Jump to content

மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?


Recommended Posts

மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?
 
 

article_1477415486-prujoth.jpgயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வாரம் பொலிஸாரினால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது, தமிழ் மக்களைப் பெரும் கவலைக்கும் அதிர்வுக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. பெரும் படுகொலைக் களங்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வந்திருக்கின்ற மக்கள் என்கிற ரீதியில், ஒவ்வொரு உயிரையும் தக்க வைப்பதற்கான தமிழ் மக்களின் போராட்டம் மிகப் பெரியது. அப்படிப்பட்ட நிலையில்தான், பொலிஸாரின் அதிகார அத்துமீறலின் நிமித்தம் இரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றன. 

மிகவும் உணர்ச்சிகரமான நாட்கள் இவை! மிக உச்சமானதும் உன்னதமானதும் சந்தர்ப்பங்களில்கூட, எந்தவொரு காரணத்துக்காகவும் எதிர்காலத்தில் எந்தவொரு உயிரும் இழக்கப்படக் கூடாது என்பதில் தமிழ்த் தாய்மார்கள் மிகக் கவனமாகவும் பதற்றமாகவும் இருக்கின்றார்கள். தாய்மார்களின் பதற்றத்தையும் கவலையையும் இந்த இடத்தில் அடிக்கோடிட்டுச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவையொன்றைச் சில தரப்புக்கள் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகின்றன.  

அரசியல் போராட்டமொன்றை எவ்வாறு திட்டமிடுவது? இலக்கினை நோக்கிய பாதையை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்கிற எந்தவித அடிப்படைகளும் சிந்தனைகளும் இன்றிக் கொடைகளும் அர்ப்பணிப்புக்களும் மாத்திரம் எல்லாவற்றையும் பெற்றுத்தரும் என்கிற நிலைப்பாட்டில் அந்தத் தரப்புக்கள் இன்னமும் இருந்து வருகின்றன. அப்படியான தரப்புக்களுக்குள் இருக்கின்றவர்கள், மிகவும் உணர்ச்சியூட்டக் கூடிய சம்பவங்களுக்காக கண்களை மூடாது காத்திருக்கின்றனர். ஏனெனில், அதுதான் அவர்களின் போராட்டம் பற்றிய பற்றுறுதியை வெளிப்படுத்தும் தருணங்கள் என்று நம்புகின்றார்கள். 

அரசியல் அதிகாரங்களுக்கான போராட்டங்களில் தமிழ் மக்கள் அதியுச்ச உணர்வு வெளிப்பாட்டினையும் கொடைகளையும் பார்த்து விட்டார்கள். இப்போது, இருக்கின்ற சூழலுக்கு ஏற்ப விடயங்களை உள்வாங்கி, பிரதிபலிக்க வேண்டிய தேவையொன்று தம்மீது திணிக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் தெளிவாக உணர்ந்திருக்கின்றார்கள். தமது பாரம்பரிய பூமியில் நின்று நீடித்திருப்பதற்கான அரசியலை மிகவும் தெளிவாகத் திட்டமிட வேண்டிய புதிய ஆரம்பத்தில் தாம் இருப்பதையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். அது, வெற்று உசுப்பேற்றல்களுக்கு அப்பாலானது என்பதிலும் விழிப்போடு இருக்கின்றார்கள். 

அப்படியாயின், தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எதிர்வினையாற்றாமல் அடங்கி ஒடுங்கிப் போய்விடுவதுதான் அரசியல் தெளிவின் பாற்பட்ட இராஜதந்திரமா என்கிற கேள்வி முன்வைக்கப்படலாம். இல்லை! நிச்சயமாக இல்லை! ஆனால், எந்தவிதத் திட்டமிடலும் இன்றிய அரசியல், இன்னும் இன்னும் மோசமான பக்கங்களை எங்களை நோக்கிக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதுதான், இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம். ஆக, நிறைவான புரிந்துணர்வும் அரசியல் குறித்த தெளிவும் திட்டமிடலும் விடயங்களைப் பதற்றமின்றிக் கையாளும் திறனும் அவசியமாகின்றன. 

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினதும் படுகொலை இன அழிப்பின் தொடர்ச்சி, அதற்கு எதிராகப் போராட வேண்டும் என்கிற கோரிக்கைகள் கடந்த நாட்களில் சிலரிடமிருந்து பலமாக எழுந்தன. அதனை, முதன்மைப்படுத்த மறுத்தவர்களுக்கு எதிரான விமர்சனங்களும் அதிகமாக இருந்தன. இங்கு யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்கிற ரீதியில் அவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவைதான். ஆனால், யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை விடயத்தில் எங்கிருந்து ஆரம்பித்து எங்கு செல்ல வேண்டும் என்பதுதான் அடிப்படைக் கேள்வி. ஏனெனில், ஓர் அடையாளத்தினை அந்தப் படுகொலைகள் மீது திணிப்பதானது, அதன் ஆரம்பக் கட்ட நீதியையே குழிதோண்டிப் புதைத்துவிடும் சூழலை உருவாக்க வல்லன. அப்படிப்பட்ட நிலையில், ஆரம்பக் கட்ட நீதிக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத்தான் அடுத்த கட்டங்களை நோக்கி நகர முடியும். 

