Jump to content

அழகே அழகு...


Recommended Posts

லேயர் கட், ஸ்ட்ரெயிட் கட், யூ கட் தவிர இந்தியன் ஹேர் ஸ்டைலில் புதுசா வேறென்ன இருக்கு?

 
 
teeen_indian_hair_style

தொடர்ந்து ஒரே விதமான ஹேர் ஸ்டைல் போரடித்தது. சரி ஹேர் ஸ்டைலை மாற்றித் தான் பார்ப்போமே என்று பிரபல பியூட்டி பார்லர் போனால் அங்கே விதம் விதமான ஹேர் கட்களை தேர்ந்தெடுக்க பொருத்தமான கேட்டலாக்குகள் என்று எதையும் காணோம். என்ன ஹேர் கட் வேண்டும் என்று  பெயரை  மட்டும் சொன்னால் அவர்களுக்குத் தெரியுமாம், அவர்களாக நமது முகத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்றும் ஏதோ சில பெயர்களை சொன்னார்கள். ஒரு வேளை ஹேர் கட் செய்த பிறகு அந்த ஸ்டைல் பிடிக்காமல் போய் விட்டால் என்ன செய்வது? எதற்கு வம்பென்று எப்போதும் போல லேயர் கட் செய்து கொண்டு திரும்பி வந்தோம். எப்போதும் பெண்களுக்கு என்றால் இந்த ஸ்ட்ரெயிட் கட், யூ கட், டீப் யூ கட், லேயர் கட் மட்டும் தானா? அதிலும் பெண் குழந்தைகளுக்கானால் மஷ்ரூம் கட், சம்மர் கட், டயானா கட் இவ்வளவு தானா?! அலுப்பாகத் தான் இருக்கிறதில்லையா? இன்னும் வேறு என்னென்ன விதமான இந்தியன் ஸ்டைல் ஹேர் கட்கள் இருக்கின்றன என்று தேடிப் பார்க்கும் ஆர்வம் அப்போது தான் உயிர்த்தெழுந்தது. 

ஹேர் ஸ்டைலுக்காக முதலில் நம் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தது யாரென்றால் அது வாணிஸ்ரீ யாகத்தான் இருக்கும். வசந்த மாளிகையில் உயரத்
தூக்கிப் போடப்பட்ட அந்த  ’பம்’ கொண்டையோடு வாணிஸ்ரீயை  யாராலும் மறக்க முடியாது. வாணிஸ்ரீ க்குப் பின் நதியா ஹேர் ஸ்டைலில் மட்டுமல்ல நதியா கம்மல், நதியா மிடி, நதியா கொண்டை, நதியா பொட்டு என்று ஃபேஷன் உலகில் புது டிரெண்ட் செட்டராகவே அவதரித்தார்.  அவருக்குப் பின் 80 களில் பெண்குழந்தைகளுக்கு முடி வெட்டிக் கொள்ள சலூனுக்கு வரும் பெரும்பான்மையான பெற்றோர்கள்  'ஷாலினி கட்' பண்ணுங்க என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்வார்கள். ஷாலினி ஸ்டைல் ஹேர் கட் அப்போது அத்தனை பாப்புலர். இவர்களுக்குப் பின் தர்மத்தின் தலைவன் படத்தில் அறிமுகமான நடிகை கௌதமியின் கர்லி(சுருள்) முடிக் கொண்டைக்கு அநேக ரசிகர்கள் இருந்தார்கள். சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலிலும் கௌதமியின் கர்லி ஹேர் ஸ்டைல் அழகாகவே இருந்தது. நடுவில் 90 களில் மறைந்த மலையாள நடிகை மோனிகாவின் நீளக் கூந்தலுக்கும் ரசிகர்கள் இருந்தார்கள். பிறகு டைட்டானிக் பட ஹீரோயின் ரோஸ், படையப்பா நீலாம்பரி என்று சிலரது ஹேர் ஸ்டைல்கள் பெண்களால் பெரிதும் விரும்பப்பட்டன. அதற்குப் பின் சில காலம் ஹேர் ஸ்டைல் உலகில் கொஞ்சம் வறட்சி! குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எவருடைய ஹேர் ஸ்டைலும் மனதில் பதிந்ததாக நினைவில்லை. 

