Jump to content

காணாமல் போனோர் விடயத்தில் ஐ. நா. கூறுவது என்ன?


Recommended Posts

காணாமல் போனோர் விடயத்தில் ஐ. நா. கூறுவது என்ன?

 

இலங்­கைத்­தீவில் அர­சியல் கார­ணங்­களின் அடிப்­ப­டையில் காணாமல் போவோர் என்­பது இன்று நேற்று அல்ல குறைந்­தது, கடந்த 45 வரு­டங்­க­ளாக, அதா­வது தெற்கில் சேகு­வ­ரா க்கள் என அன்று கூறப்­பட்ட ஜே.வி.பி.யினரின் 1971 ஆவது கிளர்ச்சியில் இருந்து தொடர்ந்து நடை­பெற்று வரு­கி­றது. 

அன்று தெற்கின் சிங்­கள இளைஞர், யுவ­தி­க­ளுடன் ஆரம்­ப­மா­கிய காணாமல் போகும் விடயம், 1972 ஆம் ஆண்டின் பிற்­ப­கு­தியில் வடக்கு, கிழக்கில் தமிழ் இளை­ஞர்கள் காணாமல் போவது ஆரம்­ப­மா­கி­யது. அன்று வடக்கு– கிழக்கில் காணாமல் போனோ­ர் அர­ச­ப­டை­க­ளினால் படு­கொலை செய்­யப்­பட்டு, அவர்களது உடல்கள் தமி­ழர்­க­ளது தாயக பூமியின் நாலா­பக்­கமும் அநா­த­ர­வாக கைவி­டப்­பட்ட நிலையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. 

காலங்கள் புரண்டு ஓடி, இலங்­கை உல­கி­லேயே காணாமல் போவோர் விட­யத்தில் முதன்மை வகிக்கும் நிலையில், வடக்­கு–­கி­ழக்­குடன் தெற்கு உட்­பட ஆயிரம் ஆயிரம் இளை­ஞர்கள் யுவ­திகள், பெரி­யோர்கள், குடும்பத் தலை­வர்கள், தலை­விகள், கல்­வி­மான்கள், மனித உரிமை ஆர்­வ­லர்­க­ளென பட்­டியல் நீண்டு கொண்டே போகும் அள­விற்கு மனி­தர்கள் காணாமல் போனார்கள். 

 போய்­கொண்டும் உள்­ளார்கள். எதிர்­கா­லத்­திலும் போவார்கள் என்ற நிலையில் இலங்­கை­தீவின் நிலை இன்று மாறி­யுள்­ளது. ஆரம்­பத்தில், காணாமல் போவோர் விட­யத்தில் அலட்­சி­ய­மா­க­வி­ருந்த சர்­வ­தேச மனித உரிமைகள் அமைப்­புக்­களும் மேற்கு நாடு­களும் காலப்­போக்­கி­லேயே இலங்­கைத்­தீவின் உண்மை நிலையை அறிந்து தமது செயற்­பா­டு­களை ஆரம்­பித்­தன. 

இவ்­வி­ட­யத்தில் அன்றும் இன்றும் செயற்­பட்ட, படு­கின்ற மனித உரிமை செயற்­பாட்­டா­ளரின் அணு­கு­மு­றைகள் மிகவும் துணிச்­ச­லாக இருந்த பொழுதும், இவை மிகவும் அபாயம் நிறைந்­த­தா­கவும் காணப்­பட்­டன. இவ்­வி­ட­யத்தில் தமது உயிர்­களை அர்ப்­ப­ணித்த மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்­களும் உள்­ளனர்.  

இவ் விட­யங்­களில் அன்று முன்­னின்று உழைத்து தமது உயிர்­களை அர்ப்­ப­ணித்த ரிச்சர்ட் டி சொய்சா, குமார்­பொன்­னம்­பலம், தராகி சிவராம், ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம், ரவிராஜ், லசந்த விக்­கி­ர­ம­துங்க போன்ற பலரை நாம் இவ்­வே­ளையில் நினை­வு­கூர கட­மைப்­பட்­டுள்ளோம்.

இவர்கள் போன்ற பலரின் செயற்­பா­டு­க­ளினால், சர்­வ­தே­சத்தில் இலங்­கையில் காணாமல் போனோர் பற்றி கவ­னத்தில் கொண்­டுள்ள பல அமைப்­புக்­களில், முக்­கி­ய­மான ஒன்­றாக, ஐக்­கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் பற்றி பரி­சீ­லிக்கும் குழு (UN working Group on Enforced or Involuntary Disappearances) காணப்­ப­டு­கி­றது. 

