Jump to content

சமந்தாவுக்கு ஆகஸ்டு மாதம் திருமணம்


Recommended Posts

சமந்தாவுக்கு ஆகஸ்டு மாதம் திருமணம்

 

நடிகை சமந்தா திருமணத்தை ஆகஸ்டு மாதத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்காக படங்களில் நடிப்பதை அவர் குறைப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 
 
201611150907016308_Married-to-Samantha-i
 
நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து திருமணத்துக்கு தயாராகிறார்கள். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து விட்டனர். நாகசைதன்யாவின் தம்பியும் நடிகருமான அகில் ஆந்திராவில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் ஸ்ரேயா என்பவரை காதலிக்கிறார். இவர்கள் திருமணம் மே மாதம் நடக்க உள்ளது.

இந்த திருமணம் முடிந்ததும் சமந்தா-நாகசைதன்யா திருமணம் நடக்க இருக்கிறது. அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் இவர்கள் திருமணத்தை நடத்த உறவினர்கள் திட்டமிட்டு இருப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்துக்கான நகைகள், உடைகள் வாங்கும் பணிகளில் சமந்தா இப்போதே ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நாகசைதன்யா இந்து. சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்.

எனவே இந்து முறைப்படி ஐதராபாத்திலும் கிறிஸ்தவ முறைப்படி சென்னையிலும் திருமணத்தை நடத்த ஆலோசித்து வருகின்றனர். திருமணத்துக்காக சமந்தா புதிய படங்களில் நடிப்பதை குறைத்து வருகிறார். தற்போது அவர் கைவசம் 3 படங்கள் உள்ளன. விஷால் ஜோடியாக இரும்புத்திரை என்ற படத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த படங்களை திருமணத்துக்கு முன்பு முடித்து கொடுத்து விட திட்டமிட்டு உள்ளார். வேறு புதிய படங்களில் நடிக்க அவர் மறுத்து வருகிறார். நாக சைதன்யா கூறும்போது “சமந்தா திருமணத்துக்கு பிறகு நடிப்பதில் ஆட்சேபனை இல்லை. நடிக்க விரும்பினால் அவர் தொடர்ந்து நடிக்கலாம்” என்றார்.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2016/11/15090658/1050867/Married-to-Samantha-in-August.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.