நீண்ட இடைவெளிக்குப் பின் சில்லுனு ஒரு காதல் படத்தில் ஜோதிகாவின் ஹேர் ஸ்டைல் கல்லூரி மற்றும் ஐ.டி துறைப் பெண்களால் பெரிதும் நேசிக்கப்பட்டது. ஆனால் அந்த விதமான ஹேர் ஸ்டைல் எல்லோருக்கும் எளிதில் பொருந்தாது என்பது  அதிலுள்ள மைனஸ் பாயிண்ட். ஜோதிகாவுக்குப் பின் அதிக ரசிகர்களை ஈர்த்துக் கொண்டது ’நீ தானே என் பொன் வசந்தம்’ படத்தில் வரும் சமந்தாவின் ஹேர் ஸ்டைல். அவருக்குப் பின் ’நானும் ரவுடி தான்’ படத்தில் பள்ளிக் குழந்தைகள் போல ஹேர் போ மாட்டிக் கொண்டு நடமாடிய நயன்தாராவின் ஹேர் ஸ்டைலுக்கும் பெருவாரியான ரசிகர்கள் இருக்கின்றனராம். இவர்கள் மட்டுமல்ல சமீப காலமாக ஏர்டெல் 4G விளம்பரங்களில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் இளம்பெண் சாஷாவின் ஹேர் ஸ்டைல்க்கும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்களாம். இவ்வளவு சொல்லி விட்டு லேட்டஸ்ட் இந்தியன் ஹேர் ஸ்டைல் படங்களை கண்ணில் காட்டாமல் கட்டுரையை முடிக்க முடியுமா? இதோ உங்களுக்காக சில பல லேட்டஸ்ட் இந்தியன் ஹேர் ஸ்டைல்கள். இதில் உங்களுக்குப் பொருத்தமானது எதுவோ அதை நீங்களே தேர்ந்தெடுங்கள்.

ஷார்ட் & சிம்பிள் பாப் கட்

short_simple_bop_1.jpg

கியூட் பாப் கட்

cute_bop_11.jpg

இன்வெர்டட் பாப் கட்

inverted_bop_1.jpg

ஸ்மார்ட் லுக் மீடியம் பாப்

smart_look_medium_bop.jpg

மொழி ஜோதிகா கட்

mozhi_jyothika_cut.jpg

ஷாஃப்ட் கர்ல்ஸ் வித் லாங் பேங்ஸ் கட்

soft_curl_with_long_bangs_cut.jpg

ஃபுல் லெங்த் கர்ல் கட்

 

ironed_curls_1.jpg

மீடியம் வேவி ஹேர் கட்

medium_weavy_hair_cut_1.jpg

லாங் லேயர் கட்

long_layer_cut.jpg

கூகுளில் தேடியதில் இந்த ஹேர் ஸ்டைல்கள் மட்டும் தான் சற்று இந்தியத் தனத்துடன் இருப்பதாக தோன்றியது. இவற்றில் பொருத்தமான ஒன்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.

http://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2016/sep/12/லேயர்-கட்-ஸ்ட்ரெயிட்-கட்-யூ-கட்-தவிர-இந்தியன்-ஹேர்-ஸ்டைலில்-புதுசா-வேறென்ன-இருக்கு-2562449--2.html

 

Link to comment
Share on other sites

என்ன உடை? எங்கு வாங்கலாம்?

