Jump to content

கவனமாக அணுகப்பட வேண்டிய மாணவர்களின் மரண விவகாரம்


Recommended Posts

கவனமாக அணுகப்பட வேண்டிய மாணவர்களின் மரண விவகாரம்
 
 

 

article_1477542953-ccx.jpgகனகலிங்கம் கோபிகிருஷ்ணா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் விளைவாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்டதைப் போன்ற - அல்லது அதைவிட அதிகமான - எழுச்சியொன்று, யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி, வடக்கில் ஏற்பட்டுள்ளது.  

படையினர் அல்லது பொலிஸார் சார்ந்த குற்றங்கள் அல்லது சம்பவங்களின் போது, வடக்கில் எழுச்சிகள் ஏற்படுவதொன்றும் புதிதன்று. 2005ஆம் ஆண்டில், படையினரின் வாகனங்களில் பொதுமக்கள் சிக்கும் போதும் காயப்படும் போதும், படையினருக்கெதிரான எழுச்சி ஏற்படுவதும் ஹர்த்தால் நடத்தப்படுவதும் வழக்கமானது. சில தருணங்களில், படையினரின் முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டமையும் அதற்குப் பதில் தாக்குதலை, கண்ணீர்ப்புகை வடிவிலோ அல்லது எச்சரிக்கை வடிவிலோ படையினர் வழங்கியிருந்தனர்.  

ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சியென்பது வித்தியாசமானது. போர் முடிவடைந்த பின்னர் இடம்பெறும் எழுச்சியென்பது ஒரு விடயமென்றால், தமிழ் மக்கள் மீது ஓரளவுக்கு மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாகச் சொல்லப்படும் ஐ.தே.க - ஸ்ரீ.ல.சு.க இணைந்த தேசிய அரசாங்கத்தின் கீழ் இடம்பெறுவது, குறிப்பிடத்தக்களவு பெரிய எழுச்சியாகும் என்பது அடுத்த முக்கியமான விடயம்.  

இந்த விபத்துத் தொடர்பாக பொலிஸாரால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட தகவலின்படி, இது வெறுமனே விபத்து எனவே தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் வெடிச் சம்பவங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகத் தொடங்கியதுடன், மாணவர்களின் மரணம் தொடர்பாகச் சந்தேகம் எழுப்பப்படத் தொடங்கவே, அச்சம்பவம் இடம்பெற்று சுமார் 18 மணித்தியாலங்களின் பின்னரேயே, துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாக, பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது. ஆகவே, இந்தச் சம்பவத்தை மறைக்க முயன்றார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது. அவ்வாறானால், இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் வருவது வழக்கமானதல்லவா?  

பொலிஸார் தெரிவிப்பதன்படி, மாணவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தார்களா அல்லது பொலிஸாரால் மறிக்கப்படும் போது, அந்தக் கட்டளையை மீறி அவர்கள் சென்றார்களா என்பது, இதில் முக்கியமான ஒன்றன்று. மதுபோதையில் செல்பவர்கள் மீது, துப்பாக்கியால் சுடுவதற்கான அதிகாரம், பொலிஸாருக்குக் கிடையாது. குறைந்தபட்ச பலத்தைப் பிரயோகித்தல் என்பது, சட்டத்தை அமுல்படுத்தும் பொலிஸாருக்கு உண்டு. அதன்படி, ஏனையவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத சந்தர்ப்பங்களில், தங்களது அதிகாரத்தில் அல்லது பலத்தில், குறைந்தபட்சத்தையே அவர்களால் பயன்படுத்த முடியும். இதே விடயத்தை, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே, மாணவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அவர்கள் மதுபோதையில் இருந்தார்களா என்பதை முக்கியப்படுத்துவது, அவர்களின் படுகொலைகளுக்கு முக்கியமற்ற ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  

யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகின்ற போதைப்பொருள் வர்த்தகத்தையும் வாள்வெட்டுச் சம்பவங்களையும் கட்டுப்படுத்துவதற்காக, விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்ட பின்னணியிலும் இதை ஆராய வேண்டியிருக்கிறது. போதைப்பொருள் நடவடிக்கைகளைத் தடுக்கவும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது அவசியமானது. ஆனால், யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை ஒழிப்பதற்கு, அதை உட்கொள்பவர்களையும் அவற்றின் சில்லறை வியாபாரத்தில் ஈடுபடுபவர்களையும் தேடிப்பிடித்து நடவடிக்கை எடுப்பதென்பது, எவ்வளவு தூரத்துக்குப் பயன்தரக்கூடியது? மூன்று பக்கங்கள் கடலால் சூழப்பட்ட யாழ்ப்பாணத்துக்குள், போதைப்பொருட்கள் எவ்வாறு வருகின்றன, அவற்றின் மொத்த விற்பனையில் ஈடுபடுவது யார் போன்ற விவரங்கள், இன்னமும் கண்டுபிடிக்கப்படாமைக்குக் காரணம் என்ன? யாழ்ப்பாணத்துக்கான இவற்றின் வருகையின் பின்னால், பலமிக்க அரசியல்வாதிகளோ அல்லது வணிகர்களோ அல்லது அரச இயந்திரமோ காணப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பாரிய ஆயுத இயக்கத்தைத் தோற்கடித்த இலங்கையின் புலனாய்வுப் பிரிவால், போதைப்பொருள் எவ்வாறு வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமலிருக்கிறது என்பது, நம்பக்கூடிய ஒன்றாக இல்லை. ஒன்றில், அவ்விடயத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை, இல்லையெனில், போதைப்பொருள் கடத்துபவர்களின் அடையாளம் தெரிந்த பின்னரும், அது தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்று தான் கருத வேண்டியிருக்கிறது.    

இந்த இரு மாணவர்களின் மரணங்களைத் தொடர்ந்து, சுன்னாகம் பகுதியில் தேசிய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தையும், கவனத்துடனேயே பார்க்க வேண்டியிருக்கிறது. ஆவா குழு என்ற பெயரில், யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுகளில் ஒரு குழு ஈடுபடுவதாக, சில ஆண்டுகளாகவே செய்திகள் காணப்படுகின்றன. அவ்வப்போது, “ஆவா குழுவினர் கைது” என்று, பொலிஸார் தெரிவிக்கும் செய்திகளும் பிரசுரமாகியே வருகின்றன. அவற்றை விட, “ஆவா குழுவுக்கு உணவு கொடுத்த பெண் கைது” என்றெல்லாம் கூட, செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆக, இதுவரை கைதானவர்கள் என்னவானார்கள்? கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று, ஏனையோரும் கைது செய்யப்படவில்லையா? இந்தக் குழுவை அழித்தொழிப்பதற்கு, இதுவரை முடியாமலிருப்பதற்கான காரணங்கள் என்ன? இந்தக் குழுவினரை இராணுவத்தினர் உருவாக்கினரா என்ற கேள்விக்கு, நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில், “இல்லை” என நேரடியாகப் பதிலளிக்காமல், அதற்குப் பதிலேயளிக்கப் போவதில்லை என அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தமை ஏன் போன்ற கேள்விகள் எழுகின்றன.

இந்தக் குழுவின் பெயரில் தான், சுன்னாகத்தில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டை, தாமே மேற்கொண்டதாக உரிமை கோருவதாகத் தெரிவிக்கும் சுவரொட்டியொன்று ஒட்டப்பட்டது. மாணவர்களின் படுகொலைக்குப் பழிவாங்கும் முகமாகவே, இந்த வாள்வெட்டு இடம்பெற்றதாக, அச்சுவரொட்டி தெரிவித்தது. ஆனால், அச்சம்பவம் இடம்பெற்ற போது அங்கிருந்தவர்களின் கருத்துப்படி, அவர்கள் இருவரும் சிவில் உடையிலேயே காணப்பட்டதாகவும், அக்கடையைக் கொள்ளையிடுவதற்காக வந்தவர்களே, வாள்வெட்டை நடத்தியதாகவும் அறிவிக்கப்பட்டது. அதை, அரசாங்கத் தகவல் திணைக்களமும் உறுதிப்படுத்தியது . ஆனால், “ஆவா குழு உரிமை கோரியது” என்ற செய்தி, தென்னிலங்கையில், முக்கியப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. அடிப்படையான தர்க்க முரண்பாடுகளைக் கொண்ட “இச்செய்தி”,
முக்கியத்துவப்படுத்தப்பட்டமைக்கான காரணம் என்ன?  

