Jump to content

தடம்மாறுகின்றதா நல்லாட்சி அரசாங்கம்?


Recommended Posts

தடம்மாறுகின்றதா நல்லாட்சி அரசாங்கம்?

 

செல்­வ­ரட்னம் சிறி­தரன்

இலங்­கையில் சிறு­பான்மை இன மக்கள் கிள்­ளுக்­கீ­ரை­யா­கவே கரு­தப்­ப­டு­கின்­றார்கள். அது மட்­டு­மல்ல. அவர்கள் பெரும்­பான்மை இன மக்­களின் தயவில் வாழ வேண்­டிய நிலையில், இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளாக்­கப்­பட்­டுள்­ளார்கள். அந்­நி­ய­ரா­கிய ஆங்­கி­லே­ய­ரி­ட­மி­ருந்து நாடு சுதந்­திரம் பெற்ற நாள் முத­லாக, படிப்­ப­டி­யாக, இது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அந்தச் செயற்­பாடு தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தையே இப்­போதும் காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

பல இனங்­களைச் சேர்ந்த மக்கள் இந்த நாட்டில் வாழ்­கின்­றார்கள். பல மதங்­களை அவர் கள் பின்­பற்றி வரு­கின்­றார்கள். இந்த நாட்டின் 75வீதம் சிங்­கள மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்­றார்கள். அவர்­களில் பெரு­ம­ள­வானோர் பௌத்த மதத்தைச் சேர்ந்­த­வர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளாக தமிழ் மக்­களும், முஸ்லிம் மக்­களும் அடுத்­த­டுத்த நிலை­க­ளிலும், அதற்கு அடுத்த நிலை­களில் மலேயர், பறங்­கியர் போன்ற வேறு இன மக்­களும் இங்கு வாழ்­கின்­றார்கள். ஆயினும் ஏனைய ஜன­நா­யக வழி­மு­றையைப் பின்­பற்­றி­யுள்ள நாடு­களைப் போன்று பல்­லின மக்கள், பல மொழி­க­ளையும் மதங்­க­ளையும் பின்­பற்­று­கின்ற மக்கள் வசிக்கும் நிலையில் இலங்­கையில் அர­சியல் நிலைமை காணப்­ப­ட­வில்லை. 

இங்கு சிறு­பான்மை மக்­களின் உரி­மைகள் அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்ற போதிலும், அவற்றை, பார­பட்­ச­மாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வதே பாரம்­ப­ரி­ய­மாக இடம்­பெற்று வரு­கின்­றது.  இந்த நிலை­மை­களில் முக்­கி­ய­மா­ன­வற்றை இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த ஐ.நா.வின் சிறு­பான்மை மக்கள் தொடர்­பான விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நாடியா பகி­ரங்­க­மாகத் தெரி­வித்­தி­ருக்­கின்றார் 

.சிறு­பான்மை இன மக்­க­ளா­கிய தமிழ் மக்கள் கல்­வி­யிலும், அரச தொழில்­து­றை­க­ளிலும் வர்த்­த­கத்­திலும் சிறந்து விளங்­கி­யதை நாடு அந்­நி­ய­ரி­ட­மி­ருந்து சுதந்­தி­ர­ம­டைந்­ததன் பின்னர் பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்­களால் சகித்துக் கொள்ள முடி­ய­வில்லை. தமிழ் மக்­க­ளுடன் இணைந்து வாழ வேண்டும் என்றோ, அவர்­க­ளுடன் இணங்கிச் செல்ல வேண்டும் என்றோ அவர்கள் எண்­ண­வில்லை. அதற்­கான முயற்­சி­களில் ஈடு­ப­ட­வில்லை.  

மாறாக, தமிழ் மக்­களின் திறமை அவர்கள் சமூ­கத்­திலும் அர­சி­ய­லிலும், தொழில் துறை­க­ளிலும் அடைந்­தி­ருந்த உயர்ச்­சியைப் பொறாமை கண்­கொண்டு நோக்­கி­ய­தோடு, அவர்­களை அந்த நிலையில் இருந்து சரித்து வீழ்த்தி அவர்கள் வகித்த இடத்தைத் தாங்கள் கைப்­பற்ற வேண்டும் என்ற நோக்­கத்­தி­லேயே சிங்­கள மக்­களின் தலை­வர்கள் செயற்­பட்­டி­ருந்­தார்கள்.

