Jump to content

திட்டமிட்ட செயற்பாடுகளை நிறுத்தி மாணவர் கொலைக்கு நீதி வழங்கவேண்டும்


Recommended Posts

திட்­ட­மிட்ட செயற்­பா­டு­களை நிறுத்தி மாணவர் கொலைக்கு நீதி வழங்­க­வேண்டும்

 

யாழ். பல்­க­லைக்­க­ழக மாணவர் இரு­வரின் படு­கொ­லை­யினை கண்­டித்து வடக்கில் நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­விட வடக்கு உட்­பட நாடு முழு­வ­திலும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் தமது நண்­பர்­களின் படு­கொ­லைக்கு நீதி வழங்­கக்­கோரி பெரும் போராட்­டங்­க­ளையும் நடத்­தி­யுள்­ளனர்.

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் படு­கொ­லையை கண்­டித்தும் பக்­கச்­சார்­பற்ற விசா­ரணையை நடத்தி நீதி வழங்­கு­மாறு வலி­யு­றுத்­தியும் யாழ். பல்­க­லைக்­க­ழக மாணவர் சமூகம் நேற்று முன்­தினம் யாழ்ப்­பாண செய­ல­கத்தை முடக்கி பெரும் போராட்­டத்தை நடத்­தி­யி­ருக்­கின்­றது. கொட்டும் மழைக்கு மத்­தியில் ஒன்­று­கூ­டிய மாண­வர்கள் ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­துடன் ஏ9 வீதி, கச்­சேரி நல்­லூர்­ வீதி உட்­பட்ட மாவட்ட செய­ல­கத்­தினை அண்­மித்­துள்ள அனைத்து சிறு வீதி­க­ளிலும் ஏ9 பிர­தான வீதி­யிலும் ஒன்­று­கூடி முற்­றுகைப் போராட்­டத்தை நடத்­தினர். இதன் கார­ண­மாக யாழ். மாவட்ட செய­லகப் பணிகள் முடக்­கப்­பட்­டன. பல்­க லைக்­க­ழக மாண­வர்­களின் இந்தப் போராட்­டத்தால் யாழ். மாவட்ட செய­ல­கத்­திற்கு அரு­கா­மை­யி­லுள்ள ஆளுநர் செய­ல­கமும் முடக்­கப்­பட்­டது.

இதேபோல் மாண­வர்­களின் படு­கொ­லையை கண்­டித்தும் பக்­கச்­சார்­பற்ற விசா­ர­ணையை நடத்­து­மாறு கோரியும் கிளி­நொச்சி மாவட்­டத்­திலும் பாட­சாலை மாண­வர்கள் ஆர்ப்­பாட்டப் பேர­ணியில் ஈடு­பட்­டனர். கிளி­நொச்சி மாவட்ட பாட­சா­லை­களின் பழைய மாண­வர் சங்­கங்களின் ஒன்­றியம், பல்­க­லைக்­க­ழக சமூ­கத்­தினர், அர­சியல் பிர­தி­நி­திகளை ஒன்­றி­ணைத்து இந்த ஆர்ப்­பாட்டப் பேரணி ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

கிளி­நொச்சி மாவட்­டத்தைப் போன்று முல்­லைத்­தீவு மாவட்­டத்­திலும் பல பாட­சா­லை­களை சேர்ந்த மாண­வர்கள் வகுப்­புக்­களைப் புறக்­க­ணித்து வீதியின் இரு மருங்­கிலும் பதா­தை­களை ஏந்தி கோஷங்­களை எழுப்பி கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

கிழக்கு மாகா­ணத்­திலும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் நீதி கோரி போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­தனர். இதேபோல் நாடு தழு­விய ரீதியில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் போராட்­டங்­களை நடத்­தி­ய­துடன் உயி­ரி­ழந்த தமது நண்­பர்­களின் படு­கொ­லைக்கு நீதி வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்று கோரிக்­கையும் முன்­வைத்­தனர்.

