Jump to content

ஜெ.வைச் சுற்றி 27 டாக்டர்கள்!


Recommended Posts

ஜெ.வைச் சுற்றி 27 டாக்டர்கள்!

 

 

p6b.jpg

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் பிரதான துறைகள்:

red-dot.jpg தொற்றுநோய்

red-dot.jpg கிரிட்டிகல்/ இன்டன்சிவ் கேர்

red-dot.jpg சர்க்கரை நோய்

red-dot.jpg நுரையீரல்

red-dot.jpg இதயம்

இவை தவிர, டயட், பிசியோதெரப்பி பயிற்சி நிபுணர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. இந்த ஒரு மாத காலமாக, முதல்வரின் உடல்நிலை பற்றிய அரசின் குரலாக அப்போலோ மட்டுமே ஒலித்துவருகிறது. ஜெ.க்கு என்ன வகையான நோய் அறிகுறிகள் இருக்கின்றன, என்ன மாதிரியான சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன, அவரது உடல்நிலை பற்றி விவாதித்து சிகிச்சை முறைகளை முடிவுசெய்யும் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர் குழுக்கள் பற்றிய தகவல்களை அறிக்கைகள் வழியாக அப்போலோதான் வெளியிட்டு வந்தது. அதுவும், 10 நாட்களாக அறிக்கை எதுவும் தரவில்லை. ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கக் காரணமாக இருந்தது டாக்டர் சிவக்குமார். ஜெயலலிதாவுக்கு, நுரையீரல் நிபுணர் நரசிம்மன், சர்க்கரை நோய் நிபுணர் சாந்தாராம் உள்ளிட்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு, லண்டன் மருத்துவர், எய்ம்ஸ் மருத்துவர் குழு என தொடர்ந்து நிபுணர் குழுவை மாற்றிவருகின்றனர். தற்போது ஜெயலலிதாவை தன் மருத்துவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிபுணர் குழுவினர் யார்? யார்?

p6a.jpg

ரிச்சர்ட் பியெல்

லண்டனின் புகழ்பெற்ற செயின்ட் தாமஸ் மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் மற்றும் வலி தொடர்பான சேவை, அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய, பிந்தைய சேவைப் பிரிவின் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். திடீர் நுரையீரல் பாதிப்பு, ஸெப்ஸிஸ் (செப்டிசீமியா) எனப்படும் பாக்டீரியாத் தொற்று ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு காரணமாக அளிக்கப்படும் செயற்கை சுவாசம் (வென்டிலேஷன்), ஒன்றுக்கும் மேற்பட்ட உடல் உறுப்புகள் செயல் இழந்தவர்களுக்கான சிகிச்சை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர், ரிச்சர்ட் பியெல். இவர், கேய்ஸ் மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவப் பயிற்சி பெற்றிருக்கிறார்.

p6c.jpg

ஸெப்ஸிஸ் தொடர்பாக உலக அளவில் நடத்தப்படும் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளை ஆய்வு செய்பவர். லண்டனில் புகழ்பெற்ற கிங்ஸ் கல்லூரியில் அவசரச் சிகிச்சை மருத்துவப் பேராசிரியராகவும் இருக்கிறார்.

நிதிஷ் நாயக்

p6d.jpg

நிதிஷ் நாயக், எய்ம்ஸ் மருத்துவமனையின் இருதய நோய் நிபுணர். குறிப்பாக இவர், இதயக் குழாய் நோய் தொடர்பாக நிபுணத்துவம் பெற்றவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 2009-ல் இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்தவர்.  2013-ல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டபோது சிகிச்சை செய்தவர்.  அதே வருடம், மும்பை தொடர் குண்டு  வெடிப்பு தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட அப்துல் கரீம் துண்டாவுக்குத் திடீர் இதய வலி ஏற்பட்ட நிலையில் செயற்கை இருதயம் பொருத்தி அறுவைச் சிகிச்சை செய்தவர்.  மத்திய அரசின் பத்மÿ விருது, 2014-ல் இவருக்கு வழங்கப் பட்டது.

அஞ்சன் த்ரிகா

p8d.jpg

மயக்கவியல், இதயம் சார்ந்த மயக்கவியல் மற்றும் மின் உடலியங்கியல், அதாவது உடலின் மற்ற உறுப்புகளில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் செயல்பாடுகள் குறித்தான நிபுணத்துவம் பெற்றவர் டாக்டர் த்ரிகா. அதிதீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அறுவைச் சிகிச்சை நோயாளிகளுக்கு மயக்க மருந்து தருவதில் வல்லுநர்.