இக்­குழு காணாமல் போனோர் பற்றி பரி­சீ­லிப்­ப­தற்­காக நான்கு தட­வைகள், அதா­வது 1991ஆம் ஆண்டு ஒக்­டோபர் , 1992ஆம் ஆண்டு ஒக்­டோபர், 1999 ஆம் ஆண்டு இறு­தி மற்றும் கடந்த 2015 ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைத் தீவிற்கு விஜயம் செய்­துள்­ளது.

இவ்­வே­ளை­யி­லேயே, வடக்­கு, ­கி­ழக்கில் காணாமல் போனோர் விட­யத்தில், சில ஆதா­ர­பூர்­வ­மான விட­யங்­களை ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது.

வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர் விட­யத்­திற்கு முக்­கிய கார­ணி­க­ளாக இலங்கை அரச படைகள், இவர்­க­ளுடன் உற­வா­டிய ஒட்­டுக்­கு­ழுக்கள் இவற்­றுடன் சில ஆயுத குழுக்­களும் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வை­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றன. இவற்­றுடன் 1987 ஆம் ஆண்டு இலங்­கை க்கு அமை­திப்­ப­டை­க­ளாக வருகை தந்த இந்­திய இரா­ணு­வமும் கார­ணி­யா­க­வுள்­ளது.

போர் முடி­வுற்­றதும், அதா­வது 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் ஆயிரம் ஆயிரம் தமிழ் இளை­ஞர்கள், யுவ­திகள், முதி­யோர்கள் என எண்ணில் அடங்­கா­த­வாறு வடக்கு, கிழக்­கி­லி­ருந்து காணாமல் போயுள்­ளனர்.

போர் முடி­வுற்­றதும், இவ்­வி­ட­யத்தில் அக்­கறை கொண்டு உலகம் பூரா­கவும் உள்ள புலம் பெயர் வாழ் அமைப்­புகள் தமது நாடு­களில் உள்ள தமி­ழர்கள் கூடும் தேவா­ல­யங்கள், கோயில்கள், தமிழ் பாட­சா­லைகள் போன்ற இடங்­களில் நின்று வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர் பற்­றிய விப­ரங்­களைத் திரட்­டி­னார்கள். ஆனால் இன்று வரை இவ்­வி­ப­ரங்­க­ளிற்கு என்ன நடந்­தது என்­பதை யாரும் அறி­ய­வு­மில்லை.

“தமிழர் மனித உரி­மைகள் மையத்­தி­ன­ரா­கிய” நாம் ஐ.நா.விற்கு மனித உரிமை மீறல் விட­யத்தில் தகவல் சமர்ப்­பிப்­பதில் இரு தசாப்­தங்கள் கொண்ட அனு­ப­வத்தின் கார­ணத்­தினால், இவ் அமைப்­புக்கள் திரட்­டிய தக­வல்­களை எம்­மிடம் கொடுத்தால் இவற்றை உரிய முறையில் ஐ.நா.விற்கு சமர்ப்­பிக்க முடி­யு­மென வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தும், இன்று ஏழு வரு­டங்­க­ளா­கியும் திரட்­டிய தக­வல்கள் எங்கு சென்­றன என்­பதை யாரும் அறி­ய­மாட்­டார்கள்.

இவற்றை மிக சுருக்­க­மாக கூறு­வ­தானால், அன்­றி­லி­ருந்து இன்று வரை வடக்கு, கிழக்­கி­லி­ருந்து காணாமல் போனோ­ரு­டைய புள்ளி விப­ரங்­களோ அல்­லது தக­வல்­களோ இன்று வரை சரி­யாக நேர்த்­தி­யாக திரட்­டப்­ப­டவும் இல்லை. இவை சரி­யான முறையில் ஐ.நா.வின் காணாமல் போனோர் பற்றி பரி­சீ­லிக்கும் குழு­விடம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வு­மில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஐ.நா.அறிக்கை

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்­துள்ள ஐ.நா.குழு­வினர் காணாமல் போனோர் விட­யத்தில் பல உண்­மை­க­ளையும், தக­வல்­க­ளையும் கண்­ட­றிந்­துள்­ளனர். இவர் கள் தாம் இலங்­கைத்­தீவில் அறிந்­த­வற்­றையும் அர­சிற்கு சில சிபார்­சு­க­ளையும் தொகுத்து ஓர் அறிக்­கை­யாக, நடந்து முடிந்த ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்­பித்து இருந்­தனர்.