இத­னை­விட கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு முன்­பாக இட­து­சா­ரிகள் மற்றும் சிவில் அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்து நேற்று முன்­தினம் மாலை ஆர்ப்­பாட்­டத்­திலும் ஈடு­பட்­டன. இவ்­வாறு கடந்த இரு நாட்­க­ளா­கவே பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் படு­கொ­லையை கண்­டித்து பெரும் போராட்­டங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

யாழ். பல்­க­லை­க­்கழக மாணவர் இரு­வரின் படு­கொலை தொடர்­பாக குற்­றப்­பு­ல­னாய்வுப் பொலிஸார் விசா­ர­ணை­களை நடத்தி வரு­வ­துடன் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ள ஐந்து பொலிஸாரும் அனு­ரா­த­புரம் சிறைச்­சாலையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் படு­கொ­லை­யா­னது பொலி­ஸாரின் அத்­து­மீ­றிய செயற்­பா­டுகள் குறித்த பெரும் கண்­ட­னங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

மோட்டார் சைக்­கிளில் சென்ற பல்­க­லைக்­கழக மாண­வர்கள் இரு­வரும் பொலிஸார் மறித்­த­போது நிறுத்­தாது சென்­றனர் என்றும் இதனால் வாள்­வெட்­டுக்­கு­ழுவை சேர்ந்­த­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் பொலிஸார் அவர்கள் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்­ட­தாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் விளக்­க­ம­ளித்­தி­ருந்தார்.

உண்­மை­யி­லேயே மாண­வர்கள் பொலிஸார் மறித்­த­போது நிறுத்­தாது சென்­றி­ருந்தால் அவர்கள் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­வ­தற்கு பொலி­ஸா­ருக்கு அதி­காரம் கொடுத்­தது யார் என்ற கேள்வி தற்­போது எழுந்­தி­ருக்­கின்­றது. பொலி­ஸாரின் கட்­ட­ளையை மீறி பய­ணிக்கும் வாக­ன­மொன்றின் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­வ­தற்கு பொலி­ஸா­ருக்கு அதி­காரம் இல்லை. அவ்­வாறு துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­வது தண்­டனை சட்­டக்­கோ­வையின் பிர­காரம் ஒரு குற்­ற­மாகும். தப்பிச் செல்லும் வாக­னங்­களை அடுத்த காவல் அர­ணுக்கோ அல்­லது பொலிஸ் நிலை­யத்­திற்கோ அறி­வித்து பிடிக்­க­ வேண்டும். அல்­லது துரத்திச்சென்று பிடிக்­க­வேண்டும் என்று தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் செய­லாளர் ஆரி­ய­தாஸ குரே கருத்துத் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் கொலைச்­சம்­பவம் தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் விசா­ர­ணை­களை நடத்தி வரும் நிலையில் அவர்­க­ளி­ட­மி­ருந்து தக­வல்­களைப் பெற்று அந்த விவ­காரம் தொடர்பில் அறிக்­கை­யொன்றை தயா­ரிக்க ஆணைக்­குழுவின் பிர­தி­நிதியொ­ருவர் யாழ்ப்­பா­ணத்­திற்கு அனுப்­பப்­பட்­டுள்ளார் என்றும் ஆரி­ய­தாஸ குரே சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் செய­லா­ள­ரது கருத்­தி­லி­ருந்து பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மோட்டார் சைக்­கிளை நிறுத்­தாது சென்­றி­ருந்தால் கூட அவர்கள் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­தமை மாபெரும் தவறு என்­பது சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. எனவே இத்­த­கைய செயலில் ஈடு­பட்ட பொலிஸார் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் இதி­லி­ருந்து வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது.

இந்த துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வ­மா­னது யாழ். குடா­நாட்டில் பொது­மக்­களின் பாது­காப்பை கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்­ள­மையை எடுத்­துக்­காட்­டு­வ­தா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றது. இந்த சம்­ப­வத்தையடுத்து பொலிஸார் மற்றும் படைத்­த­ரப்­பினர் மீதான பொது­மக்­களின் அதி­ருப்­தி­யா­னது அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது. பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் பெரும் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்ற நிலையில் யாழ். குடா­நாட்டில் பெரும் பதற்­றமும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

