Jump to content

இரு கைகளிலும் அசுர வேகத்தில் பந்துவீசும் பவுலர்! (வீடியோ)


Recommended Posts

இரு கைகளிலும் அசுர வேகத்தில் பந்துவீசும் பவுலர்! (வீடியோ)

yasir-jan-afp_806x605_61476971981_15581.

வாசிம் அக்ரமையும், வக்கார் யுனிஸையும் மிக்ஸ் செய்து இன்னுமொரு ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்ஸை பாய விட்டிருக்கிறது பாகிஸ்தான்.  வலது கையில் பந்து வீசினால் 145 கி.மீ. வேகம், இடது கையில் வீசினால் 135 கி.மீ. வேகம் எனப் பின்னி பெடலெடுக்கிறார் யஸிர் ஜான். சிவாஜி படத்தில் ரஜினி ‛இரண்டு கைகளால்’ எழுதுவது போல,  யாஸிர் ஜான் இரு கைகளிலும் வேகமாக பந்துவீசுவதுதான் பாகிஸ்தானில் ஹாட் டாபிக். 

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் பகுதியைச் சேர்ந்தவர் யாஸிர் ஜான். தந்தை காய்கறி வியாபாரி. கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்த யாஸிர், 2003 உலக கோப்பையில் வாசிம் அக்ரம், வக்கார் யுனிஸ் வீசிய வேகத்தைப் பார்த்து மிரண்டு நின்றான். ‛நானும் ஒருநாள் அவர்களைப் போல வருவேன்...’  உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான்.

அடித்துப் பிடித்து ராவல்பிண்டி அண்டர் - 16 அணியில் இடம்பிடித்தான். ஒரு உள்ளூர் போட்டியில் ராவல்பிண்டி தோல்வியடையும் நிலையில் இருந்தது. எல்லைக் கோட்டில் இருந்த யாஸிரை அழைத்தார் கேப்டன். ‛நம்ம தோக்குற நிலைமையில இருக்கோம். வித்தியாசமா ஏதாவது பண்ணனும். நீ ஏன் லெஃப்ட் ஹேண்ட்ல பவுலிங் போடக் கூடாது’ என கேப்டன் சொன்னது யாஸிருக்கு ஆச்சரியமாக இருந்தது.  இருந்தாலும் முயற்சித்துப் பார்க்கலாமே என ஓகே சொன்னான். 

எவ்வித பயிற்சியுமின்றி ஓடி வந்து இடது கையில் பந்து வீசினான். ‛இந்தப் பையன் என்ன பண்றான்’ என பயிற்சியாளர்கள் அதிர்ந்து நின்றனர். ஆனால்,  வலது கையில் வீசியதற்கு சற்றும் குறைவில்லாத வேகம். ஒரு பந்து அல்ல அந்த ஓவர் முழுவதையும் இடது கையில் வீசி முடித்தான். கேப்டன், பயிற்சியாளர், சக வீரர்கள் என எல்லோரிடம் இருந்தும் பாராட்டு. யாஸிர் முகத்தில் சாதித்த திருப்தி. மறுநாள் பத்திரிகைகளில் இடம்பிடித்தான் இந்த விநோத பந்துவீச்சாளன். 

ஓரளவு ஃபெமிலியராகி விட்டான். குடும்பம் இஸ்லாமாபாத் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்கு கிரிக்கெட் பயிற்சிக்கான வசதிகளும் அதிகம். ஒருநாள் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆகிப் ஜாவேத், லாகூர் கோலண்டர்ஸ் அணிக்கான பவுலர்கள் தேடலில் இருந்தார். ஏற்கனவே யாஸிர் ஜானை பற்றி கேள்விப்பட்டிருந்ததால், உடனடியாக லாகூர் அணியில் அவரை ‛புக்’ செய்தார். பாகிஸ்தான் சூப்பர் லீக்  தொடரில் லாகூர் அணி சார்பில் 10 ஆண்டுகள் விளையாடுவதற்கான ஒப்பந்தம் செய்துள்ள யாஸிரின் இலக்கு, பாகிஸ்தான் அணியில் இடம்பிடிப்பதே. 

 

 

வேகம் மட்டுமல்ல ஸ்விங், லென்த், வேரியேஷன் என எல்லாமே  பக்கா.  இது நிச்சயம் அவரை ஒருநாள், பாகிஸ்தான் ஜெர்ஸி அணிய வைக்கும் என்பது அவரது பயிற்சியாளர் நம்பிக்கை. ‛‛இந்த திறமை உண்மையில் அணிக்கு சாதகமான விஷயம். வலது மற்றும் இடது என இரு கை பேட்ஸ்மேன்களும் களத்தில் இருக்கும்போது,  யாஸிர் போன்ற ஒரு பவுலர் இருப்பது நிச்சயம் கேப்டனுக்கு உற்சாகம் கொடுக்கும். ஒரு பவுலர் ஒரு ஓவரில் ஒரு கையில்தான் பந்துவீச வேண்டும் என எந்த விதியும் இல்லை’’ என்றார் முகமது சல்மான். 

ஃபிட்னஸ், டயட்  உள்பட மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்துவதற்காக, பல பயிற்சியாளர்கள் பணம் கொடுத்து யாசிரை தயார்படுத்தி வருகின்றனர். உள்ளூர் போட்டிகளில் ஓகே. சர்வதேச அளவிலும் ஜொலிக்க வேண்டுமென்றால் அதற்கு இன்னும் பயிற்சி அவசியம். குறைந்தது அதற்கு ஆறு முதல் ஓராண்டு வரை பயிற்சி தேவை. 

‛‛2003 உலக கோப்பையில் வாசிம் அக்ரம், வக்கார் யுனிஸ் பந்துவீசியதைப் பார்த்துதான் நானும், வேகப்பந்துவீச்சாளன் ஆனேன். எல்லோரையும் போல பாகிஸ்தான் அணிக்காக ஆட வேண்டும் என்பது என் ஆசை. பாகிஸ்தான் ஜெர்ஸி அணிந்து உலகம் முழுவதும் உள்ள பெரிய பெரிய மைதானங்களில், பெரிய பெரிய வீரர்களுடன் ஆட வேண்டும். இதுதான் என் கனவு’’ என்றார் யாஸிர். 

அன்று, ஹனிஃப் முகமது ரிவர்ஸ் ஸ்வீப்பை அறிமுகம் செய்தார். அடுத்து இம்ரான் கான், சர்ஃப்ராஸ் நவாஸ் ஆரம்பித்த ‛ரிவர்ஸ் ஸ்விங்’ டெக்னிக்கை பின்னாளில் வாசிம் அக்ரம், வக்கார் யுனிஸ் கச்சிதமாக செயல்படுத்தினர். இன்று யாஸிரின் இரு கைப் பந்துவீச்சு. கிரிக்கெட்டில் புதுமைகளைப் புகுத்துவதில் நாங்கள் கில்லிகள் என பெருமைப்படுகின்றனர் பாகிஸ்தானியர். 

http://www.vikatan.com/news/sports/70225-yasir-jan-who-can-bowl-at-pace-with-either-arm.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.