Jump to content

பின்னால் இருந்து துப்பாக்கி சூடு...! முன்னால் இருந்தவருக்கு சூடு பட்டது எப்படி..? யாழ். மாணவர்கள் மரணத்தில் மறைப்படும் உண்மைகள்


Recommended Posts

இருவர் அமர்ந்து சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால், பின்னால் இருந்தவருக்கு சூட பட்டிருக்க வேண்டும்.எனினும், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் மீது எவ்வாறு குண்டு பாய்ந்திருக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.

23/2 நிலையியற் கட்டளையின் கீழ், நேற்று பாராளுமன்றில் கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் வீதி விபத்தில் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், மறுநாள் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தெரியவந்தது.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருந்தது. எனினும், பின்னால் இருந்து சென்றவர் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் உத்தரவிட்டபோதும், நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகப் பொலிஸர் தற்பொழுது தமது நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

சட்டத்துக்கு முரணான பொலிஸாரின் இந்த நடவடிக்கையை கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், குறித்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிறுத்தாமல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தால் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு பட்டிருக்க வேண்டும். எனினும், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் மீது எவ்வாறு குண்டு பாய்ந்தது என்ற உண்மை பக்கச்சார்பற்ற விசாரணைகளில் கண்டறியப்பட வேண்டும் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.tamilwin.com/special/01/122285?ref=home

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன சொல்லவாறார்.. பொலிஸ் ஓட விட்டிட்டு.. சுட்டிருந்தால்.. பின்னால் இருந்தவருக்கு தான் வெடி பட்டிருக்கும்.. இது அவர்களே தங்களை தாங்களே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.... அப்படின்னா..

இரத்தக் கறை படியாத மனுசன்.. எப்படி இப்படியான இரத்தக் கறை படிந்த சம்பவங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து பேசுறார்... வியப்பாக் கிடக்கு.  :rolleyes:tw_angry:

 

Link to comment
Share on other sites

சம்பந்தனை என்ன தான் கேலி செய்தாலும் இந்த மாணவர்களின் படுகொலை விடயத்தில் சம்பந்தன் மேற்கொண்ட உடனடி முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கஜனும் தான்.. அறிக்கை விட்டவர். அவரும் பாராட்டுதலுக்குரியவர் ஆகிட்டாரோ.

ஒரு சம்பவம் நடக்க முதல் தடுப்பது தான் அரசியல் சாணக்கியமே தவிர.. நடந்த பின் அறிக்கை விட்டு சமாளிப்பது.. அல்லது படுகொலையாளர்களை காலப் போக்கில் தப்பிக்க விடுவது.. அரசியல் சாணக்கியமோ.. விவேகமோ கிடையாது. பக்கா.. சந்தர்ப்பவாதம். tw_angry::rolleyes:

Link to comment
Share on other sites

Just now, nedukkalapoovan said:

அங்கஜனும் தான்.. அறிக்கை விட்டவர். அவரும் பாராட்டுதலுக்குரியவர் ஆகிட்டாரோ.

ஒரு சம்பவம் நடக்க முதல் தடுப்பது தான் அரசியல் சாணக்கியமே தவிர.. நடந்த பின் அறிக்கை விட்டு சமாளிப்பது.. அல்லது படுகொலையாளர்களை காலப் போக்கில் தப்பிக்க விடுவது.. அரசியல் சாணக்கியமோ.. விவேகமோ கிடையாது. பக்கா.. சந்தர்ப்பவாதம். tw_angry::rolleyes:

இந்த படுகொலை விடயத்தில் இங்கு நடப்பவை, நடந்தவை தெரியாமல் கருது எழுதுவது விவேகத்துக்குரிய செயல் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, போல் said:

இந்த படுகொலை விடயத்தில் இங்கு நடப்பவை, நடந்தவை தெரியாமல் கருது எழுதுவது விவேகத்துக்குரிய செயல் இல்லை.

எல்லாப் படுகொலைகளும் இப்படித்தான் சொல்லப்பட்டு.. மறைக்கப்பட்டு வருகின்றன.. அல்லது மறக்கடிக்கப்பட்டு வருகின்றன. நீங்கள்... இதனை இப்போ செய்வது.....???????!:rolleyes:

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவை.. பக்கச் சார்பற்ற நீதி விசாரணையும்... நீதியும்.. நிரந்தரப் பாதுகாப்பும்.. நிம்மதியும். சமாளிப்புகளும்.. அறிக்கைகளும் அல்ல. 

