Jump to content

திரைவிமர்சனம்: கொடி


Recommended Posts

திரைவிமர்சனம்: கொடி

 

 
kodi_3062689f.jpg
 

indhu_talkiees_001_3062686a.jpg இயக்குநர் துரை செந்தில்குமார் ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ படங்களைத் தொடர்ந்து இயக்கி யிருக்கும் படம் ‘கொடி’. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் படம் என்பதால் இந்தப் படத்தை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்தனர். தனுஷ் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதும், ‘ப்ரேமம்’ புகழ் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் அறிமுகமாகும் படம் என்பதும் கூடுதல் ஆவலை உருவாக்கியிருந்தன.

கொடி (தனுஷ்) பிறக்கும்போதே அரசியல் அவனுடைய வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. அவனுடைய அப்பா (கருணாஸ்) தான் வாய் பேச முடியாததால் அரசியலில் சாதிக்க முடியாததை தன் மகன் சாதிக்க வேண் டும் என்று விரும்புகிறார். ஊரில் மெர்குரி கழிவுகளைக் கொட்டி வைத்திருக்கும் ஒரு தொழிற்சாலையை அகற்றக் கோரி கட்சி நடத்தும் போராட்டத்தில் தீக்குளித்து இறந்து விடுகிறார். அப்பாவின் விருப்பத் துக்கு ஏற்றபடி, கொடி தீவிர அரசியல் வாதியாகிறான். இரட்டைச் சகோ தரர்களில் இன்னொருவனான அன்பு (தனுஷ்) கல்லூரிப் பேராசிரியர். இவன் பயந்த சுபாவம் உடையவன்.

கொடியைப் போலவே சிறு வயதி லிருந்தே அரசியலில் இருக்கிறார் ருத்ரா (த்ரிஷா). இருவரும் எதிரெதிர் கட்சிகளில் இருந்தாலும் காதலிக்கிறார் கள். தம்பி அன்பு, முட்டை வியாபாரம் செய்யும் மாலதியைக் (அனுபமா) காதலிக்கிறார். ஒரு கட்டத்தில், சட்ட மன்ற இடைத்தேர்தலில் கொடியும், ருத்ராவும் எதிரெதிர் அணிகளில் நிற்கவேண்டிய சூழல் உருவாகிறது. இதற்கிடையில் ஊரில் மூடப்பட்ட தொழிற்சாலை குறித்த சர்ச்சையும் பெரிதாகிறது. அரசியல் வெற்றியா, காதலா என்று வரும்போது யார் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? இந்த அரசியல் விளையாட்டில் எதிர்பாராமல் நுழையும் அன்பு என்னவாகிறான் என்பதுதான் ‘கொடி’.

இயக்குநர், கொடி கதாபாத்திரத் துக்குக் கொடுத்திருக்கும் தெளிவான பின்னணியை மற்ற கதாபாத்திரங் களுக்குக் கொடுக்கத் தவறியிருக் கிறார். குறிப்பாக, கொடி கதாபாத்திரத் துக்கு இணையான வலிமையுடைய ருத்ராவின் கதாபாத்திரம் அந்த அள வுக்குத் தெளிவாக எழுதப்படவில்லை. ருத்ராவுக்கு அரசியல் ஆர்வம் வரு வதற்கான பின்னணி சரியாக நிறுவப் படவில்லை. ருத்ராவின் போக்கில் ஏற்படும் அதிர்ச்சிகரமான மாற்றமும் நம்பும் விதத்தில் காட்டப்படவில்லை.

இரட்டை வேடத்துக்கு தனுஷ் தன் நடிப்பால் முழு நியாயம் செய்திருக் கிறார். கொடி கதாபாத்திரத்தில் தனுஷின் நடிப்பு செறிவாக உள்ளது. கனமான பாத்திரத்தை ஏற்றிருக்கும் த்ரிஷா சில இடங்களில் சமாளிக்கிறார். சில இடங்களில் தடுமாறுகிறார். அவர் அரசியல் மேடைகளில் பேசும் காட்சிகள் மேலோட்டமாகக் கடந்து சென்றுவிடுகின்றன. மாலதியாக அனுபமா கொஞ்சம் நேரம் வந்தா லும் துறுதுறு நடிப்பை வெளிப் படுத்தியிருக்கிறார். மற்ற துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், சரண்யா, காளி வெங்கட் ஆகியோர் தங்கள் பங்களிப்பைச் செம்மையாகச் செய் திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயண் இசையில் ‘ஏ சுழலி’, ‘சிறுக்கி வாசம்’ பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. வெங்க டேஷின் கேமராவும், பிரகாஷின் படத் தொகுப்பும் படத்தில் அந்த அளவுக்கு எடுபடவில்லை.