இவ் அறிக்­கையின் கோவை­ இ­லக்கம் A/HRC/33/51/Add.2 என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவை இரு­பத்­தி­ரண்டு பக்­கங்­க­ளையும் எண்­பத்தி ஐந்து பெரிய உப பந்­தி­களை உள்­ள­டக்­கிய அறிக்­கை­யாக காணப்­ப­டு­கி­றது. இவ் அறிக்­கையின் முன்­னு­ரையில் ஐ.நா.காணாமல் போனோர் பற்றி ஆராயும் குழு, இலங்கைத் தீவில் யார் யாரை சந்­தித்தது. தாம் எந்த எந்த இடங்கள், நக­ரங்­க­ளிற்கு விஜயம் செய்தது என்­பன குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.  

தாம் விஜயம் செய்­த­தாக குறிப்­பிடும் இடங்­களில் மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, மன்னார், முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம் ஆகிய இடங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. தாம் சந்­தித்­த­தாக கூறும் நபர்­களில், வடக்கு, கிழக்கு முத­ல­மைச்­சர்­களை குறிப்­பிட்­டுள்­ளனர்.

இவ்­வ­றிக்­கையின் 7ஆவது பந்­திக்கு அமைய, ஐ.நா. காணாமல் போனோர் பற்றி பரி­சீ­லிக்கும் குழு, கடந்த காலங்­களில் பன்­னி­ரா­யிரம் பேர் காணாமல் போயுள்ளோர் பற்­றிய விப­ரங்­களை அர­சிடம் சமர்ப்­பித்து இருந்­த­தா­கவும், இவற்றில் ஐயா­யி­ரத்து எழு­நூற்று ஐம்­பது பேர் தொடர்பில் இன்னும் அர­சினால் சரி­யான விளக்கம் கொடுக்கப் பட­வில்லை எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவை­யாவும் பெரும்­பா­லாக 1980–1990 இல் ஜே.வி.பி.யுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவை உண்­மையில் வடக்கு, கிழக்கு வாழ் மக்­க­ளிற்கு மிகவும் கவலை தரும் செய்­தி­யாகும். இன்று வரை ஆயிரம் ஆயிரம் தமி­ழர்கள் காணாமல் போயுள்ள நிலையில் ஐ.நா.வின். காணாமல் போனோர் பற்றி பரி­சீ­லிக்கும் பிரி­விடம், வடக்கு, கிழக்கு பற்­றிய புள்ளி விப­ரங்கள் மிகவும் குறைந்தே காணப்­ப­டு­கி­ன்றன.

 இதனைத் தொடர்ந்து எட்­டா­வது, ஒன்­ப­தா­வது பந்­தியில் வெள்ளை வேன் கடத்­தல்கள் பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்ள அதே­வேளை, தமி­ழீ­ழ­வி­டு­தலைப் புலி­க­ளி­னாலும் ஆட்கள் காணாமல் போயுள்­ளனர் என்­பது குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவ் அறிக்­கையின் 13ஆவது பந்­தியின் பிர­காரம், ஐ.நா.காணாமல் போனோர் பற்றி பரி­சீ­லிக்கும் குழு­வினர் இலங்கை சர்­வ­தேச குற்றவியல் நீதி­மன்­றத்தின் பிர­க­ட­னத்தில் தம்மை ஓர் அங்­கத்­த­வர்­க­ளாக இணைத்துக் கொள்ள வேண்­டு­மென அறி­வுரை கூறப்­பட்­டுள்­ள­துடன் மற்­றைய சர்­வ­தேச மனித உரிமை பிர­க­ட­னங்­க­ளிலும் கையெ­ழுத்­திட வேண்­டு­மெனக் கூறப்­பட்­டுள்­ளது.

