Jump to content

இலங்கையில் மறைக்கப்பட்ட போர்க்குற்றங்கள்! அம்பலப்படுத்தப் போகும் வெளிநாட்டு நிபுணர்கள்


Recommended Posts

2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித அவலங்கள் தொடர்பில் வெளிநாட்டு மனித உரிமை ஆவர்வல்கள் நாடகம் ஒன்றை அரங்கேற்றம் செய்யவுள்ளனர்.

ஐரோப்பாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இலங்கை செல்கின்றனர். வடபகுதியில் எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பட்டன என்பது தொடர்பில் தெரியாமல் தெற்கு கடற்கரையில் பொழுதை கழிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடையில் நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 

எனினும் அங்கு இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள், மனித பேரவலங்களை வெளியிட ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்து ஊடகங்களின் சுதந்திர சாட்சியங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இளம் தமிழ் பெண்ணான நிலா சிக்கியுள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக பிரித்தானிய பெண் ஒருவர் செயற்பட்டுள்ளார்.

இவ்வாறான அனர்தத்தின் போது சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே முயற்சித்த போதும் அதன்மூலம் யாரும் பாதுகாக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் போரில் இடம்பெற்ற மனித பேரவலங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அவற்றினை அடிப்படையாக கொண்டு இந்த நாடகம் அமையவுள்ளது.

முன்னனி மனித உரிமை நாடக ice&fire நிறுவனத்தின் கலை இயக்குனர் Christine Bacon என்பவரினால் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் Still Counting the Dead என்ற திரைப்படத்தின் ஆசியரான ஊடகவியலாளர் Frances Harrison மற்றும் சித்திரவதையில் இருந்து விடுதலை அமைப்பின் ஆய்வாளரும் சர்வதேச வழக்கறிஞருமான Ann Hannah கலந்துரையாடவுள்ளனர்.

சித்திரவதையிலிருந்து தப்பி பிரித்தானியா வந்தவர்களின் சுதந்திரத்தை பாதுகாத்தல் மற்றும் அவர்களின் உரிமைகள் ஊக்குவிக்கப்பதற்கு முயற்சிகளை Frances Harrison மேற்கொண்டு வருகிறார். அத்துடன் அவர்களுக்கு நேரடி மருத்துவ சேவைகளையும் வழங்கி வருகிறார்.

இது தொடர்பில் வைத்தியர் சுதாகரன் நடராஜா, சர்வதேச ஆய்வுகள் மையம் மற்றும் ஓரியண்டல் பாடசாலை, ஆபிரிக்க ஆய்வு (SOAS) என்பனவற்றின் தலைமையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

The Island Nation, லண்டனில் உள்ள Arcola திரையரங்கில் இன்று முதல் நவம்பர் 19ம் திகதி வரையான மூன்று வார காலப்பகுதிக்கு இந்த நாடகம் அரங்கேற்றப்படவுள்ளது

 மேலதிக விபரங்களுக்கு http://www.arcolatheatre.com/event/the-island-nation/?spektrix_bounce=true

http://www.tamilwin.com/community/01/122354?ref=home

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.