Jump to content

களமிறங்கப்போகும் உலகக் கிண்ண அணி


Recommended Posts

களமிறங்கப்போகும் உலகக் கிண்ண அணி

206193-daacfb81795ac369d5c7eec5e739440f59828a28.jpg

 

1996ஆம் ஆண்டு இலங்­கைக்கு உலகக் கிண்­ணத்தை வென்று தந்த அர்­ஜுன ரண­துங்க தலை­மை­யி­லான அதே இலங்கை கிரிக்கெட் அணி இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளை­யா­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்தப் போட்டி அவுஸ்­தி­ரே­லி­யாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்தப் போட்­டியில் விளை­யா­டு­வ­தற்கு அர்­ஜுன ரண­துங்க, சுழல் ஜாம்­பவான் முத்­தையா முர­ளி­தரன் மற்றும் அர­விந்த டி சில்வா ஆகியோர் இணக்கம் தெரி­வித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்தப் போட்­டியின் மூலம் சமூக தொண்­டாற்று­வ­தற்கு நிதி சேக­ரிப்­பதே முக்­கிய நோக்கம் என்றும் பழைய வீரர்­களை மீண்டும் ஒன்­றி­ணைக்கும் ஒரு போட்­டி­யா­கவும் இது அமையும் என்றும் ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

இந்தப் போட்­டிகள் அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்­போர்னில் நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

இந்தப் போட்­டியில் சனத் ஜய­சூ­ரிய மற்றும் களுவித்தாரண போன்ற அதிரடி நட்சத்திர வீரர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-27#page-12

Link to comment
Share on other sites

உலகக் கிண்ண அணி பயணமானது : நாளை அவுஸ்திரேலியாவுடன் மோதல் 

 

 

1996ஆம் ஆண்டு இலங்­கைக்கு உலகக் கிண்­ணத்தை வென்று தந்த  இலங்கை கிரிக்கெட் அணி நேற்று அவுஸ்திரேலியாவுக்கு பயணமானது.206193.4.jpg

1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியின் 20 வருட நிறைவையொட்டியும் சமூக தொண்­டு நிறுவனமொன்று நிதி சேகரிப்பதற்காகவும் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டியில் மோதிய அப்போதைய இரு அணிகளும் கண்காட்சி போட்டியில் நாளை மோத உள்ளன.14724563_10154000601063161_6187287899882

இப்போட்டி  இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டியாக அவுஸ்திரேலியாவில் நாளை நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக  சனத் ஜய­சூ­ரிய, களுவித்தாரண, அர­விந்த டி சில்வா, ரொசான் மஹாநாம, உப்புல் சந்தன, சமிந்த வாசு உள்ளிட்ட முன்னாள் நட்சத்திர வீரர்கள் அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகியுள்ளனர்.14639651_10154000601028161_4948160202027

http://www.virakesari.lk/article/12856

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.