Jump to content

பெருந்துயரில் பங்கேற்கிறோம்! படுகொலைக்கு வன்மையான கண்டனம்! போராட்டங்களுக்கு ஆதரவு!!


Recommended Posts

 

பெருந்துயரில் பங்கேற்கிறோம்! படுகொலைக்கு வன்மையான கண்டனம்! போராட்டங்களுக்கு ஆதரவு!!

03யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டமை குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இக் கொலைகளைக் கண்டித்து நடாத்தப்படும் அரசியல் ரீதியான போராட்டங்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோழமையுணர்வுடன் கூடிய ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த வியாழக்கிழமை இரவு (20.10.2016) யாழ்ப்பாணம் குளப்பிட்டிச்சந்திப் பகுதியில் சிறிலங்கா காவல் துறையினரது துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்ட இளம் தமிழ் உறவுகளான கந்தரோடையைச் சேர்ந்த சுகந்தராஜா சுலக்ஷன், கிளிநொச்சியைச் சேர்ந்த நடராஜா கஜன் ஆகிய இருவரதும் பிரிவுத்துயரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் பங்கெடுத்துக் கொள்கிறது.

அளப்பரிய இந்த இழப்பினால் பெருந்துயரில் மூழ்கியிருக்கும் அவர்களது பெற்றோர் உறவினருக்கும் மற்றும் சக மாணவர் சமூகத்தினருக்கும் ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப் பீடத்தில் தத்தமது படிப்பின் இறுதிக் கட்டத்தை அணுகி விட்ட இவ்விரு மாணவர்களும் எமது இனத்தின் நம்பிக்கைக்குக் பொறுப்பானவர்களாகவும், முன்னோடிகளாகவும் திகழ்ந்தனர் என்னும் செய்தியும், எவ்வித விளக்கமோ காரணமோ கொடுக்கமுடியாத வகையில் இவர்களது உயிர்கள் காவல் துறையினரது நேரடி வன்முறை மூலம் தான் பறிக்கப்பட்டுள்ளது என்பதும் எம்மெல்லோரையும் பெரிதும் வாட்டுகிறது.

சிங்கள அரசின் அங்கமாக இயங்கும் காவல்துறையினர்மீது தமிழ் மக்கள் எவ்வித நம்பிக்கையினையும் வைக்க முடியாது என்பதனை இச் சம்பவம் எடுத்துக் காட்டுவதுடன், தமிழ் மக்களின் பாதுகாப்பு தமிழ் மக்களாலேயே தீர்மானிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி நிற்கிறது.

நல்லாட்சி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் எமது மண்ணெங்கும் பரவி நிற்கும் படையினரும், காவல் துறையினரும் எவ்வகை மனப்பாங்குடன் யாருடைய ஆணைகளின் கீழ் இயங்குகிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாக்கப்படும் இந்நேரத்தில் மாணவர் சமூகமும் அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்பட்டு இவ்விளம் உயிர்களின் கொலைக்குக் காரணமானவர்களை நீதியின்கீழ் கொண்டுவர ஆவன செய்ய வேண்டும்.

அதேவேளை நேரடியாக இக் கொலைகளுடன் தொடர்பு பட்டவர்கள் மட்டும் இதற்குக் காரணமாக இருந்தார்கள் என நாம் பிரச்சினையினை சுருக்கி விடவும் முடியாது. தமிழ் மக்களின் தாயகப் பூமியின் மீதான சிறிலங்கா அரசின் ஆயுதம் தாங்கிய ஆக்கிரமிப்பின் ஒரு விளைவாகவும் இக் கொலைகள் அணுகப்பட வேணடும்;. தமிழர் தாயகப் பிரதேசத்தில் காவல்துறைப்பணிகள் தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் வரும் வகையிலும் சிறிலங்காவின் இராணுவத்தினர் தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேறும் வகையிலும் இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்படுதல் மிகவும் அவசியமானதாகும்.

இம் மாணவர்களது இழப்பினால் நாம் துயருற்றிருக்கும் இவ் வேளையிலும் ஈழத்தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் எதிர்நோக்கும் அடக்குமுறைகளையும் பேரநீதிகளையும் உலகறியச் செய்ய வேண்டியதும் அவசியமானதாகும். இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது தடுக்கவும், தமிழ் மக்கள் மீது தொடர்ந்து வரும் இனஅழிப்புக்கு நீதி கிடைக்கவும் இம் முயற்சி அவசியமாகப்படுகிறது. மக்கள் வீதியில் இறங்கிப் போராடுதலும் இதற்கு வலுச்சேர்க்கும்.

இத்தகைய மக்கள் போராட்டத்துக்கான முன்னெடுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளதாய் நாம் அறிகிறோம். இம்முயற்சிகளில் பொறுப்புடனும் வேகத்துடனும் செயற்படவேண்டும் என அனைவரையும் தோழமையுடன் வேண்டிக்கொள்கிறோம். நாமும் இவ் விடயம் அனைத்துலக அரங்கில் கூடுதல் கவனத்தைப் பெறும்வகையில் செயற்படுவோம். அனைத்து மக்களினதும் எழுச்சி கொண்ட உரிமைக்குரல் உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பட்டும். சிங்கள பேரினவாதத்தின் பிடியில் இருந்து நமது மக்கள் விடுதலை அடையட்டும்!!

நன்றி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

விசுவநாதன் ருத்திரகுமாரன்

பிரதமர்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

http://tamil24news.com/news/பெருந்துயரில்-பங்கேற்கி/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.