இவ்­வா­றான நிலையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சுன்­னாகம் நக­ர­ மத்­தியில் சிவில் உடையில் நின்­றி­ருந்த இரண்டு பொலிஸார் மீது வாள்கள், இரும்­புக்­கம்­பி­க­ளுடன் வந்த ஆறு பேர் கொண்ட கும்­ப­லொன்று வாள் வெட்­டுத்­தாக்­குதல் நடத்­தி­யுள்­ளது. நகரின் மத்­தி­யி­லுள்ள புடைவை விற்­பனை நிலை­யத்­திற்குள் சென்று இந்த ஆறு­பே­ர­டங்­கிய கும்பல் கடையில் இருந்­த­வரை அச்­சு­றுத்தி அங்­கி­ருந்த பணத்தை கொள்­ளை­யிட்­டுக்­கொண்டு வெளியே வந்­த­போதே பொலிஸார் மீதும் வாள்­வெட்­டுத்­தாக்­கு­தலை நடத்­தி­யி­ருந்­தது. இந்த வாள்­வெட்டுத் தாக்­கு­தலில் இரண்டு பொலிஸார் காய­ம­டைந்து யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

கடந்த வியா­ழக்­கி­ழமை நள்­ளி­ரவு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மீதான படு­கொலை சம்­பவம் இடம்­பெற்­றி­ருந்­தது. இந்த சம்­பவம் இடம்­பெற்று இரண்டு தினங்­க­ளுக்குப் பின்னர் பட்­டப்­ப­கலில் கொட்டும் மழைக்கு மத்­தியில் சுன்­னாகம் நகரின் மத்­தியில் இரு பொலிஸார் மீது வாள்­வெட்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. அதுவும் குறித்த பொலிஸார் சிவில் உடையில் நின்­றி­ருந்த சமயம் இந்த தாக்­குதல் நடந்­தி­ருக்­கின்­றது.

இந்த தாக்­குதல் சம்­ப­வ­மா­னது பல்­வேறு சந்­தே­கங்­களை எழுப்­பி­யி­ருக்­கி­றது. யாழ். ­கு­டா­நா­ட்டில் பல்வேறு வித­மாக வாள் வெட்டு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. கடந்த சில மாதங்­க­ளா­கவே இத்­த­கைய சம்­ப­வங்கள் இடம்­பெ­று­கின்­றன. ஆனால் இந்த சம்­ப­வங்­களில் பெரும்­பா­லா­னவை இரவு நேரங்­க­ளி­லேயே இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. சுன்­னாகம் நகரின் மத்­தியில் பட்­டப்­ப­கலில் மூன்று மோட்டார் சைக்­கிள்களில் முகத்தை மூடி­ய­வாறும், மோட்டார் சைக்­கிள்­களின் இலக்கத் தக­டு­களை மறைத்த வண்ணம் அந்த ஆறுபேர் கொண்ட கும்பல் புடைவை விற்­பனை நிலை­யத்­திற்குள் புகுந்து அட்­ட­காசம் செய்­த­மையும் அக்­கும்பல் வெளியே வந்து சிவில் உடையில் நின்ற பொலிஸார் மீது வாள் வெட்­டுத்­தாக்­குதல் நடத்­தி­ய­மையும் திட்­ட­மிட்ட ஒரு செயற்­பா­டாக இருக்­க­லாமோ என்ற ஐயம் தற்­போது மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றது.

இந்த வாள்­வெட்­டுத்­தாக்­குதல் இடம்­பெற்று ஒருநாள் கழிந்த நிலையில் இந்த சம்­ப­வத்­திற்கு தாமே பொறுப்பு என்று ஆவாக்­குழு அநா­ம­தேய துண்­டுப்­பி­ர­சுரம் மூலம் உரி­மை­ கோ­ரி­யி­ருக்­கின்­றது. யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு அருகிலும் ஊடக நிறுவனங்களுக்கு அருகிலும் இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் இந்த அநாமதேய துண்டுப்பிரசுரங்களை வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த துண்டுப் பிரசுரத்தில் அசுத்தங்கள் அகற்றப்படும் என்றும் பல்கலைக்கழக மாணவர்களின் கொலைக்கு பழிவாங்கும் வகையிலேயே வாள் வெட்டுச் சம்பவம் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வாள் வெட்டு சம்பவம் மற்றும் தற்போது வெளியிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம் என்பன யாரோ ஒரு தரப்பினரின் திட்டமிட்ட செயற்பாடாகவே தென்படுகின்றது. எனவே இத்தகைய செயற்பாடு­களுக்கு இடமளிக்காது குடாநாட்டில் அமைதியை நிலைநிறுத்த படைத்தரப்பினரும் பொலிஸாரும் முன்வரவேண்டும். அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கும் உரிய நீதி வழங்கப்படவேண்டும்.                

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-26#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.