Jump to content

விண்ணைத் தாண்டி வருபவர்கள்!


Recommended Posts

மான்டேஜ் மனசு 8 - விண்ணைத் தாண்டி வருபவர்கள்!

 

 
04MP_TRISHA_AND_SI_2517173f.jpg
 

ரொம்ப நாட்களுக்குப் பிறகு கௌதமை சந்தித்தேன். நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு வழக்கம் போல சினிமா பற்றி பேச்சு திரும்பியது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'இன்டர்ஸ்டெல்லர்' பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தான்.

டைம் மெஷின், டைம் டிராவல் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தமிழில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் என்று பெருமைப்படும் 'இன்று நேற்று நாளை' படத்தையும் பேச்சுவாக்கில் தொட்டுச் சென்றான்.

''ஃபேன்டஸி படமா இருந்தாலும் அளவா, கச்சிதமா, எந்த எல்லையும் மீறாம இருந்தது ரொம்ப நல்ல அனுபவம்'' என்றான்.

என் மனசு 'இன் டைம்' படத்தையே சுற்றிச் சுற்றி வந்தது. 2011-ல் வெளியான அமெரிக்கன் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் 'இன் டைம்'.

'இன் டைம்' திரைப்படம் காட்டும் உலகம் வித்தியாசமானது. அங்கு எல்லோரும் 25 வயது வரை இயல்பாக வளர முடியும். 25 வயது முடிந்த பிறகு ஒரு வருடம் மட்டுமே ஆயுள் தரப்படும். அதற்குப் பிறகு வாழ விரும்புவர்கள் தன்னுடைய வாழ்நாளை உழைத்து சம்பாதிக்கலாம். பிறரிடம் இருந்து கடன் வாங்கலாம். கொஞ்சம் குறுக்குப்புத்தியோடு அடித்துப் பிழைப்பவர்கள் பிறரிடம் திருடலாம். இது எதுவுமே செய்யாவிட்டால் அவர்கள் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் செத்துவிடுவார்கள்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நம் சமூகத்தில் பணத்தை கடன் வாங்குகிறார்கள். திருடுகிறார்கள். வங்கியில் சேமிக்கிறார்கள். அந்த உலகத்தில் வாழ்பவர்கள் பணத்துக்குப் பதிலாக நேரத்தை சம்பாதிக்கிறார்கள். நேரத்தைக் கடனாக கொடுத்து காபி குடிக்கிறார்கள். கார் வாங்குகிறார்கள். எல்லாவற்றுக்கும் நேரம்தான் முதலீடு.

அதிக நேரம் வைத்திருப்பவர்தான் பணக்காரர். அவர்தான் ஹீரோ. அப்படி ஹீரோவுக்கு ஒருத்தர் 100 வருஷம் கொடுத்து செத்துப்போய்டறார். அப்புறம் என்ன நடக்குதுங்கிறதுதான் த்ரில்.

கெளதமுடன் உரையாடல் தொடர்ந்தது.

''இன் டைம் பார்த்திருக்கியாடா?''

''பார்க்கலைடா. ஏன்?''

''செம படம்டா. ஒருத்தன் நெனைச்சா இன்னொருத்தனுக்கு எவ்ளோ நாள் வேணும்னாலும் வாழ டைம் கொடுக்கலாம். அதே சமயம் அதைப் பிடுங்குறதுக்கும் ஒரு கூட்டம் இருக்கும்.''

''இப்போ எதுக்கு இவ்ளோ டீட்டெயில்?''

''இதை நம்ம தமிழ் இலக்கியத்துல ஒரு வரியில சொல்லிட்டாங்க''

''என்னடா சொல்ற?''

'' 'யான் வாழு நாளும் பண்ணன் வாழிய.' புறநானூற்றுப் பாடல். என்னுடைய வாழ்நாளை எல்லாம் எடுத்துக்கொண்டு பண்ணன் வாழட்டும்னு அரசன் கிள்ளிவளவன் நில ஊர்கள் தலைவன் பண்ணனை வாழ்த்துறாரே... அதனோட அடுத்த டைமன்ஷன் தான் இந்தப் படம். அதை இப்ப கலைச்சு போட்டாலும் வேற ஒரு கான்செப்ட் கிடைக்கும்.