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், ஆயுதமேந்திய தரப்பினரை, தொடர்ந்தும் வைத்திருப்பதை நியாயப்படுத்துவதற்காக, போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு என்ற செய்தியும் இந்த இரு மரணங்களும் அவற்றைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள எழுச்சியும் பயன்படுத்தப்படுகிறது போன்ற எண்ணமே ஏற்படுகிறது.  

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளிலிருந்து, இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுமென்பது, போர் முடிந்த காலம் தொடக்கம், தமிழ் மக்களிடத்தில் காணப்படும் பிரதான கோரிக்கைகளுள் ஒன்றாகும். முன்னைய அரசாங்கம், அவ்விடயத்தில் தெளிவாக “இல்லை” என்பதைப் பதிலாக வழங்கி வந்தாலும், தேசிய அரசாங்கத்தில், இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்தலென்பதற்கு, தெளிவான பதில்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. இவ்வரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் கதைக்கும் போது, இராணுவப் பிரசன்னம் குறைக்கப்படும் வாய்ப்புகள் இருப்பது போன்று தோன்றும்; சில நாட்களின் பின்னர் மற்றையவரின் கருத்து, அதற்கு எதிரானதாக இருக்கும்.  

ஆனால், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்கள் பொலிஸார் தான், இராணுவத்தினர் அல்லர் என்ற விவாதம் முன்வைக்கப்படலாம். ஆனால், ஆயுதமேந்திய பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில், எந்தவித வித்தியாசத்தையும் தமிழ் மக்கள் காணவில்லை என்பது தான் யதார்த்தமானது. அதேபோல், மாணவர்களைச் சுட்டவர்களில் தமிழ்ப் பொலிஸாரும் காணப்படுகின்றனர், ஆகவே, வழக்கமான இனப்பாகுபாட்டுக் குற்றச்சாட்டைச் சுமத்த முடியாது என்றும் கூறப்படலாம். ஆனால், பெரும்பான்மையாக சிங்கள இனத்தவர்களைக் கொண்ட பொலிஸ் துறையில், முக்கியமான பதவிகளில் எல்லாம் அவ்வினத்தவர்களே காணப்படும் நிலையில், அங்கு காணப்படும் கீழ்நிலை அதிகாரிகளில் சிலர் தமிழர்களாக இருப்பதால் மாத்திரம், எதுவும் நடந்துவிடாது. மாறாக, தங்களுக்கு வழங்கப்பட்ட கடமைகளை ஆற்றுவதற்கு அவர்கள் முயல்வர். தங்களது உயரதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பதற்காக, அதிகாரங்களை உச்ச அளவில் பயன்படுத்தவே அவர்கள் முயல்வர். ஆகவே தான், பொலிஸ் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் வரை, சில நூறு தமிழர்களை கீழ்நிலை அதிகாரிகளாக இணைத்துக் கொள்வதால் மாத்திரம், பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை.  

இந்த மாணவர்களின் மரணம், யாழ்ப்பாணத்திலும் வடக்கிலும் காணப்படும் பாரிய நோயொன்றின் குணங்குறி மாத்திரமே. குணங்குறிக்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுவது அவசியமானது, ஆனால் அதை, காணப்படும் பாரிய நோயைக் குணப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தான் தேவையாக இருக்கிறது.    

http://www.tamilmirror.lk/184847/-கவனம-க-அண-கப-பட-வ-ண-ட-ய-ம-ணவர-கள-ன-மரண-வ-வக-ரம-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.