Jump to content

வாட்ஸ் அப்பில் வீடியோ கால்! நீங்களே டெஸ்ட் செய்யலாம்! #WhatsappVideoCall


Recommended Posts

வாட்ஸ் அப்பில் வீடியோ கால்! நீங்களே டெஸ்ட் செய்யலாம்! #WhatsappVideoCall

வாட்ஸ் அப் பயனாளர்களிடையே பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட வீடியோ கால் செய்யும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் தனது பீட்டா யூசர்ஸ் எனப்படும் முன்னோட்ட பதிப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்பின் அபார வளர்ச்சி!

2010ம் ஆண்டு அறிமுகமானது வாட்ஸ் அப் குறுந்தகவல் செயலி. நம்மை ரியாலிட்டி என்னும் நிஜ உலகில் இருந்து துண்டிக்கவிட்டு ஆன்லைன் என்னும் நிஜமான ஆப்லைன் உலகத்திற்கு கொண்டு சென்றதில் வாட்ஸ் அப்பின் பங்கு அளவிட முடியாதது. ஒரு குறுந்தகவலுக்கு ஒரு ரூபாய் என்று இருந்த காலத்தில் வெறும் இணையதள இணைப்பு இருந்தால் உலகம் முழுவதும் கட்டணம் ஏதுமில்லாமல் குறுந்தகவல், புகைப்படங்கள், பதிவு செய்யப்பட்ட ஒலி, வீடியோக்கள் அனுப்பும் வசதியை அளித்த வாட்ஸ் அப் நூறு கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களை மட்டுமல்லாமல் பேஸ்புக் நிறுவனத்தையும் கவர்ந்தது.

அதனால் கடந்த 2014ம் ஆண்டு 19 பில்லியன் டாலர்களுக்கு வாட்ஸ் அப்பை பேஸ்புக் கையகப்படுத்தியது. அதன் பிறகு ஆவணங்கள் அனுப்பும் வசதி, ஆடியோ கால் மற்றும் கிப் என்னும் ஒருவித அனிமேஷன் பைல்களை அனுப்பும் வசதியையும் சேர்த்தார்கள். பின்பு மிக பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட வீடியோ கால் செய்யும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் தனது பீட்டா யூசர்ஸ் என்னும் முன்னோட்ட பதிப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நேற்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

collage_13154.jpg

எப்படி இருக்கிறது வீடியோ கால் வசதி

தற்போதைக்கு பீட்டா யூசர்ஸ் என்னும் வாட்ஸ் அப்பின் முன்னோட்ட பதிப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வீடியோ கால் வசதியானது, முன்னோட்ட பதிப்பை பயன்படுத்தும் ஒருவர் மற்றொரு முன்னோட்ட பதிப்பை பயன்படுத்தும் நபருக்கும் மட்டுமே கால் செய்ய முடியும். மேலும் 4ஜி அல்லது நிலையான வைபை இணைப்பிருந்தால் மட்டுமே தெளிவான, தடங்களற்ற வீடியோ காலை செய்ய முடியும். 

பிரைவேட் சாட் எனப்படும் தனிநபர் உரையாடலில் ஏற்கனவே ஆடியோ கால் செய்யும் பகுதியில் வீடியோ கால் செய்வதற்கான ஆப்சன் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ‘Calls’ என்னும் ஆப்சன் மூலமாகவும் வீடியோ கால் செய்யவியலும்.

பீட்டா வெர்சன்/ முன்னோட்ட பதிப்பு என்றால் என்ன?

பொது மக்களுக்கு ஒரு புதிய சாப்ட்வேர் அப்டேட்டை அளிப்பதற்கு முன்பு அதை பரிசோதித்து பார்ப்பது மிகவும் அவசியமாகும். எனவே பல்வேறு நிறுவனங்கள் தங்களின் அப்டேட்டை முன்னோட்ட பதிப்பாக வெளியிடும். அதன் மூலம் கிடைக்கும் வரவேற்பு மற்றும் எதிர்வினைகளை பொறுத்தே பொது மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கும். இது போன்ற பீட்டா பதிப்பைத்தான் வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது தனது ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு மட்டும் வெளியிட்டுள்ளது.

collage1_13310.jpg

உங்கள் மொபைலில் பீட்டா பதிப்பை இன்ஸ்டால் செய்வது எப்படி?

உங்கள் மொபைலில் கூகுள் பிலே ஸ்டோருக்கு செல்லவும். அதில் வாட்ஸ் அப்பின் பக்கத்தை திறக்கவும். அதன் கீழ்ப்பகுதி வரை சென்றால் “Became a beta tester” என்னும் ஆப்சன் இருக்கும். அதன் கீழே இருக்கும் I’M IN என்னும் ஆப்சனை கிளிக் செய்வதன் மூலம் ஒரு சில நிமிடங்களில் நீங்கள் வாட்ஸ் அப்பின் பீட்டா பயன்பாட்டாளராக மாறிவிடுவீர்கள்.

பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்: 

முன்னோட்ட பதிப்பு பயன்பாட்டாளர்களுக்கு அந்த குறிப்பிட்ட ஆப்பின் வருங்கால வசதிகள் முன்னரே கிடைக்கும் என்றாலும் அதில் சில சிக்கல்களும் உள்ளன. அதாவது உங்கள் ஆப்பானது எதிர்ப்பார்க்காத சமயத்தில் கிராஷ் அல்லது சரியாக பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. எனவே உங்கள் பயன்பாட்டு தகவல்களை “கிளவுட் ஸ்டோரேஜில்” பேக்கப் செய்துகொள்வது மிகவும் அவசியமானது.

வாட்ஸ் அப்பின் முன்னோட்ட பதிப்பை பயன்படுத்துவதற்கு தயக்கமோ/ சிக்கலோ இருந்தால் சில வாரங்கள் காத்திருங்கள், ஏனெனில் பொது மக்களுக்கான முழு பதிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

http://www.vikatan.com/news/information-technology/70580-whatsapp-will-soon-have-video-calling-now-available-for-beta-version.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??  
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.