அர­சியல், மதம், வர்த்­தகம், கல்வி, அர­சாங்க மற்றும் துறை­சார்ந்த தொழில்­து­றைகள் என பல வழி­க­ளிலும், தமிழ் மக்­களை எந்த வகையில் வீழ்த்­தலாம், அவர்­களை எவ்­வாறு முந்திச் செல்­லலாம் என்ற நோக்­கத்­தி­லேயே அவர்கள் தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

அது மட்­டு­மல்­லாமல் பண்­பாட்டு ரீதி­யாக அவர்­களை எவ்­வாறு பின்­ன­டையச் செய்­யலாம் என்ற நோக்­கத்­திலும் அவர்­க­ளு­டைய செயற்­பா­டுகள் அமைந்­தி­ருந்­ததைப் பல சம்­ப­வங்கள் எடுத்துக் காட்­டி­யி­ருக்­கின்­றன. தமிழ் மக்கள் இயல்­பாகக் கொண்­டி­ருந்த திற­மை­யுடன் போட்­டி­யிட்டு தமது திற­மை­களை வளர்த்­துக்­கொள்­வ­தற்குப் பதி­லாக, சிங்­கள மக்கள் தாங்கள் பெரும்­பான்மை இன மக்கள் என்ற ரீதியில் எந்தத் துறை­யா­யினும், அதில் தங்­க­ளுக்கு விகி­தா­சார அடிப்­ப­டையில் உரி­மை­களை உரித்­தாக்கிக் கொள்ள வேண்டும் என்ற குறுக்கு வழியைப் பின்­பற்றி அர­சியல் தலை­வர்கள் செயற்­பட்­டார்கள்.

 அதற்கு உறு­து­ணை­யாக சிங்­கள பௌத்த மதத் தலை­வர்­களும் பல்­வேறு துறை­களில் அதி­கார ரீதி­யாக அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருந்­த­வர்­களும் செயற்­பட்­டி­ருந்­தார்கள்.  இதன் கார­ண­மா­கவே, கல்வி, அரச தொழில்­வாய்ப்பு, தொழில்­துறை முயற்­சி­க­ளுக்­கான அனு­மதி போன்ற இன்­னோ­ரன்ன விட­யங்­களில் விகி­தா­சார நடை­மு­றையை சிங்கள ஆட்­சி­யா­ளர்கள் புகுத்­தி­னார்கள்.  

விகி­தா­சா­ரத்தைப் பின்­பற்­று­வ­தற்­காக கல்­வியில் தரப்­ப­டுத்தல் முறை கொண்டு வரப்­பட்­டது. இதனால் திற­மை­சா­லி­க­ளான தமிழ் இளைஞர், யுவ­திகள் உயர் கல்வி வாய்ப்பைப் பெறு­வதில் பல்­வேறு கட்­டுப்­பா­டு­க­ளுக்கும், தடை­க­ளுக்கும் முகம் கொடுக்க நேரிட்­டது. பலர் உயர் கல்வி வாய்ப்பை இழந்து தமது எதிர்­கால வாழ்க்­கையை சிறப்­பாக அமைத்துக் கொள்ள முடி­யாத நிலை­மைக்கு ஆளா­கி­னார்கள்.

கல்­வியில் கொண்டு வரப்­பட்ட தரப்­ப­டுத்­தலே, தமிழ் இளைஞர், யுவ­திகள் அர­சி­யலில் ஈடு­ப­டவும், ஆயுதப் போராட்ட வழி­மு­றையில் திசை திரும்பிச் செயற்­ப­டு­வ­தற்­கு­மான வழியை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருந்­தது.

சிறு­பான்மை இனத்­த­வ­ரா­கிய தமிழ் மக்­களின் முன்­னேற்­றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பெரும்­பான்மை இனத்­த­வரின் பிடி­வாதம் நிறைந்த பேரின, இன­வாத சிந்­த­னையும் செயற்­பா­டு­க­ளுமே, சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரி­மை­க­ளையும் மத உரி­மை­க­ளையும் மறுப்­ப­தற்கும், ஒறுப்­ப­தற்­கு­மான முக்­கிய கார­ணங்­க­ளா­கின.

அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்­டன. மத ரீதி­யான ஒடுக்­கு­மு­றைகள் மேற்­கொள்­ளப்­பட்டு, தமிழ் மக்­களின் குறிப்­பாக இந்­துக்­களின் பிர­சித்­த­மான வணக்­கத்­த­லங்­க­ளும்­கூட சிங்­கள பௌத்­தர்­க­ளினால் ஆக்­கி­ர­மிப்பு செய்­யப்­பட்­டன. இந்த ஆக்­கி­ர­மிப்புச் செயற்­பாட்டின் தொடர்ச்­சி­யா­கவே யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும், குறிப்­பாக வடக்கில் பல இடங்­களில் இந்து ஆலய வள­வு­க­ளிலும் இந்து கோவில்­க­ளுக்கு அரு­கிலும் புத்தர் சிலை­களை நிறுவும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது.

அத்­துடன் அந்த இடங்­களில் பௌத்த விகா­ரை­களை நிர்­மா­ணிக்கும் பணி­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. மன்னார் மாவட்­டத்தில் முருங்கன், திருக்­கே­தீஸ்­வரம், வவு­னியா கன­க­ரா­யன்­குளம் கிளி­நொச்­சியில் கன­காம்­பிகைக் குளம், முல்­லைத்­தீவு மாவட்டம் கொக்­கிளாய் பிர­தே­சத்­திலும், யாழ்.குடா­நாட்டில், யாழ்ப்­பாணம், நயி­னா­தீவு போன்ற பல இடங்­க­ளிலும் இவ்­வா­றாக மத ரீதி­யான அத்­து­மீறல் நட­வ­டிக்­கைகள் - ஒடுக்­கு­முறைச் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.  

மத ரீதி­யான இந்த ஒடுக்கு முறை­க­ளுக்கு எதி­ராகக் குரல் கொடுப்­போரை இன­வா­தி­க­ளாகச் சுட்­டிக்­காட்டி, நாட்டில் இன­வா­தத்தைக் கிளப்பி அமை­தியைக் குலைக்­கின்­றார்கள், பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளுக்குத் தூபம் போடு­கின்­றார்கள் என்று தென்­னி­லங்­கையில் உள்ள இன­வாத கடும்­போக்­கா­ளர்­களும் கடும்­போக்­கு­டைய பொது­பல சேனா உள்­ளிட்ட பௌத்த மதத் தீவி­ர­வா­தி­களும் தமிழர் தரப்பின் மீது குற்­றங்­களைச் சுமத்தி பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­துள்­ளார்கள்.

இன­வாதச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்ற அவர்­களே அவர்­க­ளு­டைய செயற்­பாட்­டினால் பாதிக்­கப்­ப­டு­கின்ற சிறு­பான்­மை­யின மக்­களை நோக்கி 'நீங்­களே இன­வா­திகள், இன­வா­தத்தைத் தூண்­டு­கின்­றீர்கள்' என்று குற்றம் சாட்­டு­கின்ற விநோ­த­மான அர­சியல் போக்கை முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள்.

மொத்­தத்தில் சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான இன­வாத பிர­சா­ரத்­தையே, பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த பேரின சிங்­கள அர­சி­யல்­வா­திகள் ஆட்­சியைக் கைப்­பற்­று­வ­தற்கும், ஆட்சி அதி­கா­ரத்தைத் தக்க வைத்துக் கொள்­வ­தற்கும் உரிய உத்­தி­யாக, அர­சியல் செயற்­பா­டாக முன்­னெ­டுத்து வந்­துள்­ளார்கள்.

இன­வா­தத்தின் அடிப்­ப­டையில் சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்­ட­தனால் வெடித்த யுத்தம் முடி­வ­டைந்­துள்ள போதிலும், இந்த இன­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அர­சியல் உத்­தியை அவர்கள் இன்னும் கைவிட்­ட­பா­டில்லை.

சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரி­மைகள் பகிர்ந்­தளிக்கப்­படக் கூடாது என்­ப­தற்­கா­கவே, முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன இந்த நாட்டில் விகி­தா­­சார தேர்தல் முறையைக் கொண்டு வந்தார். அந்த முறை­மையின் கீழ் எந்­த­வொரு கட்­சியும் பெரும்­பான்மை அர­சியல் பலத்தைப் பெற முடி­யா­த­தொரு நிலை­மையை உரு­வாக்­கி­விட்­டுள்ளார். ஆனால் நல்­லாட்சி அர­சாங்கம் என்ற இப்­போ­தைய அர­சாங்கம் அந்தத் தேர்தல் முறையை மாற்றி, ஒரு கலப்பு தேர்தல் முறையை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றது.