அது, எவ்வாறாக இருக்க முடியும் என்றால்? நூறு படிகள் கொண்ட குன்று ஒன்றின் மீது ஏறுவதற்கு ஆரம்பத்தில் முதலாவது படியில் கால் வைக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே 67 ஆவது படியில் கால் வைத்து இலக்கினை அடைவது குறித்து நம்பிக்கை கொள்ள முடியாது. படிப்படியாகவே இறுதி இலக்கை அடைய வேண்டும். ஆரம்பத்திலேயே 67 ஆவது படியில் கால் வைக்க முயன்றால், அது பெரும் உபாதைகளை வழங்கி, வீழ்ந்துவிட வைக்கும். அது, சிலவேளை திரும்பவும் முதலாவது படியில் கால் வைக்கவே முடியாத நிலையை உருவாக்கி விடலாம். அதுதான், மாணவர்களின் படுகொலை தொடர்பில் முதலில் ஆரம்பக் கட்ட நீதியைப் பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிற விடயம் முதன்மை பெறுகின்றது.  

முதலில், மாணவர்களின் படுகொலைக்குக் காரணமான பொலிஸார் தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதுதான், ஆரம்பக் கட்ட நீதியாக இருக்க முடியும். அங்கிருந்து அடுத்த படியில் காலை வைக்க வேண்டும்.  

தங்களுடைய சகபாடிகளின் படுகொலைக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் வழங்கப்பட்ட மகஜரும் கவனம் பெறுகின்றன. 

‘போருக்குப் பிந்திய சூழலில் இடம்பெற்றுள்ள இக்கொலைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தையும் முழுத் தமிழ்ச் சமூகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இக்கொலைகள் தொடர்பான விசாரணைகள் முழுமையாக நடைபெற்றுச் சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவது இயல்புநிலை மீளுருவாக்கத்துக்கு மிகவும் அத்தியாவசியமானதாகும்.’ என்கிற விடயத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மகஜரின் ஒரு பகுதி வலியுறுத்துகின்றது. அத்தோடு, ‘மனித உரிமை ஆணைக்குழு உள்ளுர், சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை இவ்வழக்கின் நீதி விசாரணையை முழுமையாக அவதானிக்க வேண்டும்.’ என்றும் ‘இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு முழுமையாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் இழப்பீடும் அக்குடும்பத்தின் இயல்பு வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மாதாந்தக் கொடுப்பனவும் வழங்கப்பட வேண்டும்.’ என்றும் கோரியிருக்கின்றது. 

தமிழ்த் தேசியப் போராட்டங்களின் நீட்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் பங்களிப்பினைத் தவிர்த்துப் பார்க்க முடியாது. அது, பெரும் எழுச்சிகளை மூர்க்கமாக வடிவமைத்திருக்கின்றது; பங்களித்துள்ளது. அது, அந்தந்தக் காலத்தின் தேவையாகவும் இருந்திருக்கின்றது. ஆனால், எல்லாக் காலத்திலும் மூர்க்கமான எழுச்சிகள் மாத்திரமே போராட்டத்தின் நீதிக் கோரிக்கையின் வடிவங்களாக முன்னிறுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதனைத் மிகவும் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கின்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், தமது சகபாடிகளின் படுகொலைக்கு எதிரான ஆரம்பக் கட்ட நீதிக்கான கோரிக்கைகளை மிகவும் புத்திசாதுரியமான வடிவில் முன்வைத்திருக்கின்றார்கள். அது, தமிழ் மாணவர்கள் என்கிற தனி அடையாளத்தினை அதன் மீது ஒட்டுமொத்தமாக திணிப்பதிலிருந்து தவிர்த்து தென்னிலங்கையிலிருந்தும் இன, மத வேறுபாடுகளைத் தாண்டி, படுகொலைகளுக்கு எதிராக மாணவர்களைக் களத்துக்கு இழுத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்திருக்கின்றது. அது, ஆரோக்கியமான வடிவமாகும். மாறாக, தனி அடையாளத்தினை முன்னிறுத்தல் என்பது யாழ். பல்கலைக்கழக மாணவர்களை தனிமைப்படுத்தியிருக்கும். அது, தமிழ் மக்களுக்கு எதிரான ஆயிரமாயிரம் படுகொலைகளில் ஒன்றாகத் தென்னிலங்கையைக் கருத வைப்பதில் வெற்றிகண்டு, விடயத்தைச் சிக்கலாக்கியிருக்கும். அது, ஆரம்பக் கட்ட நீதியை அடையும் வழிகளையும் அடைத்திருக்கும். 

