Jump to content

மீன்களில் எது ருசியானது... தெரிஞ்சுக்கலாமா?


Recommended Posts

மீன்களில் எது ருசியானது... தெரிஞ்சுக்கலாமா?

fish_18232.jpg

 

கடல் மீன்களில் புரோட்டீன், கோலின், அயோடின் போன்ற சத்துக்கள் அதிகமா இருக்கு. இவையெல்லாம் இருக்கிறதுனு தெரியாமலே நாம் மீன்கள் மீது ஆசைவைக்கக் காரணம், அதன் சுவையே. மார்க்கெட்ல காய்கறி வாங்கப் போனா, வெண்டைக்காயை ஒடிச்சிப் பார்க்கிறதும்,  தண்ணீர் ஆடுதானு தேங்காய ஆட்டிப்பார்க்கிறதும் பலருக்கு வழக்கம். அதேபோல  மீன் வாங்கும்போது... அது நல்ல மீனா, கெட்ட மீனானு எப்படித் தெரிஞ்சுக்கிறது? பல தடவை நல்ல மீன்னு நினைச்சு  வாங்கிட்டு வந்து, வயிற்றுக்கும் ஒத்துக்காம, வாய்க்கும் நல்லா இல்லாமப்போய்... வீட்டுல திட்டு வாங்கி... வாங்கி பல பேருக்கு மீன் குழம்பே பிடிக்காமப் போயிருக்கும். எப்படி நல்ல மீன் வாங்குறதுனு  தெரிஞ்சிக்க,

கடல் மீன்களைப் பற்றி நிறையத் தெரிஞ்சு வெச்சிருக்கிற மீனவர், புது கல்பாக்கம் எஸ்.நாகராஜனை சந்திச்சுக் கேட்டு வந்தோம். அவர் தந்த யோசனைகள் இதோ...

1. மீன், பார்க்கும்போது புதுசா, ப்ரெஷ்ஷா இருந்தா நல்ல மீன்.

2. மீனின் செவுளைத் திறந்து பார்த்தா, செந்நிறமா  இருக்கணும். சாம்பல் நிறமா இருந்தா, அது கெட்டுப்போன மீன்.

3. உங்களுக்குப் பிடிச்ச மீனாக இருந்து, அதை வாங்கியே ஆகணும்னு நீங்க நினைக்கும்போது, அதில் எங்காவது அடிபட்டிருந்தா,  வேண்டாம் விட்டுருங்க.

4. மீனின் கண்கள் மங்கலா இல்லாம, தெளிவா இருக்கணும்.

5. ஐஸ் அதிகம் சேர்ந்த மீன் ஆகாது. ஐஸ் அதிகம் சேர்ந்திருந்தா, மீனின் மேல் விரலால் கோடு போட்டா தெரிஞ்சுடும்.

Barramundi_3_18080.jpg

 

6. நீங்கள் வாங்கும் மீன் கெட்டுப்போனதா இருந்தா, அது ஃபுட் பாய்ஸன் ஆகும்.

7. செதில் அதிகமா இருக்கிற மீனும், உள்ளே முள் அதிகமா இருக்கிற மீனும் ருசியா இருக்கும். ஆனா, குழந்தைகள் சாப்பிட முடியாது.

8. மீனைத் தொட்டுப் பார்க்கும்போது, நொள நொளனு இருக்கக் கூடாது.

9. நண்டை  கையில் எடுத்துப்பார்க்கும்போது வெயிட்டா இருக்கணும்.

10. பூச்சியைப் போல சிவப்பு நிறத்துல இருக்கிற இறாலை வாங்காம, ஃப்ரெஷ்ஷா, தெளிவா இருக்கிறதை வாங்குறது நல்லது.

கடல் உணவுகளில் சுவையான எது எனத் தெரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவைப் பாருங்க...

 

 

 

இப்படியெல்லாம் நீங்க சரிபார்க்க மார்க்கெட்ல அவகாசம் கிடைக்குமா... மீனைத் தொட்டுப்பார்க்க அனுமதிப்பாங்களா? அது, உங்கள் சாமர்த்தியம்!

உங்க வீட்டிலும் இனிமே சூப்பர் மீன்குழம்புதான்னு சொல்லுங்க.

http://www.vikatan.com/news/health/70632-which-is-the-most-tasty-fish.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியெல்லாம் நீங்க சரிபார்க்க மார்க்கெட்ல அவகாசம் கிடைக்குமா... மீனைத் தொட்டுப்பார்க்க அனுமதிப்பாங்களா? அது, உங்கள் சாமர்த்தியம்!

அதெல்லாம் தொட்டுப் பார்க்கலாம் மீனை , என்ன ஹெட் போனை காதை விட்டு கழட்டக்கூடாது .....!  tw_blush:

Link to comment
Share on other sites

மீன் விற்கின்ற பெண்ணைத்தான் தொட்டுப் பார்க்க கூடாது; மீனை தொட்டுப் பார்க்கலாம் .