ஜி.சி. கில்நானி 

நுரையீரல் மற்றும் தூக்கவியல் சிகிச்சை நிபுணரான கில்நானி, காசநோய் தொடர்பாக பல்வேறு அளவிலான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டபோது, நுரையீரல் அறுவைச்சிகிச்சை செய்தவர் கில்நானி. செயற்கை சுவாசக் கருவியைப் பொருத்துவது, அதை பொருத்தியபின் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளைச் சரிசெய்வது உள்ளிட்டவற்றில் நிபுணர் டாக்டர் கில்நானி.

டாக்டர் கௌசிக் முத்து ராஜா

இளம் மருத்துவரான கௌசிக்  நெஞ்சக நோய்க்கான தேசியக் கல்லூரியின்  இளம் விஞ்ஞானி பட்டத்தை பெற்றவர். நுரையீரல் நோய் மருத்துவப் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர்.  ராமச்சந்திரா மருத்துவ மனையின் நெஞ்சக நோய் மற்றும் காசநோய் மற்றும் தூக்கவியல் மருந்துகளுக்கான பிரிவில் மருத்துவராகப் பணியாற்றுகிறார். மேலும் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவ நிபுணர்கள் பட்டியலில் உலகில் தலை சிறந்தவர்கள் யார் என தேர்வு செய்வதும் இவர்தான். டாக்டர் ரிச்சர்ட்டை லண்டனிலிருந்து சென்னைக்கு வரவழைத்ததும் இவரது பரிந்துரையின் பேரில்தான் எனக் கூறப்படுகிறது

p8e.jpg

டாக்டர் பாமா உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட ஸ்பெஷலிஸ்ட் டுகளின் ஆலோசனை, அவ்வப்போது பெறப்படுகின்றன. சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் சிவகுமார்,  டாக்டர் ராஜ மாதங்கி, டாக்டர் விக்ரம் ஆகியோரும் உடன் இருந்து தங்கள் பங்குக்குக் கவனித்துக் கொள்கிறார்கள். சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து இரண்டு பிசியோதெரப்பிஸ்ட்டுகள் வந்து சென்றுள்ளார்கள்.
இந்த வகையில் பார்த்தால், சுமார் 27 டாக்டர்களின் கண்காணிப்பில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கிறார்!

- ஐஷ்வர்யா, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், தே.அசோக்குமார்


24/7 ஐவர் படை!

ஸ்பெஷலிஸ்ட்டுகள் தவிர்த்து முதல்வரைச் சுற்றி 24 மணிநேரமும் இயங்கும் ஐவர் மருத்துவப் படை இது.

ராமசுப்ரமணியம்

p8b1.jpg

ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கண்காணிக்கும் மருத்துவக் குழு, இவர் தலைமையில்தான் இயங்கிவருகிறது. தொற்றுநோய் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர் புகழ்பெற்ற மருத்துவ இருக்கையான லண்டன் ராயல் காலேஜ் ஆஃப்  பிசீஷியன்ஸின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர். கடந்த 20 வருடங்களாக அப்போலோவின் தொற்றுநோய்ப்பிரிவின் மருத்துவ ஆலோசகராக இயங்கிவருகிறார்.  2006 வரை சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் மருத்துவப் பேராசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். தற்போது, அப்போலோவின் தொற்று நோய்ப்பிரிவின் தலைமை மருத்துவ ஆலோசகராக இருக்கும் இவர், தொற்றுநோய் ஆராய்ச்சி தொடர்பாக பல்வேறு ஆய்வு அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். அவற்றில் நிமோனியா தொற்றுப் பராமரிப்பு, தென்னிந்தியப் பெண்களின் நுரையீரல் செயல்பாடுகள், நோய்க்

கொல்லிகளாலும் குணப்படுத்த முடியாத தொற்றுகள் மேலாண்மை, நாட்பட்ட காய்ச்சல், முதியோர்களில் எதிர்ப்புசக்தி மற்றும் அதன் மேலாண்மை உள்ளிட்டவை பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும் அடங்கும். இவை தவிர, லண்டன் நெஞ்சக மருத்துவமனையின் நெஞ்சுக்குழாய் நோய்ப் படிப்பு பேராசிரியராகவும், இந்தியாவின் தேசிய தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்  குழுமத்தின் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.