அத்தோடு, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது சகபாடிகளின் படுகொலைகளுக்கு எதிரான போராட்டத்தின் மீது எந்தவொரு கட்சியின் அடையாளமும் விழக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கின்றார்கள். அதற்காகச் சில விடயங்களைத் தயவு தாட்சண்யம் இன்றிச் செய்திருக்கின்றார்கள். அதாவது, படுகொலையான மாணவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகளில் அரசியல்வாதிகளை உரையாற்றுவதிலிருந்து நீக்கி, விடயத்தை தம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக வைத்திருக்கின்றார்கள். இது, விடயங்களை ஒட்டு மொத்தமாக உணர்வுபூர்வமாக மாத்திரம் கையாள வேண்டும் என்கிற நிலைக்கும் அப்பால் புத்திசாதுரியமான கையாள்கை பற்றிய நம்பிக்கைகளின் பிரகாரம் நிகழ்ந்திருக்கின்றது. அரசியல் கட்சிகளுக்கோ, அதன் பிரதிநிதிகளுக்கோ படுகொலைகளுக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கோ, எதிர்வினையை ஆற்றுவதற்கோ உரிமையில்லையா என்கிற கேள்வி எழலாம். இங்கு, அநீதிகளுக்கு எதிராக எழுவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால், அவரவர் அந்தந்த இடங்களிலிருந்துகொண்டு அதற்கான நிகழ்வுகளை ஆற்ற வேண்டும். அந்த வகையில், தேவையற்ற உசுப்பேற்றல்களைத் தாண்டிப் பெரும் உணர்வுபூர்வமான விடயத்தினை மிகவும் தெளிவாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கையாண்டிருக்கின்றார்கள். 

ஆனால், யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் இந்த நிதானமாக செயற்பாடு சில தரப்புக்களுக்கு ஒரு மாதிரியான எரிச்சலை ஏற்படுத்தியிருக்கின்றது. வெளிப்படையாகக் சொல்ல வேண்டும் என்றால், கொலைகளின் மீது தமது சுய அரசியல் நிகழ்ச்சி நிரலைத் திட்டமிடும் குறுகிய நோக்கம் கொண்ட சிறுநரிகளுக்கு ஏமாற்றமளித்திருக்கின்றது. 

நீதிக்கான கோரிக்கைகளும் உரிமைப் போராட்டத்தின் மீதான பற்றுறுதியும் தமிழ் மக்களிடம் தாம் சந்தித்து விட்ட பெரும் இழப்புக்குப் பின்னாலும் மங்காமல் இருக்கின்றது. ஆனால், அது உசுப்பேற்றல்களுக்கு அப்பாலான நிலைப்பாட்டினை தற்போது குறிப்பிட்டளவில் அடைந்திருக்கின்றது என்றும் கொள்ள முடியும். இந்தப் பத்தி, தென்னிலங்கையின் இன ஒடுக்குமுறைகளைச் சுட்டிக்காட்டவில்லை என்று யாராவது சுட்டலாம். எல்லா நேரங்களில் எதிரிகள் பற்றியே பேசிக் கொண்டிருக்க முடியாது. சில நேரங்களில் எங்களுக்குள் இருக்கின்ற சிறுநரிகளையும் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும். அதுவும், மிகவும் தெளிவாகச் சிந்தித்துப் போராட வேண்டிய தருணத்தில் இருக்கின்ற சமூகத்துக்கு மிகவும் அவசியானது.     

