Jump to content

ஊழலாகிவிட்ட ஊழல் ஒழிப்புப் போர்


Recommended Posts



ஊழலாகிவிட்ட ஊழல் ஒழிப்புப் போர்
 
 

article_1477415361-aube.jpgகுற்ற விசாரணை நிறுவனங்களான இரகசியப் பொலிஸ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஆணைக்குழு ஆகியவை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் ஆற்றிய உரையினால் நாட்டில் பாரியதோர் சர்ச்சை உருவாகியிருக்கிறது. அத்தோடு அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதோடு அதன் உண்மையான நிலைமையும் நாட்டுக்கு அம்பலமாகி விட்டது. 

தமது அரசியல் எதிரிகளான முன்னாள் ஜனாதிபதியும் அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் வகையிலும் தம்மைப் பதவியில் அமர்த்தப் பாடுபட்ட ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் சிவில் சமூக அமைப்புக்களும் கொதித்தெழும் வகையிலும் தாமே நாட்டு மக்களுக்கு உத்தரவாதமளித்து ஆரம்பித்த ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் மேலும் சீர்குலையும் வகையிலும் ஜனாதிபதி ஏன் அந்த உரையை ஆற்றினார் என்ற கேள்விக்கு இன்னமும் சரியான பதில் கிடைக்கவில்லை. 

கடந்த புதன்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித்த சேனாரத்ன, ஜனாதிபதியின் உரையினால் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அசௌகரியங்களைப் போக்கும் வகையில் கருத்து வெளியிட்டார்.  

ஜனாதிபதி ஒருபோதும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொட்டாபய ராஜபக்ஷவையோ ராஜபக்ஷ குடும்பத்தினரையோ பாதுகாக்கும் நோக்கத்தில் எதனையும் பேசவில்லை என்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் நீதிமன்றத்துக்கு அழைத்து அவமதிக்கப்பட்டதைப் பற்றியே ஜனாதிபதி குறிப்பிட்டார் என்றும் அமைச்சர் கூறினார். 

இலஞ்ச ஆணைக்குழு உள்ளிட்ட இந்த நிறுவனங்கள் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகளை விட்டுவிட்டு சிறிய குற்றங்கள் பின்னால் அலைவதாகவும் அதனாலேயே ஜனாதிபதி இந்த நிறுவனங்கள் மீது கோபம் கொண்டுள்ளார் என்றும் அமைச்சர் மேலும் கூறினார். 

ஜனாதிபதி உண்மையிலேயே அதனைத்தான் மனதில் வைத்துப் பேசினாரா? அல்லது மோசடிகளைப் பற்றி விசாரணை செய்யும் நிறுவனங்களைத் தாக்கிப் பேசிய ஜனாதிபதி அதன் மூலம் ஊழல்ப் பேர்வழிகளைப் பாதுகாக்க முற்படுகிறார் என்ற குற்றச்சாட்டு வரும் போது அமைச்சர் இப்போது இவ்வாறு கூறுகிறாரா? என்பது நாள் போகப் போகத்தான் தெரியவரும். 

ஆனால், ஜனாதிபதியின் உரை ஐ.தே.க தலைமையை நிச்சயமாகச் சினம்கொள்ளச் செய்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் ஜனாதிபதி, முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததை விமர்சித்தார்; அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததை தமக்கு அறிவிக்கவில்லை என அதிகாரிகளை விமர்சித்தார்; ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளை 16 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை விமர்சித்தார்.  

இவை எல்லாவற்றோடு இவற்றைச் செய்யும் நிறுவனங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலொன்றின்படி செயலாற்றுவதாகவும் அவர் கூறினார். எனவே, அது யாருடைய அரசியல் நிகழ்ச்சி நிரல் என்ற கேள்வி எழுவது இயல்பாகும். வேறு விதமாகக் கூறுவதாயின் இந்த நிறுவனங்கள் ஐ.தே.கவின் நிகழ்ச்சி நிரலின்படி செயலாற்றுவதாகவே ஜனாதிபதி கூறியிருக்கிறார். அது தற்போதைய கூட்டு அரசாங்கத்துக்குள் அதிர்வை ஏற்படுத்தக் கூடிய கருத்தாகும். ஆனால், எப்போதும் அமைதியாகவே காரியங்களைச் சாதிக்கும் பிரதமரின் அந்த அமைதி மனப்பான்மை நிலைமையை மேலும் சீர்குலையாமல்த் தடுத்துவிட்டது. 