''ம்ம்ம்... ஆனா, எனக்கு ஒரு யோசனை....''

''தாராளமா சொல்லு.''

''பெரும்பாலும் பசங்களோ, பொண்ணுங்களோ காதல்ல தோத்துப் போய்டறாங்க... அவங்களுக்கு அது காலம் முழுக்க அழியாத வடுவா, தொட்டால் நோகும் தழும்பா மாறிடுது. அவங்களுக்கு அந்த தப்பை சரி செய்ய இன்னொரு வாய்ப்பு கிடைச்சா எப்படி இருக்கும்?

வாழ்க்கை ஒரு முறைதான். ஆனா, வாய்ப்பு ஒரு முறைதான்னு இருக்குறதை இரண்டு முறைன்னு மாத்தினா... தப்பு செஞ்சவங்க சரிசெய்துக்குவாங்க. பிரிஞ்சவங்க சேர்ந்துடுவாங்க. இதுவும் ஒரு ஃபேன்டஸி கான்செப்ட் தானே. இதையே கூட அட்லீஸ்ட் குறும்படமா பண்ண யோசிக்கலாம்.''

''இது செட்டாகுமா?''

''யோசிப்போம். முடியும்னு முயற்சிப்போம். ஐடியாவுக்கா பஞ்சம். செட்டாகலைன்னா பரவாயில்லை. பிராசஸ் பண்ணவரைக்கும் நமக்கு திருப்தி இருக்குமே.''

''சூப்பர் டா. இதுல ஏதோ உன் அனுபவம் இருக்கா கௌதம்?''

''எப்படி சொல்ற?''

''இவ்ளோ அளவுக்கு விட்டுக்கொடுக்காம பேசுறன்னா... அதுக்கான நதிமூலம், ரிஷிமூலம் உன்கிட்ட இருந்துதானே ஆரம்பிச்சிருக்கும்.''

ஆமாம் என்று தலையசக்கும் அந்த நொடியில் வெட்கம் கலந்த புன்னகை கௌதமை ஆட்கொண்டிருந்தது.

''நான் செய்த தப்பும், சரி செய்ய வேண்டிய வாய்ப்பும்... ப்ரீத்திதான்.''

கௌதம் பேச ஆரம்பித்தான்.

''கொஞ்சம் டீட்டெயிலா சொல்லு மச்சி.''

''உனக்கு சொல்லி புரிய வைக்குறதை விட படிக்குற இவங்க கிட்டயே நேரடியா சொல்லிடறேன்...''

''பார்த்தியா! எனக்கு புரியாதுன்னு நீயே முடிவு பண்ணிட்டே...''

''அதில்லை மச்சி. நீ குறுக்கே குறுக்கே பேசி நிறைய கேள்வி கேட்ப. நானா சொன்னா ஒரு ஃபுளோவுல போய்ட்டே இருப்பேன். அதான். தப்பா நினைச்சுக்காதே. சரியா?''

''அப்போ நான்?''

''உன்னை விட நான் நல்லாவே சொல்வேன். இப்போதைக்கு கிளம்பு'' என்று என்னை விரட்டிவிட்டான்.

இதோ இப்போது உங்கள் முன் கௌதமே பேசுகிறான்.

ஹாய்! நான் கௌதம். சிவில் இன்ஜினீயரிங் படிச்சிருக்கேன். ராமநாதபுரத்துக்காரன். என் எதிர்வீட்டு தேவதை ப்ரீத்தி.

என் அப்பாவும், ப்ரீத்தி அப்பாவும் ஃப்ரெண்ட்ஸ். அதனால என் வீட்டுக்கு அவளும், அவ வீட்டுக்கு நானும் சாதாரணமா போய் வருவோம். சின்ன வயசுல இருந்தே எனக்கு அவளை தெரியும். அப்போலாம் ப்ரீத்தி பத்தி எனக்கு பெருசா எதுவும் தோணலை. அம்மா தான் ப்ரீத்தியைப் பத்தி புகழ்ந்து பேசிக்கிட்டே இருப்பாங்க.