Link to comment
Share on other sites

சம்பந்தருக்கு ஒரு அமைச்சர் ஆகாயத்தை நோக்கி சுட்டது தான் தவறாக மாணவர் மீது விழுந்ததாக சொல்லி இருக்கிறார்.இது கூட தெரியாமல்........
 

Link to comment
Share on other sites

குண்டு ஒரு மாணவருக்கு பட்டு இறந்ததாகவும் காயப்பட்ட மற்றவர் அடித்து கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதனை அயலவர்கள் கண்டதாகவும் கூறப்படுகிறது.:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானத்தை நோக்கி சுட்ட குண்டு

நிலத்தில் விழும்போது மோட்டார்சைக்கிளை ஓடியவரின் நெஞ்சிலே விழுந்திருக்கலாம் -  சிறீலங்கா சட்ட மற்றம் நீதி அமைச்சர்.

Link to comment
Share on other sites

மாணவர்கள் படுகொலைக்கு பின்னால் வெளிச்சக்திகளா? சுமந்திரன் எம்.பி கேள்வி

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னால் வேறு ஏதாவது சக்திகள் இயங்கியிருந்தால், அதனை வெளிச்ச த்திற்கு கொண்டு வருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார்.

மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்தை ஒரு வீதி விபத்து என வர்ணித்து, மூடி மறைக்க முயற்சித்த பொலிஸாரின் செயற்பாட்டி ற்கும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை பொலிஸார் ஏன் மூடி மறைக்க முனைந்தார்கள் என்பது பாரியதொரு கேள்வியாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்கள் ஓடி ஒழிக்கப் பார்த்ததாகவும், மோட்டார் சைக்கிளை மறித்த போது நிறுத்தவில்லை, அதனாலேயே சுட்டோம் என பொலிஸார் கூறுவதிலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓடுபவர்களுக்குப் பின்னால் இருந்து சுட்டால், வாகனம் ஓட்டியவருக்கு எவ்வாறு முன்னால் துப்பாக்கி சூடுபட்டது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தை முழுமையாக ஆராய்ந்து, இதற்கு பின்னால் வேறு சூழ்ச்சிகள் உள்ளதா? ஏன் இவ்வாறு பொலிஸார் நடந்து கொண்டார்கள் என்ற கேள்விகளுக்கு பதில் தேவையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் படுகொலைச் சம்பவத்தை சாதாரண விடயமாக எடுத்துவிட முடியாது எனக் குறிப்பிட்ட எம்.ஏ. சுமந்திரன், இதற்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன்நிறுத்தும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான பங்களிப்பை வழங்கும் என்றும் குறிப்பிட்டு ள்ளார்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் வட மாகாணத்தில் பொலிஸாரை வீதியில் காண முடியாது உள்ளதாகவும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணச் சடங்கின் போது, வீதியால் பெருந்தி ரளான மக்கள் சென்ற போதும் கூட, பொலிஸார் எவரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடவி ல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது கண்டிக்கத்தக்க விடயம் எனக் குறிப்பிட்ட எம்.ஏ. சுமந்திரன், பொலிஸார் தங்களுடைய கடமையில் ஈடுபடாமல் இருப்பதற்கு, இதற்கு பின்னால் ஏதாவது சிந்தனைகள் இருக்கி ன்றதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்றும் பொலிஸ் மாஅதிபர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/122364?ref=home

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கேள்வி படும் கதைகளை வைத்து பார்க்கும்போது 
மாணவர்கள் மீதுதான் பிழை என்று தெரிகிறது.

போலீசார் சடடத்தையும் தமிழரையும் பாதுகாப்பதில் 
கண்ணும் கருத்துமாக இருந்து இருக்கிறார்கள். 

பின்னால் இருந்தவர் தனது உடலில் பாய்ந்த குண்டை 
எடுத்து முன்னால் இருந்தவரின் உடலில் வைச்சு அமத்தி இருக்கவும் 
சாத்தியம் உண்டு.

வழக்கு விசாரணையில் இருப்பதால் மேல்கொண்டு 
எழுதுவது சரியாக தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Maruthankerny said:

இங்கு கேள்வி படும் கதைகளை வைத்து பார்க்கும்போது 
மாணவர்கள் மீதுதான் பிழை என்று தெரிகிறது.