செதில் இருக்கின்ற மீன் மட்டும் அல்ல, செதில் இல்லாத சுவாப் பாரை, தலபத்து போன்றவையும் சுவைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

மீன் விற்கின்ற பெண்ணைத்தான் தொட்டுப் பார்க்க கூடாது; மீனை தொட்டுப் பார்க்கலாம் .

செதில் இருக்கின்ற மீன் மட்டும் அல்ல, செதில் இல்லாத சுவாப் பாரை, தலபத்து போன்றவையும் சுவைதான்

ஏன் விக்கிற பெண்ணைத் தொடக்கூடாதெண்டு யார் சொன்னது உங்களுக்கு ???

 

அறக்குளா, விளைமீன் குழம்புகள் உருசிதானே.பாலை மீன் நன்றாக இருக்கும் எண்டு கடைக்காரர் சொன்னதைக் கேட்டு வாங்கிக் குழம்பு வச்சா வாய் எல்லாம் தடிச்கிப் போச்சு எல்லாருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் விக்கிற பெண்ணைத் தொடக்கூடாதெண்டு யார் சொன்னது உங்களுக்கு ???

 

அப்படிப் போடுங்க அரிவாளை! :107_hand_splayed:

நிழலி...

உங்களுக்கு செதில்லில்லாத மீன் சரிவராதே... :224_monkey:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் விக்கிற பெண்ணைத் தொடக்கூடாதெண்டு யார் சொன்னது உங்களுக்கு ???

நிழலியானந்தா  

தொட மட்டுமல்ல

புரட்டியும் பார்க்கலாமாம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன்களைப்பற்றி பேசும்போதும் மீன் விற்கும் பெண்களை ஏன் பேசுறீங்கள்tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீரி மீனைப் பொரித்துக் குழம்பு வைத்தால் அதற்கு எந்த மீனும் ஈடாகாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

கீரி மீனைப் பொரித்துக் குழம்பு வைத்தால் அதற்கு எந்த மீனும் ஈடாகாது

கீரி மீன் என்றால் சூடை  மீனா ???

Link to comment
Share on other sites

சீலா மீன் tw_blush:

Link to comment
Share on other sites

7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கீரி மீன் என்றால் சூடை  மீனா ???

கீரி மீன் - Round Fish

சூடை இல்லை

000 0009

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for Round Fish

 

Image result for Round Fish

இதுவா

 

 

 

ஒருக்காப் படம் போடுங்கோ

 

Link to comment
Share on other sites

கீரி மீன் சூடை மீன் மாதிரி இருக்கும், ஆனால் கொஞ்சம் குண்டாக / உருளையாக சூடையின் மூத்த அண்ணன் போன்று இருக்கும். நிறைய முள்ளு இருப்பதால் பொரிக்காமல் சாப்பிடுவது கடினம். நல்ல ருசியான மீன். சிங்களப் பகுதிகளில் ஹுருளோ என்ற பெயரில் விற்பார்கள். இந்தியாவில் மத்தி இதைச் சொல்வார்கள் என்று நினைக்கின்றேன்
 

Link to comment
Share on other sites

30 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

இதுவா

ஒருக்காப் படம் போடுங்கோ

 

மீனவர் வலையில் சிக்கயது அதிகளவு கீரி மீன்கள் !

 கரையோரப் பிரதேசங்களான மாளிகைக்காடு காரைதீவு, நிந்தவூர், , சாய்ந்தமருதுகல்முனை ஆகியபிரதேசங்களில் அண்மைக் காலங்களாக அதிகமீன்கள் கரைவலைகளில் பிடிபட்டு வருகின்றன.

 
காரைதீவு பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (13)மிகக் கூடுதலான கீரி மீன்கள் கரை வலைகளில் பிடிபட்டது

ஒரு கிலோகீரிமீன்நூறுரூபாவுக்குவிற்கப்பட்டதுஎன்றும்பிரதேசமீனவர்கள்தெரிவித்தனர்.

 
சுமார் ரூபா 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட மீன்கள் இன்று பிடிக்கப்பட்டதாகவும்இதன் மூலம் மீனவர்களினதும் மீன் வியாபாரிகளினதும் வருமானம்அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
பிடிக்கப்பட்ட மீன்களில் அதிகமானவை குளிரூட்டப்பட்ட பெட்டிகளில்அடைக்கப்பட்டதோடு கருவாடுகளுக்காக பீப்பாய்களில் அடைக்கப்பட்டும்,இலங்கையின் ஏனைய பிரதேசங்களுக்கு வியாபாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டவையும் குறிப்பிடத்தக்கது. 

 

 

keeet 1

keeet 1

keeet 1

kket 1

http://www.karaitivu.org/index.php/what-s-new/news-from-karaitivu/5513-2015-09-13-16-10-51

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி சொன்னதுபோல பொரிச்சுக் கறி வச்சுச் சாப்பிட்டுப்போட்டு சொல்லுறன்.

5 hours ago, விசுகு said:

நிழலியானந்தா  

தொட மட்டுமல்ல

புரட்டியும் பார்க்கலாமாம்.....