கோட்டாபயவையோ அல்லது முன்னாள் கடற்படைத் தளபதிகளையோ இந்த நிறுவனங்கள் தாமாக முன்வந்து விசாரிக்கவில்லை. அவர்களுக்கு எதிராகச் சிலர் அந்த நிறுவனங்களிடம் முறைப்பாடு செய்ததை அடுத்தே அவர்கள் விசாரிக்கப்பட்டு, நிதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்கள். முன்னாள் கடற்படைத் தளபதிகள் பதவியில் இருக்கும்போது, அரசாங்கத்துக்கு பல நூறு கோடி ரூபா நட்டம் ஏற்படும் வகையில் ‘அவன்காட்’ நிறுவனத்துக்கு சலுகைகளை வழங்கிவிட்டுப் பின்னர் தாம் ஓய்வு பெற்றதையடுத்து, அதே நிறுவனத்தில் சேர்ந்து 30 லட்சம் ரூபாய், 20 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய் எனச் சம்பளம் பெற்றுள்ளனர் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது..  

முறைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தால் அவை தொடர்பான பூர்வாங்க விசாரணைகளின் போது, அவை உண்மையெனத் தெரிய வந்தால், இவர்கள் பாதுகாப்புத்துறையில் உயர் பதவிகளை வகித்தார்கள் என்பதனாலோ போரின் போது பெரும் சேவையை ஆற்றினார்கள் என்பதற்காகவோ அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல் இருக்க முடியுமா? இது அரசியல் நோக்கத்தில் செய்ததாக எவ்வாறு கூற முடியும்? முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போர் வெற்றிக்குக் காரணமாக இருந்தார் என்பதற்காக மஹிந்தவின் அரசாங்கம் அவருக்கு எதிராக வழக்காடாமல் இருந்துவிட்டதா? 

நீதிமன்றங்களினதோ அல்லது சுயாதீன ஆணைக்குழுக்களினதோ விவகாரங்களில் தாம் தலையிடுவதில்லை என ஜனாதிபதி பல முறை கூறியிருக்கிறார். அவ்வாறாயின் இந்த மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்போவதை ஜனாதிபதிக்கு அறிவிக்க வேண்டும் என எவரும் கூற முடியாது. ஏனெனில் அதுவும் தலையீடாகவே அமையும். எனவே, அந்த நால்வரைப் பற்றி ஜனாதிபதிக்கு அறிவிக்காமையில் அரசியல் நோக்கம் இருப்பதாகக் கூற முடியுமா? 

எக்னெலிகொட கடத்தல் மற்றும் காணாமற்போகச் செய்தமை தொடர்பான வழக்கு விசாரணை நீடிப்பதற்கு முக்கிய காரணம் இரகசியப் பொலிஸார் இராணுவத்தினரிடம் கோரிய தகவல்களை வழங்க இராணுவம் நீண்ட காலம் எடுத்தமையே ஆகும். இராணுவம் இன்னமும் சில தகவல்களை வழங்கவில்லை; அவ்வாறு இருக்க அவர்கள் தொடர்பான வழக்கு விசாரணையை ஜனாதிபதி கூறுவதைப் போல் துரிதப்படுத்துவது எவ்வாறு? அரசியல் நோக்கத்துடனேயே அந்த வழக்கு துரிதப்படுத்தப்படுவதில்லை என எவ்வாறு கூற முடியும்? முப்படைகளின் பிரதம தளபதியான ஜனாதிபதி நினைத்தால் இராணுவத் தளபதி மூலம் இந்த வழக்குகளைத் துரிதப்படுத்தலாம். 

மூத்த அரசியல்வாதியான அமைச்சர் ஏ.எச்.எம். பவுஸி விசாரிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி கோபம் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் ராஜித்த கூறினார். மூத்த அரசியல்வாதி என்பதற்காகக் குற்றம் சாட்டப்பட்டாலும் விசாரிக்கப்படக் கூடாது எனக் கூறுவது நல்லாட்சிக்கு அழகாகுமா ? ஆனால், விசாரணைத்துறையில் பயிற்சி பெறும் அதிகாரிகளாலும் அந்த மூத்த அரசியல்வாதி விசாரிக்கப்பட்டார் எனக் கூறப்படுகிறது. இது பொருத்தமற்ற அவமானகரமான செயலாகும். அதற்காக ஜனாதிபதி கோபம் கொள்வதாக இருந்தால் நியாயம்தான். ஆனால், அதனை அரசியல் நோக்கத்துடன் செய்ததாக எவ்வாறு கூற முடியும்? 

மொத்தமாக, ஜனாதிபதி குத்திக் காட்டிய விடயங்களைப் பார்க்கும்போது அவை, அனைத்தும் பாதுகாப்புத்துறையினர் தொடர்பானதாகவே இருக்கிறது. இதன் மூலம் முன்னாள் மற்றும் தற்போதைய பாதுகாப்புப் படை அதிகாரிகள் விடயத்தில் ஜனாதிபதி மிகக் கவனமாக இருப்பதாகத் தெரிகிறது. பல நாடுகளில் இடம்பெறும் சம்பவங்களைப் பார்க்கும்போது, ஜனாதிபதி அந்த விடயத்தில் கவனமாக நடந்து கொள்வது நியாயம்தான். ஆனால், அதற்காக அவர் குற்ற விசாரணைத்துறையினர் மனமுடைந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்தமை சரியெனக் கூற முடியாது. 

பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்களை விட்டுவிட்டு, சிறிய குற்றச்சாட்டுக்கள் பின்னால் விசாரணை நிறுவனங்கள் அலைவதாகவும் அதுவே ஜனாதிபதியின் கோபத்துக்குக் காரணமெனவும் ராஜித்த கூறியிருந்தார். ஜனாதிபதி உண்மையிலேயே பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் மந்த கதியில் நகர்வதைக் கண்டு கோபம் கொண்டுள்ளார் என்று ராஜித்த கூறுவது உண்மையா? அல்லது ஜனாதிபதியின் உரையினால் ஊழல் தொடர்பான விசாரணைகளுக்குக் குந்தகம் ஏற்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிலிருந்து ஜனாதிபதியை விடுவிப்பதற்காக ராஜித்த அவ்வாறு கூறுகிறாரா என்பது தெளிவாகவில்லை.  

ஆனால், பாரிய குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணைகள் இழுத்தடிக்கப்படுகின்றன என்பது உண்மையே. அது மட்டுமல்லாது, பொதுவாக ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன என்பது பொதுவான மக்கள் அபிப்பிராயமாகும். இது தொடர்பாகக் கடந்த வருடம் முதல் ஊடகவியலாளர்கள், அமைச்சர்களிடம் வினவுகின்றனர். கடந்த அரசாங்கத்தைப் போல் சந்தேகநபர்களை ஆதாரமில்லாமல் இழுத்துக் கொண்டு வர முடியாது. அது நல்லாட்சியின் நடைமுறையல்ல என்று அப்போதெல்லாம் அமைச்சர்கள் கூறி வந்துள்ளனர். இப்போது அதே அமைச்சர்கள் பாரிய ஊழல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விசாரணை நடத்தவில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர். 

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் தலைவர்கள் பல்லாயிரம் கோடி ரூபா பணத்தை சீசெல்ஸ் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று 10 நாட்களில், அதாவது 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி அப்போதையத் திட்டமிடல் மற்றும் பொருளாதார பிரதி அமைச்சராகவிருந்த கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறினார்.  

இதனை அடுத்து, அதே மாதம் 23 ஆம் திகதி தமது அரசாங்கம் அது தொடர்பான விசாரணைகளுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என சீசெல்ஸ் அரசாங்கம் தெரிவித்தது. ஆனால், அரசாங்கம் அப்பணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. 

பின்னர், ஹர்ஷவை மேற்கொள் காட்டி, ‘இகொனொமிக் டைம்ஸ்’ பத்திரிகையும் கடந்த வருடம் மார்ச் 21 ஆம் திகதி, இது போன்றதோர் செய்தியை வெளியிட்டு இருந்தது. அதன்படி மஹிந்த குடும்பத்தினர் டுபாய் வங்கிகளில் மூன்று கணக்குகளில் இரண்டு பில்லியன் டொலர் (சுமார் 30,000 கோடி ரூபா) பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக அச்செய்தி கூறியது. அதற்கு பிரத்தியேகமாக சென் மாட்டின் தீவுகள், ஹொங்கொங், மகாஉ மற்றும் சீசெல்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள வங்கிகளிலும் மஹிந்த குடும்பத்தினர் பெருமளவில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.  

கடந்த வருடம் மே மாதம் ஏழாம் திகதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, ஊடகவியலாளர் மாநாடொன்றின்போது, மற்றுமொரு முக்கிய தகவலை வெளியிட்டார். ராஜபக்ஷ குடும்பத்தினர் வெளிநாடுகளில் 18 பில்லியன் டொலர் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாக அரசாங்கம் நம்புவதாகவும் அது தொடர்பாக விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

18 பில்லியன் டொலர் என்றால் சுமார் 150,000 கோடி ரூபாவாகும். அடுத்த வருடத்துக்கான வரவு செயவுத் திட்ட மதிப்பீடுகளின் பிரகாரம் அடுத்த வருடத்துக்கான இலங்கையின் மொத்தச் செலவு 181,900 கோடி ரூபாவாகும். அதாவது மங்கள கூறுவது உண்மையாயின் மஹிந்த வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தைக் கண்டு பிடித்தால் வேறு எந்த வருமானமும் இல்லாமல் அந்தப் பணத்தின் மூலம் மட்டும் 10 மாதங்கள் அரசாங்கத்தை நடத்தலாம்.  