எங்க வீட்ல அண்ணன், நான்னு ரெண்டு பேருமே பசங்க. அம்மாவுக்கு பொண்ணுன்னா அவ்ளோ பிடிக்கும். 'பொண்ணுங்கதான்டா வீட்டுக்கு அழகு. அவங்க அலங்காரமும், கொலுசு சத்தமும் வீட்டையே நிறைக்கும்'னு சொல்வாங்க.

இன்னும் வெளிப்படையா சொல்லணும்னா நான் ப்ரீத்தியை லவ் பண்ண காரணமே என் அம்மாதான்.

'ப்ரீத்தி எவ்ளோ அழகு பாருடா. அவ சிரிப்பும், நடக்குற ஸ்டைலும் எப்படி இருக்கு?'ன்னு என்னை சைட் அடிக்க என் அம்மாதான் தூண்டினாங்கன்னு கூட சொல்லலாம்.

'நானே கண்ணு வெச்சுடறேன்'னு ப்ரீத்திக்கு சுத்தி போடும்போதெல்லாம் இமைக்காமல் அப்படியே ப்ரீத்தியைப் பார்த்து உறைந்துபோய் நின்னிருக்கேன்.

காலேஜ் சேர்ந்த்தும் ப்ரீத்தி இன்னும் அழகா தெரிஞ்சா. ஒரு நாள்... பிங்க் கலர் லேடி பேர்ட் சைக்கிளைத் துடைத்தபடி ஷர்ட்டும், லெக்கின்ஸும் அணிந்த் ப்ரீத்தியை நான் தற்செயலா பார்த்தபோது அப்படியே க்ளீன் போல்ட்.

என்னாச்சுன்னு எனக்கே தெரியல. அவள் அருகிருப்பு எனக்குள் இன்ப அவஸ்தையைக் கொடுத்தது.

லூஸூப் பெண்ணே லூஸுப் பெண்ணே பாடல் அப்போ பேய் ஹிட். அவளை பார்க்கும்போதெல்லாம் அந்தப் பாடலை ஒலிக்க விட்டு செல்போனை அதிரச் செய்தேன்.

என்னாச்சு இவனுக்குன்னு கலவரமாய் பார்த்துக்கிட்டே என் நிலவரம் புரியாமல் கடந்து போனா.

ஒரு கட்டத்தில் அவள் அம்மாவிடமே நான் இப்படில்லாம் பண்றேன்னு சொல்லிட்டா.

'கௌதம் நல்ல பையன். உன்னை டீஸ் பண்ணமாட்டான்'னு அத்தை எனக்கு கான்டக்ட் சர்டிஃபிகேட் கொடுத்துட்டாங்கன்னா அதை விட என்ன சந்தோஷம் இருக்க முடியும்?

அத்தைன்னு ப்ரீத்தி அம்மாவைதான் சொல்றேன்.

அப்புறம் 'செஸ் கற்றுக்கொடு கௌதம்'னு என் முன்னாடி வந்து நின்னா.

நட்ட நடு ஹாலில் செஸ் போர்டு வைத்தபடி அரட்டையும் சிரிப்புமாய் விளையாடினோம். அவளும் மாவட்ட, மாநில அளவில் பரிசுகளைக் குவிச்சா.

இதுக்கு கௌதம் தான் காரணம்னு அவ வீட்ல சொல்லி சந்தோஷப்பட்டாங்க.

நான் இன்ஜினீயரிங் படிச்சு வேலைக்குப் போகும்போது ஏற்பட்ட பரவசத்தைக் காட்டிலும். அவளுக்கு அந்த வயதில் கோச் ஆன பரவசம்தான் அதிகம்.

நாளுக்கு நாள் எங்கள் சிநேகம் வளர்ந்தது. இந்த தருணத்தில்தான் நான் நொய்டாவில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் வந்தது. அப்போ வரை இது டபுள் சைட் காதலா மாறும்னு சத்தியமா நம்பல நான்.

''நீ போறப்ப சொல்லிக்காம போய்டு. கடைசி நேரத்துல நீ போறதை என்னால பார்க்க முடியாது''னு ப்ரீத்தி சொல்லிட்டா.

நானும் சொல்லிக்காம நொய்டா வந்துவிட்டேன்.

