Jump to content

கைநாட்டு தான் வைத்தார் ஜெயலலிதா...தேர்தல் கமிஷனின் ஆதாரம்...


Recommended Posts

கைநாட்டு தான் வைத்தார் ஜெயலலிதா...தேர்தல் கமிஷனின் ஆதாரம்...

jayasign28_vc2_18177.jpg

 

கடந்த சட்டசபை தேர்தலில், பணப்பட்டுவாடா புகாரில் அரவக்குறிச்சி,தஞ்சாவூர் தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் கமிஷன். திருப்பரங்குன்றம் தொகுதியில் வென்ற திமுக எம்.ல்.ஏ சீனிவேல் மரணமடைந்தார். தஞ்சாவூர், அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளின் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. நவம்பர் 19-ம் தேதி இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.


இந்த மூன்று தொகுதிகளுக்கான வேட்புமனு தொடங்கியது.திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்ட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தனிச்சின்னம் ஒதுக்கப்படும். இந்த தனிச்சின்னம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது பொதுச் செயலாள்ர்கள் அல்லது கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரின் ஒப்புதல் கடிதம் அளித்த பிறகே வேட்பாளர்களுக்கு அந்த கட்சியின் சின்னம் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, இந்த அத்தாட்சி கடிதத்தையும் வழங்கினால் தான் அங்கீகரிக்கப்பட்ட  சின்னங்கள் வழங்கப்படும்.

jayablacksign_18361.jpg

 


இந்த அத்தாட்சிக் கடிதம், FORM-B எனப்படும்.இந்த FORM-B தேர்தல் நடத்தும் தொகுதியின் அதிகாரிக்கு வேட்பாளரால் வழங்கப்பட வேண்டும்.இந்த FORM-Bல் தொகுதியின் பெயர்,தொகுதியின் எண்,போட்டியிடும் வேட்பாளர் பெயர், வேட்பாளரின் தந்தையின் பெயர்,அவருடைய முகவரி ஆகியவை எழுதப்பட்டு கட்சித் தலைவரின் கையெழுத்துப்போட்டு அனுப்பப்படும். 
1989-ம் ஆண்டில் இருந்து அதிமுகவில் இந்த FORM-Bல் கையெழுத்துப்போடும் நபர் ஜெயலலிதாதான். மூன்று தொகுதிகளில் நிறுத்தப்பட்டு இருக்கும் அதிமுக வேட்பாளர்களுக்கு FORM-B தரப்பட்டு இருக்கிறது.இந்த FORM-Bல் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை.அதற்குப் பதிலாக அவருடைய விரல் ரேகை பதிக்கப்பட்டு இருக்கிறது.ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் பேராசிரியர் P.பாலாஜி,இதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறார்.அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் பாபு ஆப்ரஹாம் சாட்சிக் கையெழுத்து போட்டு இருக்கிறார்.

கையொப்பம் இடப்பட்ட நபர் தற்போது கிரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் இருக்கிறார்.tracheostomy செய்து இருப்பதால்,அவ்ரது வலது கையில் கையெழுத்து இடமுடியாத நிலையில் இருக்கிறார்.ஆதலால் அவரது இடது கை கட்டைவிரலின்  பதிவினை பெற்று இருக்கிறோம் என குறிப்பிடபட்டு இருக்கிறது.


ஜெயலலிதா கையெழுத்துபோடும் நிலையில்கூட அவரது உடல்நிலை இல்லை என்பதையே இது காட்டுகிறது
FORM-Bல் இன்னார் தான் கையெழுத்துப் போடுவார் என்பதை முன்கூட்டியே தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்து இருக்க வேண்டும்.அந்த அதிகாரத்தை வேறு ஒருவருக்கு மாற்றுவதாக இருந்தால், செயற்குழுவோ அல்லது பொதுக்குழுவோ கூடி முடிவெடுத்து அந்தத் தகவலை தேர்தல் கமிஷனிடம் அளிக்க வேண்டும்.அதன் பிறகு தான் வேறு  ஒருவருக்கு FORM-Bல்  கையெழுத்துப் போடும் அதிகாரம் மாற்றித் தரப்படும்.ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்னொருவருக்கு மாற்றித் தரும் சூழ்நிலை தற்போது இல்லை. 

http://www.vikatan.com/news/tamilnadu/70838-jayalalithaa-has-only-placed-thumb-impression.art

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவின் கைவிரல் ரேகைக்கு ஒப்புதல்: தேர்தல் கமிஷன் தகவல்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தனி சின்னம் வழங்குவதற்கு அத்தாட்சி கடிதமான FORM B-யை வேட்புமனுவுடன் அளிக்க வேண்டும். இப்படி அளிக்கப்பட்ட FORM B-யில் கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய இடது கை விரல் ரேகை பதித்துFORM B அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான விவாதம் தற்போது எழுந்திருக்கும் சூழலில், டெல்லியில் இருக்கும் தலைமை தேர்தல் கமிஷனின் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டிருக்கிறார். 

jaya_22256.jpg

மருத்துவமனையில் அ.தி.மு.கவின் பொது செயலாளர் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருடைய இடது கை கட்டை விரல் ரேகை பதிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கையை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொண்டது. அரசு டாக்டரின் அத்தாட்சியோடு FORM B-யை ஏற்றுக்கொள்ளலாம் என தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ளது என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/70879-election-commission-admits-thumb-impression-of-jayalalitha.art

Link to comment
Share on other sites

முதல்வர் சுயநினைவோடு ரேகையை பதிவு செய்தார்: டாக்டர் பாலாஜி தகவல்

 
முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்.
முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு கைகளில் வலி இருப்பதால் பேனா பிடித்து கையெழுத்து போட முடியவில்லை. அதனால் அவர் பெருவிரல் ரேகையை பதிவு செய் தார். அவர் என்னிடம் நன்றாக பேசினார் என்று டாக்டர் பி.பாலாஜி தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர்கள் மற்றும் மாற்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த படிவம்-ஏ மற்றும் படிவம்-பி ஆகியவற்றில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வின் கையெழுத்து இல்லை. அவருடைய பெருவிரல் ரேகை மட்டும் பதிவு செய்யப்பட்டிருந் தது. முதல்வர் கையெழுத்து போடாமல், பெருவிரல் ரேகையை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவிடம் பெருவிரல் ரேகையை வாங்கிய சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் பி.பாலாஜி கூறியதாவது:

முதல்வரின் உடல்நிலை நன்றாக உள்ளது. எழுந்து உட் காருகிறார். நன்றாக பேசுகிறார். கை வழியாக மருந்துகள் செலுத் தப்படுவதால் கைகளில் வலி இருக்கிறது. அவரால் பேனாவைப் பிடித்து கையெழுத்துப் போட முடியவில்லை. அதனால்தான் அவர் பெருவிரல் ரேகையை வைத்தார். அவர் நன்றாக இருக்கிறார். நான் அவரிடம் பேசினேன். அவரும் என்னிடம் நன்றாக பேசினார். விரைவில் முதல்வர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார். இவ்வாறு டாக்டர் பி.பாலாஜி தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/முதல்வர்-சுயநினைவோடு-ரேகையை-பதிவு-செய்தார்-டாக்டர்-பாலாஜி-தகவல்/article9287850.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.