Jump to content

தமிழில் முதல் பின்னணிப் பாடகர் என்ற பெருமை வி.ஆர்.தனம் அவர்களை சேர்ந்தது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின் முதல் பின்னணிப்பாட்டு


முதல் இரவல் குரல் என்று சொல்வது கூடுதல் பொருத்தமாயிருக்கும்.

தமிழ்த் திரைப்படத்தின் ஆரம்ப காலத்தில், சரீர அழகும் சாரீர அழகும் உடையவர்களே வெள்ளித்திரையில் முன்னணியில் மின்னினார்கள்.

அப்படியோர் புதிய வரவே கே.அஸ்வத்தம்மா

ஒரு நடிகையின் தேவைக்கு மிஞ்சிய சரீர அழகும், பாட்டுத்திறனும், கீச்சுக் குரல் தமிழ்ப்பேச்சுத் திறனுமான சாரீர அழகும் இவருக்குமிருந்தன.
”கன்னடத்துப் பைங்குயில்” என்று தாரளமாக அழைத்திருந்திருக்கலாம்...

பாகவதரின் மூன்றாவது படமான ‘சிந்தாமணியி’ல், அவருக்கு ஜோடியாக சிந்தாமணியாக நடித்து பலரைப் பைத்தியமாகியவர் இவர்.
ஒருவருடத்திற்கும் மேலாக வெற்றிவாகை சூடிக்கொண்டு ஓடிய சிந்தாமணியின் புகழ் வெளிச்சத்தோடு கே.அஸ்வத்தம்மா நடித்த இரண்டாவது படம் 39ல் வெளியான “சாந்த சக்குபாய்”

“சாந்த சக்குபாயி’ன் படப்பிடிப்பு முக்கால் பகுதி முடிவடைந்த நிலையில், அதற்கு முந்திய ஏழு வருடங்களாக கண்டிராத புதிய பிரச்சனை ஒன்று தமிழ் பேசத்தொடங்கியிருந்த திரையுலகிற்கு தோன்றியது.

திடீரென அஸ்வத்தம்மா உடல் நலம் குன்றினார்; படுத்த படுக்கையானார். மீண்டும் இவரால் எழுந்திருக்க முடியாதென்பதைத் தெரிந்துகொண்ட தயாரிப்பாளரும், இயக்குனரும் தவித்துப் போனார்கள்.

சாந்த சக்குபாயை என்ன செய்வது? அப்படியே கைவிட்டு விடுவதா? முதல் போட்ட தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஸ்டமாகும்?

இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்ணிக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது.
வலைவிரித்தார்கள்.
அஸ்வத்தம்மாவின் உயரம், அகலம், உருவம்கொண்ட ஒருபெண்மணி சிக்கினார். அவரை அழைத்துவந்து, க்ளோஸப் காட்சிகளைத் தவிர்த்து, தூர இருந்தே படம்பிடித்துவந்து சாந்த சக்குபாயை நிரப்பிவிட்டார்கள்.

இதேபோலவே அஸ்வத்தம்மாவின் குரலோடு ஒத்திருந்த வி.ஆர்.தனம் என்ற ஒருவரைப் பாடவும் பேசவும் வைத்தார்கள்.

காட்சியும் கானமும் ஒரே நேரத்தில் கமிராவில் பதிவு செய்யப்பட்ட காலமது.

இதிலிருந்தே, ஒருவருக்காக இன்னொருவர் இரவல் குரல் தரும் புதிய யுக்தி, அதாவது பின்னணி ஒலிப்பதிவு முறை தமிழில் அறிமுகமாகியது.

தமிழில் முதல் பின்னணிப் பாடகர் என்ற பெருமை வி.ஆர்.தனம் அவர்களை சேர்ந்தது.

சாந்த சக்குபாயில் டி.எஸ்.கிருஸ்ணவேணி என்ற நடிகைக்கும் வி.ஆர்.தனம் அவர்களின் குரலை இரவல் வாங்கியிருந்தார்கள்.

முதல் இருமொழி நட்சத்திரம் என்னும் பெருமையுடன் அஸ்வத்தம்மா 1944ல் காசநோயால் காலமானார்.


 மதனன் மலரம்பால் எய்தனன் என்மேலே
படம்: சாந்த சக்குபாய் 1939
பாடல் வரிகள்: பாபநாசம்சிவன்
இசை: பாபநாசம்சிவன்+ராஜகோபால சர்மா
பாடியவர்: வி.ஆர்.தனம்



அநாமிகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி அன்புத்தம்பி ....! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.