ரமேஷ் வெங்கட்ராமன்

தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவ நிபுணரான டாக்டர் ரமேஷ், அமெரிக்க மருத்துவக் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க நெஞ்சக மருத்துவக் கூட்டமைப்பின்

உறுப்பினராகவும் இருக்கிறார். நெஞ்சக நோய்ப் பிரிவுக்கு என மிகப்பெரிய அளவில் இயங்கிவரும் புகழ்பெற்ற பீட்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். அப்போலோவின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவ ஆலோசகராக பணியாற்றிவரும் டாக்டர் ரமேஷ், ஸ்டிமுலேட்டர்  வகை மருத்துவப் பயிற்சியில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். ஸ்டிமுலேட்டர் என்பது குறிப்பாக அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கும் நோயாளிகளின் உறுப்பு சார்ந்த செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பது மற்றும் அந்தச் செயல்பாடுகள் சார்ந்து சிகிச்சை அளிப்பது.

செந்தில்குமார்

p8c.jpg

நாக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவர் பட்டம் பெற்றவர். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். தற்போது, அப்போலோவின் அதிதீவிரச் சிகிச்சைப்பிரிவு மருத்துவ ஆலோசகராகப்  பணியாற்றுகிறார்.

பாபு கே ஆபிரகாம்

மணிப்பாலின் கஸ்தூரிபாய் காந்தி மருத்துவக் கல்லூரியில் படித்து, மருந்துகளுக்கான நிபுணத்துவம் பெற்றவர். லண்டன் ராயல் காலேஜ் ஆஃப்

ஃபிசீஷியன்ஸின் உறுப்பினரான இவர், நுரையீரல் நோய் சிகிச்சை மற்றும் தீவிரச் சிகிச்சைப்பிரிவில் நிபுணத்துவம் உள்ளவர். கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தீவிரச் சிகிச்சைப்பிரிவு மருத்துவமுறையில் பயிற்சி பெற்றவர். தற்போது, அப்போலோவின் நுரையீரல் நோய்ப் பிரிவு மருத்துவ ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.

என்.ராமகிருஷ்ணன்

உடலியல் உட்புற மருந்து, தீவிரச் சிகிச்சை மருந்து, தூக்கம் தொடர்பான நோய்கள் சார்ந்த சிகிச்சை முறை ஆகியவற்றில் நிபுணர். தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், தீவிர சிகிச்சை மருத்துவத்தில் 15 ஆண்டுகளும், தூக்கவியல் சிகிச்சையில் 10 ஆண்டுகளும் அனுபவம் உள்ளவர். பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய மருத்துவக் கூட்டமைப்புகளின் உறுப்பினராகவும் இருக்கிறார். டாக்டர் ரமேஷ், டாக்டர் பாபு ஆபிரகாம் மற்றும் டாக்டர் செந்தில்குமாருடன் இணைந்து இண்டெலி ஐ.சி.யு என்னும் புதுவகையான ஆன்லைன் தீவிரச் சிகிச்சை மருத்துவ முறையை தமிழகத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர். அப்போலோவின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவ ஆலோசகராகவும் இருக்கிறார்.



இது சிங்கப்பூர் ஸ்பெஷலிஸ்ட்!

p8a1.jpg

சிங்கப்பூரிலிருந்து இரண்டு பெண் பிஸியோதெரப்பி நிபுணர்கள் முதல்வரின் சிகிச்சைக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா ஷர்மா. இவர், யோகாவில் நிபுணத்துவம் பெற்றவர். கென்யாவைத் தலைமையிடமாகக் கொண்டு யோகா பள்ளியை நடத்திவரும் இவர், பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடிய சர்வதேச யோகா தினத்தில் கென்யா நாட்டின் சார்பாகப் பங்கேற்றவர். மேலும், உடல் தசைகளை தளர்வு செய்வதற்கான ‘சிகிச்சை யோகா முறை’(therapeutic yoga)   மூச்சுப் பயிற்சி ஆகியவற்றில் சர்வதேச அளவில் நிபுணத்துவம் பெற்றவர்.

இன்னொருவர், சிங்கப்பூர்  மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையின் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர் மேரி. இவர், நரம்பியல் சார்ந்த உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர்.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.