Jump to content

"என் வாழ்வின் மிகச் சிறந்த தருணம்" - நடிகர் சிவகுமார் சிறப்பு நேர்காணல்


Recommended Posts

"என் வாழ்வின் மிகச் சிறந்த தருணம்" - நடிகர் சிவகுமார் சிறப்பு நேர்காணல்

 

 
படம்: சி.குமார்
படம்: சி.குமார்

1965–ல் வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தின் மூலம் திரைப் பிரவேசம் செய்தவர் சிவகுமார். ஒரு நீண்ட திரைப் பயணத்துக்குப் பிறகும் ஒரு சினிமா நட்சத்திரமாகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாதவர். திரையுலகில் இப்படியும் ஒரு முன்மாதிரிக் கலைஞரைக் காணமுடியுமா என்று வியக்கும் விதமாகத் தூய வாழ்முறையால் ‘கலையுலக மார்க்கண்டேயனாக’ கொண்டாடப்படும் அவர் தனது 75- பிறந்த நாளில் அடியெடுத்துவைக்கிறார். சிறந்த நடிகர், தலைசிறந்த ஓவியர் ஆகிய அடையாளங்களையும் தாண்டி, தேர்ந்த எழுத்தாளராகவும், ஆற்றல்மிக்க பேச்சாளராகவும் தனது தளங்களை கடந்த 15 ஆண்டுகளில் விரித்துக்கொண்டுள்ளார். இந்த அரிய பன்முகக் கலைஞரை, அவரது 75 அகவை நிறைவையொட்டி நேர்கண்டதிலிருந்து ஒரு பகுதி...

1_3051425a.jpg

நினைவாற்றலுக்குப் பெயர்போனவர் நீங்கள். அறிமுகப்படத்தில் பேசியமுதல் வசனம் நினைவில் இருக்கிறதா?

நன்றாகவே நினைவிருக்கிறது. ‘ராதா உன் முகத்தை நீ கண்ணாடியில் பார்த்ததில்லையா? நீ அழகானவள் என்று உனது அம்மாவும் அண்ணனும் உன்னிடம் ஒருமுறைகூட சொன்னதில்லையா?’ என்ற மூன்று வரி வசனம்தான். அதற்கு மூன்று நாள் ரிகர்சல் கொடுத்தார்கள். இத்தனை சிறிய வசனத்துக்கு ஏன் இத்தனை பயிற்சி என்று நினைத்துக்கொண்டேன். முதன்முதலில் கேமரா முன்பு நிற்கிறேன்.

செட்டுக்குள் இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர் நுழைந்தார். எனது நடிப்பைப் பதிவுசெய்ய கேமரா தயாரானது. ‘லைட்ஸ் ஆன்’ என்று அவர் சொன்னதுமே செட்டிலிருந்த அத்தனை விளக்குகளும் என் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சின. எதிரில் இருப்பவர்கள் யாரும் தெரியவில்லை. ‘ஆக்‌ஷன்’ என்று இயக்குநரின் குரல் கேட்டது. அவ்வளவுதான் மூன்று நாள் பயிற்சி எடுத்த வசனம் மறந்துவிட்டது. அந்த நினைவு என்றைக்கும் மறக்காது.

2_3051424a.jpg

கோவை மாவட்டம் என்றாலே பஞ்சு மில்லில் வேலைக்குச் சேர்ந்துவிடுவதைக் கவுரமாகக் கருதிய ஒரு காலகட்டத்தில், நீங்கள் சென்னைக்கு வந்து ஓவியக் கல்லூரியில் சேரவேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?

வானம் பார்த்த பூமி எங்கள் ஊர். ஐப்பசியை விட்டால் மழை கிடையாது. கோவையில் 1932-ல் 52 பஞ்சு மில்கள் இருந்தன. பஞ்சு மில் என்றால் நிழலில் வேலை செய்யலாம், மாதம் பிறந்தால் சம்பளம் என்று அந்த வேலையைப் பலரும் விரும்பியது உண்மைதான். எனக்கு அதில் ஆர்வமில்லாமல் போனதற்குக் காரணம் நண்பர் குமாரசாமி.

எனது கிராமத்தில் காமராஜர் தொடங்கிய ஓராசிரியர் பள்ளிக்கு ஆசிரியராக வந்த அவர், எனது ஓவியங்களைப் பார்த்துவிட்டு “உனக்கு ஓவியம் கைவந்த கலையாக இருக்கிறது. இதன் அடிப்படைகளைப் படிக்காமலேயே அனாடமியைக் கச்சிதமாக வரைந்திருக்கிறாய். சென்னையில் இருக்கும் ஓவியப் பள்ளி பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதைத் தேடிப்பிடித்து சேர்ந்து படி. மிகப் பெரிய ஓவியனாக வருவாய்” என்றார். அப்படித்தான் தன்னந்தனியாக 15 வயதில் சென்னைக்கு ஓவியப் பள்ளியைத் தேடி வந்தேன்.