இரண்டு நாள் பயணக் களைப்பில் அசந்து தூங்கி மறுநாள் காலை அம்மாவிடம் பேசினேன்.

அம்மாதான் பேசிக்கொண்டே ப்ரீத்தி வீட்டுக்கு போனாங்க.

ப்ரீத்தி அப்பா பேசினார். 'என்ன கௌதம். ப்ரீத்திகிட்ட சொல்லிக்காம போய்ட்ட? ரெண்டு நாளா அழுதழுது காய்ச்சலே வந்துடுச்சு. இந்தா பேசு' என்றார்.

அவர் அப்படி பேசியதும் கேரக்டர் ஆர்டிஸ்ட் நரேன் முகம் அனிச்சையாய் மனசுக்குள் வந்துபோனது. ஏன் என்று தெரியவில்லை.

அவள் பேசினாள்.

'என் கிட்ட சொல்லாம, என்னை விட்டு பிரிஞ்சு போய்ட்டல்ல'... சிணுங்கினாள். சமாதானம் செய்தேன்.

வீட்டில் இருந்து கொடுத்தனுப்பிய காசில் அவசரத்துக்கு ஒரு சிம் கார்டு வாங்கினேன். அவள் அக்கா மொபைலில் இருந்து அழைத்தாள். விடிய விடிய பேசினோம்.

'நான் ஏன் உனக்கு அவ்வளவு முக்கியம்?' நடுநிசியில் இப்படி ஒரு கேள்வி கேட்டேன்.

இரவுகள் எப்போதும் சுகமானவை. அதில் பொய், பூச்சு, வெறும் ஜம்பம் செய்யாமல் உள்ளதை சொல்லிவிடுவோம். போக்கு காட்டுவது, அலைய வைப்பது, சீன் போடுவது எதுவும் இரவுகளில் நடப்பதில்லை.

அவள் 'உன்னை பிடிக்கும்' என்றாள். 'ஐ ---- யூ' என்று மெசேஜ் தட்டினாள். நான் அந்த இடத்தை லவ் யூ என்று நிரப்பி ரிப்ளை தட்டினேன். அவளும் லவ் யூ சொன்னாள்.

தமிழ்ப் புத்தாண்டு சமயம் வீட்டுக்கு வந்தேன். புதிதாய் ஒரு மொபைல் வாங்கி அவள் கையில் திணித்தேன். பத்து நாட்கள் நெருக்கமும், கிறக்குமாய் பார்வையால் காதலித்தோம்.

தினமும் தலையணைக்குள் மொபைல் புதைத்து தூங்குபவள் அன்றைக்கு அலட்சியமாய் இருந்துவிட்டாள். அவள் அம்மா பார்த்துவிட்டார்.

யாருக்கும் தெரியாமல் ப்ரீத்தி மொபைல் பயன்படுத்துவது தெரிந்துவிட்டது. அதைக் கையில் எடுப்பதற்குள் சுதாரித்து எழுந்த ப்ரீத்தி மெசேஜை டெலீட் செய்தாள்.

அவள் அப்பாவுக்கு விஷயம் தெரிந்தது. மொபைல் கால் ரிஜிஸ்டர் பார்த்தார். செல்லம் என்று இருந்த நம்பருக்கு கால் செய்தார்.

இது எதுவும் தெரியாமல் நான் காலையிலேயே குட் மார்னிங் செல்லம் என்று சொல்லி வாசலை நோக்கி ஓடிவந்தேன்.

மாடியில் இருந்த ப்ரீத்தியின் அப்பா நான்தான் அவளின் செல்லம் என்பதைக் கண்டுகொண்டார். கான்டாக்ட் சர்டிஃபிகேட் கொடுத்த அவள் அம்மா இப்போது என்னை இலக்கணமே இல்லாமல் திட்ட ஆரம்பித்தார்.

இரு வீட்டுக்கும் பஞ்சாயத்து நடந்தது.

நான் கண்டுகொள்ளாமல் சத்தமில்லாமல் ப்ரீத்தியைப் பார்த்து பேசினேன். ப்ரீத்தியின் அம்மா தான் ஒரு டீச்சர் என்பதை அவளுக்கு பிரம்படி கொடுத்துதான் நிரூபிக்க வேண்டுமா? என்று நொந்துகொண்டேன்.

