Jump to content

இடிக்கப்படும் மற்றுமொரு பழமையான மதுரை திரையரங்கு


Recommended Posts

இடிக்கப்படும் மற்றுமொரு பழமையான மதுரை திரையரங்கு

 

மதுரை நகரில் உள்ள கீழவெளி வீதியில் அமைந்துள்ள பழமையான திரையரங்கமான சிந்தாமணி திரையரங்கம் தற்போது இடிக்கப்பட்டுவருகிறது.

 

சிந்தாமணி திரையரங்கு, மதுரை

 மறையும் மற்றுமொரு மதுரை சினிமா திரையரங்கு- சிந்தாமணி

1930களின் இறுதியில் கட்டப்பட்ட இந்தத் திரையரங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பாக மூடப்பட்டது.

அதற்குப் பிறகு ஜவுளி நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்ட இந்த திரையரங்கம், சரக்குகளை வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இந்தத் திரையரங்கத்தை இடிக்கும் பணிகள் தற்போது துவங்கியுள்ளன.

மதுரை நகரின் பல பழமையான திரையரங்குகள் இடிக்கப்பட்டோ அல்லது மூடப்பட்டுவிட்ட நிலையில், மேலும் ஒரு திரையரங்கு இடிக்கப்படுவது அந்நகரவாசிகளை சோகத்திற்குள்ளாக்கியிருக்கிறது.

`சிந்தாமணி` வசூலில் பிறந்த சிந்தாமணி திரையரங்கு

மதுரையில் நூற்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த சிலர் 1930களில் சிடி சினிமா என்ற திரையரங்கையும் ராயல் டாக்கீஸ் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் என்ற சினிமா நிறுவனத்தையும் நடத்திவந்தனர்.

ஒய்.வி. ராவ் இயக்கத்தில் அந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்த எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த சிந்தாமணி என்ற படத்தை ராயல் டாக்கீஸ் தயாரித்தது. 1937 மார்ச் 12ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் மிக வெற்றிகரமாக ஓடியது. சிடி சினிமாவிலும் பெரும் வசூலை இந்தப் படம் ஈட்டித்தந்தது.

இந்தப் படத்திலிருந்து கிடைத்த லாபத்தில் மதுரையில் தாங்கள் கட்டிய திரையரங்கத்திற்கு சிந்தாமணி என அந்த நிறுவனத்தினர் பெயர் சூட்டினர்.

 

மதுரை சிந்தாமணி திரையரங்கு

 கால ஓட்டத்தில் காணாமல் போகும் மற்றுமொரு திரையரங்கு

ஜவுளிக் கடையாகும் சிந்தாமணி

தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி, சிவாஜி கணேசன் நடித்த பாகப் பிரிவினை, எம்.ஜி.ஆரின் அடிமைப் பெண், இதயக்கனி போன்ற படங்களில் துவங்கி, மாதவன் நடித்த ரன், கமல்ஹாசனின் விருமாண்டி வரையிலான படங்கள் இங்கு வெளியாகின.

இந்தத் திரையரங்கு திறக்கப்பட்ட காலகட்டத்தில் மதுரையின் பெரிய திரையரங்குகளில் இதுவும் ஒன்றாக இருந்தது. ஆனால், 90களின் இறுதியில் இந்தத் திரையரங்கில் வருவாய் குறைய ஆரம்பித்தது. மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இயங்கினாலும் வெற்றிகரமாக இயங்க முடியவில்லை.

இந்த நிலையில் இந்தத் திரையரங்கை வாங்கிய ஜவுளி நிறுவனம், அதனை சரக்குகளை வைக்கும் இடமாகப் பயன்படுத்திவந்தது. தற்போது அந்த இடத்தில் மிகப் பெரிய ஷோரூமைத் திறக்கத் திட்டமிட்டிருக்கும் அந்நிறுவனம் திரையரங்கை இடிக்க ஆரம்பித்துள்ளது.

மதுரை நகரில் ஏற்கனவே தேவி, நியூ சினிமா, தினமணி, சிடி சினிமா, இம்பீரியல், தங்கம் திரையரங்கம், சிவம், போத்திராஜா, வெள்ளைக்கண்ணு, ஜெயராஜ், தீபா - ரூபா, பரமேஸ்வரி என மறைந்துபோன திரையரங்குகளின் வரிசையில் தற்போது சிந்தாமணி திரையரங்கமும் இணைந்திருக்கிறது.

http://www.bbc.com/tamil/arts-and-culture-37712360

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.