நான் கேட்ட கேள்வி உங்களுக்கு விளங்கேல்லை அண்ணா. நிழலியானந்தாவுக்கு அடி விழுந்தால் நீங்கள் தான் பொறுப்பு.

Link to comment
Share on other sites

3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ரதி சொன்னதுபோல பொரிச்சுக் கறி வச்சுச் சாப்பிட்டுப்போட்டு சொல்லுறன்.

படத்தையும் போடுங்கோ.. :)

ஆனால் இங்க வந்து எங்களை ஏசபடாது.. குழம்பு சரிவரா விட்டால்..:rolleyes:

Link to comment
Share on other sites

10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ரதி சொன்னதுபோல பொரிச்சுக் கறி வச்சுச் சாப்பிட்டுப்போட்டு சொல்லுறன்.

 

உங்கள் மனுசன் கொஞ்சம் தண்ணி பாவிப்பவராக இருந்தால், அடுத்த முறை பாவிக்கும் போது உந்த மீனில் நாலைப் பைட்ஸ் ஆக பொரிச்சுக் கொடுங்கோ.... அதோட ஆளுக்கு  நீங்கள் அவர் சொல்லக் கேட்காமல் பிளானை மாற்றி கொன்சேவேற்றி கட்டிய கோபம் இருந்த இடம் தெரியாமல்  பறந்து விடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கீரி மீன் என்றால் சூடை  மீனா ???

இணுவில் காரரோட பெரிய பிரச்சனையாய்ப் போச்சு!

நாங்கள் எப்பவாவது கேட்டிருக்கிறமா? வேதாளம் எண்டால் வெங்காயமா எண்டு...!

இரண்டு ரூபாய்க்கு மீன் வாங்கினால்...உங்களுக்குப் பெட்டிக்காரன் ஒரு என்வலப்பில போட்டுத் தருவான்!

உங்களுக்கெப்படிக் கீரி மீனின்ர அருமையும், சுவையும் தெரியும்!:cool: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

கீரி மீனைப் பொரித்துக் குழம்பு வைத்தால் அதற்கு எந்த மீனும் ஈடாகாது

கீரிமீன் சரியான கிரந்தி.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொய் மீனும் நல்ல ருசி.சரியான முள்ளு.அதனால் அனேகமானோர் பொரித்து சாப்பிடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

கொய் மீனும் நல்ல ருசி.சரியான முள்ளு.அதனால் அனேகமானோர் பொரித்து சாப்பிடுவார்கள்.

வாளை மீனும்...அருமையான மீன்!

சேம் பிரச்சனை தான்... முள்ளு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

கீரிமீன் சரியான கிரந்தி.....

 

8 hours ago, ஈழப்பிரியன் said:

கொய் மீனும் நல்ல ருசி.சரியான முள்ளு.அதனால் அனேகமானோர் பொரித்து சாப்பிடுவார்கள்.

 

8 hours ago, புங்கையூரன் said:

வாளை மீனும்...அருமையான மீன்!

சேம் பிரச்சனை தான்... முள்ளு!

பொதுவாக சுவையானது எதுவும் விரைவாக கெட்டு விடும்... இது இயற்கையின் நியதி..., மீனும் விதிவிலக்கல்ல...!!

மீன் கொஞ்சம் நாறுற மாதிரித் தெரிந்தால், எறியவா முடியும். உடனே அம்மாமார் பொரித்துக் குழம்பு வைத்து விட்டு அப்லாஸ் அள்ளிக் கொண்டு போவினம். அது அவர்களின் சாதுர்யம். அப்படியே கறி வைத்தால் ஜிம்மியும் மோந்து பார்க்காது. விவஸ்தை கெட்ட பூனை மட்டும் அதை காதலுடன் கண்ணோக்கும். ( பூனை, புலி , முதலை யாவும் இரையை நாற வைத்து உண்பதில் விருப்பமுள்ளவை.).  tw_blush:

சகோதரி சுமெக்கு, நீங்கள் பொரித்துக் குழம்பு வைத்தும் அத்தான் வெறுத்தோடினால், அடுத்த தடவை நல்ல நாறல் மீனாக வாங்கி வந்து ஆக்கிக் கொடுத்து அப்லாஸ் அள்ளவும்...! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவையை விட சத்து தான் முக்கியம். சில வகை பெரிய மீன்களில் கெட்ட கொழுப்பு அதிகம். சிறிய மீன்களில் நல்ல கொழுப்பு உள்ளது. சமன்.. கோட் போன்ற மீன்களில் நல்ல கொழுப்பும்.. விற்றமின் டியும் உள்ளன. சுவை சமைப்பதை பொறுத்து மாறுபடும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

( பூனை, புலி , முதலை யாவும் இரையை நாற வைத்து உண்பதில் விருப்பமுள்ளவை.).

நாமளும் நாறிக்காய்ஞ்சதைதான் கருவாடு என்று பெருமையாக சொல்கிறோம் இல்லையா? :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.