Jump to content

'எனக்கு ஆதரவாக பிரதமர் மோடி இருக்கிறார்!' -சசிகலா புஷ்பா


Recommended Posts

'எனக்கு ஆதரவாக பிரதமர் மோடி இருக்கிறார்!'  -சசிகலா புஷ்பா

sasikala%20pushpa%206_11599.jpg

.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுவிட்டாலும், கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாகவே நீடிக்கிறார் சசிகலா புஷ்பா. முதல்வருக்கு ஆதரவாகவும் சசிகலாவுக்கு எதிராகவும் அவர் வெளியிடும் கருத்துகள் அரசியல் மட்டத்தில் கவனிக்கப்படுகிறது. ராஜாத்தி அம்மாவின் சமாதானப் பேச்சு எடுபடாமல் போனதால், சசிகலா புஷ்பாவுக்கு எதிரான சுவரொட்டிகள், வழக்குகள் என விவகாரம் நீண்டுகொண்டே செல்கிறது. 

சசிகலா புஷ்பாவிடம் பேசினோம். 

தஞ்சை இடைத் தேர்தலில் முதல்வர் முன்பு தேர்வு செய்த ரங்கசாமியே நிற்கிறார். 'சசிகலா நிற்பார்' என்று வந்த செய்தி, வதந்திதானே? 

" நிச்சயமாக இல்லை. அவர்களுடைய முதல் நோக்கமே, ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கொடுக்கப்பட்ட இடத்தைப் பிடிப்பதும் தஞ்சையில் வேட்பாளராக நிற்க வேண்டும் என்பதுதான். ' கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ஆகிவிட வேண்டும்' என முனைப்போடு செயல்பட்டார் சசிகலா. ' முதல்வரின் கையெழுத்தைப் பயன்படுத்தி மோசடி நடக்கலாம்' என நான் பேச ஆரம்பித்ததும், பின்வாங்கிவிட்டார். 'அப்படியே போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது' என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார். அவர்களுடைய சொந்த சமூகத்திலேயே அவருக்கு ஆதரவு இல்லை என்பதுதான் உண்மை. இடைத்தேர்தலில் அவர் நின்றிருந்தால், இதுவரையில் நான் வெளியிட்ட கருத்துகள் அனைத்தும் உண்மை என்பதுபோல் ஆகிவிடும். அவர்களுடைய முயற்சிகள் பலிக்காததால்தான், தொடர்ச்சியான மிரட்டல்களுக்கும் வழக்குகளுக்கும் ஆளாகி வருகிறேன்". 

உங்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ராஜாத்தி அம்மாள் ஈடுபட்டாரா? 

" சில விஷயங்களை எல்லாம் வெளிப்படையாக பேச முடியாது. பதில் சொல்லாமல் தவிர்ப்பதே நல்லது". 

தனிப்பட்ட முறையில் உங்களை விமர்சித்து, சென்னையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை கவனித்தீர்களா? 

"முதலமைச்சர் நன்றாக இருந்தவரையில், எனக்கு எதிராக ஒரு சுவரொட்டிகூட ஒட்டப்படவில்லை. தற்போது அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. சசிகலாவுக்கு எதிராக பேட்டி கொடுத்ததும், ஒரு பெண் என்றுகூட பார்க்காமல் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். உண்மையில் இவர்கள் முதல்வரை எந்தநிலையில் வைத்திருப்பார்கள் என்ற சந்தேகம்தான் அதிகரிக்கிறது. பெண் என்றாலே ஒரு கருணைப் பார்வை இருக்கும். இப்படியொரு போஸ்டர் ஒட்டுவது நாகரிகமான செயல் அல்ல. அவர்களையும் நான் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அரசியல்ரீதியாக விமர்சிக்கவே விரும்புகிறேன்". 

உங்களுக்கு எதிராக ஆஜரான வழக்கறிஞர் வீடு தாக்கப்பட்டுள்ள வழக்கிலும் நீங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறீர்களே? 

"அதிகாரிகளை தவறாக வழிநடத்துகிறார்கள் என்பதை இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். அந்த வழக்கறிஞர் யார் என்றே எனக்குத் தெரியாது. அவர் வீட்டின் மீதான தாக்குதலுக்கு என் மீது வழக்குப் போடுகிறார்கள். அம்மாவுக்கு ஆதரவாக இருப்பதால்தான், நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் தரக்குறைவாக எழுதுகிறார்கள். அது அம்மா உருவாக்கிய பத்திரிகை. அம்மாவுக்கு ஆதரவாக இருப்பவர்களைப் பற்றி தவறாக எழுதுகிறார்கள் என்றால், கட்சியை எந்தளவுக்கு அவர்கள் கையில் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் எண்ணங்கள் நிறைவேறவில்லை. அந்தக் கோபத்தைத்தான் இதுபோன்ற வழிகளில் காட்டுகிறார்கள். முதல்வரின் உடல்நிலைக்கு கட்டாயம் விளக்கம் வேண்டும். இப்போது வரையில் முதல்வர் எப்படி இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. இப்படியொரு சூழல் எந்தவொரு முதலமைச்சருக்கும் வந்ததில்லை. எந்த மாநிலத்திலும் இதுபோல் நடந்தது இல்லை. இதற்கு யார் காரணம் என்பதையும் மக்கள் புரிந்து கொண்டார்கள்". 

ஓ.பி.எஸ் மகிழ்ச்சியான நிலையில்தான் இருக்கிறாரா? 

"தமிழ்நாட்டின் சூழலுக்கு ஒரு முதலமைச்சர் தேவை. அதில் ஒரு சாய்ஸாக ஓ.பி.எஸ் இருந்தார். அவர் மூன்று முறை முதல்வராக இருந்தவர். மீண்டும் அவருக்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதில், சசிகலாவுக்கு விருப்பமில்லை". 

உங்களை இயக்குவதே பா.ஜ.க.தான் என்கிறார்களே? 

"நிச்சயமாக. மத்திய அரசின் மூலம்தான் இவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என சில வேலைகளில் இறங்கியிருக்கிறேன். என்னுடைய அனைத்து முயற்சிகளுக்கும் மத்திய அரசு ஆதரவாக இருக்கிறது. பா.ஜ.க.வில் உள்ள மூத்த தலைவர்களும் எனக்குப் பக்கபலமாக இருக்கின்றனர். பிரதமரின் ஆதரவும் எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் அராஜகமான போக்குடன் செயல்பட்டு, முதல்வரை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று யாரும் நினைத்தால் கட்டாயம் குரல் கொடுப்பேன். எனக்கு இந்தப் பதவியைக் கொடுத்தது முதல்வர்தான். இந்த நேரத்தில் நான் தட்டிக் கேட்பதை தொண்டர்கள் விரும்புகின்றனர். முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மருத்துவர்கள் உள்ளே சென்று பார்க்கும்போது, யாராவது ஓர் அரசியல்வாதி உள்ளே சென்று பார்க்க முடியாதா? முதல்வர் எப்படி இருக்கிறார் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கத்தானே செய்யும்". 

சரி...தமிழக அரசியல் சூழலை மோடி எப்படி கவனிக்கிறார்?

"அது போகப் போகத் தெரியும்". 

http://www.vikatan.com/news/tamilnadu/70099-prime-minister-will-back-me-against-sasikala-says-sasikala-pushpa.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.