Jump to content

2006 - 2016 தீபாவளி ரிலீஸ் படங்கள்... ஒரு ஹிட் ரன்!


Recommended Posts

2006 - 2016 தீபாவளி ரிலீஸ் படங்கள்... ஒரு ஹிட் ரன்!

ந்த வருட தீபாவளி ரிலீஸ் வரிசையில் கொடி, காஷ்மோரா, கத்திசண்டை, சைத்தான், கடவுள் இருக்கான் குமாரு என ஐந்து படங்கள் வரிசையில் நின்றன. கடைசியில் மூன்று படங்கள் விலகிக் கொள்ள இப்போது கொடி, காஷ்மோராவுடன், கடலை, திரைக்கு வராத கதை இணைந்திருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் தீபாவளி ரிலீஸ் ஆக என்னென்ன படங்கள் வந்திருக்கிறது என ஒரு க்விக் ப்ரிவ்யூ இதோ...

2006:

Diwali%20release_10481.jpg

எதிர்பார்த்தது போலவே ஹிட்டானது 'வரலாறு' தான். பயோவார் பயங்கரம் பற்றிய செய்தியோடு வந்த 'ஈ' விமர்சனங்களில் அதிகம் கவனம பெற்றது. அஃபீஷியலாக சிம்பு இயக்குநராக அறிமுகமான 'வல்லவன்', சரண் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'வட்டாரம்' இரு படங்களும் நல்ல வசூலைப் பெற்றது. புரட்சிக்கலைஞரின் தர்மபுரி, சுப்ரீம்ஸ்டாரின் தலைமகன் இரண்டுமே படு தோல்வி அடைந்தது.

2007:

Diwali%20release2%20%281%29_10040.jpg

முதன் முறையாக இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கும் படம் என அதிக எதிர்பார்ப்பு இருந்தது என்னவோ 'அழகிய தமிழ்மகன்' படத்துக்கு தான். ஆனால்,  ஹிட்டானது ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த வேல். இதே நாளில் தான் வெற்றிமாறன் எனும் மகத்தான கலைஞனின் வருகையும் நிகழ்ந்தது. தனது பொல்லாதவன் என்ற கமர்ஷியல் மெட்டீரியல் மூலம் களம் இறங்கி கவனம் பெற்றார். படமும் நல்ல ஹிட். கண்ணாமூச்சி ஏனடா, மச்சக்காரன் படங்கள் வெற்றி பெறவில்லை.

2008:

Diwali%20release3_10221.jpg

பில்லா என்ற ப்ளாக்பஸ்டருக்குப் பின் அஜித் நடிக்கும் படம், ராஜுசுந்தரம் இயக்கும் படம் என ஏக எதிர்பார்ப்புகள் பெற்றது ஏகன். ஆனால் இப்போது வரை இயக்குநருக்கு இதுவே கடைசி படமாகவும் அமைந்தது பட ரிசல்ட்டின் எதிரொலி. இந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டரான 'மெய்ன் ஹூ நா' படத்தின் ரீமேக் தான் ஏகன். சென்ற தீபாவளில் எகிறி அடித்த ஹரியும் இந்த தீபாவளியில் சேவல் மூலம் பல்ப் வாங்கினார். ஆனால் படித்தவுடன் கிழித்துவிடவும் காமெடி மட்டும் சேனல்களில் ரிப்பிட் அடித்தது வடிவேலுவின் மேஜிக்.

2009:

Diwali%20release4_10423.jpg

நடிகர் ரமேஷ் கண்ணா கதையை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். சூர்யா, நயன்தாரா, வடிவேலு, முக்கிய வேடத்தில் சரோஜா தேவி என படத்தின் ஒவ்வொரு செய்தியும் 'ஆதவன்' படத்துக்காக அடித்தளத்தை ஆடியன்ஸ் மனதில் போட்டு வைத்திருந்தனர். படத்துக்கு மிகப் பெரிய ஓப்பனிங்கும் கிடைத்தது. சூர்யாவின் முந்தைய படமான அயன் இதற்கு ஒரு மைலேஜாக இருந்தது. வசூலில் நல்ல லாபமும் பெற்றது படம். இதேவேளையில் காடு, தீவிரவாதம், "சாக்பீஸ்ல இருந்து உழைப்ப கழிச்சிட்டா வெறும் சுண்ணாம்பு தான் மிஞ்சும்" என பேராண்மையின் ஒவ்வொரு ஷோவிலும் ஜெயம் ரவி ரூபத்தில் லெக்சர் கொடுத்துக் கொண்டிருந்தார் ஜெனநாதன். இருந்தும் இந்த விளக்கங்கள், அவரது திரைபாணி சாமானிய ஆடியன்ஸுக்கும் பிடித்திருந்ததால் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியிலும் நல்ல கவனம் பெற்றது.

2010:

Diwali%20release5_11141.jpg

பிரபுசாலமனை தேசத்தின் கிராமங்கள் தொடங்கி தேசிய விருது வரை அழைத்துச் சென்றது மைனா. இமானின் இன்னொரு வெர்ஷன் இசையை காட்டியதால் படம் அவருக்கும் மிக முக்கியமானது. படத்தின் சென்டிமெண்ட்கள், நெகட்டிவ் க்ளைமாக்ஸையையும் தாண்டி ரசிகனைக் கவர்ந்தது. தெலுங்கு ரெடி தமிழில் 'உத்தமபுத்திரன்'ஆக ரெடியாகி ஆவரேஜ் ஹிட்டடித்தது. வெங்கடேஷின் கமர்ஷியல் 'வல்லகோட்டை', புஷ்கர் காயத்ரியின் புதிய ட்ரீட் மெண்ட்டான 'வ' படமும் எடுபடாமல் ஒதுங்கிக் கொண்டது.