இத­னது 17ஆவது பந்­தியில் தமது விஜ­யத்தின் பொழுது தாம் திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­மிற்குச் சென்­றி­ருந்த வேளையில், நிலத்­திற்குக் கீழ்­உள்ள பதி­னொரு ரக­சிய தடுப்பு முகாம்­களை தாம் பார்த்­த­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இத­னது 18ஆவது பந்­தியில் கடந்த ஆண்டு 2015, பெப்­ர­வரி மாதம் சாட்­சி­களின் பாது­காப்பு பற்­றிய சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்தும் இவற்றில் சில குறைகள் காணப்­ப­டு­வ­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பந்­திகள் 24, 25க்கு அமைய 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஜனா­தி­பதி ராஜபக் ஷவினால் காணாமல் போனோர் பற்றி ஆராய்­வ­தற்கு ஓர் புதிய ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­ட­தா­கவும், இவ் ஆணைக்­கு­ழுவை “பர­ண­கம ஆணைக்­குழு” என அழைப்­ப­தா­கவும் இது ஆரம்­பத்தில் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரை காணாமல் போனோர் பற்றி ஆராய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­ட­தா­கவும், இறு­தியில் 1983 ஆம் ஆண்டு முதல் 2009 வரை காணாமல் போனோர் பற்றி ஆராய வேண்­டப்­பட்­ட­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவ் அறிக்­கையில் 27 ஆவது பந்­தியில் குறிப்­பி­டு­வது மிகவும் வேடிக்­கை­யா­னது. பர­ண­கம ஆணைக்­கு­ழுவில் மக்கள் நம்­பிக்கை கொள்­ள­வில்லை என்றும் அப்­ப­டி­யி­ருந்தும் பர­ண­கம ஆணைக்­குழுவுக்கு இரு­ப­தா­யி­ரத்­திற்கு மேற்­பட்ட முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்ற பொழுதும் நூற்று ஐம்­பது முறை­பா­டு­களே விசா­ர­ணைக்கு சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறு­கி­றது.  

பர­ண­கம என்­பவர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு நெருக்கமானவர் என்­பதும் இவர் ராஜபக் ஷ அர­சாங்­கத்தின் போர்க்­குற்­றங்­களை மூடி­ம­றைக்க நிய­மிக்­கப்­பட்­டவர் என்­பதை உல­க­றியும் என்­பது எனது கருத்து.

புதை­கு­ழிகள்

இவ் அறிக்­கையின் 38ஆவது பந்­திக்கு அமைய 2013 ஆம் ஆண்டின் இறுதிப் பகு­தியில் மன்­னாரில் 83 பெண்கள், பிள்­ளை­க­ளது எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­கவும் இவை பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இவை பற்­றிய தக­வல்கள் விளக்கம் அற்று காணப்­ப­டு­வ­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அறிக்­கையின் 41ஆவது பந்­திக்கு அமைய இலங்கையில்ல் காணப்­படும் புதை­கு­ழிகள் யாவும் காணாமல் போனோ­ருடன் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் தமக்கு சகல இடங்­க­ளிற்கும் விஜயம் செய்து பார்­வை­யிட முடி­ய­வில்­லை­யெ­னவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

44ஆவது பந்­திக்கு அமைய தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் போரா­ளிகள் இலங்கை இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த பின்னர் காணாமல் போயுள்­ள­தா­கவும் சில சம­யங்­களில் இப் போரா­ளி­களின் பெற்­றோர்­களும் காணாமல் போயுள்­ள­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் அர­சியல் பிரிவை சார்ந்­த­வர்­களும் யுத்­தத்தில் ஈடு­ப­டா­த­வர்­களும் பாது­காப்பு படை­க­ளினால் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. காணாமல் போக கார­ணமாய் இருந்தோர் தண்­டிக்­கப்­ப­டாது அலட்­சியம் செய்­யப்­ப­டு­வது ஓர் முக்­கிய பிரச்­சி­னை­யாகக் காணப்­ப­டு­வ­தாக அறிக்கை கூறு­கி­றது.

இலங்கையின் விசா­ர­ணை­களை ஆதா­ரங்­க­ளுடன் பார்க்கும் பொழுது நீதி விசா­ர­ணை­களில் நிச்­சயம் சர்­வ­தேச நீதி­ப­திகள், வழக்­குத்­தொ­டு­நர்கள், விசா­ர­ணை­யா­ளர்கள் உள்­ள­டக்­கப்­பட வேண்டும் என்­பது தெளி­வா­கி­ற­தாக அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவ் அறிக்­கையில் காணாமல் போயுள்­ளோரின் உற­வி­னர்கள் இம்­சிக்­கப்­ப­டு­வது பற்றி தாம் மிகவும் அக்­கறை கொண்­டுள்­ள­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நஷ்­ட­ஈடு

