்கு பிறகான மனஉளைச்சல் சீர்கேட்டினை அனுபவிக்காமல் கூட மீள்பவர்கள் உள்ளனர். ஆனால் சிலர் இந்த மன உளைச்சல் சீர்கேட்டைப் பெறுகின்றனர்.

அறிகுறிகளில் கீழ்வருவன அடங்கும்:

நடந்த சம்பவங்களை எண்ணிப்பார்ப்பது மற்றும் சிக்கலான கனவுகள்

மன உளச்சலில் இருந்து விடுவிக்கும் நிகழ்வுகளைத் தவிர்ப்பது

கவலை, ஓய்வெடுக்க முடியாமல் இருப்பது

உறக்கம் வருவதில் பிரச்சனை

உணவு எடுத்துக் கொள்வதில் பிரச்சனை

வேதனைமிக்க நிகழ்வுகள் ஏற்பட்ட சில வாரங்களுக்கு இது போன்ற அறிகுறிகள் இருப்பது வழக்கமானது தான். ஆனால் ஒரு மாதத்தைக் கடந்தும் அவை தொடர்ந்தால், உங்களது மருத்துவரை நீங்கள் சந்திப்பது அவசியம். அவர் உங்களது எண்ணங்கள் மற்றும் நடத்தை ஆகியவற்றை சரிப்படுத்த சில சிகிச்சை அளிப்பார் என இளம் வயதினருக்கான தொண்டு அமைப்பான, ‘ யங் மைண்ட்ஸ்’ என்ற அமைப்பு கூறுகின்றது.

http://www.bbc.com/tamil/science-37985977?ocid=socialflow_facebook

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.