ஷாப்பிங் என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் தீபாவளி ஷாப்பிங் என்றால் கேட்கவே வேண்டாம். புதுசா என்ன டிரஸ் வாங்கலாம் என்பதைத் தாண்டி புதுசா புதுசா என்னென்ன டிசைன், என்னென்ன வெரைட்டி வந்திருக்கு? இப்போ என்ன டிரெண்ட்? என பார்த்து பார்த்து வாங்குவதே தனி உற்சாகம்தான். இந்த தீபாவளிக்கு புடவை தொடங்கி நவீன ஆடைகள் வரை புதுசா என்னென்ன வந்திருக்குன்னு உங்களுக்கு அறிமுகம் செய்றோம். புதுசு புதுசா வாங்குங்க... தீபாவளியை சந்தோஷமா கொண்டாடுங்க.

2.jpg

சென்னை சில்க்ஸ்

டிசைனர் புடவைகளில் விபன்ஜி லைட் சில்க், விவாகா ஸ்வரோவஸ்கி, பட்டுப் புடவைகளில், நவநாகரிக இக்கத் சாஃப்ட் சில்க், போச்சம்பள்ளி  போன்றவை  புது வரவாக உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டு நூலால் செய்யப்பட்டதால்  லேசாக இருப்பது இதன் சிறப்பம்சம். சாஹித்யம் ஸ்ெபன் சில்க் மென்மையாக ஜரிகை நெசவு செய்யப்பட்டுள்ளதால் கிராண்ட் லுக் கிடைக்கிறது. சென்த்தெரிக் கட் ஒர்க் மற்றும் ஃபேன்சி பேட்ச் வொர்க் பொருத்தப்பட்ட கதானா புடவைகள் இளம் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை அணியக்கூடிய டிசைன்களில் கிடைக்கின்றன.

2a.jpg

சாகம்பரி சில்க்ஸ்

சர்வ லட்சணம் நிறைந்த டபுள் வார்ப்பு செய்யப்பட்ட ஐஸ்வர்யம் பட்டு, காஞ்சிபுர கலைவண்ணத்தைக் காட்டும் பண்டோரா பட்டு, மென்மையாகவும் 16 வயது முதல் அனைத்து பெண்களும் அணியக் கூடிய வகையில் இருக்கும் மேகதூது, முந்தானையிலும் கொசுவத்திலும் ஒரேமாதிரியான டிசைன் கொண்ட பாட்லி பட்டு இதெல்லாம் இந்த தீபாவளி ஸ்பெஷல். லெனின், மணிப்பூரி, நேகமன், கலம்கரி, பட்டோலா, சர்ட்வால் போன்ற வகை சல்வாரிலும் புது டிசைன்கள் கிடைக்கின்றன.

சுந்தரி சில்க்ஸ்

பட்டுப் புடவைகளில் தங்க சரிகை, வெள்ளி சரிகை நாம் அறிந்தது. இந்த தீபாவளிக்கு பெண்களை கவரும் வண்ணம் காப்பர் ஜரிகை  புடவைகள் அறிமுகம் ஆகியுள்ளன. பட்டோலா, பனாரஸ், ேகாட்டா, சந்தேரி காட்டன், பிரின்டட் சில்க், சுங்கிடி காட்டன்  ேபான்ற வகைகளில் வித விதமான வண்ணங்களில் வித்தியாசமான டிசைனர் புடவைகள் கிடைக்கின்றன. டாப்ஸ், சல்வார், அனார்கலி சல்வார், தாவணி, பிளாசோ பேன்ட்ஸ் என ஏற்கனவே நமக்கு அறிமுகமான வெரைட்டியிலும் புது டிசைன்கள் வந்துள்ளன.