விகி­தா­சார தேர்தல் முறையையும் தொகு­தி­வா­ரி­யான தேர்தல் முறை­யையும் கொண்ட – ஒரு கலப்பு தேர்தல் முறை­யா­னது சிறு­பான்மை இன மக்­க­ளி­னதும், சிறிய அர­சியல் கட்­சி­க­ளி­னதும் அர­சியல் பலத்தை குறைப்­ப­தற்கு அல்­லது இல்­லாமற் செய்­வ­தற்கே வழி­வ­குக்கும் என்று அர­சியல் வட்­டா­ரங்­களில் பர­வ­லாக அச்சம் நில­வு­கின்­றது.

நாட்டில் நடை­மு­றையில் உள்ள அர­சி­ய­ல­மைப்­புக்குப் பதி­லாக, நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தை இல்­லாமற் செய்­வது, புதிய தேர்தல் முறை­மை­யொன்றை உரு­வாக்­கு­வது, இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பது என்ற மூன்று முக்­கிய கார­ணங்­களை முன்­வைத்து, புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்­கின்­றது.

இந்த நட­வ­டிக்­கை­யும்­கூட உண்­மை­யி­லேயே சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்தி, அவர்­க­ளுடன் அதி­கா­ரங்­களைப் பகிர்ந்து கொள்­வ­தற்­கு­ரிய நேர்­மை­யான முயற்­சி­தானா என்ற சந்­தேகம் பல தரப்­பி­ன­ரி­டை­யேயும் எழுந்­துள்­ளது.

முதன் முறை­யாக, நாட்டின் பொது­மக்கள் உள்­ளிட்ட பல­த­ரப்­பி­ன­ரதும் கருத்­துக்­களை உள்­வாங்கி, புதிய அரசிய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இதற்கு முன்னர் அர­சி­ய­ல­மைப்­புக்­களை உரு­வாக்­கி­ய­போது, சிறு­பான்மை இன மக்­க­ளு­டைய அர­சியல் தலை­வர்­க­ளு­டைய கருத்­துக்கள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. அதே­போன்று ஏனைய அர­சியல் கட்­சி­க­ளி­னது அர­சியல் கருத்­துக்­களும் கேட்­கப்­ப­ட­வில்லை. ஆனால் இப்­போது, சகல அர­சியல் கட்­சிகள், பொது அமைப்­புக்கள் மட்­டு­மல்­லாமல், பொது­மக்­களின் கருத்­துக்­களும் திரட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன.

எனவே, புதி­தாக உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள அர­சி­ய­ல­மைப்பு இந்த நாட்­டுக்கும் நாட்டில் உள்ள அனைத்து மக்­க­ளுக்கும் ஏற்­பு­டை­ய­தாக இருக்­கலாம் அல்­லது ஏற்­பு­டை­ய­தாக இல்­லாமல் இருக்­கலாம். ஆனால், அனைத்துத் தரப்­பி­ன­ரதும் கருத்­துக்­களை உள்­வாங்கி உரு­வாக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு என்ற ரீதியில் அதற்கு எதி­ராகக் குறை கூறவோ அல்­லது குற்றம் சுமத்­தவோ முடி­யாத ஒரு நிலைமை ஏற்­படப் போகின்­றது என்­பதை அர­சியல் ஆய்­வா­ளர்கள் எதிர்வு கூறி­யி­ருக்­கின்­றார்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் போக்கு புதி­தாக உரு­வாக்­கப்­பட்­ட­போது இருந்­த­திலும் பார்க்க, படிப்­ப­டி­யாக தடம் மாறிச் செல்­வ­தா­கவே பலரும் உணர்­கின்­றார்கள். நிலை­மை­களும் அவ்­வாறே காணப்­ப­டு­கின்­றன. முன்­னைய ஆட்­சி­யி­லும்­பார்க்க புதிய ஆட்சி சிறு­பான்மை இன மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பதில் உளப்­பூர்­வ­மான முறையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் என்று பலரும் எதிர்­பார்த்­தார்கள்.  

ஆயினும் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நாட்கள் செல்லச் செல்ல புதிய ஆட்சி தனது பொறுப்­புக்­களை குறிப்­பாக சிறு­பான்மை இன மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­பதில் காலத்தை இழுத்­த­டிக்கும் போக் கைக் கடைப்­பி­டிப்­ப­தா­கவே பலரும் கரு­து­கின்­றார்கள்.

