Jump to content

ஓ.பி.எஸ்ஸை ஆட்டிப் படைக்கிறாரா வைத்தி?! -அமைச்சர் பங்களாவைவிட்டு நகராத பின்னணி


Recommended Posts

ஓ.பி.எஸ்ஸை ஆட்டிப் படைக்கிறாரா வைத்தி?!  -அமைச்சர் பங்களாவைவிட்டு நகராத பின்னணி 

vaithilingam-jayalong_12425.jpg

முதல்வரின் அதிகாரங்கள் அனைத்தும் ஓ.பி.எஸ் வசம் இருந்தாலும், அமைச்சர்களுக்குள் நிலவும் கோஷ்டி அரசியல் உச்சகட்டத்தில் இருக்கிறது. ' டெல்லிக்குச் செல்வதைவிடவும், அமைச்சர் பங்களாவில் அமர்ந்து கொண்டு ஆட்டிப் படைக்கிறார் வைத்திலிங்கம்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா 36 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நல்ல உடல்நலத்துடன் திரும்பி வரும் வகையில் அவருடைய அதிகாரங்களை ஓ.பன்னீர்செல்வம் வசம் ஒப்படைத்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். இதையடுத்து, முதல்வரின் துறைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். " தலைமைச் செயலகப் பணிகளில் என்ன சொல்லப்படுகிறதோ, அதை மட்டுமே செய்கிறார் ஓ.பி.எஸ். மீண்டும் சசிகலாவின் குட்புக்கில் இடம்பெறுவதற்குக் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அப்போலோ மருத்துவமனையில் காலையிலும் மாலையிலும் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் ஓ.பி.எஸ். முன்பைவிட கூடுதல் பணிவைக் காட்டி வருகிறார். கட்சிக்காரர்கள் தொடர்பு கொண்டு பேசினாலும், சசிகலாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றுவிடுகிறார். கடந்தவாரத்தில்கூட, ' அம்மா வைத்திலிங்கம் என்னைச் சந்திக்க வருவதாகச் சொல்கிறார். பார்க்கலாமா?' என்று கேட்கும் அளவுக்கு, பழைய பணிவுக்குத் திரும்ப முயற்சிக்கிறார் ஓ.பி.எஸ். அதேவேளையில், கட்சிக்குள் முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான வைத்திலிங்கத்தின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது" என விவரித்தார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். தொடர்ந்து நம்மிடம், 

ops%20ele1_12430.jpg" மன்னார்குடியின் முழு ஆசீர்வாதம் இருப்பதால், ஆட்சி அதிகாரத்தில் நடைபெறும் விஷயங்களை தீவிரமாக கவனித்து வருகிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார் வைத்திலிங்கம். அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட கிரீன்வேஸ் சாலை பங்களாவில்தான் இன்றும் குடியிருக்கிறார். அந்த வீட்டைக் காலி செய்ய அவர் விரும்பவில்லை. அதிகாரிகள் சென்று கேட்டாலும்கூட, 'எல்லாம் எனக்குத் தெரியும். போய் வேலையைப் பாருங்க' எனத் திருப்பி அனுப்பிவிடுகிறார். இதனால், அங்கு குடியிருக்க வேண்டிய வீட்டுவசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அரும்பாக்கத்தில் மாத வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 'தனக்கு அரசு பங்களா இன்னமும் வழங்கப்படவில்லை' என அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சொல்லியிருக்கிறார். அவரும், 'அமைதியாக இருங்கள்' எனச் சொல்லிவிட்டார். அரசு பங்களாவில் குடியிருக்காத அமைச்சராக வலம் வருகிறார் உடுமலை ராதாகிருஷ்ணன். வைத்திலிங்கத்தை நெருங்கவே அதிகாரிகள் பயப்படுகின்றனர். கோட்டைக்குள் நடக்கும் அனைத்து விஷயங்களும் உடனுக்குடன் வைத்தியின் கவனத்துக்கு வந்துவிடுகிறது. 

அவர் மீது மன்னார்குடி உறவுகளுக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. ' தான் இன்னும் அமைச்சர்தான்' என்ற நினைப்பிலேயே வலம் வருகிறார். இதனால், சக அமைச்சர்களே வைத்தியைக் கண்டால் அலறுகிறார்கள். தஞ்சை இடைத்தேர்தலில் சீட் வாங்கிவிட்டு, மீண்டும் அமைச்சராக வேண்டும் என்றுதான் நினைத்தார். ஆனால், ஏற்கெனவே அறிவித்த வேட்பாளர்களை போட்டியிடுமாறு தலைமை அறிவித்துவிட்டது. தற்போது இடைத்தேர்தல் பணிக்கான தஞ்சை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தேர்தல் பணிகளைக் கவனிப்பதைவிடவும், கோட்டை விவகாரத்தில் ஆதிக்கம் செலுத்துவதையே அவர் விரும்புகிறார். ' சின்னம்மா குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெறுவதற்குப் போராடிக் கொண்டிருக்கிறார். கடந்த ஆட்சிகாலத்தில் நடந்த சில விஷயங்களுக்குப் பின்னால் வைத்தி இருக்கிறார் என்பதால், அவரை ஒதுக்கியே வைத்துள்ளனர் சசிகலா தரப்பினர். ஓ.பி.எஸ்ஸின் செயல்பாடுகளையும் கவனித்து வருகிறார்" என்கிறார். 

"கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உதவி செய்வதில் வைத்திலிங்கம் போல் ஒருவரைப் பார்க்க முடியாது. அவரிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவிட்டுத்தான் அனுப்புவார். இதை மற்ற அமைச்சர்களிடம் எதிர்பார்க்க முடியாது. தற்போது கட்சிக்குள் இறுக்கமான ஒரு சூழல் நிலவுகிறது. இந்த நேரத்தில் கட்சிக்குள் தீவிரமாக வலம் வருகிறார் வைத்தி. முதல்வர் கார்டனுக்குத் திரும்பிய விறகு, அவர் டெல்லி பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிடுவார்" என்கிறார் தஞ்சை மாவட்ட அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

http://www.vikatan.com/news/tamilnadu/70675-is-vaidyalingam-controlling-panneerselvam.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.