பாக்டம் வியர்ஸ்

குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை அனைவரும் விரும்பும் லெக்கிங்ஸிலும் பல ரகங்கள் இந்த தீபாவளிக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காட்டன் லெக்கிங்ஸ், ஆங்கிள் லென்த் ஸ்ட்ரெச் லெக்கிங்ஸ், பிரிமியர் விஸ்கோஸ் லெக்கிங்ஸ்கள் என லெக்கிங்ஸ்கள் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஸ்டைலான  அற்புதமான உணர்வை தருகின்றன. ஜீன்ஸ் கிளாத்தில் தைக்கப்பட்ட லெக்கிங்ஸ் வகையான ஜெக்கிங்ஸ், டெனிம் கிளாத் ஜெக்கிங்ஸ் ஆகியவையும் கூட பாக்கெட்டுகளுடன் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

த்ரீ ஃபோர்த் கப்ரி  ஜெக்கிங்ஸ் விளையாடும்பொழுது அணிவதற்கு ஏற்றது போல வடிவமைக்கப்பட்டுள்ளதோடு கண்களைக் கவரும் பலவண்ண நிறங்களிலும் கிடைக்கிறது. நவீன ஆடையான லெக்கிங்ஸுக்கு ஏற்ற புது வகையான டாப்ஸ்களும் பல விதமான மாடல்களில் கிடைக்கிறது.

ரதி சில்க்ஸ்

குழந்தைங்க இல்லாம கொண்டாட்டமா? இதோ குழந்தைகளுக்கான வாவ் கலெக்‌ஷன்ஸ். பெண் குழந்தைகளுக்கான மினி புடவை ரகங்கள் எல்லோருக்கும் அறிமுகமானதுதான். ஆனால், அதிலும் கொஞ்சம் வித்தியாசமா, புதுசா இந்த தீபாவளிக்கு, பிரத்யேகமான முறையில் வடிவமைக்கப்பட்ட நக்ஹத்ரா, சன்ஃபிளவர் வகை மினி புடவை ரகங்கள் அறிமுகமாகி உள்ளன. பல்வேறான வண்ணங்களில் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதோடு பேட்ச் ஒர்க், லேஸ் ஒர்க் என இந்த ரகம் கண்களை கவர்கிறது.

பெண் குழந்தைகளுக்கு அழகு சேர்க்கும் பாவாடை ரகங்கள் முன்பைவிட அழகாக விதவிதமாக வந்துள்ளன. கரிஸ்பா, சிலாப் மற்றும் வாரணாசி பார்டர், ஜோதிகா பாவாடை, தைனிகா பாவாடை, ஷிவானி, கீர்த்தி, சுசி பட்டர்ஃபிளை பாவாடைகள் என இந்த தீபாவளிக்கு கலெக்‌ஷன் ஏராளம்.

போத்தீஸ்

பெண்களின் இதயம் கவர்ந்த வசுந்தரா பட்டு இப்போது புது டிசைன்களில் வந்துள்ளது. டிசைனர் புடவை ரகங்களில் சைனா நெட் சாரி, த்ரீ டி சாரி, சனா சில்க், சாரியட் பிராஸோ இந்த தீபாவளிக்குப் புதுசு. இளம் பெண்களின் சூப்பர் ஸ்டார் குர்தீயில் இந்த ஆண்டு புதுசு சிந்து குர்தீ. மஸ்தானி மற்றும் மஸ்தகலி சுடிதாரிலும் தீபாவளி கலெக்‌ஷனாக புது டிசைன்கள் வந்துள்ளன.

ராம்ராஜ்

ஆண்களுக்கான கடையாக இருந்த ராம்ராஜ் இப்போது பெண்களுக்கென முதன்முறையாக துணிரகங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. கேரள பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ரசாயனக் கலவை இல்லாத, சாயமற்ற முறையில் தயாரிக்கப்படும் ரம்யம் எக்கோ சாரீஸ் இந்த தீபாவளி ஸ்பெஷல். இதே ரகத்தில் புதிதாக சுடிதார் மற்றும் பாவாடை ரகங்கள் வந்திருப்பது இளம்பெண்கள் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ். நவீன ஆடைகளிலும் புது ரகங்கள் வந்துள்ளன. 

http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3473&id1=118&issue=20161016