உங்களது ஓவியங்களைப் பார்க்கிறபோது உள்ளதை உள்ளபடி வரையும் யதார்த்த பாணி என்று புரிந்துகொள்ள முடிகிறது. இந்த வகையைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

எந்தக் கலையாக இருந்தாலும், அது மக்களுக்குப் புரியவேண்டும். புரியாத கலை வளராது என்று நம்புகிறவன் நான். ஓவியக் கல்லூரியில் நான் படித்தபோது, எனது ஓவிய ஆசிரியர்களில் ஒருவரான சந்தானகிருஷ்ணன் என்னிடம் “ காந்தியைக் கோடுகளில் நீ வெளிப்படுத்தியிருப்பதுபோல் உலகில் வேறு எந்த ஓவியனும் செய்துவிட முடியாது. உனது அடுத்த நகர்வு மார்டன் ஆர்ட்டாக இருக்க வேண்டும். வந்துவிடு” என்றார்.

அரூபமான ஓவியங்களை வரைவதில் எனக்கு உடன்பாடு இல்லாததால், அதை நான் ஏற்கவில்லை. நான் தேர்ந்துகொண்ட வகைமையில் என்னுடைய ஓவிய வாழ்க்கையின் முதல் 8 ஆண்டுகளில் வரைந்த ஓவியங்களை பல புகழ்பெற்ற ஓவியர்கள் பாராட்டியிருக்கிறார்கள். என் இளமையில் வெளிப்பட்ட படைப்பாற்றலின் மொத்தக் கலைவண்ணமும் அந்த ஓவியங்களில் இருப்பதாக நானும் நம்புகிறேன்.

siva_3051420a.jpg
சிவகுமாரின் ஓவியங்களில் சில...

திரையில் நீங்கள் பிரபலமாகி வந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஜோடியாக நடித்த கதாநாயகிகளைப் பார்த்து ஆசைப்பட்டதில்லையா? உங்களிடம் காதலைத் தெரிவித்த கதாநாயகி உண்டல்லவா?

நானும் மனிதன்தானே. 87 கதாநாயகிளோடு நடித்திருக்கிறேன். ஒரு கதாநாயகியுடன் தொடர்ந்து 16 படங்கள் நடித்திருக்கிறேன். ‘சித்தி’ தொடருக்காக ராதிகாவுடன் ஐந்து ஆண்டுகள் நடித்திருக்கிறேன். 15 கதாநாயகிகளுக்கு என் மேல் விருப்பம் இருந்தது. எனக்கு 5 கதாநாயகிகள் மீது ஈர்ப்பு இருந்தது.

இந்த ஈர்ப்பைத்தான், இப்போது கெமிஸ்ட்ரி என்கிறார்கள். ஆனால் ஓவியக் கல்லூரியில் படிக்கும்போதே நாம் எதற்காக இங்கே வந்தோம் என்ற தெளிவு என்னிடம் இருந்து. ஒரு விதவைத் தாயின் பையன். தாயின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு எப்போதும் எனக்குள் ஒலித்துக்கொண்டிருந்ததால், ஆசாபாச உணர்வுகள் மனதில் எட்டிப்பார்த்தாலுமேகூட படப்பிடிப்புத் தளத்தோடு அவற்றை மறந்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். உங்கள் வாழ்க்கைத் துணை பற்றிக் கூறுங்கள்?

புகழ், பெருமை, ஆடம்பரம் என எதையும் விரும்பாத எளிய பெண்மணி. என்னைப் புரிந்துகொள்வதற்கே அவருக்கு நீண்டகாலம் பிடித்தது. கிராமத்தில் பிறந்து வளர்ந்து பட்டப்படிப்புப் படித்திருந்தாலும் என்னைப் போன்று எல்லாம் சரியாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களை அனுசரித்துப்போவது மிகக் கடினம். அந்த வகையில் என் மனைவியை மாபெரும் மனுஷி என்று சொல்வேன். என் பிள்ளைகள் எழுந்து நிற்பதற்கு அவரே காரணமாக இருந்தவர். அவரைப் போன்ற பெண்கள்தான் இன்று 75 விழுக்காடு தமிழ்க் குடும்பங்களில் அம்மாக்களாக இருக்கிறார்கள். இவர்களைப் போன்ற பெண்கள் எனக்கு மட்டுமல்ல; தமிழகத்துக்கே வரம்.

3_3051423a.jpg

இதுநாள்வரை பாராட்டு விழாக்களை மறுத்து வந்திருக்கிறீர்கள். இப்போது 75-வது பிறந்தநாளைக் கொண்டாட ஏன் ஒப்புக்கொண்டீர்கள்?