திரைக்கதை வழக்கமான பாணி யிலேயே நகர்கிறது. பலசாலி அண் ணன், பயந்தாங்கொள்ளி தம்பி, பழிவாங்கும் படலம் என எல்லாமே எதிர்பார்க்கும்படியே நகர்கின்றன. அரசியலில் வளர்வது, எம்.எல்.ஏ., எம்.பி. ஆவதெல்லாம் விளையாட்டு சமாச்சாரம்போலக் காட்டப்படுகின் றன. காமெடி இல்லாத குறைக்கு இப்படியா?! த்ரிஷா, தனுஷ் இடையே அரசியல் களத்தில் போட்டியும் தனிப் பட்ட முறையில் காதலும் இருப்பது ரசிக்கும்படி காட்சிப்படுத்தப்பட்டிரு கிறது. கட்சிக்குள் த்ரிஷா மேற் கொள்ளும் காய் நகர்த்தல்கள் பரவாயில்லை. இடையில் வரும் ‘திடுக்கிட’ வைக்கும் திருப்பம் செயற்கையாக உள்ளது.

அரசியலில் ஓர் ஆண் நினைத்தால் நேர்மையாக, நல்லவனாக இருக்க முடியும். ஆனால், ஒரு பெண் அரசியல்வாதி என்றால் அவள் வில்லியாகத்தான் இருக்க வேண்டுமா?

இதுபோன்ற சில அம்சங்களைத் தவிர்த்திருந்தால் ‘கொடி’ இன்னும் நன்றாகப் பறந்திருக்கும்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/திரைவிமர்சனம்-கொடி/article9284475.ece?homepage=true

Link to comment
Share on other sites

தனுஷின் முதல் முறை இரட்டை வேடம் இதற்குத்தானா? - 'கொடி' விமர்சனம்

1477594212_kodi_11080.jpg

அரசியல் பரமபதத்தில் ஏணியே பாம்பாக மாறுவதும், பாம்பு ஏணியாக மாறுவதும் சகஜம். இந்த விறுவிறுப்பு விளையாட்டே கொடி.

இரட்டைக் குழந்தைகளில் அண்ணன் தனுஷுக்கு (கொடி) அரசியல் ஆர்வத்தை விதைக்கிறார் அப்பா கருணாஸ். தந்தை தன் அபிமான கட்சிக்காக உயிர் துறப்பதால் அந்த ஆசை மகனுக்குள் ஆழமாக வேர்விடுகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சியோடே சேர்ந்து வளர்ந்து அடிபொடித் தொண்டனில் இருந்து இளைஞர் அணி அமைப்பாளராக வளர்கிறார் தனுஷ். ஆளும் கட்சியைச் சேர்ந்த ருத்ராவும் (த்ரிஷா) தனுஷும் "பர்சனல் வேற பாலிடிக்ஸ் வேற" என்ற பாலிசி காதலர்கள். இதற்கு இடையில் தம்பி அன்புக்கும் (ரெட்டை தீபாவளி), அனுபமா பரமேஷ்வரனுக்கும் காதல். 

மூடப்பட்ட தொழிற்சாலை ஒன்றால் ஏற்படும் பாதரச பாதிப்பு பற்றிய ஆதாரம்  தனுஷிடம் வருகிறது. அதில் சம்பந்தப்பட்ட கைகள் அதை மறைக்க தனுஷுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்து நிறுத்துகிறார்கள், அவருக்குப் போட்டியாக த்ரிஷா. இந்த அரசியல் சடுகுடு என்னென்ன செய்கிறது, தொழிற்சாலை என்ன ஆனது, யாருக்கு யார் வில்லன், யார் ஜோடி, தனுஷுக்கு ஏன் அவ்வளவு பெரிய தாடி என மெதுவாக பறக்க ஆரம்பிக்கிறது கொடி.