Link to comment
Share on other sites

மாடர்ன் மங்கையர் அணிய ஏற்ற புதிய துலிப் பேண்ட்கள்

இளம்பெண்கள் அணிகின்ற நவீன ஆடைகள் என்பவை பிரத்யோக வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன. இவை அன்றைய கால டிரெண்ட் மற்றும் அணிய லகுவான வடிவுடன் உருவாக்கப்படுகின்றது. இன்றைய கால கட்டத்தில் பெண்கள் அலுவலகம், கல்லூரி மற்றும் வெளி பணிகள் என்றவாறு நாளும் புதிய புதிய ஆடைகளை அணிய வேண்டியதில்லை.

mkl


அதற்கேற்ப ஆடைகள் தனித்தனி சிறப்பு வடிவமைப்பு டிசைன், பேட்டர்ன், வண்ணங்கள் கொண்டவாறு வலம் வருகின்றன. நவீன யுக்திகள் மாடர்ன் மங்கையர் அணியக்கூடிய ஆடைகளான சுடிதார், பைஜாமா, ரசகளி போன்ற ஆடைகளுக்கு ஏற்ற பேன்ட்கள் தனிப்பட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகிறது.

மேல் சட்டை அமைப்புக்கு ஏற்ற பிரதான பேண்ட் வகைகள் முன்பு ஒரே மாதிரியாக இருந்தன. இன்று லெக்கின்ஸ், இறுக்கமான பேண்ட், பலகோ, ஜெக்கிங்ஸ் போன்றவை வந்துள்ளன. குர்தீஸ் மற்றும் குர்தா அணிவதற்கேற்ற பேண்ட் வகையில் லெக்கின்ஸ் என்ற உடலோடு ஒட்டிகொள்ள கூடிய பேண்ட் தற்போது முதலிடம் பிடிக்கின்றது.

அதுபோல் லாங் சுடிதார், பேன்ஸி சுடிதார் போன்றவைகளுக்கு பேண்ட் என்பது குறுகிய கால் பகுதியும், அகலமான மேற்பகுதியும் கொண்ட பேண்ட்கள் தயாரிக்கப்படுகிறது. மேல்சட்டையில் செய்யப்படும் டிசைன் பார்டர் கால்பகுதியில் பார்டர் ஆக வடிவமைக்கப்படுகிறது.

இறுக்கமான பேண்ட்களுக்கு மாற்றான பலசோ பேண்ட்கள்

இறுக்கமான வகையில் உருவான பேண்ட்களுக்கு மாற்றாக வித்தியாசமான வடிவில் தளர்ந்த வகையிலான ஆடையாக பலசோ பேண்ட்கள் அறிமுகமாயின. இவை அணிய சுலபமானது எந்த பயணத்திற்கும், விழாக்களுக்கும் அணிய ஏற்றவாறு வித்தியாசமான வடிவமைப்பு, வண்ண கலவையுடன் உருவாக்கப்படுகிறது. இடுப்பிலிருந்து கணுக்கால் வரை ஒரே அலகமான விரிந்த பேண்ட்கள் அமைப்பு. முந்தையகால அகல பேண்ட் அமைப்பில் சில வித்தியாசங்கள் மட்டும் செய்யப்பட்டு நவீன மங்கையர் அணிய ஏற்றவாறு உருவாக்கப்படுகிறது. இதில் பெரும்பாலும் பூ டிசைன், ஜியோ மெட்ரிக் பேட்டர்ன் முதலிடத்தை பிடிக்கிறது.

புத்தம் புதிய துலிப் பேண்ட்கள்:-

ஆண்டிற்கு ஓர் பேண்ட் வகை அறிமுகமாவது உண்டு. இந்த ஆண்டின் அறிமுகம் துலிப் பேண்ட். அழகிய மேல்சட்டைக்கு ஏற்ற அதே வண்ணம் மற்றும் மாறுபட்ட வண்ண கலவையுடன் துலிப் பேண்ட்கள் உருவாகின்றன. துலிப் பேண்ட்கள் மற்ற பேண்ட்களை விட மாறுபட்ட வடிவமைப்பு, அணிய ஏற்ற சுலபமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் விழாக்காலத்திற்கு பெண்கள் விரும்பி வாங்கி அணியும் பேண்ட் வகையாக துலிப் சிறந்த இடம் பிடிக்கும் என நம்பலாம்.

