Jump to content

பெண்ணை 100 முறை தென்னம்மட்டையால் அடிக்க உத்தரவிட்ட பள்ளிவாசல் பரிபாலன சபையினர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவருக்கு தென்னம்மட்டையால் 100 அடிகளை வழங்கிய குற்றச்சாட்டில் முஸ்லிம் பள்ளி வாசல் ஒன்றின் பரிபாலன சபையை சேர்ந்த 4 பேர் கால வரையறையின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் நல்லன்தெழுவ ஜூம்மா பள்ளி வாசலின் பரிபாலன சபையை சேர்ந்த நால்வரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் பந்துல குணரத்னகே உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பெண் சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் இருந்த போது, வீட்டுக்குள் வந்த நபர் ஒருவர் பலவந்தமாக பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பான பெண் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார்.

முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை நடந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணை பள்ளி வாசலுக்கு அழைத்து அதன் பரிபாலன சபையினர் 100 முறை தென்னம்மட்டையால் தாக்கி தண்டனை வழங்கியுள்ளனர்.

இது சம்பந்தமாக பெண் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று மற்றுமொரு முறைப்பாட்டை செய்துள்ளார்.சம்பவம் குறித்து பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து பெண்ணை தென்னம் மட்டையால் தாக்கி தண்டனை வழங்க உத்தரவிட்ட ஜூம்மா பள்ளி வாசலின் பரிபாலன சபையை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்னர்.

http://www.tamilan24.com/contents/?i=65882

 

Link to comment
Share on other sites

குரான்;24:2 திருமணமாகாத ஆண், பெண் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

The [unmarried] woman or [unmarried] man found guilty of sexual intercourse - lash each one of them with a hundred lashes, and do not be taken by pity for them in the religion of Allah , if you should believe in Allah and the Last Day. And let a group of the believers witness their punishment.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

puttalam-story

பெண்ணொருவருக்கு புத்தளத்தில் சவுக்கடி தண்டனை வழங்கிய பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் விளக்கமறியலில்

 

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணொருவருக்கு 100 சவுக்கடி தண்டனையை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட புத்தளம் – நல்லன்தலுவ ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தை சேர்ந்த ஐவர் கால எல்லையின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் நீதவான் பந்துல குணரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் தங்கியிருந்த நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரினால் இந்த பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்;.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சந்தர்ப்பத்தில், குறித்த பெண் புத்தளம் – நல்லன்தலுவ ஜும்மா பள்ளிவாசலுக்கு அழைக்கப்பட்டு, 100 சவுக்கடிகளை வழங்குமாறு பள்ளிவாசல் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு தொடர்பில் குறித்த பெண் தனது சட்டத்தரணி ஊடாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்த விடயம் குறித்து பொலிஸார் புத்தளம் நீதிமன்றத்தில் விடயங்களை தெளிவூட்டியதை தொடர்ந்து, நல்லன்தலுவ ஜும்மா பள்ளிவாசலை சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியாச்சட்டத்தையும் , பேரிச்ச மரம் எண்டு  நினைச்சிட்டினம் .

Link to comment
Share on other sites

ஆமா இந்த கொழும்பான் இணைக்கும் செய்திகள் ஒரு மார்க்கமாவே இருக்குதே?

ஏன்?

confused face smiley

தேடித்தேடி வாசிப்பாரோ!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒர் பெண்ண்னிற்கு நடந்த அநியாயத்தை பார்த்தீர்களா? 
இது என்ன மார்ககமான செய்தி?

Link to comment
Share on other sites

51 minutes ago, colomban said:

ஒர் பெண்ண்னிற்கு நடந்த அநியாயத்தை பார்த்தீர்களா? 
இது என்ன மார்ககமான செய்தி?

மதம் சொன்னால் எந்த அநியாயமும் செய்யலாம். உலகத்தைப் படைத்த கடவுள் நமக்காக அனுப்பிய அன்பான தூதர் தந்த இந்த அன்புக் கடமைகளை நிறைவேற்றாமல் நாம் சொர்க்கம் போவது எங்ஙனம்?

Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

ஒர் பெண்ண்னிற்கு நடந்த அநியாயத்தை பார்த்தீர்களா? 
இது என்ன மார்ககமான செய்தி?

இது அநியாயம் என்பது உண்மைதான். மற்றப்படி நீங்கள் அடிக்கடி சில மாதங்களாக இணைக்கும் சில திரிகள் தொடர்பானதே எனது கருத்து.  :grin:

உதாரணத்துக்கு சில கிழே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் வெட்கப்பட்டு இணைக்க தவறுவதை, நம்ம கொழும்பான் இணைக்கிறார்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்க்கம் சொன்னால் செய்திடனும்.