போலீசார் சடடத்தையும் தமிழரையும் பாதுகாப்பதில் 
கண்ணும் கருத்துமாக இருந்து இருக்கிறார்கள். 

பின்னால் இருந்தவர் தனது உடலில் பாய்ந்த குண்டை 
எடுத்து முன்னால் இருந்தவரின் உடலில் வைச்சு அமத்தி இருக்கவும் 
சாத்தியம் உண்டு.

வழக்கு விசாரணையில் இருப்பதால் மேல்கொண்டு 
எழுதுவது சரியாக தெரியவில்லை. 

ம்ம்ம்

நானும் அப்டித்தான் நினைக்கின்றேன்

மற்றவரது இழப்பு மோட்டார் சைக்கிள் இரும்பினால் ஆனதால் நடந்திருக்கிறது

இனி  பஞ்சினால்செய்தால் மக்களை இவ்வழிவிலிருந்து காக்கலாம்...

இந்த துக்கம் காரணமாக 5 பொலிசாருக்கும் இதயவலி ஏற்பட்டதாகவும் தகவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்தினம் வருதெல்லே.....அதுதான் ஏதும் முன்னேற்பாடாய்  வெருட்டி அடக்க வெளிக்கிட்டாச்சோ தெரியேல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

மாவீரர்தினம் வருதெல்லே.....அதுதான் ஏதும் முன்னேற்பாடாய்  வெருட்டி அடக்க வெளிக்கிட்டாச்சோ தெரியேல்லை..

ஆனால் இந்தமுறை

மாவீரர் நாள் அவர்களுக்கு மட்டுமல்ல

இங்கும் பலருக்கும் பதில் சொல்லும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய சிதம்பர ரகசியம் ஒன்றுமில்லை...பொலீஸ் மறிக்கும் போது அவர்கள் நிற்கவில்லை... அவர்களை தங்கட மோ.சைக்கிளில் துரத்தி வந்த பொலீஸ் ஓவர் டேக் பண்ணி நெஞ்சில சுட்டு இருக்க்கிறார்கள்.

நேற்று ஒரு செய்தி வாசித்தேன்.அமெரிக்காவில் ஒரு பெண் அதுவும் ஜந்து மாதக் கர்ப்பிணிப் பொலிசால் சுட்டுக் கொல்லப்பட்டாராம்.அவரது குழந்தைகளுக்கு முன்னாலேயே அவர் சுட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். அவர் தனது பிள்ளைகளை துவக்கைக் காட்டி பயமுறுத்திக் கொண்டு இருந்தாராம்...ஏன் அந்தப் பெண்ணை சுடாமல் பொலீசாரால் அக் குழந்தைகளை காப்பாற்றி இருக்க முடியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

பெரிய சிதம்பர ரகசியம் ஒன்றுமில்லை...பொலீஸ் மறிக்கும் போது அவர்கள் நிற்கவில்லை... அவர்களை தங்கட மோ.சைக்கிளில் துரத்தி வந்த பொலீஸ் ஓவர் டேக் பண்ணி நெஞ்சில சுட்டு இருக்க்கிறார்கள்.

நேற்று ஒரு செய்தி வாசித்தேன்.அமெரிக்காவில் ஒரு பெண் அதுவும் ஜந்து மாதக் கர்ப்பிணிப் பொலிசால் சுட்டுக் கொல்லப்பட்டாராம்.அவரது குழந்தைகளுக்கு முன்னாலேயே அவர் சுட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். அவர் தனது பிள்ளைகளை துவக்கைக் காட்டி பயமுறுத்திக் கொண்டு இருந்தாராம்...ஏன் அந்தப் பெண்ணை சுடாமல் பொலீசாரால் அக் குழந்தைகளை காப்பாற்றி இருக்க முடியாதா?

அமெரிக்கா பெண் துவக்கு வைத்திருந்தவ .....ஆனால் பெடியள் (இரண்டு எழுத்து பெடியள் அல்ல)என்ன வைத்திருந்தவையள் பொலிஸார் முன்னால் வந்து சுடுவதற்கு ....இப்படி நான் கேட்கவில்லை.... சம்பந்தன் கேட்ககூடும்tw_tounge_wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.