வித்தியாசமான புதிய வடிவமைப்பில் துலிப் பேண்ட்கள்:-

பார்க்க பஞ்சகஞ்ச வேஷ்டி அமைப்பிலான இந்த பேண்ட் கூடுதல் வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது. கணுக்கால் நீண்ட பேண்ட் அமைப்பில் இருந்து மாறுபட்ட கணுக்கால் மேல் பகுதியுடன் பேண்ட் முடிவடைந்து விடும். இந்த பேண்ட் கீழ்பகுதி முக்கோண வடிவில் வெட்டப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இதன் காலி பகுதி முதல் கீழ் கால் பகுதி வரை சுருக்கம் சுருக்கமாய் இணைப்பு செய்யப்பட்டன. கணுக்கால் பட்டை பகுதியில் மேல்சட்டையின் அதே பார்டர் அல்லது மணிகள், லேஸ் போன்றவை வைக்கப்பட்டிருக்கும். இந்த பேண்ட்டிற்கு ஏற்ற மேல் சட்டை என்பது தொடை பகுதி வரை நீண்ட குர்தீஸ் மற்றும் குர்தாக்கள் பொருத்தமானது.

துலிப் பேண்ட்கள் பெரும்பாலும் மென்மையான வண்ணங்களில் தான் உருவாக்கப்படுகிறது. இளம் பச்சை, இளஞ்சிவப்பு, மஞ்சள், லைட்ப்ளூ போன்ற வண்ணங்களும் அதன் மேற்புறம் பேட்ச் மற்றும் எம்பிராய்டரி செய்யப்படும் பேண்ட்கள் கிடைக்கின்றன. துலிப் பேண்ட்கள் பெண்கள் கணுக்கால் அழகை பொலிவுடன் வெளிபடுத்தும் விதமான தனித்துவத்துடன் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

http://vijaytamil.net/மாடர்ன்-மங்கையர்-அணிய-ஏற/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

யுவதிகள் விரும்பும் குர்தீஸ்

KURTI-3.jpg

சந்தை பொருட்களில் எதை எடுத்துக்கொண்டாலும் அவை,அதிக அளவில் பெண்கள் பயன்படுத்தும் பொருளாகவே இருக்கும். வீட்டு உபயோகப்பொருட்களில் இருந்து, நாம் அன்றாடம் பயன்படுத்தும் நவீன சாதனங்கள் ஆனாலும் பெண்களுக்கு என்று தனி முக்கியத்துவமும் அதில் அதிக வகைகளும் இருக்கும். அதேபோல்தான் அணியும் ஆடையிலும். ஆண்களுக்கு என்று எடுத்துக்கொண்டால், பேண்ட், சட்டை, டி-சர்ட், ஜீன்ஸ் , வேட்டி என்று பட்டியல் சீக்கிரம் முடிந்துவிடும். ஆனால் அதே பெண்கள் அணியும் ஆடை வகை என்று எடுத்துக்கொண்டால் பட்டியல் நீளும். போதாதற்கு மேற்குறிப்பிட்ட பேண்ட் ,சட்டை என்று எல்லாவற்றையும் பெண்களும் அணியத்துவங்கி விட்டார்கள், வேட்டி தவிர(கேரளாவில் அதையும் அபகரித்துக்கொண்டார்கள்). அந்த வகையில் குர்தீஸ் என்பது நவீன யுக பெண்கள் அணியும் மற்றுமொறு ஆடை வகை.