விசே­ட­மாக இடம்­பெ­யர்ந்­துள்ள மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை இந்த அர­சாங்­க­மா­வது துரி­தப்­ப­டுத்தும், இரா­ணு­வத்­தினர் கைப்­பற்றி நிலை­கொண்­டுள்ள தமிழ் மக்­க­ளு­டைய காணி­களை மீளக் கைய­ளித்து, கால் நூற்­றாண்­டுக்கு மேலாக இடம்­பெ­யர்ந்­துள்ள அவர்­களின் அவல நிலைக்கு முடி­வேற்­ப­டுத்தும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது,

ஆனால் இரா­ணுவம் கைப்­பற்­றி­யுள்ள காணி­களை விடு­விக்கும் நட­வ­டிக்கை மந்த கதி­யி­லேயே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. வலி­காமம் வடக்கில் இருந்து இரா­ணு­வத்­தி­னரால் வெளி­யேற்­றப்­பட்ட மக்கள் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த கொட்­டில்கள் ஓட்­டைகள் நிறைந்த கிடுகு கூரை­களைக் கொண்ட குடி­சை­களை நேரில் பார்­வை­யிட்டு, அங்­கி­ருந்த ஒரு திண்­ணையில் அமர்ந்து அந்த மக்­களின் அவல நிலைமை குறித்து கேட்­ட­றிந்­ததன் பின்னர் ஆறு மாதங்­களில் அவர்­களை அவர்­க­ளு­டைய சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.ஆனால் அந்த உறு­தி­மொழி நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. 

அதே­போன்று கடந்த வருட இறு­திப்­ப­கு­தியில் தங்­களை விடு­தலை செய்ய வேண்டும் என கோரி உண்­ணா­வி­ரதப் போராட்டம் நடத்­திய தமிழ் அர­சியல் கைதிகள் விடு­விக்­கப்­ப­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதி­ர்க்­கட்சித் தலை­வரும், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மா­கிய ஆர்.சம்­பந்தன், சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு மற்றும் மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் சுவா­மி­நாதன், அப்­போது சிறைச்­சாலை ஆணை­யா­ள­ராக இருந்த இப்­போ­தைய வவு­னியா அர­சாங்க அதிபர் ரோகன புஷ்­ப­கு­மார ஆகி­யோரின் ஊடாக வழங்­கிய உறு­தி­மொ­ழியும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

இன்னும் காணாமல் போன­வர்கள் தொடர்­பிலும் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்து இருக்­கு­மிடம் தெரி­யாமல் போயுள்ள முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் தொடர்­பிலும் புதிய அர­சாங்கம் பொறுப்­பான முறையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை. மனித உரிமை மீறல் செயற்­பா­டு­க­ளுக்கு பொறுப்பு கூறும் வகையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தாக இலங்கை தொடர்­பான ஐ.நா.வின் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்கி உறு­தி­ய­ளித்த இந்த அரசு அது தொடர்பில் ஆமை வேகத்தில் காலம் கடத்­து­கின்ற போக்­கி­லேயே செயற்­பட்டு வரு­கின்­றது,

காணாமல்போன­வர்கள் தொடர்பில் முன்­னைய ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட பர­ண­கம ஜனா­தி­பதி ஆணைக்­குழு, நம்­பிக்­கை­யற்ற விதத்­தி­லான விசா­ர­ணை­க­ளையே முன்­னெ­டுத்­தி­ருந்­தது. ஆயினும் இந்த விட­யத்தில் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்கை எடுக்­கின்ற ஒரு தோற்­றப்­பாட்டில், ஐ.நா.பிரே­ர­ணையில் பொறுப்பு கூறு­வ­தற்­காக அளிக்­கப்­பட்ட உறு­தி­மொ­ழியை நிறை­வேற்றும் வகையில் காணாமல் போனோர் தொடர்­பி­லான செய­ல­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஆயினும் அதில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் கருத்­துக்கள் சரி­யான முறையில் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. அவர்­களின் பங்­க­ளிப்பை உள்­ள­டக்கும் வகையில் அவர்­க­ளு­டைய பிர­தி­நி­தித்­து­வமும் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என்று பொறுப்பு கூறும் நட­வ­டிக்­கை­களில் அர­சாங்­கத்­துடன் தோளோடு தோள்­கொ­டுத்துச் செயற்­பட்டு வந்­துள்ள பொது அமைப்­புக்­களைச் சேர்ந்­த­வர்­களும் காணாமல் போன­வர்கள் தொடர்­பி­லான செயற்­பாட்­டா­ளர்­களும் குற்றம் சுமத்­தி­யி­ருக்­கின்­றார்கள்.