கட்டிலுக்கடியில் இரண்டு பிரம்புகள் உடைந்து கிடந்தன.

'ரொம்ப அடிச்சுட்டாங்களாடா' என்றேன்.

'இல்லை' என்று எனக்காக சொல்வான்னு எதிர்பார்த்தேன்.

'முடியலைடா' என அழுதுவிட்டாள்.

அதற்குப் பிறகு ப்ரீத்தியை மாமா வீட்டுக்கு அனுப்பினார்கள். நான் விடுமுறை முடிந்து நொய்டா சென்றேன். அடுத்த ஆறு மாதத்தில் ஊருக்கு வந்தேன். வீட்டை காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள்.

ஒருவழியாக 10 நாட்கள் அலைந்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும் அன்புக்கரசியை அனுப்பி அட்ரஸ் கண்டுபிடிக்கச் செய்தேன். தூது அனுப்பினேன்.

ஆனால், அவள் அங்கு இல்லை. தூரமாய் இருக்க வேண்டும் என்று மாமா வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். மாமா வீட்டைக் கண்டுபிடித்து நேரில் போய் நின்றேன்.

''இது செட்டாகாது கௌதம். நாம விட்டுடலாம்.''

''ஏன்?''

''என் அப்பா, அம்மாவுக்கு உன்னை பார்க்கமாட்டேன், உன் கூட பேசமாட்டேன்னு சத்தியம் பண்ணியிருக்கேன்.''

''உன்னைவிட்டு எங்கேயும் போகமாட்டேன்னு சொன்னியே... நான் நொய்டாவுல இருக்கும்போது இப்பவே என்னையே கூட்டிட்டு போய்டு சொன்ன?''

''நான் சொன்ன நேரத்துல நீ வரலை.''

''இப்போ வந்துட்டேனே?''

''வேணாம் கௌதம். இப்போ அது சரியாபடல.. என் அப்பா, அம்மா சம்மதிக்க மாட்டாங்க. அவங்களுக்கு எந்த அவமானத்தையும் தேடிக் கொடுக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணியிருக்கேன்.''

''நாம பழகினது?''

''கெட்ட கனவா நெனைச்சு மறந்துடுறேன்.''

''ப்ரீத்தி.''

''ஸாரி கௌதம்...''

இதுதான் எங்கள் கடைசி உரையாடல்.

ப்ரீத்தி ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? அவள் எப்படி இருப்பாள்? இதற்கு நீங்கள் 'விண்ணைத் தாண்டி வருவாயா' பார்க்க வேண்டும்.

ஜெஸ்ஸி தான் ப்ரீத்தி. ஜெஸ்ஸியாக நடித்திருக்கும் த்ரிஷா சிம்புவின் வீட்டு மாடியில் இருப்பார்... என் தேவதை எதிர்வீடு.

என் பொணத்தை பார்த்துட்டு நீ வேணா கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்கோ என்று ஜெஸ்ஸியின் அப்பா சொல்வார். ப்ரீத்தியின் அப்பாவும் கிட்டத்தட்ட அதே மாதிரிதான் சொன்னார்.

என் ஜெஸ்ஸியும் அப்படிதான். என்னை மறந்துவிடுவதாக பெற்றோரிடம் சொல்லியிருக்கிறாள். அப்படி என்ன காரணம்? எதுவும் இல்லைதான். ஆனால், அவள் பிரச்சினையில் இருக்கும்போது என்னால் ஓடிவர முடியவில்லை. அதுதான்... பெண்களால் எப்படி இப்படி பெத்தவங்களுக்காக எல்லாத்தையும் தூக்கி எறிய முடிகிறது? என்று யோசித்திருக்கிறேன்.

திரும்பத் திரும்ப, அப்பாவுக்குப் பிடிக்கலை என்று காரணம் சொல்லும் ப்ரீத்தி ஏன் சிக்கலான மனநிலையுடன் குழப்பமாக செயல்படுகிறாள்? ஜெஸ்ஸிக்கு நடந்தது என் ப்ரீத்திக்கு நடந்துவிடக்கூடாது. இதுதான் என் வேண்டுதலும்... பிரார்த்தனையும்...

