Jump to content

'யெஸ் யுவ ஹொனர்' சொன்னவருக்கு விளக்கமறியல்


Recommended Posts



'யெஸ் யுவ ஹொனர்' சொன்னவருக்கு விளக்கமறியல்
 

article_1477651276-gavel300.jpg-செல்வநாயகம் கபிலன்

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போது, வாய் புசத்தி 'யெஸ் யுவ ஹொனர்' என்று சொல்லிய சந்தேகநபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி வரையில், விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், வியாழக்கிழமை (27) உத்தரவிட்டார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு ஒன்றில், 40 ஆயிரம் ரூபாய் நட்டஈட்டை செலுத்துவதற்காக மேற்படி நபர் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.

பார்வையாளர் அரங்கில் உட்கார்ந்திருந்த நபர், பிறிதொரு வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கையில், அதிக சத்தமாக 'யெஸ் யுவ ஹொனேர்' என கத்தியுள்ளார். இதனை அவதானித்த நீதிமன்ற பொலிஸார், குறித்த நபரை கைது செய்து வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

தொடர்ந்து, மேற்படி நபரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னால் முற்படுத்திய போது, சந்தேகநபர் மதுபோதையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிவான், அந்நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், மதுவெறுப்பு சிகிச்சைக்கு உட்படுத்த கட்டளை பிறப்பித்தார்.

http://www.tamilmirror.lk/184962

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcRskEHGLKngWFOPd-CYIHRNtb_pL7Gooph_noN_JBfuffYToKw8bxijUbQ

 

யெஸ் யுவர் ஹொனர் ..யெஸ் மை லாட் (லபுக்குதாசு) .. வெள்ளையல் சட்டத்தை அப்படியே டிங்கரிங்க் பார்த்தால் இந்த மாதிரி சிக்கல் வரத்தான் செய்யும் .. அன்று வெள்ளையல் அடிமைபடுத்தி இருந்த நேரத்தில் அவர்கள் வகுத்த சட்டம் கொண்டுவரபட்டது. அவர்களின்ட கல்வி முறையில் பயின்ற சில பேர் பாரிஸ்டர் பட்டம் பெற்று முன்னேறி சட்டதரணி ஆகி போட்டார்கள் .. அவர்கள் கோர்ட்டில் வெள்ளை நீதிபதியை மிஸ்டர் எப்படி பெயர் சொல்லி அழைக்க முடியும் .. ? கவுரவ குறைச்சல் தானே ? அதற்காக வடிவமைக்கபட்டதுதான் யெஸ் யுவர் ஹொனர் ..யெஸ் மை லாட் (லபுக்குதாசு)

டிஸ்கி :

உங்களின்ட ஆயி அப்பன் நீங்க பிறக்கும்  போது குப்புசாமி முனிசாமி என்றுதானே பெயர் வைத்திருப்பார்கள் ? கோர்ட்டில் மை லார்ட் என்று அழைக்கும் போது ஏதாவது ஒரு  நீதிபதி தயவு செய்து என்னை அப்படி அழைக்காதீர்க்ள்.. நானும் உங்களை போல ஒருவன் தான் என்று யாராவது சொல்லி உள்ளார்களா ..? இவனுங்க ரத்தம் நீல நிறத்தில் ஓடுதா? அது போக அந்த டிரைவர்.... சிங்கள  போலீஸின் அடக்கு முறைக்கு அடங்காமல் (ஐ மீன் கட்ட பஞ்சாயத்து) கோர்ட்டில் நான் நேரடியாக பார்த்து கொள்கிறேன் என்று ஒன்றுக்கு பல முறை வந்துள்ளார் ...அடக்கு முறை பொறுக்க முடியாமல் வக்கீல்களின் வாதபடியே  யெஸ் யுவர் ஆனர் என்று கதைக்க ஆரம்பித்து உள்ளார்.

டிஸ்குக்கு டிஸ்கி :

நீதிபதி (மைலார்டு) சொல்வது எல்லாம் நல்ல தீர்ப்பாக  இருக்க முடியாது .. நல்ல விதமாக வளர்க்கபட்ட எல்லா மனிதருக்குள் உள்ளேயும் ஒரு நல்ல நீதிபதி உள்ளான் .. அது அவனை வாழ்நாள் முழுக அரித்து எடுத்து போடும்,, அது என்ன நீதிபதி ? மனசாட்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"லபுக்கு தாசு"      என்ற  சொல்லைக் கேட்டு, மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.