இது போன்ற நிலை­மைகள் கார­ண­மாக, புதிய அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்கை சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய மக்கள் மத்­தியில் கரைந்து கொண்­டி­ருக்­கின்­றது. யுத்­தத்தின் பின்னர் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் முழு அளவில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும்.

முன்­னைய அர­சாங்கம் இந்த விட­யத்தில் பெய­ர­ள­வி­லேயே காரி­யங்­களை நகர்த்­தி­யது. யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை அவர்­க­ளு­டைய பிர­தே­சங்­களில் மீள்­கு­டி­யேற்­றிய போதிலும், மீள்­கு­டி­யேற்றப் பிர­தே­சங்­களை இரா­ணுவ மயப்­ப­டுத்தி அந்த மக்­களை மேலும் மேலும் நெருக்­க­டிக்கு உள்­ளாக்­கி­யி­ருந்­தது. ஆனால் புதிய அர­சாங்கம் இந்த நிலை­மை­களில் சிறிய அள­வி­லேயே மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

இருப்­பினும் இரா­ணுவ அச்­சு­றுத்­தல்­களை இல்­லாமல் செய்யும் வகையில் அவர்­களின் எண்­ணிக்­கையைக் குறைப்­ப­தற்கோ அல்­லது இரா­ணுவ முகாம்­களைக் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையோ புதிய அர­சாங்கம் ஆக்­க­பூர்­வ­மான முறையில் முன்­னெ­டுக்­க­வில்லை.

இதனால், இந்த அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்­கத்­திற்­கான நட­வ­டிக்­கைகள் எதிர்­பார்த்த அளவில் விளை­வு­களை ஏற்­ப­டுத்தத் தவ­றி­யி­ருக்­கின்­றது. புதிய அர­சாங்­கத்தின் மீது யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் நம்­பிக்கை இழந்து வரு­கின்ற நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

அதே­வேளை, இனங்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கை­யற்ற நிலைமை நீடித்­தி­ருப்­ப­தாக ஐ.நா.வின் சிறு­பான்மை மக்கள் தொடர்­பான விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நாடியா சுட்டிக்காட்டியிருக்கின்றார். அவர் ஏனைய இராஜதந்திரிகளைப் போல அல்லாது ஏனைய ஐ.நா. அதிகாரிகளைப் போலல்லாமல் நாட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் சுற்றிப் பார்த்து உண்மையான நிலைமைகளைக் கண்டறிந்துள்ளார் என கூறத் தக்க வகையில் பல்வேறு தரப்பினரையும் பல இடங்களுக்கும் சென்று நேரடியாக நிலைமைகளைப் பார்த்து சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசியதன் பின்பே இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.

எனவே, காலம் காலமாக நீடித்து வந்த சிறுபான்மை இன மக்களை அடக்கி யொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படையான நடவடிக்கைகளின் பின்னணியில் ஆயுதப் போராட்டம் காரணமாக இடம்பெற்ற யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் மறைமுகமான முறையில் மிகவும் தந்திரோபாய ரீதியில் சிறுபான்மையின மக்களை அடக்கியொடுக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழர் தரப்பினருடன் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றங்களோ அல்லது அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளோ இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சமஷ்டி முறையை தமிழ் மக்கள் பொருத்தமான தீர்வாக விரும்பியிருக்கின்ற போதிலும், அதுபற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு மறுதலையாக – முரண்பட்ட நிலைமையாகவே காணப்படுகின்றது,

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய பகிர்ந்தளிக்கப்பட்ட இறையாண்மையைக் கொண்ட வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான தீர்வையே வலியுறுத்துவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய சம்பந்தன் தமிழ் மக்கள் மத்தியில் கூறி வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் ஒற்றையாட்சி நிலைப்பாடும், அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதில் காணப்படுகின்ற இறுக்கமான போக்கும் சிறுபான்மை இனத்தவராகிய தமிழ் மக்களின் சந்தேகங்களை அதிகரிக்கச் செய்திருக்கின்றன.

இதுவே சிறுபான்மை இன மக்களை இந்த அரசாங்கமும் கிள்ளுக்கீரையாகக் கருதுகின்றதோ என்ற கேள்வியை எழச் செய்திருக்கின்றது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-10-22#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்மை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.