2011:

Diwali%20release6_11397.jpg

சூப்பர்ஹீரோவாக விஜய் என வேலாயுதத்துக்கும், போதிதர்மனாக சூர்யா என ஏழாம் அறிவுக்கும் பலத்த எதிர்ப்பு இருக்கவே செய்தது. இடையில் 'பாப்பா தள்ளிப்போய் விளையாடு' என ட்விட்டர் தகராறுகளும் நிகழ்ந்தது. போதிதர்மன் போர்ஷனில் இருந்த சுவாரஸ்யம் படம் முழுக்க மிஸ்ஸாக ஏழாம் அறிவு கொஞ்சம் தொய்வடைந்தது. ஆனால், பாட்டு, ஃபைட்டு, காமெடி என சரிவிகித காம்போவாக வந்து இறங்கிய வேலாயுதம் ஹிட்டானது. 

2012:

Diwali%20release7_11563.jpg

100 கோடி க்ளப்பிள் இணைந்த முதல் தமிழ் படம், விஜய்யின் கெரியரிலேயே மிகப்பெரிய ஹிட், வேற லெவல் இயக்குநரான முருகதாஸ் என 'துப்பாக்கி' காட்டி கோலிவுட்டையே கலக்கினார் முருகதாஸ். துப்பாக்கி சத்தத்துக்க்கு நடுவில் வந்த சுவடே இல்லாமல் பிறகு லேட் பிக்கப்பாகி ஆவரேஜாக ஓடியது போடா போடி.

2013:

Diwali%20release8_11151.jpg

மாஸ் படம் ஆரம்பம், காமெடி படம் அழகுராஜா என இரண்டுக்கும் டிக்கெட் புக்கிங்கில் பிஸியாக இருந்தார்கள் ரசிகர்கள். ஆனால், ஆச்சர்யப்படும்படி கவனம் கவர்ந்தது சுசீந்திரனின் வித்தியாச ட்ரீட்மெண்டில் வெளியான பாண்டியநாடு. ஸ்டைலிஷ் மேக்கிங், அஜித், மாஸ் பிஜிஎம் என பல ப்ளஸ்களால் ஆரம்பம் பாக்ஸ் ஆஃபீசில் கெத்து காட்டியது. அதே போல பாண்டியநாடும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், காமெடி எதிர்பார்த்துப் போய் கடுப்பாக்கிய அழகுராஜா தோல்வியடைந்தது.

2014:

Diwali%20release9_11315.jpg

 

விஜய் முருகதாஸ் கூட்டணி, துப்பாக்கி போலவே தீபாவளிக்கு வெளியிட தேதி குறித்தது என படு ஜோராக கத்திக்கு ரெடியானார்கள் ரசிகர்கள். ரசிகர்களுக்கான படமாக இல்லாமல் போனாலும், ஒரு அவசியமான கருத்தை வலியுறுத்தி மாஸ் ஹீரோவை வைத்து சென்சிபிளான விஷயங்களைப் பேச வைத்து எல்லோர் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது கத்தி. இதனுடனே வெளியான பூஜை வரவேற்பு கம்மி என்றாலும் பெரிய கலக்‌ஷன் என்று தகவல்கள் மட்டும் வந்தது.

2015:

Diwali%20release10_11476.jpg

ஸ்லீப்லெஸ் நைட்ஸ் படத்தின் அதிகாரப் பூர்வ ரீமேக் என்ற தகவலுடனே 'தூங்காவனம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிட்டார் கமல். மிகக்குறுகிய காலத்துக்குள்ளேயே படத்தை எடுத்தும் முடித்தார்கள். ஆனால் வீரத்திற்குப் பின் அஜித்தை வைத்து சிவா இயக்கிய 'வேதாளம்' ஆலுமா டோலுமா என பாக்ஸ் ஆஃபீசில் கெட்ட ஆட்டம் போட்டது. நல்ல மேக்கிங் என்ற பெயரை மட்டும் வாங்கிக் கொண்டு ஒதுங்கிக் கொண்டது தூங்காவனம்.

2016:

Diwali%20release11_11038.jpg

முதன் முறையாக இரட்டைவேடத்தில் தனுஷ் என கொடி படத்துக்கும், ப்ளாக் மேஜிக் பற்றிய கார்த்தி நடிக்கும் படம் என காஷ்மோராவுக்கும் அதிதீவிர எதிர்பார்ப்பு உள்ளது. இன்னும் சொல்லப் போனால் காஷ்மோராவுக்கு கொஞ்சம் கூடுதல் எதிர்ப்பார்ப்பு உள்ளது. கூடவே மா.கா.பா.ஆனந்த் நடித்திருக்கும் 'கடலை', பெண்கள் மட்டுமே நடித்திருக்கும் என விளம்பரங்களில் அலறிக் கொண்டிருக்கும் 'திரைக்கு வராத கதை' படங்களும் வெளியாகிறது. இதில் எது வெல்லும்? படங்கள் தான் சொல்லும். அது வரை காத்திருப்போம்!

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/70445-movies-released-on-diwali-day.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.