குர்தீஸ் என்பது பெண்கள் அணிகின்ற குர்தா வடிவிலான மேல்சட்டை. ஜீன்ஸ் பேண்ட், சுடிதார் மற்றும் லெக்கிங்ஸ்க்கு ஏற்ப அணிகின்ற குர்தீஸ் இன்றைய நாளில் விதவிதமாக வருகின்றன. எண்ணற்ற வண்ணம், வடிவமைப்பு, கூடுதல் கட்டிங்ஸ் மற்றும் அழகிய நெக்குகள் என பலமாடல்கள் வருகின்றன. பருத்தியிலான காட்டன் குர்தீஸ் முதல் ஜார்ஜெட், டஸ்ஸர், காட்டன், பட்டு மற்றும் பூனம் துணிகளில் குர்தீஸ் உருவாக்கப்படுகின்றன.

LEGINS AND KURTI

குர்தா என்பது நீள்சதுரவடிவிலான ஆடையாகும், அரேபிய நாடுகளில் உடுத்தப்பட்ட தாவாப் என்ற ஆண்கள் ஆடையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. பெண்களுக்கு எனும் போது அதுவே குர்தீஸ் என்று அழைக்கப்படுகிறது. இது நீண்ட மற்றும் குட்டை வடிவில் கிடைக்கின்றது. பெண்கள் தினமும் அணிகின்றவாறு இலகுவான அதேசமயம் கச்சிதமான வடிவமைப்பில் குர்தீஸ்-களின் வகைகள் உலகளவில் பிரபலமாக உள்ளன. பருத்தி, ஷிப்பான், பட்டு, கதர் குர்தீஸ்கள் அனைத்து காலங்களிலும் அணிய  ஏற்றவாறு உள்ளன. மேலும் உல்லன் குர்தீஸ்கள் குளிர்காலத்தில் அணிய சிறந்த ஆடையாக விளங்குகிறது.

குர்தீஸ் வடிவமைப்பும், வண்ணங்களும் :

குர்தீஸ் முன்பு பூக்கள் அதிகம் நிறைந்த வாறு உருவாக்கப்பட்டன. மேலும் டை & டை மற்றும் மலைவாழ் மக்கள் அச்சு பதிவு ஆடையாக உலா வந்தன. தற்போது. ஏராளமான எம்பிராய்டரி மற்றும் சரிகை, பூ வேலைப்பாடு நிறைந்தவாறும் வருகின்றன.

ஜீன்ஸ்-க்கு ஏற்ற குர்தீஸ் :KUTI EMBRODARY

KUTI EMBRODARY

பெண்கள் அணிகின்ற அனைத்து வகை ஜீன்ஸ் பேண்ட் –க்கு ஏற்ற மேலாடையாக குர்தீஸ் விளங்குகிறது. முன்பு டி-ஷர்ட் தான் ஜின்ஸ்-க்கு நல்ல இணையாக இருந்தது. ஜீன்ஸ் க்கு ஏற்ற குர்தீஸ் என்பது அடர்த்தியான மற்றும் இலகு நிற குர்தீஸ் நன்றாக இருக்கும்.

ரேஷம் எம்பிராய்டரி லாங் குர்தீஸ் :

இவை லெக்கிங்ஸ் மற்றும் ஜீன்ஸ்க்கு அணிய ஏற்ற பிரத்யேகமான நீண்ட குர்திஸ். இதில் ரேஷம் எம்பிராய்டரியில் ஏராளமான பூ மற்றும் ஜிரிகை எம்பிராய்டரி செய்யப்பட்டு வருகின்றன. கழுத்து பகுதியில் ஆடை முழுவதும் எம்பிராய்டரி செய்யப்பட்டு கிடைக்கின்றன. இதில் பல வண்ணத்தில் பிரிண்ட் செய்யப்பட்ட குர்தீஸ் மற்றும் கண்ணாடி எம்பிராய்டரி செய்த குர்தீஸ்களும் வருகின்றன.