’உங்கூட நடிச்சுட்டு இருந்த கருணாஸ் எல்லாம், உனக்கே அப்பாவ நடிக்க ஆரம்பிச்சுட்டார்.நீ இன்னும் அப்படியே இருக்க ' என்ற ரீதியில் இருக்கிறார் தனுஷ்.முதல் முறையாக டபுள் ரோல். தாடியோடு வரும் கொடிக்கு தான் அதிக காட்சிகள், அதிக முக்கியத்துவம். இரண்டு கதாப்பாத்திரங்களுக்கும் வித்தியாசம் காட்ட பெரிய மெனக்கெடல் எதுவும்  செய்ய அவசியமில்லை. க்ளீன் ஷேவ் பண்ணா காலேஜ் புரொஃபசர் அன்பு, வேட்டி சட்டை,  கண்ணாடி, தாடி என்றால் கொடி. சமகால தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகரின் முதல் இரட்டை வேடம் இப்படியா இருக்க வேண்டும்? ஆனாலும் நடிப்பில் தன் கடமையை சரியாகவே செய்திருக்கிறார் தனுஷ்.

1475300658_kodi-upcoming-tamil-movie-dir

 சொழலி, அழகி, எறலி, கலகி என அத்தனை வார்த்தைகளுக்கும் பொருத்தமாக இருக்கிறார் அனுபமா. த்ரிஷா இருக்கும் இளமையைப் பார்த்தால், இன்னும் ஒரு ரவுண்டு வரலாம். கோலிவுட்டின் அரசியல் சினிமாவில் த்ரிஷாவின் கதாப்பாத்திரம் ரொம்பவே ஆச்சர்யம். ஆனால், கத்தி பட விஜய் போல இரும்புக் கம்பியைப் பிடித்து அடிக்கும் போது லைட்டாக சிரிப்பு வருகிறது.

மீத்தேன் கழிவுகள், அரசியல் போதை என சில கருத்துகளைத் தொட்டாலும், அதற்கான வீரியம் சுத்தமாக இல்லை. அரசியல் படம் என போஸ்டர்களிலும், டிரெய்லர்களிலும் சொல்கிறார்கள். வெள்ளை வேட்டி சட்டைகளும், கலர் கலர் கொடிகளையும் தாண்டி வேறு ஒரு அரசியலும் தெரியவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் இறந்தால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென்பது விதி. அந்த அளவிற்காவது அரசியல் பற்றி ஹோம் ஒர்க் செய்துவிட்டு இறங்கியிருக்கலாம் இயக்குநர். 'எல்லோரும் பிறக்கும் போது சிங்கிள் தான். நான் பொறக்கும் போதே டபுள்ஸ்", "சேர்ந்தா தான் கூட்டம். சேர்த்தா அது கூட்டம் இல்ல" வசனங்களில் மாஸ் தெறிக்கிறது. 

 எஸ்.ஏ.சந்திரசேகர்,சரண்யா பொன்வண்ணன்,காளி வெங்கட் என சப்போர்ட் காஸ்டிங் செய்யும் அனைவருமே அவர்களது கதாப்பாத்திரத்தை சரியாக செய்து இருக்கிறார்கள். காமெடி நேரத்தில் சிரிக்க வைக்கிறார். செண்டிமெண்ட்டில் கலங்க வைக்கிறார் காளி.

 எஸ்.வெங்கடேசன் ஒளிப்பதிவு இரண்டு தனுஷ்களும் வரும் காட்சியை  நம்பும்படியாக காட்டியிருக்கிறது. இரண்டாம் பாட்டுக்கும், மூன்றாம் பாட்டுக்கும் இடையே 5 நிமிட இடைவெளி விடவேண்டும் என நினைத்த எடிட்டருக்கு கிளாப்ஸ். ஏ சுழலி பாடம்  மென் மெலோடியாக கலக்குகிறது. தனுஷ் அருண்ராஜா காமராஜாவின் குரல்களில் வரும் கொடி பறக்குதா தீமுக்கு அதிர்கிறது அரங்கம்.

 

பல விறுவிறு கிறுகிறு அரசியல் சினிமாக்களை பார்த்துப் பழகியதாலோ என்னவோ, உயரம் குறைவான  கம்பத்திலும் அரைக்கம்பத்திலேயே பறக்கிறதோ இந்தக் கொடி என்ற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை..!

http://www.vikatan.com/cinema/movie-review/70769-kodi-movie-review.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.