Jump to content

பல்கலை மாணவர்கள் மரணம் ; ஜனாதிபதி பணிப்புரை ; யாழ் பயணிக்கிறது விசாரணைக்குழு


Recommended Posts

பல்கலை மாணவர்கள் மரணம் ; ஜனாதிபதி பணிப்புரை ; யாழ் பயணிக்கிறது விசாரணைக்குழு

 

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணம்  தொடர்பில் பக்கச்சார்பற்ற  விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

sd1.jpg

 குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (22) வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக்குழுவொன்றும் யாழிற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/12635

Link to comment
Share on other sites

யாழ். சம்பவம் ; நள்ளிரவில் துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் கேட்டது மதிலில்மோதி இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்

 

 

 

நள்ளிரவு வேளையில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தையடுத்து பாரிய சத்தம் ஒன்றும் கேட்டது. உடனடியாக வெளியில் ஓடிவந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மதிலில் மோதி இரத்த வெள்ளத்தில் கிடந்ததை காணமுடிந்தது என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் பிரதேச வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

asd1.jpg

கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் நேற்று  நள்ளிரவு வேளையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பல்கலைக்கழக மாணவர் இருவர் மதிலில் மோதி இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த காட்சியை பார்த்த ஒருவரே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் பிரதேசவாசி மேலும் கூறியுள்ளதாவது;

நேற்று நள்ளிரவு துப்பாக்கி வேட்டு சத்தம் கேட்டது. அதனை தொடர்ந்து பாரிய சத்தமும் கேட்டது. நாம் உடனே வெளியே ஓடிவந்து பார்த்தோம். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் மதிலுடன் மோதுண்டு இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தார்கள். 

விபத்து நடந்து சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு பொலிசாரும் வந்திருந்தனர் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொருவர் கூறியுள்ளதாவது;

 நள்ளிரவு பெரிய சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்தேன். மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதுண்ட நிலையில் இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.

இதன்போது பொலிஸார் இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

சி.சி.ரி.வி கமராவில் பதிவான காட்சி

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அரு கில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப் பட்டி ருந்த சி.சி.ரி.வி. கமராவில் இரவு 11.45

மணியளவில் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் அந்த கடையை தாண்டி செல் கின்றது. அதன் பின்னர் இரு நிமிடத்தில் 11.47 மணியளவில் மழையங்கி அணிந்த வாறு பொலிஸ் குழு ஒன்று அந்த கடையை

கடந்து நடந்து செல்லும் காட்சி பதிவாகி யுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.virakesari.lk/article/12637

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.