அழகிய டிசைனர் குர்தீஸ் :Long-Embroidered-Kurti

Long-Embroidered-Kurti

டிசைனர் குர்தீஸ் என்பதில் சந்தேரி ஸிலிவ்ஸ், டாப்ஸ்டிட்ச், மடிப்பு கொண்ட யோக் ஷார்ட் குர்தா, டிரிம், சைடு டை, பார்டர் வைக்கப்பட்ட கப், பிளைன் குர்தீஸ், ஸ்கூப் நெக் ஷார்ட் குர்தா என்று பல வகைகளில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

யோக் ஷார்ட் குர்தா என்பது ரவுண்ட் நெக் மற்றும் மார்பு பகுதியில் சிறுசிறு மடிப்புகள் கொண்டவாறு தைக்கப்பட்டிருக்கும் குர்தாவின் கீழ் பகுதி இரு ஓரமும் சற்று வளைந்தவாறு இருக்கும்.  டஸ்ஸர் காட்டன் ஷார்ட் குர்தா என்பதில் அழகிய கண்ணாடி எம்பிராய்டரி செய்யப்பட்டு பளபளவென உள்ளது. சந்தேரி பிரிண்ட் மற்றும் ஜெய்பூர் பிரிண்ட் ஷார்ட் குர்தீஸ் வருகின்றன. ஜரிகை பார்டர் கொண்ட குர்தீஸ்களும் விதவிதமான டிசைன்களில் வருகின்றன.

காதி குர்தீஸ் :

சுத்தமான பருத்தி நூலால் நெய்யப்பட்ட காதி துணிகளில் உருவாக்கப்பட்ட குர்தீஸ் என்பது அன்றாட வெளிப்பணிகளுக்கு அணிந்து செல்ல ஏற்றதாக உள்ளது. வெயில்காலத்திலும் , மழைகாலத்திலும் அணிய ஏற்றது.

http://tamil.a2zmedia.in/இளைஞிகள்-விரும்பும்-குர்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

+++   பாவாடை தாவணியில், பார்த்த உருவத்தை, வாழ்க்கையில் மறக்கவே முடியாதுள்ளது.   +++  :grin:

தலை முறை,   இடை  வெளியாய் இருக்குமோ.......  ஆர்  கண்டது. tw_blush:

Link to comment
Share on other sites

  • 3 months later...

 

பெண்களுக்கான ஆடை வகைகள் சிலவற்றின் தொகுப்பு

Outfits for Smart Occasions

 

 

Comfy Yet Stylish Clothes for Women 

 

 

Guide to Party Dressing For Your Body Type

 

Weekend Outfits for Women

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
    • இது ஒட்டு மொத்த‌ இந்திய‌ அள‌வில் தேர்த‌ல் ஆணைய‌த்தை கைக்குள் வைத்து பிஜேப்பி செய்யும் தேர்த‌ல் மோச‌டி இப்ப‌டி குள‌று ப‌டி செய்து தேர்த‌லில் வெல்வ‌தெல்லாம் ஒரு வெற்றியா......................இது ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌க்கும் தேர்த‌ல் கிடையாது................இந்திய‌ அள‌வில் தாங்க‌ள் 400 இட‌ங்க‌ளின் வென்று ஆட்சி அமைப்போம் என்று சொன்னார்க‌ளே / ஆனால் இப்ப‌டி குள‌று ப‌டி செய்து அமைப்போம் என்று ஆர‌ம்ப‌த்தில் சொல்ல‌ வில்லை இப்ப‌ பிடிப‌ட்டான் மோடி என்ற க‌ள்ள‌ன்......................தேர்த‌ல் ஆணைய‌த்தையும் ஈவிம் மிசினையும் ந‌ம்பி தான் த‌மிழ் நாட்டு பிஜேப்பி அண்ணாம‌லை அதிக‌மாய் பொங்கி எழுகிறார்....................இதெல்லாம் ஒரு தேர்த‌ல்.............................த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சிக‌ளை நினைக்க‌ ப‌ரிதாவ‌மாய் இருக்கு....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.