http://www.tamilmirror.lk/184748/ம-ணவர-கள-பட-க-ல-ந-த-க-க-ன-அட-வ-எங-க-ர-ந-த-ஆரம-ப-க-க-வ-ண-ட-ம-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆதவன் இணையம் லைக்காதானே . கூகிளில் தேடியபோது வேறு இணையம்களில் அந்த செய்தி காணவில்லை என் தேடுதல் பிழையோ .
    • அக்கறை இருந்தால் தானே கண்டனங்கள் வரும்... 😆
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்? Apr 15, 2024 13:23PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் டாக்டர் பிரேம்குமார் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.என்.வேணுகோபால் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெ.ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார்? என்ற கேள்வியினை பரவலாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  மதுரவாயல்,  அம்பத்தூர்,  ஆலந்தூர்,  பல்லாவரம்,  தாம்பரம்,  ஸ்ரீபெரும்புதூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெ.ரவிச்சந்திரன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இந்த முறையும் டி.ஆர்.பாலு வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-sriperumpudhur-constituency-dmk-tr-balu-wins-admk-premkumar-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: கரூரை கைப்பற்றப் போவது யார்? Apr 15, 2024 14:36PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணிமீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தங்கவேல் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் ரெ.கருப்பையா போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கரூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான வேடசந்தூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர்,  விராலிமலை மற்றும் மணப்பாறை  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் கரூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தங்கவேல் 32% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரெ.கருப்பையா 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கரூர் தொகுதியில் இந்த முறையும் ஜோதிமணி வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-congress-candidate-jothimani-will-win-with-43-percent-votes-in-karur-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: கிருஷ்ணகிரி… சிகரம் ஏறுவது யார்? Apr 15, 2024 16:30PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்கே.கோபிநாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயபிரகாஷ் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நரசிம்மன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரப்பனின் மகளானவித்யாராணி வீரப்பன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகியவற்றில்   நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் 43% வாக்குகளைப் பெற்று கிருஷ்ணகிரி தொகுதியில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் நரசிம்மன் 20% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… கிருஷ்ணகிரி தொகுதியில் இந்த முறை கே.கோபிநாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-gopinath-wins-43-percentage-votes-in-krishnagiri-constituency-admk-jayaprakash-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பெரம்பலூர் ரேஸில் வின்னர் யார்? Apr 15, 2024 18:57PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? பெரம்பலூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  தமிழ்நாட்டின்  வளர்ந்து வரும் தொகுதிகளில் முக்கியமானது,  கிராமங்களை அதிகம் கொண்டபெரம்பலூர். இங்கே  திமுக சார்பில்  அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் மகன்அருண் நேரு முதல் முறையாக களமிறங்கியிருக்கிறார். அதிமுக சார்பில் சந்திரமோகன் போட்டியிட,   பாஜக கூட்டணியில் சிட்டிங் எம்.பி. ஐஜேகே நிறுவனர்பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி களத்தில் இருக்கிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய வேட்பாளர்களுக்கு  இடையில் மும்முனைப்  போட்டி நிலவும் நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது உங்கள் பார்வைக்கு.., பெரம்பலூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான பெரம்பலூர், துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, குளித்தலை தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  திமுக வேட்பாளர்  அருண் நேரு 50% வாக்குகளைப் பெற்று பெரம்பலூர் மக்களின் பிரதிநிதியாகநாடாளுமன்றம் செல்லத் தயாராகிறார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 24% வாக்குகளையும்,  பாஜக கூட்டணி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் 21% வாக்குகளையும் பெற்று இரண்டாம் இடத்துக்குகடுமையாக மோதுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… பெரம்பலூரில் இம்முறை திமுகவின் கொடியே பிரகாசமாக பறக்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-perambalur-constituency-dmk-arun-nehru-wins/   மின்னம்பலம் மெகா சர்வே: மயிலாடுதுறை… வெற்றி அறுவடை யாருக்கு? Apr 15, 2024 20:20PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..?   டெல்டா மண்டலத்தின் விவசாயக் களஞ்சியமான மயிலாடுதுறை  தொகுதியில் தேர்தல் வெற்றியை அறுவடை செய்யப் போவது யார்? டெல்டா மாவட்டங்களின் முக்கிய தொகுதியான மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில்காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா களம் காண்கிறார்.  அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.பவுன்ராஜின் மகன் பாபு போட்டியிடுகிறார்.  பாமக சார்பில் ம.க.ஸ்டாலின் போட்டியிட, நாம் தமிழர் சார்பில் பலராலும் அறியப்பட்ட காளியம்மாள்  களம் காண்கிறார்.   டெல்டா மாவட்டத்தின் செழிப்பான  மயிலாடுதுறை தொகுதியில் போட்டி,  திமுக கூட்டணியின்காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் இடையில்தான் தீவிரமாக இருக்கிறது. களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக  மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி  மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.    18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட  சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகவும் மக்களிடம் மின்னம்பலம்நடத்திய சர்வேயின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் சுதா 45% வாக்குகள் பெற்று மயிலாடுதுறையில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் பாபு 26% வாக்குகளோடு இரண்டாவது இடத்திலும்,  பாஜக கூட்டணியின் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 19% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும்பெறுகிறார்கள்.   நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 9% வாக்குகளைப் பெறுகிறார். 1% வாக்காளர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர். ஆக மயிலாடுதுறையில் வெற்றியை காங்கிரஸே அறுவடை செய்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-dmk-allaiance-congress-candidate-sudha-won-in-myladudhurai-constituency/
    • சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே  மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள்  அறிய ஆவலாக உள்ளேன்.  முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும்  படங்களையும் இணைக்கலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.