காணாமல் போனோர் என்ற அடிப்­ப­டையில் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வது ஓர் முக்­கி­ய­மான விட­ய­மாக தாம் எண்­ணு­வ­தாக அறிக்கை கூறு­கி­றது. காணாமல் போனோரின் தாய், மனைவி, பிள்­ளைகள் எந்­த­வித பொரு­ளா­தார உத­வி­களும் இல்­லாது காணப்­ப­டு­வ­தா­கவும் காணாமல் போனோர் எனக் கூறப்­ப­டுவோர், இல்­லாத கார­ணத்­தினால் அவர்­களை நம்பி வாழ்க்கை நடத்­திய குடும்­பங்கள் பெரி­தாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­றிக்­கையின் 61ஆவது பந்­திக்கு அமைய ஐ.நா.குழு­வினர் தாம் நூற்­றுக்­க­ணக்­கான காணாமல் போனோரின் உற­வி­னர்­களை, விசே­ட­மாக தாய், மனைவி, சகோ­த­ரிகள், மகள்­மாரை, மகன்­மாரைச் சந்­தித்து உரை­யா­டி­யுள்­ள­தா­கவும் இவர்­களில் சில­ரது குடும்­பங்­களில் பலர் காணாமல் போயுள்­ள­தா­கவும் பாதிக்­கப்­பட்ட பலர் தாம் தமது உற­வி­னர்­களை தேடும்­வே­ளையில் பாலியல் வன்­மு­றைக்கு ஆளாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இதனால் இவர்கள் அவர்­க­ளது சமு­தா­யத்தில் உள்­ள­வர்­க­ளினால் பாகு­பாட்­டிற்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

காணாமல் போன சில­ரது பிள்­ளைகள், தாய் தகப்பன் இரு­வ­ரையும் இழந்து காணப்­ப­டு­வ­தா­கவும் சில சந்­தர்ப்­பங்­களில் பெற்­றோ­ருடன் சிறு பிள்­ளை­களும் காணாமல் போயுள்­ள­தா­கவும் அறிக்கை கூறு­கி­றது.

அறிக்­கையின் 64ஆவது பந்­திக்கு அமைய காணாமல் போனோ­ரது உற­வினர் எந்­த­வித நஷ்­ட­ஈடும் பெற­மு­டி­ய­வில்­லை­யென்றும் தமக்குக் கிடைத்த தக­வ­லுக்கு அமைய பாதிக்­கப்­பட்டோர் ஒரு இலட்சம் ரூபாவை பெற முடியும் என்­பது 1988 ஆம் ஆண்டின் விதி முறை­க­ளிற்கு அமைய கூறப்­பட்­டுள்­ள­தாக அறிக்கை கூறு­கின்­றது. இந்த நஷ்­ட­ஈட்டை இறப்பு சான்­றி­தழைச் சமர்ப்­பிப்­பதன் மூலமே பெற முடி­யு­மென குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 இங்கு கூறப்­பட்­டுள்ள நஷ்­ட­ஈடு என்­பது இது­வ­ரையில் மாற்றம் அடை­யா­வி­டினும் சில­ரது உற­வி­னர்கள் இரண்டு இலட்சம் ரூபா­வரை பெற்­றுள்­ள­தா­கவும் அறிக்கை கூறு­கி­றது. இவ் இரண்டு இலட்சம் நஷ்­ட­ஈடு என்­பதை நிச்­சயம் தெற்கில் காணாமல் போன சிங்­க­ள­வர்­க­ளது உற­வி­னர்­களே பெற்­றி­ருக்­கலாம் என்­பது எனது கருத்து.

ஐ.நா குழு அறிந்­த­வ­ரையில் இந் நஷ்­ட­ஈடு என்­பது இறப்பு அல்­லது மர­ணச்­சான்­றி­தழை ஏற்கும் காணாமல் போனோ­ரது குடும்­பங்­க­ளுக்கும் தொடர்ந்து காணாமல் போனவர் பற்­றிய தேடு­தலை நிறுத்திக் கொள்­ப­வர்­க­ளுக்கும் மட்­டுமே. இதன் காரணம் ஐ.நா. குழு வற்­பு­றுத்­து­வது என்­ன­வெனில் இறப்புச் சான்­றி­தழைப் பெறும் ஒருவர் தொடர்ந்தும் காணாமல் போனவர் பற்­றிய உண்­மை­களை அறிய உரித்­து­டை­யவர். இவ் அடிப்­ப­டையில் அண்­மையில் தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தற்­க­மைய காணாமல் போனோர் விட­யத்தில் மரணச் சான்­றி­த­ழுக்கு பதி­லாக “ஆள் இல்லை” (Certificates of Absence) என்ற விடயம் வர­வேற்­கத்­தக்­க­தாக அறிக்கை கூறு­கி­றது.