அமைச்சர்கள் ஏதோ ஆதாரம் இருப்பதைப் போல் இவற்றைக் கூறினார்களேயல்லாது அவற்றைப் பற்றி விசாரணைகளை முடுக்கிவிட்டதாக தெரியவில்லை. அவர்களிடம் ஆதாரம் இருந்திருக்கலாம்; ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மை.  

உண்மை என்னவென்றால், மக்கள் விடுதலை முன்னணியும் ஜாதிக்க ஹெல உருமயவும் ஆதாரங்களைத் திரட்டி மஹிந்தவின் அரசாங்கத்தின் தலைவர்களின் ஊழல், மோசடிகளைப் பற்றி இலஞ்ச ஆணைக்குழுவுக்கும் இரகசிய பொலிஸூக்கும் முறைப்பாடு செய்தார்களேயல்லாது மஹிந்தவின் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற ஐ.தே.கவோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியினரோ அவ்வாறு செய்யவில்லை. பாரிய குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெறுவதில்லை என ஜனாதிபதி இப்போது கூறினாலும் அவரது அணியினரோ அல்லது ஐ.தே.கவோ அதற்கான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. 

அதேவேளை, நீதிமன்றத்துக்கு அழைத்ததன் மூலம் அவமானப்படுத்தப்பட்டார்கள் என்று ஜனாதிபதி கூறிய முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டு பாரிய ஊழலொன்றான ‘அவன் காட்’ விவகாரம் தொடர்பானதே. பாரிய குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படுவதில்லை என்று கூறுவதானது ஜனாதிபதி அவர்களுக்காகத்தான் பரிந்து பேசுகிறார் எனப் பொருள் கொள்ளலாம்.  

இப்போது அரசாங்கம் மற்றொரு சிக்கலிலும் சிக்கிக் கொண்டுள்ளது. அதுதான் மத்திய வங்கி பிணைமுறி விவகாரம். மைத்திரிபால பதவிக்கு வந்து சில வாரங்களில் இடம்பெற்ற மத்திய வங்கிப் பிணைமுறி வர்த்தகத்தின் போது கொள்வனவாளர்களில் ஒருவரான தமது மருமகனுக்குச் சாதகமான தகவல்களை வழங்கி, அதன் மூலம் அவர் பல நூறு கோடி ரூபா இலாபம் பெற வாய்ப்பளித்ததாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது. 

அரசாங்கத்தில் பலர் அதனை மறுத்தனர். ஆனால் இப்போது பிணைமுறி வர்த்தகத்தில் ஈடுபட்ட மகேந்திரனின் மருமகனின் நிறுவனம் ஒருபோதும் இல்லாதவாறு கடந்த வருடம் 1000 கோடி ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக இப்போது தெரிய வந்துள்ளது.  

இது தொடர்பாக கோப் என்றழைக்கப்படும் நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு விசாரணை செய்தது. குழுவின் பெரும்பான்மையினர் இந்த விடயத்தில் மகேந்திரன் குற்றவாளியென ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் அதிலுள்ள ஐ.தே.க உறுப்பினர்கள் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. எனவே குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி குழுவின் திங்கட்கிழமைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.  

இது கோப் குழுவின் வரலாற்றில் முதற்தடவையாகத்தான் நடைபெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பாகக் குழுவுக்குள் உடன்பாடு இல்லாதததால் குழுவிடமிருந்து இந்த விடயம் தொடர்பாக ஒன்றுக்கு மேற்பட்ட அறிக்கைகள் வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு நடைபெற்றால் அதுவும் வரலாற்றில் முதல் தடவையாகத்தான் நடைபெறப் போகிறது.  

இது ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டும் ஊழல்பேர் வழிகளைச் சட்டத்தின் முன் கொண்டு வருவதாகக் கூறிக் கொண்டும் நல்லாட்சியை நிறுவுவதாகக் கூறிக் கொண்டும் பதவிக்கு வந்த அரசாங்கம் வெட்கித் தலை குனிய வேண்டிய விடயமாகும். 

இவை அனைத்தும் மைத்திரியின் தலைமையில் இந்த அரசாங்கம் ஊழல் மோசடிகளை முறியடிக்கும் என எதிர்ப்பார்த்த மக்களின் அந்த எதிர்ப்பார்ப்புக்களைத் தகர்த்தெறியும் சம்பவங்களேயாகும். பாரிய குற்றச் செயல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விசாரணை நடத்தும் நிறுவனங்களைத் திட்டிய ஜனாதிபதியும் தமது அரசியல் வரலாற்றில் ஒரு போதும் பொதுச் சொத்தை திருடினார் என்ற குற்றச்சாட்டுக்காவது இலக்காகாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த விடயத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்பது இப்போது நாட்டின் முன்னுள்ள கேள்வியாகும்.   

http://www.tamilmirror.lk/184747/ஊழல-க-வ-ட-ட-ஊழல-ஒழ-ப-ப-ப-ப-ர-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.