கொண்டாட்டத்துக்கு நான் அனுமதிக்கவில்லை. ஒரு மாதத்துக்கு முன் சூர்யாவும் கார்த்தியும் வந்து, “ 50, 60, 70 என்று எல்லா முக்கியப் பிறந்தநாள்களையும் கொண்டாட நீங்கள் அனுமதிக்கவில்லை. இந்தமுறை உங்களது 75-வது பிறந்த நாளுக்குச் சில விஷயங்களை நாங்கள் செய்யப்போகிறோம். அதை நீங்கள் தடுக்கக் கூடாது” என்றார்கள். என்ன செய்யப்போகிறீர்கள், எந்தக் கொண்டாட்டத்துக்கும் நான் அனுமதிக்க முடியாது என்றேன்.

“உங்களது படைப்புகளையாவது கொண்டாட இந்தப் பிறந்தநாளில் அனுமதி கொடுங்கள். அவை வரும் தலைமுறைக்கு ஆவணம்போல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்கள். அவர்கள் இப்படிச் சொன்னதும் என்னால் குறுக்கே எதுவும் பேசமுடியவில்லை. இந்த நிகழ்வுகளில் பாராட்டுக்கோ பொன்னாடைக்கோ இடம் கிடையாது.

அதில் ஒரு நிகழ்வாக லலித் கலா அகாடமியில் எனது படைப்புகளின் கண்காட்சி தொடங்கவிருக்கிறது. அதில் நான் வரைந்த ஓவியங்களில் 1,500 பென்சில் ஸ்கெட்ச்கள், ஓவியக் கல்லூரியில் படிக்கும்போது வரைந்தவை, ஒவ்வொரு ஊராகச் சென்று வரைந்த இயற்கை நிலக்காட்சிகள், கட்டிடங்கள், கோயில்கள் என வைக்க இருக்கிறார்கள். இவற்றிலிருந்து 140 ஓவியங்களைத் தேர்வுசெய்து, ஒரு காபி டேபிள் ஓவியப் புத்தகமும் வெளியிடுகிறார்கள்.

அடுத்து நான் நடித்த படங்களிலிருந்து புகைப்படங்களைச் சேகரித்து ஒரு ஆல்பமாக வெளியிடப்போகிறோம் என்றார்கள். எனது காலகாட்டதில் சிவாஜியும் கமலும்தான் மிகச் சிறந்த சாதனையாளர்கள். சினிமாவில் நான் தனியாக என்ன செயற்கரிய செயல் செய்துவிட்டேன் என்று கூறி மறுத்தேன். ஆனால் எஸ். எஸ். வாசன், திருலோகசந்தர், ஏ.பி.என், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கே. பாலச்சந்தர் என்று மிகப்பெரிய ஜாம்பவான்களின் தேர்வாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள். அவையெல்லாம் எங்களுக்கும் சினிமா வரலாற்றுக்கும் முக்கியம். நீங்கள் சினிமாவில் இருந்ததால்தானே நாங்கள் சாத்தியமானோம். அதனால் ஆல்பம் வெளியிட்டே தீருவோம்” என்று என் வாயை அடைத்துவிட்டார்கள்.

4_3051422a.jpg

நான் நடித்திருக்கும் 192 படங்களில் நூறு படங்களிலிருந்து ஒரு படத்துக்கு ஒரு புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் படத்தின் என்னுடைய பின்னணி நினைவுக் குறிப்புகளுடன் கூடிய ஆல்பமாக வெளியிடுகிறார்கள். இவற்றோடு இதுவரை மேடை நிகழ்ச்சியாக நான் பேசியிருக்கும் 15 உரைகளில் சிறந்த பேச்சாக 10-யைத் தேர்ந்தெடுத்து இந்த நிகழ்வுக்கு வரும் அனைவருக்கும் டிவிடி நினைவுப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்துவருகிறார்கள்.

இந்த 75 ஆண்டுகள் நிறைவில் உங்களுக்கு முழுமையான மனநிறைவு தந்த விஷயம் எது?

74-வயதின் கடைசி நாள் அன்று நடந்த நிகழ்வு முழுமையான மனநிறைவைத் தந்தது என்று சொல்வேன். நான்கரை ஆண்டுகள் மகாபாரதத்தை ஆராய்ச்சி செய்து, எவ்வித ரெஃபரென்ஸும் இல்லாமல் 6,500 பேர் முன்னிலையில், 200 பாடல்களை குறிப்பிட்டுக்காட்டி, ஒரு சொட்டுத் தண்ணீர் குடிக்காமல் எனது மொழியில் பேசிய மேடை நிகழ்ச்சிதான் மிக முக்கியமானது. மனித வாழ்க்கையில் மிகச் சிறந்த கணங்கள் சில வந்துபோகும். அப்படிப்பட்ட கணத்தை அந்த மேடையில் நிகழ்ச்சியில் நான் உணர்ந்தேன்.

sivakumar_2_3051419a.jpg

முழுமையான வீடியோ பேட்டியை விரைவில் தி இந்து தமிழ் இணையத்தில் காணலாம்)

http://tamil.thehindu.com/cinema/cinema-others/என்-வாழ்வின்-மிகச்-சிறந்த-தருணம்-நடிகர்-சிவகுமார்-சிறப்பு-நேர்காணல்/article9245984.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.