Link to comment
Share on other sites

1 hour ago, நந்தன் said:

நவீனன் வெட்கப்பட்டு இணைக்க தவறுவதை, நம்ம கொழும்பான் இணைக்கிறார்.:grin:

நம்ம தேசிய இதழ் மித்திரன் கூட வெட்கப்பட்டு திருந்திட்டுது - நவீனன் வெட்கப்படக்கூடாதா? :grin:

ஒரு வருடத்தின் முன்னர் ஒரு மித்திரன் ஞாயிறு பதிப்பை வாங்கிப் பாத்தன். என்ன கட்டுரைகள், ஆக்கங்கள் - கல்கண்டு ரேஞ்சுக்கு வந்திட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

நவீனன் வெட்கப்பட்டு இணைக்க தவறுவதை, நம்ம கொழும்பான் இணைக்கிறார்.:grin:

அடேங்கப்பாtw_blush:

Link to comment
Share on other sites

2 hours ago, நந்தன் said:

நவீனன் வெட்கப்பட்டு இணைக்க தவறுவதை, நம்ம கொழும்பான் இணைக்கிறார்.:grin:

ஹஹா கடைசியாக என்னை ஏன் இதுக்கு இழுக்கிறீர்கள்..:grin:

சில செய்திகளை தவிர்ப்பதுதான்.. அதுக்கு வெட்கம் என்று நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்ய முடியும்..:rolleyes:

யாழுக்கு என்று ஒரு தரம் இருக்கு.. அதனால் நான் விரும்புவதில்லை..:)

இந்த செய்தி என் கண்ணில் படவில்லை. அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்திகளைவிட யாழ் வாசகர்கள் பலரின் பின்னூட்டங்கள் மோசமாக இருக்கிந்தே ஐயா.

Link to comment
Share on other sites

9 minutes ago, colomban said:

இந்த செய்திகளைவிட யாழ் வாசகர்கள் பலரின் பின்னூட்டங்கள் மோசமாக இருக்கிந்தே ஐயா.

யாழ் களத்தின் தரத்தினை பேண நிர்வாகத்திற்கு முறைப்பாட்டு முறை மூலம் அறியத்தந்தால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

Link to comment
Share on other sites

19 minutes ago, colomban said:

இந்த செய்திகளைவிட யாழ் வாசகர்கள் பலரின் பின்னூட்டங்கள் மோசமாக இருக்கிந்தே ஐயா.

நண்பரே இதை நீங்கள் எனக்கு எழுதி இருந்தால், நீங்கள் நான் எழுதியதை தவறாக புரிந்து கொண்டீர்கள். உங்கள் தனிமடலை பார்க்கவும்.

நான் இந்த திரியில் தொடர்ந்து விவாதிக்க  விரும்பவில்லை. ..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நவீனன் said:

நண்பரே இதை நீங்கள் எனக்கு எழுதி இருந்தால், நீங்கள் நான் எழுதியதை தவறாக புரிந்து கொண்டீர்கள். உங்கள் தனிமடலை பார்க்கவும்.

நான் இந்த திரியில் தொடர்ந்து விவாதிக்க  விரும்பவில்லை. ..:)

மன்னிக்கவும் நவீனன், மேலே எழுதிய பின்னுட்டம் விளையாட்டக எழுதினேன். உங்களை குறிப்பிட்டு எழுதவில்லை.

Link to comment
Share on other sites

3 minutes ago, colomban said:

மன்னிக்கவும் நவீனன், மேலே எழுதிய பின்னுட்டம் விளையாட்டக எழுதினேன். உங்களை குறிப்பிட்டு எழுதவில்லை.

கொழும்பன் நான் உங்கள் செய்திகளின் வாசகர்களில் ஒரு ஆள். காலை, மதியம் எனக்கு நித்திரை  பயங்கரமாய் தூக்கி தூக்கி அடிக்கும்போது உங்கள் செய்திகள் காதுக்கு அருகில் உடுக்கு அடிக்கும்போது வருகின்ற எழுச்சியை தந்து என்னை தூங்கவிடாமல் உசார்படுத்தி வைக்கின்றன. அரைத்தூக்கத்தில் இருந்த நியானி கூட உங்கள் செய்தியை வாசித்துவிட்டுதான் இப்போது முழிப்பாய் இருக்கின்றார். ஒரு சிலர் இங்கு சபை அடக்கமாய் இருப்பதை பெரிசுபடுத்தாதீர்கள். :26_nerd:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பானை நெளிய வைத்த, ஜீவன் சிவாவை கடுமையாக கண்டிக்கிறோம். :107_hand_splayed:

கொழும்பான், இதெல்லாம் கண்டுக்கப் படாது...

வழக்கம் போல் தொடருங்கள்... 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னம் மட்டையால். ஒரு அடியே தாங்காது.... நூறா?

இவையளுக்கு எதையாவது தனியா பிரிச்சு கொடுத்தால், அங்க ஷரியா சட்டம் தான்.. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.