மனமுருகிப் பேசிய கௌதமுக்கு ஆதரவாய் தோள் தட்டினேன்.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் பிரிந்துபோன, சேர்ந்து வாழ்கிற எல்லா காதலர்களுக்குள்ளும் பல எண்ண அலைகளை எழுப்பியதை மறுக்க முடியாது.

கார்த்தியாக சிம்புவும், ஜெஸ்ஸியாக த்ரிஷாவும் இப்போதும் நம் மனதுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். அது கௌதம் மேனன் செய்த மேஜிக்.

இன்ஜினீயரிங் படித்துவிட்டு சினிமா இயக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்கிறார் சிம்பு. மாடியில் வசிக்கும் ஜெஸ்ஸியைப் பார்க்கிறார். வீட்டு ஓனர் மகள்தான் ஜெஸ்ஸி என்று தெரிகிறது. காதலில் விழுகிறார். ஃபாலோ செய்கிறார். ஆலப்புழா வரைக்கும் சென்று தேடுதல் படலம் நடத்துகிறார்.

ரயிலில் முத்தம் கொடுக்கிறார். த்ரிஷாவும் காதலில் விழுந்ததை ஒப்புக் கொள்கிறார். இருவர் வீட்டுக்கும் தெரிய வருகிறது. பிரச்சினை வெடிக்கிறது. அவசர அவசரமாக த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் சிம்புவிடம் அழுதபடி த்ரிஷா பேசுகிறார். இப்போது வருவது சரியா இருக்காது என்று சிம்பு சொல்கிறார். பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து சிம்பு த்ரிஷாவைத் தேடி வருகிறார்.

அப்போது த்ரிஷா - சிம்பு பேசும் கான்வர்சேஷன் இங்கு ஏராளமான காதலர்களுக்கு நடந்திருக்கும்.

''ஏன் வந்தே கார்த்திக்?''

''என்னது இந்த எஸ்எம்எஸ்?''

''நீ அங்கே இருக்குறதாலதான் அந்த எஸ்எம்எஸ் அனுப்பிச்சேன். நீ திடீர்னு வரமுடியாதுன்னு நினைச்சேன்.''

''நான் வந்துட்டேன்ல சொல்லு, எங்கே போகணும். என்ன பிரச்சினைன்னு சொல்லேன்.''

''நான் தான் உன் பிரச்சினை கார்த்திக். நான் வர்றேன்னு தப்பான டைம்ல சொல்லிட்டேன்ல. உன்னால ஒண்ணும் பண்ண முடியலைல்ல. ஒரு பத்து நிமிஷமாவது என்ன பண்றது? முடியுமான்னு யோசிச்சிருப்பல்ல? அது இருக்கக்கூடாது கார்த்திக்.

என்னால உனக்கு எந்த கஷ்டமும் இருக்ககூடாது இது எப்பவுமே இப்படிதான் இருக்கும்னு தெரியுது எனக்கு. இது மாறாது.

அன்னைக்கு வரணும்னுதான் தோணுச்சு. ஆனா, அந்த ஒரு நொடி போய்டுச்சு கார்த்திக்.

தட் மொமண்ட் இஸ் கான்.

இன்னைக்கு இதை விட்டுடலாம்னு தோணுது. இல்லை நிச்சயமா சொல்றேன். இது முடிஞ்சு போச்சு கார்த்திக்."

நான் முன்னாடியே உன்கிட்ட சொன்னேன். ஆனா நீ சீரியஸாவே எடுத்துக்கலை. ஐ டெட் ஃபாலின் லவ் வித் யூ. ஆனா வேண்டாம்னு சொன்னேன்ல…

நீ என் பின்னாடி சுத்தலைன்னா நான் என் பாட்டுக்கு சும்மா உக்காந்திருப்பேன். அப்பா சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்கேயாவது போயிருப்பேன்.

நீ ஏன் பிடிச்சுருக்குன்னு சொன்ன?

ஏன் என்னை விரட்டி விரட்டி லவ் பண்ண கார்த்திக்?

இது பீஸ்ஃபுல்லா இல்லை. வேணாம் கார்த்திக். மறந்திடு. நானும் மறந்திடுறேன்.''

