Jump to content

தமிழ் சினிமாவின் புதிய வில்லன்... ஃபேஸ்புக் லைவ்!


Recommended Posts

தமிழ் சினிமாவின் புதிய வில்லன்... ஃபேஸ்புக் லைவ்!

live_14473.png

தமிழ் சினிமாவுக்கும், திருட்டு விசிடிக்கும் நடக்கும் சண்டை பற்றி அனைவரும் அறிந்ததே. அதனை சற்றே ஓரங்கட்டி, புதிய பிரச்னையாக உருவெடுத்தது புதுப்படங்களை வெளியிடும் இணையதளங்கள். இதனை எதிர்த்து பல தயாரிப்பாளர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். கபாலி பட விவகாரத்தில் கூட, தயாரிப்பு தரப்பில் இருந்து வழக்குத் தொடுக்கப்பட்டு நிறைய இணையதளங்கள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதையும் மீறி, நிறைய தளங்களில் அந்தப் படம் வெளியாகி அதிர்ச்சியளித்தது. இந்த சிக்கலே இன்னும் தீராத நிலையில் தற்போது புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது ஃபேஸ்புக் லைவ். கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக் லைவ் மூலம் தமிழ் திரைப்படங்கள் லைவ்வாக ஒளிப்பரப்பாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் தீபாவளி ரிலீஸ் படங்களும்  சப் டைட்டிலோடு வெளியாகி அதிர்ச்சியளித்தன. இதனைத் தமிழ் திரைத்துறை எப்படி எதிர் கொள்ளப்போகிறது. தமிழ் சினிமாவின் புதிய வில்லனாகியுள்ளதா இந்த தொழில்நுட்பம்?

ஃபேஸ்புக் சமீபத்தில் புதிதாக அறிமுகம் செய்த சேவை தான் ஃபேஸ்புக் லைவ். இதன் மூலம் ஒரு தனி நபரோ அல்லது ஃபேஸ்புக் பக்கமோ லைவ்வாக தனது பக்கத்தில் ஒளிபரப்பு செய்ய முடியும். 

இது நாள் வரை முக்கிய நிகழ்ச்சிகள், பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் உரையாடுவது, பிரஸ் மீட் என்று இருந்த இந்த சேவையை பயன்படுத்தி, தற்போது இது போன்ற பைரஸி செயல்களில் இறங்கி இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

முன்பெல்லாம் திருட்டு விசிடிக்கள் தான் திரைப்படங்களுக்கு வில்லனாக இருந்து வந்தது. ஆனால் இப்போது ஃபேஸ்புக் லைவ் மூலம் அனைவரையும் எளிதில் சென்றடையும் என்பதை புரிந்து கொண்டு களத்தில் இறங்கியுள்ளன சில ஃபேஸ்புக் பக்கங்கள்.இதனால் அதிகம் பேர் ஈர்க்கப்பட்டு, நிறைய பேர் இதனை பார்க்கிறார்கள். இந்த பக்கங்கள். லைவ் முடிந்ததும் இந்த பக்கங்கள் வீடியோக்களை சேமிப்பதில்லை. ஆகவே இவற்றில் வீடியோ பதிவில் இல்லாமல் லைவ் சமயத்தில் மட்டுமே பார்க்கும் வண்ணம் செயல்படுகின்றன இந்த ஃபேஸ்புக் பக்கங்கள். 

Nassar_14059.jpg

இது குறித்து தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் தேனப்பனிடம் கேட்டோம். இது குறித்து கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்க உள்ளதாகவும். இதனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

இதே புகார் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் சங்க தலைவர் நாசர். 'இதனை சில பக்கங்கள் வேண்டுமென்றே செய்கின்றன. இவற்றில் பண நோக்கம் இல்லை என்றாலும் சிலர் உள்நோக்கத்தோடு இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். திருட்டு விசிடியை ஒழிக்க கடுமையாக போராடி வருகிறோம். இதனை சமாளிப்பதும் தற்போது கூடுதல் பிரச்னையாகியுள்ளது. மக்களும் இதற்கு எதிராக போராட வேண்டும். அப்போது தான் இதனை ஒழிக்க முடியும். எங்கள் தரப்பிலிருந்தும் சைபர் க்ரைமில் புகார் அளிக்கப்படவுள்ளது என்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/71636-facebook-live-is-the-new-villain-for-tamil-cinema.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.