Jump to content

50 ஆண்டுகள், 200 திரைப்படங்களுக்குப் பிறகு ஜாக்கி சான் ‘ஒருவழியாக’ ஆஸ்கர் வென்றார்


Recommended Posts

50 ஆண்டுகள், 200 திரைப்படங்களுக்குப் பிறகு ஜாக்கி சான் ‘ஒருவழியாக’ ஆஸ்கர் வென்றார்

 

 
ஜாக்கிசான்
ஜாக்கிசான்

23 ஆண்டுகளுக்கு முன்னால் ஹாலிவுட் புகழ் சில்வஸ்டர் ஸ்டாலோன் வீட்டில் ஜாக்கி சான் ஆஸ்கர் விருதை பார்த்த போது தானும் ஆஸ்கர் பெற முடிவு செய்ததாக ஜாக்கி சான் தெரிவித்தார்.

கடைசியாக ஜாக்கி சானின் விருப்பம் சனிக்கிழமையன்று நிறைவேறியது. ஆம்! அவர் கைகளில் அந்த சிறிய ஆஸ்கர் விருது பொற்சிலை! ஆஸ்கர் பொற்சிலையைப் பெற்ற ஜாக்கி சான் கூறும்போது, “திரைத்துறையில் 56 ஆண்டுகள், 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளேன், கடுமையான உழைப்புக்குப் பிறகு ஒருவழியாக இப்போது என் கையில் ஆஸ்கர்” என்று நட்சத்திரங்கள் நிரம்பிய இரவு விருந்தில் ஜாக்கி சான் கூறினார்.

மேலும் தன்னுடைய பெற்றோருடன் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவைக் கண்டு களித்த போதெல்லாம், 'இவ்வளவு திரைப்படங்களில் பணியாற்றியும் ஏன் ஆஸ்கர் என்ற அந்த உயரிய விருது உனக்குக் கிடைக்கவில்லை?’ என்று தனது தந்தை கேட்டதை நினைவு கூர்ந்தார் ஜாக்கி சான்.

தனது சொந்த ஊர் ஹாங்காங் தன்னை ‘சீனராய் இருப்பது குறித்து பெருமிதம் கொள்பவனாய்’ உருவாக்கியதற்கு புகழ்ந்ததோடு, ரசிகர்களால்தான் நான் தொடர்ந்து படங்களை எடுத்து வருகிறேன், இவர்களுக்காகத்தான் என் எலும்பை உடைத்துக் கொண்டு ஜன்னல்களிலிருந்து குதித்து வருகிறேன், உதைக்கிறேன், குத்துகிறேன் எல்லாம்.

'ரஷ் ஹவர்' இணை நட்சத்திரம் கிறிஸ் டக்கர், நடிகை மிச்சேல் இயோ, ஜாக்கி சானை “Jackie 'Chantastic' Chan.” என்று செல்லமாகக் குறிப்பிட்ட டாம் ஹாங்க்ஸ் ஆகியோர் ஜாக்கியை அறிமுகம் செய்தனர்.

ஹாங்க்ஸ் கூறும்போது "அகடமி விருதுகள் எப்போதும் சண்டைக்கலையையும் ஆக்சன் காமெடி திரைப்பட வகையினங்களையும் ஒதுக்கியே வந்துள்ளன, இந்நிலையில் சானின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற டென்செல் வாஷிங்டன், லுபிடா நியோங், நிகோல் கிட்மன், எம்மா ஸ்டோன், ரயான் ரேனால்ட்ஸ், ஆம்ய் ஆடம்ஸ் மற்றும் தேவ் படேல் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

ஜெஃப் பிரிட்ஜஸ், ஆன்டி கார்சியா, கிறிஸ்டோபர் ரீவ் மற்றும் ஜான் டிரவோல்ட்டா ஆகியோருக்கு அவர்களது திரைவாழ்வை தீர்மானிக்கும் வேடங்களை பெற்றுத் தந்த 88 வயதான ஸ்டால் மாஸ்டர், இவர்தான் காஸ்டிங் இயக்குநராக முதல் ஆஸ்கரை பெறுபவர்.1962-ம் ஆண்டு ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ படத்துக்காக எடிட்டிங்கிற்கு ஆஸ்கர் பெற்ற 90 வயதான கோட்ஸ், இவர் 50 படங்களுக்கும் மேல் எடிட்டிங் செய்துள்ளார். இவர் தனது கவுரவ ஆஸ்கர் விருதை திரைக்குப் பின்னணியில் உள்ள, அதிகம் அறிமுகம் ஆகாத ஹீரோக்களுடன் பகிர்ந்துகொள்வதாக தெரிவித்தார்.

பல அருமையான ஆவணப்படங்களை எடுத்த வைஸ்மேன் (86) ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

http://tamil.thehindu.com/cinema/world-cinema/50-ஆண்டுகள்-200-திரைப்படங்களுக்குப்-பிறகு-ஜாக்கி-சான்-ஒருவழியாக-ஆஸ்கர்-வென்றார்/article9340912.ece?homepage=true

ஜாக்கி சானுக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது

Jack%202%20600_18444.jpg

சீனாவைச் சேர்ந்த உலக புகழ் பெற்ற நடிகரான ஜாக்கி சானுக்கு, கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. 


'56 வருடங்கள், 200 திரைப்படங்கள், பல எலும்புகளை முறித்துக் கொண்ட பிறகு, கடைசியாக இந்த விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது.' என்று புன்னகையுடன் விருதைப் பெற்றுக் கொண்டார் ஜாக்கி. அவர் மேலும்,'நான் சீனனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். என்னை தொடர்ச்சியாக படங்கள் எடுக்க உந்தும் என் ரசிகர்களுக்கு மிக்க நன்றி.' என்று கூறியுள்ளார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.