Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குற்றமே தண்டனையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குற்றமே தண்டனையா?

வெற்றி

44-1.jpg

‘குற்றமே தண்டனை’யின் மையமாக பூஜா தேவர்யாவின் பாத்திரத்தைச் சொல்லலாம். அப்பாத்திரத்தின் குற்றம் ரவிச்சந்திரன் பாத்திரத்தை ‘விதார்த்’ காதலிப்பதாகவும் தண்டனையாக அவனையே திருமணம் செய்துகொள்வதுமாக இருக்கிறது. இளம்பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை என ஃபேஸ்புக்கில் அவ்வப்போது பகிரப்படும் மீம்களில் கொஞ்சம் குற்றவுணர்ச்சியைச் சேர்த்து எடுக்கப்பட்டதுபோல் இருக்கிறது ‘குற்றமே தண்டனை’ திரைப்படம்.

ஒவ்வொரு முறையும் ஊடகங்களில் பெரிதாகப் பேசப் படுமளவு, பெண்கள் திராவகத் தாக்குதல்களுக்கும் கொலைகளுக்கும் ஆளாகும்போது இத்தகைய மனோபாவங்களை வளர்ப்பதில் தமிழ் சினிமாவின் பங்கு குறித்தும் லேசாகவோ பெரிதாகவோ விவாதிக்கப்படுகின்றது. பெரும்பாலும் செல்வராகவன் உள்ளிட்டோரின் படங்கள். இம்முறை ஒரே நாளில் மூன்று வெவ்வேறு கொலைகள் நிகழ்ந்த சமயத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படமாக ‘குற்றமே தண்டனை’ அமைந்திருக்கிறது. இப்படம் இந்த மனநிலையைத் தூண்டக்கூடிய சினிமாக்களின் வரிசையில் அமையாமல் போகலாம். எனினும் மாற்று சினிமாவாகக் கொலைக்குப் பின் அதற்கான நியாயப்படுத்தலை வழங்குவதாக அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது.

இதை எழுதத் தொடங்குவதற்குள்ளேயே ‘குற்றமே தண்டனை’ குறித்துப் பல பாராட்டுகளும் சில எதிர்மறை விமர்சனங்களும் எழுதப்பட்டுவிட்டன. எனவே, சிலவற்றைக் குறிப்பாகச் சொல்லிவிடுவதே மரியாதையாக இருக்கும்.

ஒரு கதை, கதைக்குள்ளேயே செயல்படும் கதாபாத்திரத்தின் வழியாக மட்டுமே சொல்லப் படும்போது நாம் கதையின் நேர்மை, அரசியல் மற்ற கதாபாத்திரங்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் அக்கதாபாத்திரத் தின் மனச்சாய்வுகளோடு சேர்த்தே புரிந்துகொள்ள முடியும். ஆனால் பெரும்பாலும் தமிழ் சினிமாக் கதைகள் பெயர் உருவமற்ற கதைசொல்லிகளின்

பார்வையிலிருந்தே நகர்கின்றன.

படத்தின் ஒளிப்பதிவு பாராட்டப்படுகிறது. ஒளிப்பதிவு சிறப்பாகவே இருக்கிறது. ஆனால் எதுவும் நம்மை உணரச் செய்வதாக இல்லை. ‘மெட்ராஸ்’ படத்தில் அந்த ஹவுசிங் போர்டின் ஒவ்வொரு தெருவையும் நம்மால் உணரமுடியும். கதாபாத்திரங்கள் இருக்கும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் இன்னொரு இடத்திற்கான தூரத்தை, அப்படத்தின் ஒளிப்பதிவு தெளிவாகவும் நிர்ணயிக்கப்பட்ட அழகியல் பார்வையோடும் காட்டியது. அது ஹவுசிங் போர்ட் வீடுகள் நிறைந்த காட்சிகளாக இருந்தாலும் சரி; அல்லது ‘டனல் விஷன்’ என்ற பார்வைக் குறைபாட்டை உணரவைக்கும் முயற்சியாக இருந்திருக்கவேண்டிய காட்சிகளாக இருந்தாலும் சரி! அவை பெரும்பாலும் சம்பிரதாயத்திற்கு எடுக்கப்பட்டவையாகவே இருந்தன. படம் அந்தப் பாத்திரத்தின் குறைபாட்டைப் புரிந்துகொள்வதாக இருந்தது. இதனாலேயே அப்பாத்திரத்தின் குறைபாடுகள், நியாயப்படுத்தல்கள் ஏற்படுத்தும் கோபம் கதைசொல்லி மீதாகத் திரும்பக்கூடியதாகவும் ஆனது.

