Jump to content

சுன்னாகத்தில் உளவுத்துறை பொலிஸாரை தாக்கியோரை அடையாளம் கண்டது பொலிஸ் ; விரைவில் கைதுசெய்யப்படுவர்


Recommended Posts

சுன்னாகத்தில் உளவுத்துறை பொலிஸாரை  தாக்கியோரை அடையாளம் கண்டது பொலிஸ் ;  விரைவில் கைதுசெய்யப்படுவர்

 

 

(எம்.எப்.எம்.பஸீர்)

யாழ். சுன்னாகம் பகுதியில் சிவில் உடையில் கடமையில் இருந்த உளவுத் துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்திய சந்தேக நபர்களை விஷேட விசாரணைக் குழுவினர் அடையாளம் கண்டுள்ளனர். 

 

தேசிய உளவுத் துறை பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நலிந்த ஜயவர்தனவின் ஆலோசனைக்கு அமைய அமைக்கப்பட்ட தேசிய புலனாய்வுப் பிரிவின் உளவுத் துறை அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழுவின்  உதவியுடன், விசாரணைகளை முன்னெடுத்த 5 சிறப்புக் குழுக்களே மேற்படி சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

விஷேட அதிரடிப்படையின் சிறப்பு விசாரணைக் குழு ஊடாக  தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களையும் அவர்களுக்கு மேற்படி பொலிசார் மீதான தக்குதலுக்கு உதவி ஒத்தாசை புரிந்தோரையும் கைது செய்ய திட்டம் வகுப்பட்டுள்ளதாகவும் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் நாளை அல்லது நாளை மறுதினம் இடம்பெறலாம் எனவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரியிடம் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/12746

Link to comment
Share on other sites

எத்தனை குற்றவாளிகளும் தப்பலாம் ஆனால் ஒரு சுற்றவாளி தண்டிக்கப்படக் கூடாது....................... அந்தக்கால நீதி

ஒரு குற்றவாளியைப் பிடிக்க எத்தனை சுற்றவாளிகளும் தண்டிக்கப்படலாம்........................................   இந்தக்கால நீதி

எத்தனை அப்பாவிகள் துவைக்கப்படப் போகிறார்களோ....???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தகால வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடி பிடி என்று செழியன் சொல்லும்போது பொலீசாருக்கு எங்குபோனது இந்த வேகம்.
இப்ப பொலிஸ்காரனுக்குகே வெட்டுவிழுந்தவுடன் எல்லாம் கடுகதி வேகத்திலை நடக்குது.

Link to comment
Share on other sites

8 minutes ago, vanangaamudi said:

இப்ப பொலிஸ்காரனுக்குகே வெட்டுவிழுந்தவுடன் எல்லாம் கடுகதி வேகத்திலை நடக்குது.

எங்க நம்ம நாட்டிலையா?


அதுதான் நாளை மறுதினம்தான் ஆரம்பிப்போம் எண்டு இணையத்திலேயே வந்தாச்சே!!!!
அப்புறம் எப்படி பிடிப்பானுவ - ஓடிட மாட்டானுவ பயலுக? :grin:

 

4 hours ago, நவீனன் said:

விஷேட அதிரடிப்படையின் சிறப்பு விசாரணைக் குழு ஊடாக  தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களையும் அவர்களுக்கு மேற்படி பொலிசார் மீதான தக்குதலுக்கு உதவி ஒத்தாசை புரிந்தோரையும் கைது செய்ய திட்டம் வகுப்பட்டுள்ளதாகவும் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் நாளை அல்லது நாளை மறுதினம் இடம்பெறலாம் எனவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரியிடம் தெரிவித்தார்.

 

Link to comment
Share on other sites

9 hours ago, நவீனன் said:

இரு சந்தேக நபர்களையும் அவர்களுக்கு மேற்படி பொலிசார் மீதான தக்குதலுக்கு உதவி ஒத்தாசை புரிந்தோரையும் கைது செய்ய திட்டம் வகுப்பட்டுள்ளதாகவும் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் நாளை அல்லது நாளை மறுதினம் இடம்பெறலாம் எனவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரியிடம் தெரிவித்தார்.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் திட்டமிட்ட நாடகம்.

Link to comment
Share on other sites

Sajani Sp அதுவும் மருத்துவ அதிகாரியே சொல்லி விட்டார் காயம் என்று சொல்லுமளவிற்கு கூட அது காயம் இல்லை என்று....இது மாண்புமிகு ரணில் அவர்களின் தத்துவம் ஒரு கோட்டிற்கு அருகில் இன்னொரு கோடு கீறி கவனத்தை திசை திருப்பல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இருக்கிற மிச்ச பல்கலைக் கழக மாணவரை அமுக்க போடுற நாடகமோ யாரறிவார். வாள் வெட்டுக்காரர் என்று சுட்டொம் என்று கதை விட்டினம். இப்ப வாள்வெட்டுக்காரரை பிடிக்க நாள் பாக்கினமாம். இன்னும் யார், யாரை மாட்டி பிடிக்கிறதென்று முடிவு பணேலைப்போல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.