 

''ஜெஸ்ஸி... பைத்தியமா உனக்கு?

என்னாச்சுன்னு இந்த முடிவு? ஒண்ணுமே நடக்கலையே?''

 

''நீ எனக்காக வெயிட் பண்ணாதே. அவங்க என்னை வெறுக்குறதை விட நீ என்னை வெறுக்குறது பெட்டர்னு நினைக்குறேன். விட்டுடு கார்த்தி. என்னை விட்டுடு ப்ளீஸ்.

சத்தியமா சொல்றேன் என்னை விட்டுடு கார்த்திக்.''

''உன்னை விடவே முடியாது ஜெஸ்ஸி.''

''நான் இப்படிதான், எனக்கு என்ன வேணும்னு எனக்கே தெரியாது. இந்த வலி எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.''

 

சிம்பு - த்ரிஷா பிரிவுக்குப் பிறகு... அமெரிக்காவில் படம் இயக்கும் சிம்பு யதேச்ச்சையாக த்ரிஷாவைப் பார்க்கிறார்.

பார்க் காட்சியில் சிம்பு - த்ரிஷா பேசுவது அவ்வளவு அழகு.

''உன் லைஃப்ல இன்னொரு பொண்ணு இருக்கால்ல... அவளைப் பத்தி சொல்லு கார்த்திக்...''

''அவ நல்ல ஹைட் ஜெஸ்ஸி... கர்லி ஹேர். ஃபுல்லா இல்ல. கொஞ்சம் இங்க இருந்து மட்டும்..

ஒரு மாதிரி சிரிப்பா இருக்கும், அவ நடக்கும்போது.. நல்ல வாய்ஸ் அவளுக்கு.

கெட்ட வார்த்தை பேசினா அவளுக்கு புடிக்காது..

சேரிதான் நிறைய கட்டுவா..

அதுவே ஒரு வித்தியாசம்தான்.. ஸ்லிம். சிம்பிள். மேக்கப்லாம் போடமாட்டா... வெரி பியூட்டிஃபுல்.

பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கும்...

என்ன அவளுக்கு ரொம்ப புடிக்கும்..

ம்..பைக்ல என்கூட நிறைய சுத்தி இருக்கா..

(இதுவரைக்கும் சிம்புவை மட்டுமே க்ளோஸ் அப்பில் காட்டுவார்கள்.)

படம் பாக்க அவளுக்கு புடிக்காது...( சிம்பு சொல்லும் போது த்ரிஷாவை க்ளோஸ் அப்-ல காட்டுவாங்க.)

 

 

நான் கிஸ் பண்ணியிருக்கேன் அவளை..

நிறைய பேசுவா..

ஒரு மலையாள வாசம் அப்படியே வீசும் அவ பேச்சில..

அதுக்கே காலி நான்..

வெறுமனே கட்டிபுடிச்சிட்டு மூணு மணிநேரம் உட்கார்ந்திருக்கேன்..

அவ கால தொட்டிருக்கேன்...

அவ பேரு... ஜெஸ்ஸி...ஜெஸ்ஸி..

அவதான் இருக்கா இன்னும் என் வாழ்க்கையில..

உன்கிட்ட இருந்து போனதுக்கப்புறம் அவதான் எல்லாம்..

ஃபர்ஸ்ட் லவ் ஜெஸ்ஸி

அவ்ளோ ஈஸியா போகாது..

ஆனா அவளுக்கு நான் இல்ல..

அவளுக்கு அவ அப்பானா ரொம்ப புடிக்கும்..

தப்பா சொல்லல.. நல்ல விஷயம்தான்..

எவ்ளோ பேர் அந்தமாதிரி இந்த காலத்தில இருக்கான்...

அவர் என்ன ஒத்துக்கமாட்டர்னு தெரிஞ்சே என்ன வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டா..

கல்யாணம் பண்ணிகிட்டானு நினைக்கிறேன்..

அப்படி இருந்தாலும் என்ன வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டா..''

 

இந்த காட்சி இப்போதும் பிரிந்த காதலர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.

ஃபீலிங்கில் பியானோ வாசிக்க வைத்துவிட்டேனா?