‘குற்றமும் தண்டனையும்’ நாவலே படத்தின் பெயர்த் தலைப்புக்கு உந்துதல் என்று எடுத்துக்கொண்டால், பெயர்த் தலைப்பு படத்தின் முக்கியப் பிரச்சினையை உணர்த்துகிறது. ஒரு படம் எந்தவொரு செய்தியையும் அல்லது கருத்தையும் முன்வைக்காமல் இருக்கலாம்; ஆனால் எல்லாப் படைப்புகளும் ஒரு உணர்வை நம்மிடத்தே ஏற்படுத்துகின்றன. சில பார்வையாளர்களின் தனிப்பட்ட புரிதலைத் தாண்டி பொதுவானவையாக வெளிப்படையானவையாக அவை இருக்கின்றன. இதில் அவ்வாறு வெளிப்படையாக இருக்கும் குற்றமே தண்டனை என்ற கருத்தியல் ஏற்க இயலாதது; மதக் கற்பனைகளை ஒட்டியது.

எதிர் வீட்டுப் பெண் (ஐஸ்வர்யா) கதாபாத்திர உருவாக்கத்திலேயே பல பிரச்சினைகளை சுட்டிக்காட்டலாம். எதிர்வீட்டுப் பெண் கதாபாத்திரம் மீதான பார்வை மையக் கதாபாத்திரத்துடையதே என்று நாம் எண்ணிவிடாமல் இருக்கவேண்டுமென்றோ என்னவோ, அவர் தானே முன்வந்து ‘ஆமா நா மோசமான பொண்ணுதான்’ என்று வாக்குமூலம் கொடுக்கிறார். தான் நல்லவர் என்று சொல்லும் எல்லோரையும் நல்லவர் என்று நம்புமளவு பார்வையாளர்கள் முட்டாள்கள் என்ற நம்பிக்கையா அல்லது யாராவது சில முட்டாள்கள் அந்த கதாபாத்திரத்திடம் மனச்சாய்வு கொண்டுவிடுவார்கள் என்ற பதற்றமா? இயக்குநருக்கே வெளிச்சம். நாயகனுக்குப் பின்னர் மன்னிப்பு வழங்கப்பட ஏதுவாகவே இந்த வாக்குமூலமும் வழங்கப்படுகிறது. அந்த அயர்ன் செய்கிற பெண்மணிக்கு என்ன தண்டனையோ தெரியவில்லை. ஏற்கனவே இரண்டு பெண்களுக்குத் தீர்ப்பு எழுதிவிட்டதால் இயக்குநர் அவரைத் திரைக்குள் மன்னித்திருக்கிறார்.

முக்கியப் பிரச்சினை இதில் வழங்கப்படும் பாவமன்னிப் பல்ல. ஆண்கள் பல வருடங்களாக தங்களுக்குத் தாங்களே வழங்கிக்கொள்ளும் பாவமன்னிப்புகள் அதிகபட்சச் சலிப்பையூட்டுகின்றன. ஆனால் பெண் கதாபாத்திரங்களை விவரமாக வரையமுடியாமல் தவிப்பதோடு அவர்களுக்கும் சேர்த்து தீர்ப்பெழுதுவது எரிச்சலாக இருக்கிறது.

இந்தக் கதையின்மீது எனக்கெழுந்த குற்றச்சாட்டுகள் எல்லாமும் ரவிச்சந்திரன் பாத்திரத்தின் அற்புதமான உருவாக்கம் என்று கருதிவிடலாமா என்று ஒரு பக்கம் தோன்றினாலும் மறுபுறம் இலக்கியத்தனமான தலைப்பு அந்த இன்னொசென்ஸை அதற்கு வழங்குவதிலிருந்து தடுக்கிறது. அப்படியே வழங்கினாலும் இந்த ஆண்களின் கதைகள் பலநூறு முறை தமிழ் சினிமாவில் சொல்லப்பட்டுவிட்டதைவிட சிலாகிக்கும்படி இப்படத்தில் எதுவும் இல்லை.

சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் மனநல மருத்துவர் ஷாலினி பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குநர்கள் பெண்களையே பார்த்திருப்பதில்லை என்பதாகச் சொன்னார். மணிகண்டனின் பிரச்சினையும் அதுவாகவே தோன்றுகிறது.

வெகுசன மனோவியலைச் சொறிந்துகொடுத்துப் பெரும்பெயர் வாங்கிய சமீபத்திய ‘ஜோக்க’ரும் இதேபோலத்தான். இதிலாவது நாம் கதாபாத்திரத்தின் மனோநிலை என்று என்னென்னவோ பேச வேண்டியுள்ளது. ஆனால் ஜோக்கரில் அப்படி எதுவும் இல்லை. இயக்குநர் எந்தக் கதையும் சொல்லாமல், தான் இத்தனை வருடமாக கற்றுக்கொண்ட அத்தனை அரசியலையும் நம் தலையில் கொட்டவே படம் எடுத்திருக்கிறார். ஆனால் படத்தின் மையக் கதாபாத்திரம் கழிப்பறை கட்டியுள்ள ஆணையே திருமணம் செய்துகொள்வேன் என்று சொன்னாலும், குடிகார அப்பாவுக்குக் கூட்டத்துக்குப் போய் சரக்கு வாங்கிக்கொண்டு போகிற, கழிப்பறைக் கோரிக்கையையும் விஜய், அஜீத் என இயக்குநர் திட்டும் கதாநாயகர்களைப் போலவே ஹீரோவின் காதலுக்காக விட்டுத்தந்து கர்ப்பமாகிக் கோமாவிலும் விழுகிறார். இடையே பாடல் வரிகளில் கர்ப்பமான ஆட்டைப் பார்க்கும்போது ‘உன் ஞாபகம் வருகிறது’ என்பது போன்ற வரிகள் அரசியலைக் கடந்த காதலாகும்.

ரஞ்சித்தின் மூன்று படங்கள் வெகுசன வெற்றியைப் பெற்றிருக்கும் சூழலிலிருந்து, அந்தப் படங்களில் காதல் மற்றும் பெண் கதாபாத்திரங்களின் வளர்ச்சி ஆகியவற்றோடு பொருத்தி இதைப் பார்க்க முடியும். ‘அட்டக்கத்தி’யின் இளைஞன் தனது காதல் தோல்விகளுக்காக அந்தப் பெண்கள்மீது கோபம் கொள்வதுமில்லை; அது அவ்வளவு பெரிய விஷயமாகவும் இருப்பதில்லை. ‘மெட்ரா’ஸில் ஒன்றுசேர்ந்த காதலும்கூட அவ்வளவு பெரிய விஷயமாக இருப்பதில்லை. பெரும்பாலானோர் இப்படி இயல்பாகவே எடுத்துக்கொள்ளும் காதலை மறுபடிமறுபடி மறுத்து புனிதப்படுத்தப்படுத்திய ஆக்ரோஷங்களின் நாடகமே நமக்கு விரும்பத்தக்கதாக இருக்கிறதா என்ன? ‘தர்மதுரை’யையும் இந்த வரிசையில் சொல்லலாம். திடீரென்று வந்து அறிவுரை சொல்லும் பேராசிரியர் உட்பட ஒரு இரட்டை மனநிலையிலேயே இயங்கினாலும் தர்மதுரை இத்தகைய போக்கிற்கு எதிரான திசையிலான பயணத்தின் பகுதியே.

இதே கருத்துகளை தாங்களும் சொல்லியதன் மூலம் நம்பிக்கையளித்த நண்பர்களுக்கு நன்றி, இப்படி எல்லா படத்தையும் திட்டுறாய்ங்களே நமக்கு வாய்த்த நண்பர்கள், என்ன படம்தான்யா புடிச்சிருந்துச்சு என்றதற்கு நான் உட்பட பெரும்பாலானோரின் பதில்: ஜாக்ஸன் துரை என்பதே.

http://www.kalachuvadu.com/archives/issue-202/குற்றமே-தண்டனையா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராமநாதன் அருணாசலம் காலத்தில் இருந்தே பிழைகள் விடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான். 
    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.