67ஆவது பந்­திக்கு அமைய வடக்கு, கிழக்கில் இரா­ணுவம் தொடர்ந்து அதி­க­மான தனியார் நிலங்­களை அப­க­ரித்து உள்­ளமை தம்மை அதிர்ச்சி கொள்ள வைத்­துள்­ள­தாக ஐ.நா. குழு கூறு­கி­றது. காணாமல் போனோ­ருக்கும் இடம் பெயர்ந்தோர் விட­யங்­க­ளிற்கும் இடையில் நெருங்­கிய தொடர்­புகள் காணப்­ப­டு­வ­தா­கவும் காணாமல் போனோரின் உற­வுகள் இடப்­பெ­யர்வால் மிகவும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிக்கை கூறு­கின்­றது.

இதே­வேளை 1990 ஆம் ஆண்டு வடக்­கி­லி­ருந்து தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளினால் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்ட முஸ்லிம் மக்­களின் மீள் குடி­யேற்­றத்­திற்கு அரசு எந்தவித ஆக்­க­பூர்­வ­மான வேலை­க­ளையும் செய்­ய­வில்லை என்ற குற்­றச்­சாட்டை ஐ.நா. குழு­வினர் அறிந்­துள்­ள­தா­கவும் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் காணாமல் போனோரை நினை­வு­கூரும் நினை­வுச்­சின்­னங்­களோ அல்­லது வேறு நினைவு கூரக்­கூ­டிய விட­யங்­களோ அங்கு பெரி­தாகக் காணப்­ப­ட­வில்­லை­யெ­னவும் இவற்­றிற்கு அரசின் ஆத­ர­வுகள் பெரி­தாக காணப்­ப­ட­வில்­லை­யெ­னவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்பொழுது தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டும் இராணுவ வெற்றிதின கொண்டாட்டங்கள் பெயர் மாற்றப்பட்டிருந்த பொழுதும் இராணுவம், அவர்களது குடும்பத்தினருக்கும் புகழ்ந்து விழாக்கள் எடுத்த பொழுதும் போர்க்காலங்களில் உயிரிழந்த பொது மக்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லையென அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

இதேவேளை காணாமல் போனோர் விடயத்தில் முன்னேற்றம் காண்பதற்கும் இவற்றை அங்கு அறவே இல்லாமல் செய்வதற்கான பல ஆலோசனைகளை விசேடமாக சட்டத்துடனான மாற்றங்கள் பற்றி ஐ.நா. குழு இலங்கைக்கு சிபார்சு செய்துள்ளது.

முக்கிய குறிப்பு

01. வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர், படுகொலை செய்யப்பட்டோர் ஆகிய விடயங்களில் சரியான தெளிவான பெயர்பட்டியலோ விபரங்களோ இன்றுவரை யாரிடமும் இல்லை. இவற்றைப்பட்டியலிட நாம் முன்வர வேண்டும்.

02. காணாமல் போனோர், படுகொலை செய்யப்பட்டோரது சகல விபரங்களையும் ஐ.நா.வில் உள்ள அவற்றிற்குரிய பிரிவுகளிற்கு உரிய முறையில் சமர்ப்பிப்பதன் மூலம் வடக்கு, கிழக்கு வாழ் மக்களிற்கு நடந்தவை, நடப்பவை யாவும் ஓர் இனஅழிப்பு என்பதை எம்மால் சர்வதேசத்திற்கு நிரூபிக்க முடியும்.

1990 ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் இவ்வேலைகளையே பிரதானமாக ஐக்கிய நாடுகள் சபையுடன் செய்து கொண்டிருந்தது.

ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் புலம் பெயர் தேசங்களில் திட்டமிட்டு விதைக்கப்பட்ட சில கோடரிக் காம்புகளினால் ஐ.நா. வேலை திட்டங்கள் யாவும் நீர்மூலமாக்கப்பட்டுள்ளன என்பது மிகவும் கவலை தரும் விடயம்.

ச.வி.கிரு­பா­கரன் –பிரான்ஸ்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-10-22#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.