 

'உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. நான் உன்னை லவ் பண்றேன். ஆனா, நீ எனக்கு வேண்டாம்’ என்று சொல்லும் எத்தனை ஜெஸ்ஸிகள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்?

அப்பா, அம்மா தன்னை வெறுப்பதை விட காதலன் தன்னை வெறுத்தால் பரவாயில்லை என்று நினைத்து வெறுக்க வேண்டும் என்பதற்காகவே அலட்சியம் செய்யும் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்?

சம கால காதல் பதிவை அப்படியே அச்சு அசலாய் பதிவு செய்த விதத்தில் கௌதம் மேனன் முக்கியப் பங்கு வகிக்கிறார். ஜீவனுள்ள காதல் காட்சிகளில் மனதை லயிக்கச் செய்கிறார்.

ஆனால், 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் ஆகப் பெரிய சிக்கல் கிளைமாக்ஸ்தான். மூணு விதமான கிளைமாக்ஸ் பாதி ரசிகர்களுக்குப் புரியாமலே போய்விட்டது. அதற்காகவே இரண்டாம் முறையாக படம் பார்த்து புரிந்துகொண்டவர்களும் இருக்கிறார்கள்.

இந்தியில் பிளாப் ஆனதற்கு சொல்லப்படும் மிக முக்கிய காரணம் கிளைமாக்ஸ் தான் என சொல்லப்படுகிறது.

கேரளா வீடு, தென்னை மரங்கள், போட் ஹவுஸ், பாடல் காட்சிகள், லொக்கேஷன்கள் என மனோஜ் பரமஹம்சாவின் கேமரா எல்லா அழகையும் அள்ளி வந்திருக்கும்.

மன்னிப்பாயா பாடல் உருக வைத்தது. ரஹ்மான் இசை மூலம் ரசிகர்களுக்கு காதலைக் கடத்தினார்.

சிம்பு, த்ரிஷா ஏற்கெனவே அலை படத்தில் நடித்திருந்தனர். ஆனால், இந்தப் படத்தில் ஹிட் ஜோடி ஆனார்கள். விரல் வித்தைக்காரர் சிம்பு இவ்வளவு அடக்கமாக அழகாக கிளாஸிக் நடிப்பை எந்த படத்திலும் கொடுத்ததில்லை.

காட்டன் சேலையில் படுபாந்தமாக த்ரிஷாவைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சிரிப்பும், தவிப்புமாக த்ரிஷா நடிப்பில் ஸ்கோர் செய்த படம். விடிவி கணேஷுக்கு அப்ளாஸ் அள்ளிய படம்.

சிம்புவின் தங்கையாக நடித்த தீப்தி 'துப்பாக்கி'யில் விஜய்க்கு தங்கையாக நடித்தார். பிறகு ஹீரோயினாக சின்ன சின்ன படங்களில் தெறமை காட்டியிருக்கிறார்.

சிம்பு - த்ரிஷா - கௌதம் மேனன் கெரியரில் மிக முக்கியமான படம் 'விண்ணைத் தாண்டி வருவாயா.'

ஆனால், நம்ம கௌதம் இப்போது உற்சாகமாக இருக்கிறான்.

காரணம், சமீபத்தில் ஓர் அதிசயம் நடந்தது.

திருமண வைபவ நிகழ்வில் கௌதமின் அம்மாவிடம் ப்ரீத்தி பேசியிருக்கிறாள். கௌதம் நம்பர் கேட்டிருக்கிறாள்.

கௌதம் அம்மாவுக்கு அவன் நம்பர் தெரியவில்லை. இதை அறிந்த கௌதம் ஃபேஸ்புக்கில் நம்பரை மெசேஜ் அனுப்பினான்.

அடுத்த நிமிடமே கால் செய்தாள்.

காதலர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கௌதம் ஃபேன்டஸி கான்செப்ட்டில் சொன்ன அந்த செகண்ட் சான்ஸ் கிடைத்தே விட்டது.

இந்த காதலர்கள் இனிதாய் இல்லறத்தில் நுழைய நான் முதல் ஆளாய் வாழ்த்து சொல்லிவிட்டேன். நீங்கள்?

மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்...

http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-8-விண்ணைத்-தாண்டி-வருபவர்கள்/article7561360.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.